தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
கீழ்வானம் வெளுக்கும் முன்னே,
வாயில் முணுமுணுத்தேன்:
நீயும் நானும் மட்டும்
நீண்ட பயணம் துவங்க வேண்டும்,
படகு ஒன்றிலே!
அவனியில் நம் பயணத்தை
அறியக் கூடாது எந்த ஆத்மாவும்!
எந்த தேசம் நோக்கி
ஏகுவோம் என்பதும்,
முடிவில்லாப் பயணத்தை
தொடருவோம் என்பதும்
தெரிய வேண்டாம்!
கங்கு கரையற்ற அந்த பரந்த
கடல் வெளியில்
உந்தன் மெளனப் புன்னகை
எந்தன் செவிகளில் பட்டால்,
இன்னிசையில் உருக்கிடும்
கான வெள்ளம்
பொங்கி எழும் எனக்கு,
கட்டுப் படாத அலைகள் போல,
பந்த பாசப் பிணைப் பெல்லாம்
விட்டு விலகி!
அந்த வேளை நமக்கின்னும்
வந்திட வில்லையா ?
நின் பணிகள் யாவும் முடியாமல்
நீடித்துச் செல்பவையா ?
அந்தோ!
மாலை மங்கிய வெளியில்
கடற்கரை முழுதும்
மப்பு மந்தாரம்
அப்பி விட்டது!
கூடுகளை நோக்கிக் கூட்டமாய்
நாடி வருகின்றன,
கடற் பறவைகள்!
அந்தி மயங்கும் சமயம்,
நங்கூரச் சங்கிலி நீங்கியதும்,
நகரத் துவங்கும்
படகில் நாம்
கடல் அடிவானில் அத்தமிக்கும்,
சூரியனின்
கடைசி மினுப்புக் காட்சி போல்
காரிருளில்
மறைந்து போவோ மென
யார் அறிவார் ?
****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (September 18, 2005)]
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-9)
- நைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க மனிதச் சிங்கம், ஆலயங்கள் -3 (The Great Sphinx & Abu Simbel Temples of Egypt)
- இலங்கை சாகித்திய மண்டலப் பாிசு பெற்ற எழுத்தாளர்
- திரைப்படம்: அமெரிக்க பூதமும், கம்யூனிச பிணமும்
- மெல்பேனில் AR. ரகுமானின் இசைநிகழ்ச்சி – தென்இந்தியாவில் சங்கீதக் கல்லூரி உருவாக்க திட்டம்
- மாபெரும் சமூகக் கனவுகள் (வெட்டவெளி வார்த்தைகள் – கன்னட வசனங்கள் அறிமுகம்)
- கவிஞர் எஸ்.வைதீஸ்வரனின் 70வது பிறந்த நாள்- 22.9.05
- பிபாஷா பாசு பிள்ளைத் தமிழ்
- ஓட்டை சைக்கிள் !
- சிந்திப்போம், பிறகு சிரிப்போம்!
- சொன்னார்கள்
- பாரதி இலக்கிய சங்கம்,சிவகாசி ,குறும்பட வெளியீட்டு விழா
- ஒரு கவிதாமரத்தின் இறப்பு
- மாடல்ல! மனுஷிதான் நான்!
- நகங்கள்
- கதை திரைக்கதை வசனம் டைரக்ஷன்
- பெண்களும், அறிவியலும்- அன்றைய ஹிப்பேஷியா முதல் இன்றைய ஹார்வார்ட் பல்கலை வரை-2
- இவர்கள் அறிவீனர்கள்
- மலிவு ஆன வாசிப்பு
- முதலாளித்துவ சூழலியற் சிக்கல் – (செலவு நன்மைப் பகுப்பாய்வுச் சூழலியல்) – 04
- இளையபெருமாள்
- கருப்பு M.G.R
- கீதாஞ்சலி (41) படகில் நீயும் நானும்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- பெரியபுராணம்- 57 – ( திருநாவுக்கரசர் நாயனார் புராணம் தொடர்ச்சி )
- கடிதம்