- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-11)
- கீதாஞ்சலி (43) எனக்குப் பூரிப்பளிப்பது! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- பூமியின் ஓஸோன் வாயுக் குடையில் போடும் துளைகள் [Holes in the Global Ozone Envelope]
- புகாரி கவிதை நூல் வெளியீடு
- வைதீஸ்வரன்
- The Almond by Nedjma – ஒரு பார்வை
- சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி
- கவிஞர் புகாரியின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் ஆற்ற வந்த எனது கருத்துரை (அக்டோபர்: 1, 2005)
- கடிதம்
- கற்பு யாருடையது
- எரிந்த ஊர்களின் அழகி
- ஒட்டடை
- கெளரவம்
- குஷ்புவும், ஈ வெ ராவும் – சில சமன்பாடுகள்
- சீரழிக்கும் சினிமா, மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (திரு.ராமதாஸ் மற்றும் திரு. திருமாவளவன் ஆகியோர் கவனத்திற்கு)
- லிஃப்ட் பைத்தியம்
- விற்பனைக்கு ஒரு தேசம்
- நிலத்தடி நீர் உரிமையைக் காக்க கேரளாவின் பிளாச்சிமடா கிராமத்தின் மக்கள் போராட்டம்
- பெரிய புராணம் – 59( திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி )
- எரியும் மழைத்துளிகள்
- கொச்சைப்படுத்துதல்: மனித அவலட்சணம்
- கடிதம்
சந்துஷ்

எரிந்த ஊர்களின் அழகி
நேற்றிங்கு வந்திருந்தாள்
எரிந்த ஊர்களைப் பற்றித்
தனக்கெதுவுமே தெரியாதென்றாள்
வியப்புடன் கோணிய என் முகத்தில் தொங்கிக் கொண்டு
நெடு நேரஞ் சிரித்தாள்.
வழியும் அவள் குழற்கற்றைகளிலிருந்து
தெலைந்து போன தெருக்களை இணைக்கும்
கிளைப்பாதைகள் நீண்டு விரிகின்றன
அவள் பேசி நிறுத்தும் இடைவெளிகளில்
போரின் இரைச்சல் காதைப் பிளக்கிறது
கத்திக் கத்தி அவள் பேசுகையில்
எனதூரின் மெளனம் முகத்திலறைகிறது
நேற்றவள் சிரிக்கையில்
ஊர் எரிந்த வாசம் வந்தது
எரிந்த ஊர்களின் மீதமோ
நீயென்றேன்
காதுகள் இருநததாய்
அவள் காட்டிக் கொள்ளவில்லை.
அவள் சொன்ன கதைகளில்
தனித்து ஓயும் ஓர் பறவையின் ஓசையும்
தூரத்தே மறையும் ரயிலின் கூவலும்
நிலவில் நனையும் ஓசை கேட்டது.
இறுகப் பற்றுமவள் கைகளின் பிணைப்பில்;
ஊரின் வேரொன்று தட்டுப்பட்டது.
எனினும் எரிந்த ஊர்களைப் பற்றித்
தனக்கெதுவுமே தெரியாதென்றாள்
எரிந்த ஊர்களின் அழகி.
சந்துஷ்
நன்றி உயிர்மை
Santhushkumar@aol.com