- ஆயுள்
- பாரம்பரிய அரங்கைப் பயில்வது குறித்து (ஸ்பெஷல் நாடகம்)
- மனக்கோலம்
- இந்தவார அறிவியல் செய்திகள் – சூலை 1, 2001
- பொறாமை
- விசித்திர வதை
- இருளில் மின்மினி
- இதயம் கூடவா இரும்பு ?
- முடிவின் துவக்கம்…..
- இருதயம் எஙகே!
- காதல் சேவை
- முன்றாவது நிலவு
- தீயவனாக இரு!
- பாரம்பரிய அரங்கைப் பயில்வது குறித்து (ஸ்பெஷல் நாடகம்)
- இந்த வாரம் இப்படி – சூன் 30 2001
- செக்கு மாடு (குறுநாவல் முதல் பகுதி)
- எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு (E.T)..
ராஜ்

நேசமாய் பார்த்தாள்
நெருங்கி விட்டான்
கண் இமைகளில்
கனவுகளை சுமந்து
கற்பனை வெள்ளத்தில்
கவிதை பல வரைந்தான்
கண்ணே ஏன்றான்
கை பிடிப்பேன் ஏன்றான்
அவள்,
கனவு என்றாள்
கை விட்டு சேன்றாள்
மனசு வலித்தது
உண்மை உரைத்தது – பெண்னே
உனக்கு இதயமே இல்லையா ?
ஆத்திரம் அடைந்தான்
ஆவேசம் கொண்டான் – ஆனால்
அன்பு விலங்கிட்டது
ஆம்,
அவன் கொண்ட நேசம்
நெசமானது தான்!
தடயங்கள் எதுவும்
உடலில் இல்லை,
மனதில்
மாற்றானுக்கு மனைவியானாள்
கொண்டவனை காதலன் என்றால்,
காதலுக்கு வலித்தது
இவன்,
இரவு நேர முனங்கல்
நிசப்தத்தின் கருவரையில்
புதைந்து விட வில்லை,
புதிதாய் ஒலித்தது
மனசாட்சியிடம் மண்டியிட்டான் – ஒரு
மலரை மணமுடித்தான்
பூசைக்கு வந்த மலாிடம்
நேசத்தை தேடினான்
மாசற்றதா என்று பார்க்கவில்லை
மனமிருக்கிறதா என்று பார்த்தான்…
மாசற்ற மலராயினும் – அவளும்
ஒரு பெண்தானே!