- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 1 (சுருக்கப் பட்டது)
- காற்றினிலே வரும் கீதங்கள் – 29 வாழ்நாள் குறுகியது !
- தாகூரின் கீதங்கள் – 41 என் இதயத்துடன் பேசு !
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! இரண்டு காலாக்ஸிகள் மோதினால் என்ன நேரிடும் ? (கட்டுரை: 36)
- National Folklore Support Center – July 29th
- இசை பிழியப்பட்ட வீணை
- மூடநம்பிக்கை-எதிர்ப்புப் போர் மறவர் – ஆபிரகாம் தொ. கோவூர்
- இவ்வாரம் வெள்ளித்திரைக்கு வருகிறது சிவரஞ்சனி
- OH! presented by AGNI KOOTTHU (THEATRE OF FIRE)
- சொல்லப்படாத மௌனங்களினூடே
- பட்டிமன்றம்
- ‘a river flowing deep and wide’ premiere screening
- “உயிர் எழுத்து” ஓராண்டு பயணம்
- கண்ணதாசன் ரசித்த கம்பன் – 1
- எழுத்துக்கலைபற்றி இவர்கள்: 29 பி.எஸ்.ராமையா
- ‘கூடு’ என்ற இலக்கிய ஆய்வரங்கின் மூன்றாமாண்டு தொடக்கவிழா
- படைப்பு சாமிகள் கண் திறக்க வேணும்
- முனைவர் பே.க.வேலாயுதனார் பற்றிய செய்தி
- புத்தக விமர்சனம் : கவியோகி கவிதைகள்
- வெறுப்பும் வேதனையும் – மார்க்கெரித் துராஸின் “காதலன்”
- கவிதைகள்
- என் ஜன்னலின் சினேகிதி !
- சாவுகிராக்கி
- வழிப்போக்கன்
- குரானிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம்
- கொடைக்கானல் பண்பலை 100.5 எப்.எம்.வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் வி.குமார் அவர்களுடனான நேர்காணல்
- வார்த்தை – ஜூலை 2008 இதழில்
- வெயில் பிடித்தவள்
- தாஜ் கவிதைகள்
- வயது : 52 வருஷம், 9 மாதம், 17 நாள்!
- திண்ணையர்கள்
- நாளைய நம்பிக்கைகளுடன் இன்றைய பொழுதுகள்..
- டிரைவருக்கு சலாம்
அறிவிப்பு

சுகம் சுகமே.. திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜனகன் படநிறுவனத்தினரின் சார்பில் மற்றுமொரு கலைப்படைப்பான சிவரஞ்சனி திரைப்படத்தைக் கனடாவைச் சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் ஸ்ரீமுருகன் தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தை இம்மாதம் வெள்ளிக்கிழமை (25-07-2008) முதன் முதலாகக் கனடாவில் திரையிட இருக்கிறார்கள்.
கனடிய இந்திய கலைஞர்களின் உதவியுடன் தயாரான இத்திரைப்படத்தின் மூலக்கதை பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தனின் நாவலான ‘சொல்லடி மனம் கல்லோடீ’ என்ற நாவலைத் தழுவியதாக அமைந்திருக்கிறது. இப்படத்தின் திரைக்கதை வசனத்தை, சுகம் சுகமே, வேலி போன்ற திரைப்படங்களுக்குத் திரைக்கதை வசனம் எழுதிப் புகழ் பெற்ற குரு அரவிந்தனே மிகவும் சிறப்பாக எழுதியுள்ளார்.
கனடிய கலைஞர்களான ஸ்ரீமுருகன், கலைக்கதிர் கதிர் துரைசிங்கம், கரு கந்தையா, கலகலப்பு தீசன், கபிலேஸ்வர், நீதன், சங்கீதபூசணம் விஜயலட்சுமி ஸ்ரீனிவாசன், புதுவைராமன், ஷான் சந்திரசேகரன், ரமேஸ் ஆகியோருடன் நட்புக்காக வெற்றிமணி ஆசிரியர் சிவகுமாரனும், தமிழக சின்னத்திரை நட்சத்திரங்களான கோவை பாபு, ஹேமா, பிரியா, கே.ஆர். வக்சலா, ஹரிஸ்மா போன்றவர்களும் இத் திரைப்படத்தில் பங்கு பற்றியிருக்கிறார்கள். துரையின் இயக்கத்தில் செந்தில் குமரன் கமராவைக் கையாண்டிருக்கிறார். கனடாவில் நடந்த படப்பிடிப்பில் பிரபல கலைஞர் மதிவாசனின் இயக்கத்தில், மூர்த்தி கமராவைக் கையாண்டிருக்கிறார். கபிலேஸ்வர் இசை அமைக்க, அருள், ரமேஸ் ஆகியோர் தொழில் நுட்பத்துறையில் தங்கள் திறமையைக் காட்டியிருக்கிறார்கள்.
கனடியத் தமிழத் திரைபட உலகின் வெற்றிக்கு, ரசிகர்களுடன் சேர்ந்து நாங்களும் வாழ்த்துவோம்.