This entry is in the series 20060519_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


பொழுது ஓய்ந்து போய்
பூமிமேல் சாய்கிறது இருட்டுநிழல்!
சிற்றாறை நோக்கிச் செல்லும்,
நேரம் வந்து விட்டது,
குவளையில் குடிநீரை
நிரப்பிக் கொள்ள!
வரட்சியாகி மாலைத் தென்றல்
நீரோட்டத்தின்
சோக இசை கேட்கத்
தாகமாய் உள்ளது!
அந்தி மயங்கும் வேளையில் சிற்றாறு
அழைக்கிறது என்னை!
சந்தடி யற்றுத் தனித்துப் போன
சந்தின் வழியே
கடந்து செல்வோர் யாருமில்லை!
காற்று எழுந்து விட்டது!
அலைச் சுழிகள் மோதுகின்றன,
ஆற்றின் நீராட்டத்தில்!
மீண்டும் வீடு நோக்கி நான்
திரும்பு வேனா என்று
தெரியாது எனக்கு!
மீளாத எனது பயணத்தில்
எந்த எந்த
ஆளை யெல்லாம்
சந்திப்பேன் என்றும் அறியேன்!
ஆழமில்லா நீரில்
சின்னஞ் சிறு படகினிலே,
அறியாத
அன்னியன் ஒருவன்,
இன்னிசைக் கானத்தைப்
பொழிகிறான்
புல்லாங் குழல் ஊதி!

*****************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (May 15, 2006)]

Series Navigation