This entry is in the series 20081002_Issue

வே பிச்சுமணி


மூக்கில் நுழைந்து
நுரையிரல் புகுந்து
பிறப்புக்கு
அங்கிகாரம் தந்த
காற்றே
உன்னை நேசித்தேன்
அனைத்துயிர்க்கும்
பொதுவென்றதால்
விக்கித்தேன்

பாலுட்டி தாலாட்டி
கண்ணில் காத்து
பிள்ளையாய்
அங்கிகாரம் தந்த
தாயே
உன்னை நேசித்தேன்
சோதரர்க்கும்
உண்டென்பதால்
விக்கித்தேன்.

காதல் சொல்லி
மணவாழ்க்கை கொண்டு
இளமைக்கு
அங்கிகாரம் தந்த
திருமதியே
உன்னை நேசித்தேன்
பிள்ளைகாட்டி
தவிர்த்தால்
விக்கித்தேன்.

மூக்கில் புகாது
நுரையிரல் நுழையாது
இறப்புக்கு
அங்கிகாரம் தந்த
உயிரேநீ
ப்ரம்ம அணுவாய்
காணாது
போனதால்
கடவுளானேன்.

vpitchumani@yahoo.co.in

Series Navigation