This entry is part [part not set] of 32 in the series 20100220_Issue
ப.மதியழகன்
போதி
பாலகனாய்
மரத்தைச் சுற்றி விளையாடும் பருவத்தில் தான்
அம்மரம் அவனுடன் அளவளாவத் தொடங்கியது
‘பச்சை பசேலென
எத்தனை இலைகள்
விரிவதற்குக் காத்திருக்கும் மொட்டுக்கள் பல
மணம் வீசும் மலர்கள்
பூக்களைத் தேடி வரும் பட்டாம்பூச்சிகள்
உனக்கு மகிழ்ச்சி தானே’ என்றது
சிறிது நேரத்தை அங்கு கழித்த அவன்
அவ்விடம் அலுத்துப் போகவே
மற்ற சிறுவர்களோடு விளையாட
மைதானம் நோக்கிச் சென்றான்
ஒவ்வொரு நாளும் அவன் வருவானென
எதிர்ப்பார்த்துக் காத்திருந்து
ஏமாற்றமடைந்தது அம்மரம்
விடலைப் பருவத்தில்
நண்பர்கள், திரைப்படம், கடற்கரை-என
சுற்றுவதற்கே
நேரம் சரியாகயிருந்தது அவனுக்கு
மரத்தை மறந்தே போனான்
காதல் அவன்
வாலிபக் கோட்டையை
முற்றுகையிட்டது
அகல்யா என்றொரு யுவதியின் தலைமையில்
‘காதலுக்கு மனம் தேவை
கல்யாணம் முடிந்து
குடும்ப ஓடத்தை தடையில்லாமல் நகர்த்த
பணம் தேவை – இதை உணர்ந்து
முதல் போட்டு தொழில் துவங்கி
சமூகத்தில் இன்னாரென முகவரியோடு
எனை அணுகுங்கள்
தலைகுனிந்து உங்கள் மலர்மாலையை
பெருமித்துடன் தோளில் ஏற்கிறேன்’-என
அவள் கூற
வியாபாரம் தொடங்க
பணம் தேவையே
எப்படிப் புரட்டுவது – என
அவன் மரத்தடியில அமர்ந்து
சிந்திக்கும் வேளையிலே
மரம் அவனிடம் பகன்றது
‘உன் நிலை எண்ணிக் கலங்கினேன்
இவ்வளவு காலம் எனை மறந்து
வாலிபக் குதிரையில
தன்னிலை மறந்து பயணம் செய்தாய்
காதல் கைகூட
செல்வம் வேண்டுமென
அவள் நிஜத்தை உணர்த்தியபோது
தாமாகவே உனது கால்கள்
நான் இருக்கும் திசையில் திரும்பி
என் நிழலை நோக்கி
வந்தமர்ந்து கொண்டன
துயரப்படாதே
உன் துன்பத்தைப் போக்க
வழியொன்று சொல்கிறேன்
என்னை வேரோடு வெட்டியெடுத்து
மரச்சாமான்கள் செய்யும்
தச்சனிடம் விற்றுவிடு
உனக்குப் பொருள் கிடைக்கும்
அகல்யாவின் அருகாமை
உன் இளமைக்கு
புத்துயிர் கொடுக்கும்’
எனக் கூறி முடித்ததும்
அவன் முகத்தில் ஆயிரம்வாட்ஸ் பிரகாசம்
ஞானத்தினால் அல்ல
அவளை அடைய வழி தெரிந்ததினால்
அண்ணாந்து மரத்தைப் பார்த்தான்
கருணையினால் அல்ல
எவ்வளவிற்கு விலைபோகுமென்று
கண்காளாலே அளப்பதற்கு
விரைந்தோடினான்
அகல்யாவை அணைப்பதுபோன்ற
அவனுடைய லட்சியக் கனவை நனவாக்கிட
முதல் படியாக
மரத்தை வேரோடு சாய்த்திட
கோடாரியை எடுப்பதற்கு!
குழந்தைகள் உலகம்
குழந்தைகள் உலகம்
தனது நுழைவாயில் கதவுகளைத் திறந்து
குதூகலத்துடன் என்னை வரவேற்றது
அங்கே
ஆனந்தமும், ஆச்சர்யங்களும்
ஒவ்வொரு மணற்துகள்களிலும்
பரவிக்கிடந்தன
காற்றலைகளில்
மழலைச் சிரிப்பொலி
தேவகானமாய் தவழ்ந்து
கொண்டிருந்தது
மோட்ச சாம்ராஜ்யம்,
தனக்குத் தேவதைகளாக
குட்டி குட்டி அரும்புகளை
தேர்ந்தெடுத்திருக்கின்றது
அங்கு ஆலயம் காணப்படவில்லை
அன்பு நிறைந்திருக்கின்றது
காலம் கூட கால்பதிக்கவில்லை
அவ்விடத்தில்
சுயம் இழந்து
நானும் ஒரு குழந்தையாகி
மண்டியிட்டு அவர்கள் முன் நிற்கின்றேன்
அந்தக் கணத்தில்
மரக்கிளையொன்று முறிந்து விழுகையில்
அதைக் கொண்டு இன்னொரு
விளையாட்டு ஆரம்பமாகிவிடுகிறது
எங்கு நோக்கினும்
முடமாக்கப்பட்ட பொம்மைகள்
உடைந்த பந்துகள்
கிழிந்த காகிதக் குப்பைகள்
சேற்றுக் கறை படிந்த சுவர்கள்
களங்கமில்லா அரும்புகள் எனக்கு
கற்றுத் தந்தது இவைகள்
வீட்டிற்குத் திரும்பியதும்
ஒழுங்காக அடுக்கப்பட்டிருந்த
அலமாரி பொருட்களையெல்லாம்
ஒன்றுவிடாமல் கலைத்துப்போட்டேன்,
தரையில் விசிறி எறிந்தேன்
ஏக்கத்தோடு
ஊஞ்சலின் மீது அமர்ந்தேன்
எனது வீட்டை அங்கீகரிக்குமா
குழந்தைகள் உலகம் – என்று
யோசனை செய்தபடி…
பூமராங் வாழ்க்கை
மண்ணும், காற்றும், நீரும்
கொஞ்சம் கொஞ்சமாக
உயிரோடு தின்றுகொண்டிருக்கின்றன
எனதுடலை
அதனை அலட்சியப்படுத்தி
செலுத்தப்பட்ட அம்புபோல
சுயப்பிரக்ஞை சிறிதும் அற்று
விரைந்து கொண்டிருக்கிறேன்….
எந்த வில்லினுடைய நாணின்
இழுவிசையிலிருந்து
எந்த இலக்கை நோக்கி
விடப்பட்டு இருக்கிறேன்
என்ற கேள்வி தோன்றி
வேதாளம் போல்
எனது தோளில் வந்தமர்ந்து கொண்டது
நான் இலக்கை சென்றடைவேனென
நம்பிக்கை வைத்து
என்னையவன் எய்து இருக்கின்றானா?
வழியில் எனது லயம் தவறிய
தப்புத்தாளங்களை
கண்ணிமைக்காமல் கவனித்துக்
கொண்டிருந்தானா?
மீண்டும் அவன் கைகளில்
தவழ நேருமோ
நியாயத்தீர்ப்புக்காக அவன் எதிரில்
கைகட்டி நின்று
சாட்சிக் கூண்டில் சிறைபட நேருமோ
அச்சூழ்நிலையில்
‘உனது படைப்பு பூரணமடையாத போது
எப்படி அந்தப் படைப்பு நடத்தும்
வாழ்க்கை பூரணமாக
இருக்கவேண்டுமென்று நீ ஆசைப்படலாம்? ’
என்ற கேள்வியை பதிலாக்கி
அச்சமற்று நின்றிடுவேன்
அச்சபையில்
மானுடத்தின் கேள்வியினை
நானொருவன் கேட்டிடுவேன்.
வசீகரமிழந்த வாழ்வு
வசீகரமிழந்தது வாழ்வு
தொலைவிலிருந்து காண்கையில் பொலிவாகவும்
அருகாமையில் செல்லச் செல்ல விகாரமும் கொண்டது
வாழ்வுவெளியெங்கும்
வசந்தத்தைப் பறிகொடுத்த நட்சத்திரங்கள்
உணர்வின்றி ஜொலிக்கும்
வறட்சியால் பிளவுகண்ட நிலங்கள்
தனது களங்கத்தை திரையிட்டு மறைக்க
விழையும் நிலா
தென்றலின் மீது பகைமை கொள்ளும் மரங்கள்
தன்னுடைய மாமிசத்தையே வேட்டையாடி
உண்ண நினைக்கும் விலங்கினங்கள்
தனது சிறகுகளையே முடமாக்கி,
அங்கஹீனமாக்கும் பறவையினங்கள்
பலிகொடுப்பதற்கே குழந்தைகளை பெற்றெடுக்கும்
தாய்,தந்தையர்கள்
அன்பை தூரஎறிந்துவிட்டு ஆயுதத்தை கையிலெடுக்கும் மனிதர்கள்
பூமி நரகமாகியதால்
காடுகளே இனி மனிதன் வாழ்வதற்குச் சிறந்தது
நாட்டில் எவ்வுருத்தில்
எந்த மிருகம் ஒளிந்திருக்கும்
என்றறியாது எவ்வாறு வீட்டினில்
பயமின்றி உறங்குவது?
This entry is part [part not set] of 42 in the series 20090115_Issue
வே பிச்சுமணி
ஒட்டஞ்சில் சொல்லும்
பரணி ஆற்றில் பள்ளிகூடம் போகாமல்
சட்டையும் அரைகால்சட்டையும் அவிழ்த்து
பாறை மீது வைத்து பறக்காதிருக்க கூழங்கல்லும் வைத்து
அம்மணமாய் ஈட்டியாய் நீரில் பாய்ந்து
குதியாட்டம் போட்டு பல்டி அடிக்க போய்
காதில் மணலும் மூக்கில் தண்ணீரும் புகுந்து
விரல்களில் தசைகள் சுருங்கி கண்கள் சிவந்து போக
கண்கள் சிவப்பு போக்க ஒட்டஞ்சில் ஒத்தடமும்
விளையாடிவிட்டு வருவதாக காண்பிக்க புழுதி தடவி
மூக்கில் முட்டையிடும் சளி காட்டி கொடுக்க
அரட்டி சிந்த சொல்லி சிந்தா மூக்கை பிடித்து
சிந்தி சிந்தி ஒரு பக்கம் சாய்வாய் என் மூக்கு
ஆனாலும் திருட்டுதன குளியல் தொடர
ஆற்று நீரும் மூக்குக்கு பழகி போனதும்
ஒட்டஞ்சில்லில் தவளை விட்டு மகிழ்ந்ததும்
பூட்டிய குளியலறையில் வாசனை சோப்பு போட்டு
குளித்தாலும் அந்தகுளியல் சுகம் என்றும் வராது
இன்றும் ரோட்டில் எப்பவாது காணும்
ஒட்டஞ்சில் சொல்லும்
சூட்டு ஒத்தடத்தையும்
ஆற்று நீர்பரப்பில் தவளை விட்டதையும்
மகிழ்ச்சிக்காக குளித்ததையும்
உன் பெயர் உச்சரிக்கையில்
விழா மேடையில் உன் பெயர்
உச்சரிக்கையில் முகம் சாய்த்து
வெட்கத்துடன் மூன்றாம்பிறையாய்
இதழ் விரித்து நீ புன்னகைக்க
என் முகமும் பிரதிபலிக்க
விழாவுக்காக ஒரு புல் கூடபுடுங்காம
என்ன சிரிப்பு வேண்டிகிடக்கு
என என் மனசாட்சி-
கீழ்வானம் சிவக்க
புல் இனங்கள் துயில் எழவில்லையா
அவள் பெயரின் ஒலி என்னுள்
காதலாய் பரவி என் இதழ் விரிக்காதா
பரமனின் உடுக்கை நாதத்தில
உயிர்கள் பிறந்ததாய் மெய்ஞானம்
எரிமலையின் வெடிசத்தத்தில்
பிறந்ததாய் விஞ்ஞானம்
உன் பெயரின் ஒலியில்
நான் பிறந்ததாய் என்ஞானம்
நான்மறைகளும் காற்றில் ஒலியாய்
இன்றும் உள்ளதாக நம்பிக்கை
உன் பெயரின் ஒலியில்
என் நாளும் என் இருக்கை
பெயர்களின் ஒலி வலிமையை
அனுமனுக்கு பின் நானறிவேன்
உன் பெயர் உச்சரிக்க படும்பொழுது
எல்லாம் உயிர்ப்பிக்கபடுகிறேனே
எனது ராமஜெயம் உன் பெயர்தானே
உன் பாட்டியின் பெயர் உனக்கு
உன் தந்தை சூட்டிய காரணம்
இப்போதான் விளங்கிறது
என் மூலம் ஊரிலும் தெருவிலும்
புது பேனா எழுதும் முதல்
பரிசோதனை வார்த்தையாய்
என் கை எழுதும் உன் பெயர்
உன் பெயர் உச்சரிக்கபடும் போதெல்லாம்
என் கண்கள் உனை தேடும் எல்லாஇடத்திலும்
உன் பெயர் சூட்டிய
சின்ன குழந்தைகளின் கன்னம்
செல்லமாய் தடவும் என் கைகள்
உன் பெயர் சூட்டிய
பாட்டிமார்களுக்கு பாதை கடக்க
உதவும் என் கால்கள்
மொழி பாடங்களில் எழுதும்
கடிதங்களின் முகவரியில்
எல்லாம் உன் பெயர்
என் மின்னஞ்சல் முகவரியின்
கடவுசொல்லாக மட்டும்
உன் பெயரை வைக்கவில்லை
என்னை நீ கடவு செய்யகூடாதென
This entry is part [part not set] of 46 in the series 20090108_Issue
க.செ.வெங்கடேசன்.. அபுதாபி.
சந்தி(ப்) பிழை
அவள் இவள்
சந்தித்தது, சந்திப்பதே,..
பிழையெனில்,
இவர்களைப் பற்றி
எழுதுகையில் ஏற்படும்
சந்திப் பிழை
பிழைபடில்,
பெரும்பிழையோ?
என் காதலி
குறும்புப் பார்வை,
குறுகுறுத்த கண்கள்,
மென்மையான ஸ்பரிசம்,
அன்பான முத்தம்,
என்னில் விளையாடும் கரங்கள்,
காதல் வழியும் மொழி,
என்னில் ஏற்படுத்திய தாக்கம்,
எல்லாம் என் கண்முன்னே,
இமைகள் மூடும் போதெல்லாம்,
என்னுள்ளே உள்ள காதல் அவளின்பால்,
இத்தனை வயதிலும் மாறவே இல்லை,
என் மகள்.
களவு கூட சந்தோஷம்தான்
குளிர்கால ரயில்வே ஸ்டேஷன்
சிமெண்ட் பெஞ்சில்
தி ஜாவின் மோகமுள்
உடனான தணிமை,
முன் வராண்டா வேப்பமர
முன்னிரவு தென்றலில்
இளையராஜாவின் இசையுடன்
ஜென்சியின் இனிமையுடனான
எப் எம் அலைவரிசை.
அலுவலகம் முடிந்து
நண்பர்கள்
பாய் கடை டீ பிஸ்குத்
தம் அரட்டை,
காலை செய்தித்தாள்,
மாலை தொலைக்காட்சி,
செய்தி, மெகா சீரியல்,
பின்னிரவு பால் பழம் தம்,
மற்றும் எத்தனை எத்தனையோ?!!..
களவு போயும்கூட
கவலையில்லை,
சந்தோஷமே!!..
என்னுடனான என்
குழந்தையின் திருடப்பட்ட
சந்தோஷ தருணங்கள்
களவு போனதில்..
This entry is part [part not set] of 46 in the series 20090108_Issue
கணேஷ்
சருகுகள்
மழை நாட்களில்
எத்தனை
காகிதக் கப்பல்கள்
அந்த முற்றத்தில்
மண் பிள்ளையார்களும்
தொப்பை நாணயங்களும்
எத்தனை கிடக்கும்
அணில் போல் கிறீச்சிடும்
அந்த ராட்டினக் கிணற்றில்
அந்த ரேழியில்
எத்தனை கதைகள்
என் பாட்டியுடன்
இரவில் அச்சுறுத்தும் கொல்லையும்
தலையணையுடன் பிறந்த
வாசற் திண்ணையும்
இவை எல்லாவற்றிற்கும்
சாட்சியாய் நின்ற
கூடத்துத்தூணும்… … …
அடுக்குமாடி குடியிருப்புகளில்
நுழைந்ததால்
தொலைந்து போய்
இன்றோடு
ஆண்டுகள் இருபது !
நடுத்தர வர்க்கம்
விபத்தில் சிக்கியவனுக்கு
உதவி செய்ய
நாலணா தராமல் போன
நடத்துனா¢டம் காசு கேட்க
கண்ணாடி கதவுகளிட்ட
அலுவலகங்களில் நுழைய
அக்கம் பக்கம் வலிய சென்று
அறிமுகம் செய்து கொள்ள
பருவப் பெண்களொடு
கலகலப்பாய் புழங்க
தெருக்கோடி சென்ற
பூக்காரனை உரக்க கூப்பிட
தயக்கம் !
ஏனோ விரட்ட முடியவில்லை
இது இலையுதிர்காலமோ
விழுதுகள் உதறிய வேர்கள்
பொக்கை வாயும்
சுருங்கிய தோலுமாய்
சருகுகளாக காத்திருக்கும்
பழுப்பு இலைகள்
வயது வளர்ந்து
தளர்ந்து போனதால்
விரட்டப்பட்ட
பஞ்சுத் தலைகள்
பிஞ்சு மனங்கள்
அசுர வேக வாழ்க்கையில்
சல்லிக் காசுகள்
அள்ளிக்கொண்டு போன
அஸ்திவாரங்கள்
குடும்பக் கூட்டின்
குண்டுத்தூண்கள்
உதிரத்திற்கு உரமிட்டவர்கள்
இன்று
முதியோர் இல்லத்தில்
ஏன் இந்த அவல நிலை
நமக்கும்
நாளை உண்டு
ந்ரையும் உண்டு
நிஜம்
கால் கட்டை விரல்கள்
கட்டப்பட்டன
ஒற்றை விளக்கு தலைமாட்டில்
தாயே !!!
உன் மரணம்
ஜனித்து விட்டிருந்தது
வாய் விட்டு
இல்லை
வயிறு விட்டு அலறினேன்
மழையாய் அழுதேன்
நீளமாய் பயமாய்
இருந்தது இரவு
மறு நாள் காலை
இறுதி ஊர்வல வண்டிக்கு
சில நூறுகள்
சாஸ்தி¡¢களிடம்
சில நூறுகள்
மந்திரங்களைக் குறைக்கச் சொல்லி
சில நூறுகள்
வெட்டியானிடம்
சில நூறுகள்
என்று பேரங்கள்
ஆரம்பித்தன !
நிஜங்கள் உறுத்தின !
இப்படித்தான் பேரமாய்
போய்விடுமோ
என் மரணமும் !
முகவா¢
நான்கு வயதில்
வாத்தியாராய் வருவேன் என்றேன்
ஆறு வயதில்
போலீஸ்காரனாய் வருவேன் என்றேன்
பத்து பன்னிரண்டு வயதில்
விஞ்ஞானியாக ஆசைப்பட்டேன்
பதினெட்டு வயதில்
கவிஞனாக நினைத்தேன்
முன் இருபதுகளில்
ந்டிகனாக விரும்பினேன்
முப்பது வயதில்
இன்று
அப்பாவாக இருக்கிறேன் !!!
This entry is part [part not set] of 28 in the series 20081218_Issue
தாஜ்
அக்கரைக் காட்சி
அவர்கள் பெருத்துவிட்டார்கள்
மனிதர்களின் மாற்றாய்
நிஜங்களின் நிழலாய்
நகர வீதிகளின் அங்கமென
நடமாடும் அவர்கள்
லோக காப்பாளர்களால்
கல்லடிப் படும்வரை
அடையாளம் தெரிவதில்லை.
நான் காலாறும் இடமெல்லாம்
கேலிச் சிரிப்போடு
சகஜமான அவன்
நேர் நின்றதோர் நேரம்
முகம் பார்த்து கையெந்த
இக்கரையிலிருந்து
கருணையோடு பார்த்தேன்
என் பார்வையை
அவனும் பார்த்தான்!
மூ ல ம்
பக்கத்தில் வந்து
கண்பார்க்க
கைகளில் இருந்ததை
தட்டிப் பறித்தன
அவைகள்!
சிலர் வீசியெறிந்ததை
பொறுக்கிய வேகத்திலும்
குட்டிகளைச் சுமந்தே
மலையேறின.
கொடிகளைப் பற்றியவைகள்
ஊஞ்சலாடித் தாவி
கிளைகள்மாறி நடை போட்டு
தடங்கலற மேலே நகர்ந்தன
உச்சத்தில் குந்த
வாய்ப்பற்றவைகள்
உறுமல் மொழியோடு
சதா தாண்டிக் குதித்தன.
நம் மூலமென சிலாகித்தாலோ
குரல் கொடுத்தாலோ
அவைகளின் சேட்டைகள்
கூடிக்கொள்கிறது.
தெற்கைக் காட்டிலும்
வடக்கில்தான் இவைகளின்
நவகொட்டம் என்கின்றனர்.
உச்சாணிக் கொம்பிலிருந்து
வாலில் தீயேந்தி
கடல்தாண்டிக் குதித்த ஒன்று
பலிகளைப் பொசுக்கி
கொண்ட கோரத்தை
யுத்தக் காண்டமாய் வாசித்து
கண்கள் சிவந்ததுண்டு.
————————————-
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com
This entry is part [part not set] of 23 in the series 20081204_Issue
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி
01
இருக்கட்டும் எதற்கும்…!
பத்தாண்டுகளுக்கு முன்
நான் அனுப்பிய கடிதமொன்றை
பத்திரமாய் வைத்திருந்து
பிரதியொன்றை எனக்கின்று
அனுப்பித்தந்த நண்பனின்
அன்பைப்போல
இருக்கட்டும் எதற்கும் என்று
இதுபோல் இன்னும்
எத்தனையோ நம்
எல்லோரிடமும்.
02
அவனவன் பாடு
கண்டு கொள்ளாமல்
இருந்திடல் கூடும்
சிலருக்கு.
கண்டு கொண்டாலும்
கைவசப்படுவதில்லை
சிலருக்கு.
கண்டதையும் கொள்வதிலும் உண்டு
கணிசமான சிக்கல்கள்.
அவனவன் பாடு.
சிலதை கண்டு கொள்ளாமல் இருப்பதும்.
சிலதை கண்டும் கொள்ளாமல் இருப்பதும்.
03
பட்டங்களும் பட்டமும்…!
மக்கள் திலகம்
நடிகர் திலகம்
மக்கள் கலைஞர்
நவரச நாயகன்
காதல் மன்னன்
காதல் இளவரசன்
ஆக்சன் கிங்
அல்டிமேட் ஸ்டார்
உலக நாயகன்
சூப்பர் ஸ்டார்
சுப்ரீம் ஸ்டார்
நடித்துப் பெற்ற பட்டங்களுடன்
நாயகர்கள் சுவரெங்கும்
சுவரெங்கும் சுவரொட்டி
சுவரொட்டி செல்லுமவன்
படித்துப்பெற்ற பட்டம் மட்டும்
பத்திரமாய் பெட்டிக்குள்.
This entry is part [part not set] of 34 in the series 20080911_Issue
றஞ்சினி
என் ரகசியம்…
கல் மலைக்
குகைக்குள்
வாழ்ந்த நிமிடத்தில்
அடர்காட்டின்
நடுவில் கலந்து
மலை உச்சியில்
பனியில் நனைந்து
கதிரவன்
கழைந்தெறிந்த
வர்ணங்களைச் சூடி
இயற்க்கையை
விழுங்கி
மது இதழில்
முத்தமிட்டு
ஆச்சிரமத்தில்
குடிபுகுந்து
தத்துவங்கள்
கவிதை சொல்லி
பிரபஞ்சக் கனவுடன்
விழிக்கிறது
நடுநிசியில்.
காவித்திரியும்..
சுயநலத்தின்
பிரதிகளாக
சிதறும் உன்
வார்த்தைகள்.
வரிகள் தரும்
வலிக்குள்
சிதைகிறது
நேசம்
நீ..
பிரபலத்தின்
நண்பன்
சுயநலத்தின்
அறிகுறி
விடையற்ற
கேள்வி
காத்திருப்பின்
ஏமாற்றம்
தேவையற்ற
கற்பனை..
This entry is part [part not set] of 26 in the series 20080626_Issue
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி
என் …!
பெரும் மமதைக்காரனென்று சொல்.
பித்தலாட்டக்காரன் என்று சொல்.
சிற்றின்பப்பிரியன் என்று சொல்.
சின்னபுத்திக்காரன் என்று சொல்.
சீதாராமன் இல்லை என்று சொல்.
சிறுவயதுப் பிழைகள் எல்லாம் சொல்.
மதுபுகைக்கு அடிமை என்று சொல்.
மனிதனே இல்லை என்று சொல்.
என்னை
என்ன வேண்டுமானாலும்
சொல்.
என் கவிதைகளும்
என் போல்தானா?
சொல்.
இயல்பு…!
என்னாயிற்று என்றேன்.
எதுவுமில்லை என்றாய்.
பின் எதையும்
கேட்கவில்லை நான்.
இயல்பின்றி போவதில்
சம்மதமில்லை எனக்கும்.
இருப்பு…!
எப்படி இருக்கிறாய் என்றாய்.
அப்படியேதான் இருக்கிறேன்
என்றேன்.
இப்படி உன் விழிகள் விரிய
அப்படியே இருத்தலென்பது
அத்தனை சிரமமா என்ன?
பிரிவின் சாசனம்…!
ஏதாவது சொல் என்றேன்
என்ன சொல்ல என்றாய்?
எதையாவது சொல்லி
இருக்கலாம் நீ.
பிரிவின் சாசனமாய்
ஒரு பதிலாவது
எஞ்சியிருக்கும்
நமக்குள்.
இன்முகம்…!
எழுத்தில் இருப்பதை
எடுத்துக் கொடுக்கும்
பணிதான்
என்றாலும்
இன்னும் கொஞ்சம்
சிரித்தபடி
இருக்கலாம்
இந்த
மருந்துக்கடை
விற்பன்னர்கள்.
கண்டதும் காணாததும்…!
சிக்னலில் கடந்து போன
பெண்ணின்
முகம் உருவம் எல்லாம்
மறந்துபோய்
சாலையைத் துடைத்தபடியே போன
அவளின்
சிவப்பு நிற துப்பட்டா மட்டும்
துல்லியமாய் கண்முன் இன்னமும்.
எப்படிக் கொண்டு சேர்க்க?
காலையில் வீதியில் கண்ட
அந்த ஒற்றைச்சாவியை
அதற்கு உரியவனிடம்.
மனக்குழந்தை…!
இடுப்பை விட்டு
இறங்க மறுத்து
அடம்பிடிக்கும்
குழந்தையாய்
எப்போதும்
எதையாவது
எழுதச் சொல்லி
நச்சரித்துக்கொண்டிருக்கிறது
என்
மனக்குழந்தை.
சொல்லுதல்…..!
சிலதை
சொல்லத் தெரியவில்லை.
சிலதை
சொல்வதா தெரியவில்லை.
எலும்புகளின் மீதான ருசியை ரசித்தது
அந்த பெயர் தெரியாத பறவை.
ரொம்பநேரமாய் குருவி என்னதான்
செய்ய என்று யோசித்துக்
கொண்டேயிருக்கிறது.
ஈக்கள் அகிம்சாவாதிகள்
அவ்வளவாய் தொந்திரவு தருவதில்லை.
மெல்ல நக்கிவிட்டு எழுந்துபோய்விடுகின்றன.
கோலங்களை சாப்பிட்ட சைவ
எறும்புகளுக்கு இந்தவேகத்தில்
இடமில்லை எனினும்
என்னிடமும் ஏதோ இனிப்பு
இருக்கிறது போலிருக்கிறது.
இல்லாவிட்டால் அவையேன் என்னை
தேடிப்பிடித்து வரவேண்டும்.
இவர்கள் சாப்பிட்டபோதெல்லாம்
வலி தெரியாது இருந்த எனக்கு
டயர்கள் 14வது தடைவையாய்
ஏறியபோது பதிவுபோலவே வலித்தது.
எந்த மூன்றாம்நாள்
உயிர்தெழுவதற்காக
படுத்திருக்கிறேன் ?
டயரும் நடுத்தெரு நாய்களும்
அது அதுபாட்டுக்கு படுத்திருந்தது
பிரபஞ்சவேகமும் என் வேகமும் அறியாது
அசமஞ்ச நாய்
நாலாம் கியரிலிருந்து ஏன் ஒரு
நாய்க்காய் பிரேக் போடவேண்டும்.
ஓலிப்பான் அமுத்தியிருக்கலாம்.
அழுத்தவில்லை.
சின்னதாய் கீரிச்சலோடு டயர் சுழற்ற,
அடித்து புரண்டு எழுந்த அதன் கண்களில்
கடைசிநேர உயிரின் ஒளி.
தப்பித்தலின் பொருட்டு புரண்டு
பின்பக்கம்போயிற்று.
தப்பித்தும்விட்டது.
அந்த ஓளி என் கண்ணிலும் ஓளிர்ந்தது
போனமுறை பிங்க் ஸ்லிப்பின்போது
This entry is part [part not set] of 45 in the series 20080501_Issue
பஹீமாஜஹான்
தோட்டம்:
அறுவடை ஓய்ந்த வயல் வரப்புகளில்
மந்தைகள் மேயவரும் காலங்களில்
கோடை தன் மூச்சைக் கட்டவிழ்க்கும்
ஆற்றங்கரைத் தோட்டத்துப் பசுமையும் கருகும்
“தண்ணீர் தேடிப் பாம்பலையும்
காட்டில் திரியாதே”
அம்மம்மாவின் கவனம் பிசகும் கணமொன்றில்
பதுங்கிப் பதுங்கி நோட்டம்;விட்டு
ஓட்டமெடுப்பேன் தோட்டம் பார்த்து
அச்சம் தவிர்த்திடவும் கொய்யா பறித்திடவுமாய்
கையிலே ஓர் தடி
அத்தடியையும் செருப்பொரு சோடியையும்
மரத்தடியில் விட்டுக்
கிளையொன்றில் அமர்ந்து கொள்வேன்
கற்பனையும் பாடலும் தோட்டமெங்கிலும் பரவி
பள்ளத்தே பாய்ந்தோடும் ஆற்றிலும் கரைந்தோடும்
ஆறு:
ஆற்றின் நீரோட்டம் படிப்படியாக வற்றி
கோடையின் உச்சத்தில் நரைத்த தேகம் பூணும்
மாலைப் பொழுதொன்றில்,
தாம்பூலமிடித்து வாயிலேதரித்து வீட்டைப் பூட்டிச்
சேலைத் தலைப்பில் சாவியை முடிந்து சொருகி இடுப்பில்
தீர்க்க தரிசனத்துடன் புறப்படுவாள் அம்மம்மா
மண்வெட்டியை ஊன்றி ஊன்றி
காரணம் கேட்டு நிற்கும் என்னிடமோ
புதையல் அகழ்ந்திடப் போவதாய்க் கூறி நடப்பாள்
நானும் தொடர்வேன்
தோட்டத்து ஒற்றையடிப்பதையின் சருகுகளைச்
சிறு மண்வெட்டியால் இழுத்தவாறு
அவள் பின்னே
புதையல்:
அத்திமரத்தின் கீழே
கருநிறப் பாசி படர்ந்து
நீர்ப்புச்சிகள் சருக்கள் நிகழ்த்தும்
நீர் தேங்கிய மணலை அகழத் தொடங்குகையில்
வெண்ணிற மணலோடு
சலசலத்து ஊறும் குளிர் நீர்
ஊறிவரும் நீரை வழிந்தோட வைக்கும்
கால்வாய் அமைப்பையும் அவளே அறிவாள்
அத்தியின் கிளைகள் ஆடும்
தௌ;ளிய நீர்ச்சுனையை
உருவாக்கிய பெருமிதத்துடன்
மாலை இருளை ஆற்றில் விட்டுக்
கரையேறி வீடடைவோம் சிறுமியும் பாட்டியும்
நாசகாரன்:
பின்னாளில்
எல்லோரும் வந்தங்கே துவைப்பர் குளிப்பர்
இடையிடையே உயர்ந்த ஆற்றங் கரையின்
மூங்கில் மரங்களின் மறைவில் நின்று
வந்திருப்பவரை அடையாளங் கண்டு திரும்புவாள் அம்மை
பின்னும்
கண்காணிப்புத் தவறிய இடைவெளியில் வந்து
படு குழி தோண்டி வைத்துப் போயிருப்பான்
அவளது வடிகாலமைப்பு ஞானத்தின் துளியும் வாய்க்காத
அற்பப் பயலொருவன்
தெளிந்த நீர் ஊற்றுக் குட்டையாக மாறி
அழுக்கு நீர் சுற்றிச் சுழழுமங்கே
நாசமறுத்த பயலவனை முனிந்த படி
மீளவும் புணரமைப்பாள் வியர்வை வழிந்திட அம்மை
தெருவோர நிகழ்வுகள்
பல முகங்களின் வாழ்க்கையை
அம்பலப்படுத்தின
பார்க்க முனைந்த
விழிகளுக்கு மட்டும்
பலவித மரங்களும்
சூழலோடு புணர்ந்து
அகன்ற வீதியின் ஓரங்களிலே
தம் இருப்பைப் போற்றாது மரியாதையோடு
முகம் நிமிர்த்தி நின்றிருந்தன
தம்மை உணராதவர்க்கும் நிழலாக
உலகம் என் கண் முன்
மெதுவாக நகர்ந்தது
தன் எல்லா உறுப்புகளையும்
விரிவாக விளக்கியவாறு,
அசுர வாகனங்கள் நிரம்பிய வீதியின்
ஓர் ஓரத்தில் என்
மிதிவண்டிப் பயனம்
தொடர்கிறது.
சிறகுகள் முளைத்த சுதந்திரத்துடன்
கவலையின்றிப் பார்க்கிறேன்
கவலை தோய்ந்த முகங்கள்,
முன்னேற முந்துவதை.
வியர்வைத் துளிகள்
வீசிய தென்றலால்
குளிர்ந்தன.
(எழுதிய நாள் 07.08.2003)
மழை
மழைப் பருவம் மயக்கியது
மண் மணக்கும் வீதியில்
நீர் குட்டைகளைக்
கலைக்கும் மழை
நானும் கலைக்க முனைய,
உடனே என்னை
உயர்த்தி தேரளில்
சாய்த்துக் கொண்டார்.
விநோத பாஷையில்
வியாதி ஒன்றைச் சுட்டி
This entry is part [part not set] of 44 in the series 20080403_Issue
பைசால்
இடைவெளி
அதிகமான நாட்கள்
நாங்கள் பேசியிருக்கமாட்டோம்
வீட்டில்
தொலைபேசிக் கட்டணம் அதிகம்
தொடர்ந்து துண்டிக்கப்பட்ட தொலைபேசியை
தூக்கி
அது அடைத்துவந்த அறைக்குள் வைத்துவிட்டோம்
“இடைவெளி நிரப்புக”
என்ற சொல்லை என்னாலும் மறக்க முடியாது
இதைத்தான் நீ கடைசியாகப் பேசிவிட்டுப்போனாய்
பஸ்ஸில் போகும்போது
அடையாள அட்டை தவறியதாகச் சொன்னாய்
நான் நினைக்கிறேன்
இலேசில் நீ வீடுபோய் சேர்ந்திருக்க முடியாது
என் வீட்டு
தென்னை மரத்திற்குக் கீழ்
இப்போது யாருடனும்
நான் அமர்ந்திருப்பதில்லை
என்பதையும்
உனக்கு அறிவிக்க எண்ணியிருந்தேன்
நாம்
அருந்துவதற்காக வந்த தேநீர்
சுடுகிறதென்று சொல்லி
கதிரையில் இருந்தவாறு கீழே வைத்தோம்
கோப்பையில் தேங்காய் விழுந்து
தேநீரைக் குடிகுடியென குடித்துவிட்டு
எழுந்து நடந்து சென்றது
ஒரு மனிதன்போல்
என் வீட்டு
தென்னை மரத்திற்குக் கீழ்
இப்போது யாருடனும்
நான் அமர்ந்திருப்பதில்லை
என்பதையும்
உனக்கு அறிவிக்க எண்ணியிருந்தேன்
அவன்தான் தேங்காய் மனிதன் என்றாய்
நான்
அவன்தான் தேங்காய் மடையன் என்றேன் சிரித்துக் கொண்டு
அதன் பிறகு பேசமுடியாமல் போனது
அதனால் நானின்னும்
தொலைபேசி இணைப்பைப் புதுப்பிக்கவில்லை.
நள்ளிரவில் சிறுவன் கொக்குகளை உலர்த்துகிறான்
பகலின் குருடு நள்ளிரவு
இரவின் தெளிவு நடுப்பகல்
நள்ளிரவில் சிறுவன்
கொக்குகளை உலர்த்துகிறான்
நீரின் கதவுகள் திறந்து
உள்ளே நுழைய விருப்பம் தெரிவித்தது கொக்கு
அங்கே ஒரு மீன் கவிதையெழுதியது
“எனக்கு இரண்டு உதடுகள்
என்னை நானே முத்தமிடுகிறேன்
எனக்கு இரண்டு கண்கள்
என்னை நானே பார்க்கிறேன்
எனக்கு இரண்டு கைகள்
என்னை நானே தடவிக்கொள்கிறேன்
எனக்கு இரண்டு கால்கள்
நானே நடந்து செல்கிறேன் ஊரெல்லாம்”
மீன்களின் முத்தங்களைக் கொல்லுவது,
அதன் விரல்களிலிருக்கும் கவிதைகளைக் கொல்லுவது
என் பசியல்ல
என்று பாடிக்கொண்டு பறந்தது கொக்கு
பசியோடிருந்த சிறுவன் அதிர்கிறான்
நேற்று உலர்த்திய கொக்குகளுக்கு
உயிர் வாங்கச் செல்கிறான்
வழியில் தன்னுயிரை யாரோ எடுப்பதுபோல உணர்கிறான்
உயிர்த்திருடர்கள் இங்கு அதிகம்
திருடர்களுக்கு
இத்தனை உயிர்களும் அதிகம்
குடித்து முடிக்கமாட்டார்கள்
நான் ஒரு கூந்தல் தாவரம் வாங்கிவந்தேன்
நான்
ஒரு கூந்தல் தாவரம் வாங்கிவந்தேன்
என் மனைவியின் தலையில் நடுவதற்கு
பசளை உண்ணத் தெரியாது
நீர் அருந்தத் தெரியாது
பராமரிக்கத் தெரியாது என்று அவள் சொன்னாள்
நான்
ஒரு கூந்தல் தாவரம் வாங்கிவந்தேன்
என் காதலியின் தலையில் நடுவதற்கு
இன்று
அது நீண்டு வளர்ந்து
நிலாக் காலங்களிலும்
குளிர் காலங்களிலும்
என் முகம் முழுவதையும் மூடிக்கொள்கிறது
This entry is part [part not set] of 36 in the series 20080327_Issue
விழியன்
நாடகம் நடுவே
உடைந்து கொண்டுதானிருக்கின்றது
காரணங்களை தானே உருவாக்கியபடி
தூரத்தே நிகழும் உடைப்புகள்
ஆழத்திலிக்கும் பெரும்வலியினை மீட்டெடுத்து
கனக்கிறது கசிவுடன்
யாருக்காக வருந்துவது?
அடுத்த கணம் ஏதும்நடவாததுபோல்
இதழோர புன்னகையுடன் கடந்துவிடுகிறேன்
வலிகள் கொடுத்த வலுவில்
குழந்தை(பருவம்)
உன் பூனையும் என் புறாவும்
சண்டை போட்டதன் பின் திட்டியதற்கா?
கேரம் போர்டில் தோற்றுப்போனதற்காய்
கலைத்துவிட்டு மொண்டியடித்து ஓடிவிட்டதற்கா?
மாமா கொடுத்த பம்பர கயிறை
நான் மறைவாய் ஒளித்து வைத்தற்கா?
எதற்கு உம்மென இருக்கிறாய்
சாரி அக்கா
ஓரமாகவே உட்கார்ந்து என்ன தான் செய்கிறாய்?
நான் உன்னிடம் ஏன் வரக்கூடாது?
அக்கா என்னுடன் விளையாட வருவியா?
This entry is part [part not set] of 34 in the series 20080131_Issue
உஷாதீபன்
இழப்பு
எப்படிச் சொல்ல
அந்தச் சோகத்தை-மகனே!
உனக்கு
கிட்டிப்புள் விளையாட்டு
தெரியுமா?
கோலியாடியிருக்கிறாயா?
எத்துக் கம்பு?
செதுக்குச் சப்பா?
அட…
பம்பரமாவது விட்டிருக்கிறாயா?
பாண்டியாவது உண்டா?
பச்சைக் குதிரை தாண்டியிருக்கிறாயா?
இல்லையா?
போச்சு!@ அத்தனையும் போச்சு!!
என்ன படித்து என்ன பயன்?
உன்
இளமைக் காலங்கள்
இழந்த காலங்கள்
நீ எவ்வளவு பெரிய
வேலைக்குப் போனாலும்
எத்தனை கைநிறையச் சம்பாதித்தாலும்
இந்த இழப்பு
ஈடு செய்ய முடியாதது
உன்பாலான
இந்தத் தாக்கம்
எனக்கு
தீராத மனச்சுமைதான்!!
அவன்
அந்த வளாகத்தில்
நுழையும் போதெல்லாம்
கையை நீட்டுகிறான் அவன்
அவனின் பொழுது – இன்று
என்னிலிருந்து துவக்கமா? – அல்லது
ஏற்கனவே துவங்கி விட்டதா?
எப்படியாயினும்
விடுமுறை நாளன்று
என்னின் எதிர்பார்ப்பு
உண்டு அவனுக்கு
அவனின் அந்த எதிர்பார்ப்பும்
அறியும் என் மனது
மனசு ஊனமுறாமல்
போட்டுவிடவேண்டும்-அந்த
ஊனமுற்ற நண்பனுக்கு
தேவை
குறைந்த சம்பளம்
நிறைந்த மனது
அப்பாவுக்கு
நாற்பதாண்டு காலம்
மாடாய் உழைத்த அவர்
ஒரு நாளும்
மனம சலித்ததில்லை
ஆனால் இன்று
இருபத்தைந்து வருட சர்வீஸில்
ஏகமாய்ச் சலிக்கிறது மனது
அப்பா காலத்தில்
லஞ்ச லாவண்யமில்லை
இன்றோ
ஊடுபாவாகி –
புரையோடிப் போயிருக்கிறது
இதற்கு மத்தியில்
நேர்மையாய் சர்வீஸ் போட
குறைந்தபட்சம் அந்தச்
சலிப்பாவது வேண்டாமா??
This entry is part [part not set] of 34 in the series 20080131_Issue
ந. அனுராதா
கனவில் நீந்தும் கள்வன்
கனவுகள் உதிரத்துவங்கும் ஒரு காலையில்
ஒரு வண்ணத்துப்பூச்சியின்
கூட்டுக்குள் ஒரு கள்வனைப் போல்
நுழைந்தான்
என் நேற்றின் மிச்சமானவன்
என் மூச்சின் உச்சத்தின்
ரகசியம் புரிந்து
என்னை அள்ளி வெளியே வீசி
தன்னை என்னுள் நிரப்பினான்.
நீண்ட மரங்கள் அடர்ந்த
ஒரு பனிச் சாலையில்
மெல்ல நடுங்கும் என் கைப்பிடித்து
அழைத்துச் செல்கிறான்.
ஒற்றை விளக்கெரியும்
இருட்டுப் புள்ளியின் திசை நோக்கிப்
பயணம் புரிகிறோம்
ஒருவரோடு ஒருவர் பேசாமல்
என் கூடு தானே தன்னை
கிழித்துக் கொள்ள வாயிலில் காத்திருக்கிறது
உதிக்கும் சூரியன் பரப்பும்
செவ்விள காலை எனக்குள் விரிய
என் பனி மெல்ல உருகி முத்தாக
ஊர்வலத்துக்காய்
ஏந்தும் தோளுக்காய் பசியுடன்…
இமை மீறி நீந்தும் நீருடன்…
விரையும் குதிரை
இருண்ட குகையினுள்ளே
மெல்ல ஊர்ந்து சென்றுகொண்டிருக்கின்றன
நினைவு எறும்புகள்
ஒவ்வொரு சொல்லுக்கும் இடையே
அந்நியமாய் நலம் விசாரணைகள்.
நடக்கும் போதே தூங்கிப்போன
குழந்தையாய்
தோளில் தூக்கிக்கொண்ட உன் ஞாபக எச்சங்கள்
உள்ளே வழியும் வெண் ரத்தம்
நக்கிச்சுவைக்கும் நாக்காய்
நம் பிரிவின் மிச்ச நிமிடங்கள்
கண்ணில் தெறிக்கும் காதலுடன்
கைகள் வழியும் காமத்துடன்
உன் கன்னம் தீண்டிய
என் உள்ளங்கை முழுதும்
உனதான ரேகைகள்
விரிந்த கடலின் அலையின் மேல்
கதிரவன் இல்லா வானம் தேடி
விரையும் குதிரையாய்
நம் வாழ்க்கைக் கடிவாளம்
This entry is part [part not set] of 40 in the series 20080124_Issue
ந. அனுராதா
என் காதல் காடு
இறுகும் இதய வட்டத்தின் நடுவில்
எரியும் தணலாய் நீ
வெந்து தணியும் என் காமக்கூட்டில்
முதல் தீயை வைத்துவிட்டு
கண் சிமிட்டியவாறே தூரத் தெரியும்
மலைப் பள்ளத்தாக்கினுள் சென்று மறைந்தாய்
தொடரும் நெருப்பில்
கருகும் சிட்டுக்குருவியின் இறகாய்
என் காதல் காடு
உனக்கான பூங்கொத்தோடு மட்டும்
காத்துக்கொண்டு இருக்கிறது மிச்சமான வலியோடு
கானகத்தின் நடுவில் ஓர் ஒற்றைக்குரல்
தினந்தோறும் பாடுகிறது
கேட்பவர் இல்லாமல்
கட்டியணைத்து முத்தமழை பொழிந்து
சூடு தணிவித்த என் உடல்கூடு
தன்னைத்தானே கொளுத்திக்கொள்கிறது
தன் ரத்தம் சுவைக்கும்
பசித்த நாயாய்
எனக்கான கேள்விகள்
விரல் நீட்டப்படுகிறது
சுற்றும் சக்கரம் கையில் ஏந்தி
உதிர்ந்த வார்த்தைகள்
கவனமாக சரம் கோர்க்கப்படுகின்றன.
மயிலிறகு சொருகி
கண்முன்னே வலம் வருகின்றன
வாளேந்திய கேள்விகள்
வளைந்து நெளிந்து புற்று நோக்கி
வடிவம் எடுத்து போகின்றன.
நெடிதுயர்ந்த நீல நிறம்
ஆலகால விஷம் உண்டு
பொலிவு பெறுகிறது.
நடப்பவை நன்மைக்கே என
உபதேசம் செய்து
இதழ்கோடியில் விஷமப் புன்னகையுடன்
துயில் விழிக்கிறது
சுற்றும் உலகின் விட்டம் அளக்க
உண்மை உணர்ந்து
இயலாமையுடன்
கண் மூடித் தொடங்குகிறது
This entry is part [part not set] of 41 in the series 20080117_Issue
உஷாதீபன்
“தவறியவர்களுக்கு”
வேலை கிடைக்கும் முன்
வேலை வேலை என்று அலைந்தோம்
கிடைக்குமோ கிடைக்காதோ என்று
ஏங்கினோம்
கிடைக்காமலே போய் விடுமோ என்று
பயந்தோம்
ஓடி ஓடி விண்ணப்பங்கள்
வாங்கினோம்
தேடித் தேடித்
தேர்வுகள் எழுதினோம்
தேறினாலும் நழுவிடுமோ
என்று அஞ்சினோம்
விரட்டி விரட்டி
நேர்முகம் கண்டு
இன்று
கைப்பிடியில் ஒரு
அச்சாணி
கால் பதித்து நிற்கும்
தடம்
எல்லாம் சரி!
காலக் கணக்கை
அறுதியிட்டதுபோல்
கடமைகளையும் உணர்ந்தோமா?
சார்! இந்த ரிப்போர்ட்டை
மானேஜர்
ரெடி பண்ணச் சொன்னாரு
இன்னைக்கே அனுப்பணுமாம்!
அட! வையப்பா!!
அதுக்கென்ன இப்ப அவசரம்?
அவருக்கு வேறே வேலையில்லை?
எங்கிருந்து வந்தது
இந்த மெத்தனம்?
பிறகு பார்ப்போம்…
வந்திருக்கிறார்
போய்ப் பார்ப்போம்
நண்பர் சொன்னார்
நறுக்காக…!
எதற்கு? என்ற
என்னின் கேள்விக்கு -ஒரு
அறிமுகம்தான்
நம்மை
அறியவைக்க என்றார்
வேடிக்கைதான்
அவரை நான்
அறிந்தது -அவரின்
எழுத்தின் பேரில்
பிறகென்ன நேரில்?
அதுபோல்
என்னை அவர்
அறிவதும்
அறிய வேண்டியதும் – என்
எழுத்தின் மூலம்தானே?
என்ன போய்ப் பார்ப்பது?
பேசட்டும் என் எழுத்து
பேசப்படட்டும் முதலில்
பிறகு பார்ப்போம்
நேரின் தேவையை!
தெரிந்ததுபோல்
காட்டிக் கொள்வதில்
இருக்கும் அவஸ்தை
‘தெரியாது’ என்று
சொல்லி விடுவதில்
இருக்கும்
அறியாமையைவிட
உயர்ந்ததாயின்
அந்த
அறியாமைதான்
எனக்கு
கௌரவம்!!
This entry is part [part not set] of 40 in the series 20080103_Issue
அனுராதா
என் நீ
பிணைந்து கிடக்கிறது
நம் புணர்வின் மிருகம்!
வழியும் வேர்வையை
துடைக்கும் நம் உடலின் வெப்பம்…
ஆதாம் இல்லாத
ஏதேன் தோட்டம் நோக்கிய
நம் பாதையில்
கலந்திருந்த நம் பெண்மைகள்….
என் பறவை
எந்த நிமிடமும் அது நடந்துவிடலாம்
நம்மை கடந்து விடலாம்
நம்மில் கலந்து விடலாம்
அந்த நிமிடம் தேடி
காற்றில் அலைகிறது
என் ஒற்றை சிறகு பறவை
கல்லறை காமம்
அறை முழுதும் காதல்
படுக்கை கசங்கலில் வழிந்த காமம்
இறுக தழுவிய உடல்களின் நடுவே ஒளிந்த நட்பு
நீல வியர்வையின் வேட்கை
அனைத்தும் கல்லறையில் தஞசம் புகுந்தது
என் இறுதி கேள்விக்கு எஞ்சிய
உன் மெளனத்தில்
This entry is part [part not set] of 45 in the series 20071227_Issue
பைசால், இலங்கை
புளியம்பழம் பாம்பு அல்லது விரல்
பாம்புகள் வாழும் ஒரு புளியமரத்தில்
உயிரற்று நீளும் பழங்கள்
புளியமரத்தின் கீழ் நிற்பதற்குப் பயம்
எத்தனை விரல்கள்
கிளைகளில் பிடித்துவைத்திருக்கும் பொல்லு
என்னையும் தூக்கி கிளையிலே வைத்துவிடும்
தோல்வேறு சதைவேறாகும் வித்தையாடும்
பறவையும் அதில்
கூடிநின்று புதினம் பார்ப்போர் அதிகம்.
அந்த புளியமரத்தடியில்
சுடப்பட்டு அவன் இறந்து கிடக்கிறான்.
Br>
கண்களால் முறண்டுபிடித்துப் பார்க்கும்
கிளைகளால் இறங்கிவரும் பாம்பு அல்லது புளியம்பழம்
திருடனைப்போல், திருடுவதுபோல்
கண்ணாடிப் பாத்திரங்கள் கீழே விழுந்து
வீட்டுக்காரன் கண் விழிக்காமல் திருடவேண்டும்
சதையை,இரத்தத்தை
என்று கற்றுத்தரும் பறவையது.
தோலொரு குகை
பயணிகளில்லாத ரெயில்ப் பெட்டி
சிறு பூச்சிகளோடு பிச்சைக்காரனும் பாதுகாப்பிற்காக
வாழுமிடம்
என் கற்பிணி மனைவி
மடிநிறைய பாம்புகளை வைத்திருக்கிறாள்
கொஞ்சமும் பயமில்லாமல்
கொஞ்சமும் நினைத்தால்
வாளிபோட்டு அள்ளலாம் வாய்க்குள் உமிழ்நீர்
அப்பாவியைத் தூக்கும் ஆயுதப் பறவை
என் உயிரை
கொத்திக் கொண்டுபோகிறது
ஒரு ஆயுதப் பறவை
அதற்கு சப்பாத்துக் கால்கள்
அண்டை வீட்டில்
சப்பாத்துக் கால் கோழி
இரண்டு இருக்கிறது
அது ஊத்தைகளைத்தான் உட்கொள்ளும்.
அப்பாவி
வயலுக்குப் போகும் போதும்
ஆற்றுக்குப் போகும் போதும்
வயல் தொப்பிக்காரன், சால்வக்காரன்
என்று பெயர் சொல்லி
அவதானித்திருக்கிறது அந்த ஆயுதப் பறவை.
மரத்திற்கு கீழ்லிருக்கும்
தேநீர்க் கடையில்
இரத்தத்தை தேநீர் என்கிறான் கடைக்காரன்
என் கனவில்
அண்டை வீட்டுச் சுவரில்
பல்லிகள் காய்த்திருக்கும்
பழுத்து அல்லது அழுகி கீழே விழுந்த கதை வரப்போகிறது.
சுவர்க்கத்து மர நிழலிருக்கிறதே
அதில் நூறு வருடங்கள்
அவன் நடந்து சென்றாலும் நிழல் முடிவதில்லை
என்று ஆறுதல்படுவர் சனம்
தும்பி ஓட்டி
இதழ்களை நெருக்கி முத்தமிட்டாலும்
அந்த தும்பியோட்டியின் கனவு
எனது அறையெங்கும்
வந்து குதிக்கத்தான் செய்கிறது
தும்பியொன்று பறப்பதாகவும்
தும்பியின் வாலில்
மிருகமொன்று இருப்பதாகவும்
வந்து குதிக்கத்தான் செய்கிறது
அது
எனதூர் மிருகங்களை
வேறு நாட்டிற்கு ஏற்றிச் செல்கிறது.
யார் அந்த தும்பியோட்டி?
நானும் விற்பனைக்குவிடும் மிருகங்களை வைத்திருக்கிறேன்
அழகு பார்த்தவைகள்
ஆளைக் கவ்விக் கொண்டுபோனது
இன்னும் பண்ணைக்குத் திரும்பவில்லை
மல வாடையின் மாற்றத்திலிருந்து
தெரிந்து கொண்டேன்.
என்னிடம் அதிக மிருகங்கள் இருப்பதால்
எதுயெது பண்ணைக்கு வரவில்லை
எதுயெது பண்ணையிலிருக்கிறது
என்று பார்க்க
ஒரு வேலையாளும்
அவன் ஒரு மாதமாக
வேலைக்கு வரவில்லை
நடக்கும் பறவைகள்,
சிரிக்கும் பறவைகள்,
பேசும் பறவைகளும் ஒரு பண்ணையிலிருக்கிறது
இன்னும் வரவில்லையா
அந்த தும்பியோட்டி?
அவர்
மிருகங்களைத்தான் வாங்குகிறார்
என்று
என் மனைவி சொல்லும்போதெல்லாம்
தும்பியோட்டியின் மீது
அவளுக்குக் காதலா?
அவருக்கு ஓய்வில்லையாம்
என்று சொல்லும்போதெல்லாம்
தும்பியோட்டி
அவளின் கணவனா?
என்று எண்ணுகிறேன்
செடிகளில் வந்து ஒட்டுகிற பசைப் பறவைகளை
அவள் தினமும் விரட்டுகிறாள்
பாதுகாப்பு வேலிகளில்
ஒன்றுக்கு மேலொன்று
ஏறிக் கூத்தாடி மகிழ்வதை
அவள்
தினமும் விரட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள்
என்பதால் எனக்குச் சந்தேகம்
அது
தன் வாலையோ
அல்லது
சிறகையோ பிய்த்துக் கொண்டு பறந்திருக்கக் கூடும்
துண்டு துண்டாக பிரிந்தது
உடையும்போது
தமிழ் எழுத்துக்களும், கணித எழுத்துக்களும்
சிந்தின நிலமெங்கும்
அத்தனையெழுத்துக்களையும் எடுத்து
வாக்கியங்களும், கணக்கும்
அமைத்துக் காட்டச் சொன்னார் வாத்தியார்
விடிந்தாலும் நான் பாடசாலையில்
வெண்கட்டியைக் கையிலெடுப்பேன்
அவருக்கு பலகையுடைந்தது பற்றி
பரவாயில்லை
சட்டைப் பைக்குள்ளொருதுண்டு
அது வடைவாங்கிய மீதிக் காசு
சிகரெட்டு வாங்குவேன் என்பார்
என் பாடசாலைக்கு
வாத்தியார் வரும் வாகனத்தை
அந்த மர நிழலில் வைப்பார்
இலை விழுந்தாலும் கண்ணாடியுடையும்
காற்றடித்தால் இருக்கை கிழம்பும்
யாரோ முதல் சம்பளத்தில் வாங்கியதை
இவர் முதல் சம்பளத்தில் வாங்கியிருக்கிறார்
வீட்டுச் சமையல் வேலைக்கு தண்ணீர்க்குடம் சுமக்கின்றது
அவருக்கு அது பரவாயில்லை
<
This entry is part [part not set] of 41 in the series 20071115_Issue
சோ.சுப்புராஜ்
ஒலிக்கிறது கைத்தொலைபேசி
ஒருமுறை கூட
என் கைத்தொலைபேசி
ஒலிக்காத நாளில்
உணர்கிறேன் நான்
இறந்து போனதாய்……
**** **** ****
தனக்குத் தானே
பேசிச் சிரித்து அழுது அரற்றி
கொஞ்சிக் குலவி
சண்டையிட்டு சர்ச்சித்து
தனிவழியே போனவளை
மூளை பிசகியவளோ என்று
யோசித்து முடிப்பதற்குள்
கண்ணில் பட்டது அவளின்
கைத்தொலைபேசியின்
காதுமடல் ஒலிவாங்கி……!
**** **** ****
விழித்திருக்கும் போதெல்லாம்
நிறைய நிறையப் பேசினார்கள்;
குறுஞ்செய்திகளை
குறைவின்றி அனுப்பி மகிழ்ந்தார்கள்;
நேரில் சந்தித்த போதுதான்
பேச எதுவுமற்று மௌனமாய்க்
கலைந்து போனார்கள்
தங்கள் தங்களின்
கைத்தொலைபேசிகளுடன்……..!
**** **** ****
எத்தனை பிரியமானவர்க ளென்றாலும்
கைத்தொலைபேசியில்
அவர்களை அழைக்க
கலக்கமாகவே இருக்கிறது;
அவர்களுக்கு
விருப்பமான பாடலையோ
கடவுளைத் தேடும் இசையையோ
காக்கை எச்சங்களைப் போல – நம்
காதுகளுக்குள் பீய்ச்சி
அடித்து விடுகிறார்களென்பதால்…….!
**** **** ****
அடர்ந்த இருளிலும்
துளியும் பயமின்றி தனியாக
நடந்து போகிறாள் அவள்;
பிரியமானவர்களுடன்
கைத் தொலைபேசியில்
பேசிக் களித்தபடி……!
**** **** ****
எழுதியவர் :
engrsubburaj@yahoo.co.in
This entry is part [part not set] of 40 in the series 20071101_Issue
மேரித் தங்கம்
கவிதைகள்
1. கணிணிகள் பற்றி ஒரு கவிதை
கணிணிகளே காலத்தின் கண்ணிகளே
கலியுகத்தின் கடவுளே!
பணிகளைத் துரிதமாய் முடிப்பவனே
பன்முகங் கொண்டவனே!
மனித மூளையின் மறுபதிப்பே
மந்திர எந்திரமே!
கனிவும் கரிசனமும் நிறைந்தவனே
கற்பகத்தருவின் உருவமே!
மின்னும் உமது சின்னத்திரை தான்
மாயக் கண்ணனின் மலர்வாயோ?
பன்னெடுங் காலமாய் பரணி ஆளும்
பரம்பொருளின் ஒளி இதுதானோ?
விண்ணையும் மண்ணையும் கைக்குள் சுருக்கிய
விஞ்ஞான விந்தை நீதானோ?
எண்ணி எண்ணி வியக்கிறேன் உன்னை
எப்படித் தான் விளிப்பது!
பரந்த உலகத்தின் செய்திகளை
பத்திரமாய் உன்னுள் பதுக்கி
விரலசைவில் விபரங்களைக் கொட்டும்
வித்தைகள் பல தெரிந்தவனே!
ஒருநொடியில் ஒற்றைச் சொடுக்கில்
ஒன்றை பலவாய் பலப்பலவாய்
பெருக்கும் சூட்சுமம் அறிந்தவனே
பிரமிக்கிறேன் உனைப் பார்த்து!
சிலிர்ப்பூட்டும் வேகத்தில் செயலாற்றும்
சின்னஞ்சிறு தாரகையே!
சிலிக்கான் சில்லுகள் உங்களின்
சிந்தனைக் களமோ?
அலுவல்களில் நீங்களின்றி அணுகூட
அசையாதென்பதும் இணைய
வலைப்பின்னல்களே உலகாளு மென்பதும்
வருங்கால நிஜமோ?
மருத்துவத்தில் கணிணியின் பணிகளோ
மகத்துவத்தின் மகுடங்கள்;
இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின்
இளவரசி நீயேதான்!
வருகிற நாட்களிலும் உன்னில்
வளர்ச்சிகள் பெருகும்;
புரட்சிகளின் புதல்வியாய் பொங்கி
பிரவகிக்கப் போகிறாய்!
சாதனைகளின் பட்டியல் பார்த்து
சந்தோஷப்படுமுன் சிற்சில
வேதனைகளும் விஷப்பல் காட்டி
விழிகளை நனைகின்றன!
பெருகும் கணிணி விளையாட்டுக்கள்
பேரிடியாகின்றன சிறுவர்கட்கு;
அருகும் உடல் விளையாட்டுக்களால்
அரும்புகள் கருகுகின்றனவே!
இரவுகளின் அடர்த்தி எப்போதும்
இளைஞர்களின் கண்களில்
பெருகும் ஈ-எழுத்துக்களின் வேகத்தில்
பிழைக்குமா புத்தகங்கள்?
குருவிகள் கொத்தி என்றும்
குலையாது கோபுரங்கள்;
அருவிக் குளியளின் ஆனந்தத்தை
அறைக்குள் ஷவர்கள்
ஒருபோதும் தருவதில்லை என்ற
உண்மை நிலைக்கும்!
சூதும் துவேஷமும் ஆபாசங்களும்
சூலப்பெற்ற மனிதப்
பதர்களின் மலிவான பிரயோகத்தில்
மாசுபடும் கணிணிகள்!
அற்புதமான அறிவியல் கருவிகளிலும்
அநீதிகளை விதைக்கும்
விற்பனை மனங்கொண்ட வீணர்களின்
விளையாட்டு அது;
அற்பங்களைக் களைந்து வளரும்
அரும்புகளைக் காப்போம்!
வயலிலும் கணிணிகள் இறங்கும்
வருங்காலம் சுபிட்ஷமே!
இயற்கையின் சீற்றங்களைத் தடுத்து
இதமான காற்றுக்கு
இயந்திரங்கள் வழிபண்ணிக் கொடுத்தால்
இந்தயுகம் செழிக்குமே!
பயமின்றி மனிதம் தழைக்கவே
பயனாகட்டும் கணிணிகளே!
2. எயிட்ஸ¤டன் ஒரு பேட்டி
வாசகர்களுக்கு வணக்கம் – இன்று நாம்
சந்திக்கப் போகும் நபருக்கு
அறிமுகமே அவசியமில்லை
உலகப் புகழின் உச்சியிலிருப்பவர்!
இந்த நூற்றாண்டின் இணையற்றவர்
புள்ளிராஜாக்களை பிரபலமாக்கியர்;
மனிதக் கொலைகளுக்கான
மாபெரும் விருதை
பெறுகிறவர்களின் பட்டியலில்
முன்னணியில் நிற்பவர்!
மழைக்காலத்தின் ஒரு மாலை வேளையில்
வேகவைத்த வேர்க்கடலையை கொறித்தபடி – அவருடன்
உரையாடியதிலிருந்து சில பகுதிகள்
உங்களின் பார்வைக்கு…..
(?) உயர்திரு எயிட்ஸாரே
வந்தனங்கள் உமக்கு
உள்ளம் திறந்து கொஞ்ச நேரம்
உரையாடலாமா உம்முடன்
மானிடர் உய்யவே
மகத்தான சேதிகள் சொல்வீரா?
(ப) அவசர வேலைகள் அனேகம் எனக்கு
அவகாசமில்லை நின்று பேச
புவன முழுக்க பவனி வரவேணும்
புல்லென நிற்கப் பொழுதில்லை;
நவநவமான கேள்விகள் இருந்தால் மட்டும்
நடந்தபடி கேளும் என்னிடம்……!
(?) சிறு அறிமுகம் உம்மைப் பற்றி
சினேகத்துடன் பகரலாமே!
வருமுன் காக்கும் சூட்சுமம் உரைத்தால்
வாழ்த்தும் மானிடர் இனமே!
(ப) மரணம் எனது மறுபதிப்பு; எனக்கு
மனித உயிர்கள் தித்திப்பு!
எருமை வாகனன் எனக்கும் எஜமானன்;
எமனின் புதுவடிவம் நான்!
ஒரு துளி இரத்தத்திலும் ஊடாடித் தொற்றுவேன்
ஓய்வேன் உயிர் குடித்தே……
மருந்தில்லை எனை வெல்லவே இதுவரை
மறுபடி மறுபடி துளிர்ப்பேன்!
(?) உயிர்த் தாகம் கொண்டு
உலவும் உம்மால் தான்
உலகம் அழியும் ஒருநாளென்று
ஊளை கேட்குதே எங்கெங்கும்
உண்மை தானோ அது?
(ப) நாழிக்குள் பொங்குமாக் கடலை அடைத்து
நாடு கடத்துதல் சாத்தியமா?
அழியும் உலகம் என்னால் என்பதெல்லாம்
அச்சங்களின் உச்சம்; அறிவீனம்
ஊழிக்குள் சைத்தான்கள் ஓதும் வேதம்
உண்மையில்லை ஒரு போதும்
விழிப்புணர்வு மட்டும் இருந்தால் எளிதாய்
வீழ்த்தி விடலாம் விதியையும்!
என்னைப் போல் இன்னும் எத்தனை
எத்தனையோ பேரிடர்கள் பலவும்
தாண்டித்தான் தழைக்குது மனித இனம்
தடுமாற்றம் தவிர்ப்பீர் மானிடரே;
வீண் பயங்கள் வேண்டவே வெண்டாம்
விண்ணுள்ளவரை மனிதம் உய்யும்!
(?) அபாயங்கள் நிறைந்தவனென்று நினைத்திருக்க
ஆறுதலாய்ப் பேசுகிறாயே சந்தோஷம்;
அபயம் என்றலரும் மானிடர் உய்யவே
உபாயங்கள் இருந்தால் சொல்லி
உலகத்தாரை இரட்சிக்கக் கூடாதா?
(ப) சுத்தப் படுத்தாத ஊசிகள் இரத்தம்
உறைந்த கத்திகள் பிளேடுகள்
மெத்தென்ற விலைமகளிர் ஓரினப் பாலுறவு
மொத்தமும் விலக்கி டுங்கள்!
பித்தென்ற காமத் தீயை முழுதாய்
வெல்ல முடியா விட்டாலோ
வாத்யாயனார் கலை பழக கண்டிப்பாய்
கவசம் அணிந்து கொள்ளுங்கள்!
ஆட்டோ கிலாவ்வில் வைத்து சிரத்தையாய்
அணுதினமும் பாதுகாத்த சிரிஞ்சுகள்;
மற்றவர் இரத்தத்தை மனிதரில் செலுத்துமுன்
மாசுகளையும் சோதணைகள் யாவும்
தோற்று வாயிலேயே எனைத் துப்பறிந்து
தொற்றுவதைத் தவிர்க்கும் வழிகள்
மாற்று இப்போதைக்கு ஏதுமில்லை அதனால்
மிகத்தேவை எச்சரிக்கை என்தோழா!
(?) எப்படியோ உன் மரண வலைக்குள்
தப்பிப்போய் விழுந்து தத்தளிக்கும்
அப்பாவிகளை அணுகும் முறைகளை
செப்புக செவிக்குள் உரக்க……..
(ப) நிச்சயிக்கப்பட்ட மரணத்தை நிறுத்த முடியாது
நேர்மையாய் எதிர் கொள்ளட்டும்
அச்சமயம் வரும்வரை மிச்ச நாட்களை
அல்லலின்றி கழிக்க உதவுங்கள்!
உச்சபட்ச தோழமையும் பரிவும் அன்பும்
உங்களின் பங்களிப்பாக இருக்கட்டும்
மெச்சும்படி மேன்மையாய் வாழ விடுங்கள்
வாழ்வுரிமை யாவர்க்கும் பொது!
ஏற்கெனவே என்னுடைய முட் படுக்கையில்
ஏகப்பட்ட இரணங்கள் அவர்களுக்கு;
வெறுத்தொதுக்கி விலக்கி வைத்து அவர்களின்
வேதணைகளை அதிகப் படுத்தாதீர்!
கர்மபலனெனும் கண்ணீர் குண்டுகளை வீசி
காயப் படுத்தாமல் இருங்கள்;
வார்த்தை களெனும் ஈட்டிகளால் குத்தி
வாழ்தலை நரகமாக்க வேண்டாம்!
வியர்வையிலோ எச்சிலிலோ பரவுவதில்லை நான்
வீணான எண்ணங்களை விடுங்கள்!
பயமின்றி பழகலாம்; பணிஇடங்களிலும் அவர்களை
பாரமென ஒருநாளும் நினைக்காதீர்!
அயலாரை ஒருபோதும் தொற்றுவதில்லை நான்
அணைத்தலிலும் இரத்தமற்ற முத்தத்திலும்…..
நயமின்றி தனித்தட்டு டம்ளரெனப் பிரித்து
நாயைப்போ லவர்களை நடத்தாதீர்!
தெரிந்து கொள்ளுங்கள் மானிடரே இறப்பைத்
தடுக்கத்தான் முடியாது; ஆயினும்
பிரியங்களுடன் அவர்களைப் பேணிப் பராமரித்தால்
நீட்டிக்கலாம் ஆயுளை நிச்சயமாய்……
நிரந்தரமாய் எனை நீக்கும் நிவாரணிகள்
நிறுவப்படும் ஒருநாள் அதுவரை
பொறுமையுடன் காத்திருங்கள் சக உயிர்களை
பொக்கிஷமாய்க் கருதி மகிழ்ந்திடுங்கள்!
(?) இறுதியாய் ஒரு கேள்வி – இனியவனே
உறுதியான உன் பதிலுக்கு!
அரிதும் அரிதுமான மானுட சமூகத்திற்கு
விரோதியா நீ நண்பனா?
(ப) பிற்போக்கானவனென நீங்கள் முத்திரை குத்தினாலும்
ஒருவனுக்கு ஒருத்தி என்னும்
கற்பொழுக்கத்தை மறுபடி போதிக்க வந்தேன்
மீறலுக்கு விலை அதிகம்!
வற்புறுத்திக் கேட்டதனால் சொன்னேன் வருத்தமில்லை
வாழ்த்தினாலும் நீங்கள் தூற்றினாலும்…..
தீர்மானித்துக் கொள்ளுங்கள் நீங்களே நான்
தீயவனா நல்லவனா என்று
தீர்ப்பு மரணம் அதனால் மானிடரே
திருந்தி விடுங்கள் உடனேயே….!
:
தா(கா)கங்களின் கதை
அன்புத் தங்கையே! அன்புத் தங்கையே!
இன்னும் கொஞ்ச தூரம் தான்
எங்காவது சிறிதளவாவது
நீர் கிடைக்கும் நிச்சயமாய்
அள்ளிச் செல்வோம் அதுவரை
வலிபொறு என் செல்லமே!
நீர் நிரப்பும் நேரம் வரை
நீதிக்கதை ஒன்று சொல்லட்டுமா?
நம்மைப் போலவே நீர்தேடி அலைந்த
காகங்களைப் பற்றிய கதை இது!
பள்ளிக்குப் போயிருந்தால் நாமும்
பாடப் புத்தகங்களில் படித்திருப்போம்;
பாட்டியிடம் திருடிய வடையை
தன்குரல் பற்றிய பிரமைகளில்
பாட்டுப் பாடி நரியிடம்
பறிகொடுத்ததும் கூட
இதே காகமாக இருக்கலாம்!
அத்துவானக் காட்டில் ஒருநாள்
அலைந்து கொண்டிருந்தது தாகத்துடன்!
சுற்றிச் சுற்றி அலைந்தும் கொஞ்சமும்
தண்ணீர் தட்டுப்படவில்லை தடாகமெதிலும்;
கடும் கானலைத் தவிர இன்று போலவே
கானகத்தில் நீர்ப்பசையில்லை எங்கும் ….
முன்பெல்லாம் இத்தனை
அலைச்சலும் தேடலும்
அவசியமிருந்ததில்லை காகங்களுக்கு;
ஏதாவது செடி மறைவில்
உழவனின் கஞ்சிக் கலயமிருக்கும்
உருட்டிக் குடித்து விட்டு
ஒய்யாரமாய் பறந்துவிடும் கரைந்தபடி…..
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்
விவசாய நிலங்களை யெல்லாம்
விழுங்கத் தொடங்கிய பின்புதான்
காகங்களுக்கும் நமக்கும்
தாகம் நிரந்தரமாயிற்று!
தூரரத்தில் வெகுதூரத்தில்
பானை ஒன்று மின்னியது
பாலை வெயிலில்;
பசியையும் மீறி காகம்
பறந்து போனது அதனருகில்…
விளிம்பிலேறி எட்டிப் பார்த்து
விசனப்பட்டது காகம் – தன்
அலகுக்கு எட்டாத
ஆழத்தில் நீரிருப்பதை அறிந்து….
இதற்கு முன்பும் ஒரு சமயம்
இதே போல் நேர்ந்ததும் – தன்
புத்தி கூர்மையால் நீரருந்தியதும்
நினைவிலாடியது காகத்திற்கு……
கொஞ்சமும் தாமதிக்காமல்
அக்கம் பக்கம் கல் பொறுக்கி
அடுக்கடுக்காய் பானையுள் போட்டது;
கற்களால் பானை நிரம்பியும்
நீரெழும்பி வாரதது கண்டு
நிர்கதியாய் நின்றது காகம்!
என்னாயிற்று தண்ணீருக்கு?
ஐயகோ –
போட்ட கற்களின் அழுத்தத்தில்
ஓட்டை விழுந்து பழம் பானையில்
ஒழுகிய கொஞ்ச நீரையும்
வறண்டிருந்த நிலம்
வாய் பிளந்து உறிஞ்சிக் கொண்டதே!
என்ன செய்யும் ஏழைக் காகம்?
தாகம் தணிக்க வழியற்று
பறந்து போய் மறுபடியும் – சிறுவர்களின்
பாடப்புத்தகத்தில் புகுந்து கொண்டு
நீதிக் கதை வெளிகளில்
நீந்தித் திரியலாயிற்று !
நமக்குத்தான் நீர் தேடும் அவலம்
தொடர்கிறது காலங்கள் தோறும்…..!
எழுதியவர் : மேரித் தங்கம்
(thangam.mary@gmail.com)
எனக்கு தெரியும்
உனக்கும் தெரியும் என..
இருந்தும் கேட்பதில்லை
கேட்காமல் இருக்கும் வலிமையும்
எனக்கு வாய்ப்பதில்லை..
உன் இறுதி ஆயுதமாய்
சந்தேகம் உனக்கு என்பாய்
செயலற்றவனாய் நிற்பேன்
வேறு வழி இன்றி…
எதிர்பார்புகள் இருக்கும் வரை
ஏமாற்றங்கள் உறுதி என்பதை
நீயும் உணர்த்தி இருக்கிறாய் வேறென்ன?
எல்லாம் முடிந்து
இரவில் மார்பில் தலைசாய்த்து
“சாரிடா”என்பாய் குழந்தையாய்
வெளிப்படும் இரு சொட்டு கண்ணீரோடு
காணாமல் போகும் என் கோபமும்…
கறுப்பு மையும், தனிமையும்
நான் கவிதை எழுதும் போது
தீர்ந்து போகும் பேனாவின்
மையை போலவே
அதிவிரைவில் முடிந்து போகிறது
என் காதலின் கனவுகளும்…
பென்சிலின் கறுமையான
எழுத்துகளில் வெளிப்படுகிறது
என் தனிமையின் புலம்பல்
என்றபோதிலும்
அவ்வளவு சீக்கிரம்
தீர்ந்து போவதில்லை
பென்சிலின் கறுப்பு மையும்
என் தனிமை குரலும்….
எனக்கும் ஆசைகள் உண்டு
மெளனமாய் வெளிப்படுகிறது
என் விசும்பல் சத்தம்…
உனக்கும் சுதந்திரம் உண்டு
ஆம் பெண்ணே…
உனக்கும் சுதந்திரம் உண்டு…
உனக்காக நான் வெட்டிய விரல் நகங்கள்
உனக்காக நான் மாற்றி கொண்ட என் புகை பழக்கம்
உனக்காக நான் மறந்து போன என் கல்லூரி தோழிகள்
என் சிறு வயது நட்புகள்
என் காகித கிறுக்கல்கள்
என எல்லாமே…
ஆனாலும் என் வெற்றிகளுக்கு
ஆசைப்படும் நீ
என் தோல்விகளை மட்டும் மறுக்கிறாயே…
என் புன்னகைகளை அலங்கரிக்கும் நீ
என் கண்ணீர்துளிகளுக்கும் காரணமாய்…
இருவருமாய் இது வரை திரைப்படம்
சென்றதில்லை உனக்கு பிடிக்காது
பூங்கா ரசித்ததில்லை
உனக்கு பிடிக்காது
உணவகங்கள் செல்வதில்லை
உனக்கு கூச்சம்
அனைவருக்கும் உடைகள்
தேர்வில் மட்டுமே
பயணங்கள் உன் விருப்பத்தில்
பண்டிகைகள் உன் விருப்பத்தில்
உறவுகள் உன் விருப்பத்தில்….
This entry is part [part not set] of 32 in the series 20071004_Issue
உஷா தீபன்
மனம்
ஒன்றில் அதுவாகி அதனில் மற்றொன்றாய்
என்னுள் நானாகி பிறரில் நானாகும்
எதையும் காண எப்படியும் காண
எங்கோ ஜனித்ததொன்றை
எண்ணித்தொலைய கருமம்
இங்கே நிகழ்வதைத்தான்
என்றோ மறந்துபோகும்
நுட்பத்தில் நுட்பமாய்
நுணுகிப் புகுந்து பரவி
இயற்கையும் செயற்கையுமாய்
எதிலும் நிறைந்து வளரும்
கங்கையொடு கழிவு
நன்மையொடு தீமை
சோலையும் பாலையும்
சோகமும் மகிழ்வும்
எண்ணச் சுடரில்
எகிறிவிட்ட பொறியாய்
எல்லாமும் நிகழும்
அதுவே தோற்றுவாய்!
சொல்லிவிடு
படித்தது போதும்: எழுது மற்றவர்களுக்கு ஏதாவது விஷயஞ் சொல்
உன் கருத்தை உலகுக்குத் தெரிவி ஓங்கிக் குரலெழுப்பு
உட்கார்ந்து போகாதே
ஏட்டுச்சுரக்காய்
கறியாய் உதவட்டும்
அவநம்பிக்கை போக்கி ஆத்மசுகம் தேடு
அஞ்சுக்கு ரெண்டு
பழுதிருக்காது
முடிவுஅனைத்தும்
மூளைக்கே சொந்தம்
பிறருக்கும் அதுபோலே
ஆனாலும்
நீ சொல்வதைச்
சொல்லிவிடு
இறக்கிவிட்டோம் என்ற
எண்ணமேனும் மிஞ்சும்
அம்மா
கங்கையானாலும்
காவிரியானாலும்
எங்கோவோர் மூலையில்
ஏதோவோர் மலையிடுக்கில்
ஒரு சின்னதான ஜனனத்தில்
உயிர்த்து எழுந்து
தவழ்ந்து இறங்கி
பல்கிப்பெருகும்
புகுந்த இடத்தில்
முற்றிலும்
புதிதாய்
பூமியில் பரவும்
போகுமிடமெல்லாம்
தாகம் தணித்து
காணும் நிலமெல்லாம்
கசிந்து செழிப்பாக்கி
புவியை வளமாக்கும்
ஒரு ஜீவநதி
தலைமை
தேசம் முழுதும்
குப்பை கூளம்
சுத்தம் பண்ண நினைச்சுத்தான்
துடைப்பத்தைக் கொண்டு வச்சோம்
துடைப்பமே குப்பையாச்சு
தூசிகளும் அதிகமாச்சு
தேசம் முழுக்க குப்பை கூளம்
தேவை ஒரு புதுத்துடைப்பம்
This entry is part [part not set] of 37 in the series 20070830_Issue
அனிதா
1. வறண்ட பகல்களும் உறைந்த இரவுகளும்
கதவும் ஜன்னலும் மூடியே கிடக்கும்.
பழகிவிட்ட இருளில்
சுவர் மூலைகளின் ஒட்டடை எடுக்கிறேன்
கால்களின் கீழே அலை இழுக்கும் மணலாய்
உயிர் குறுகுறுக்கும்
தேனீர் அருந்தி நினைவு கலைக்கிறேன்
வெளிச்சமும் நிறங்களும் மூளைக்குள்
வேர் விட்டுப் படரும்
சிதறிய எண்ணங்கள் சேர்க்கச் சேர்க்க சிதறும்
காத்திருக்கும் காகங்கள் மோகத்தோடே அலறும்
வியர்வை கசகசப்பும் பழகமறுக்கும் தனிமையும்
மரபு மீறியும் சாவி தேடும்.
வெளியேற மறுக்க வலிமை சேர்க்கிறேன்
உனக்காய் என்னுள் குறுகிக் கிடக்கிறேன்
இன்றொரு பொழுது இனிதே கழிந்தது
இனி நாளையும்.
2. குளத்துப் பறவை
தங்கம் தெளித்த கோவில் குளத்தில்
நீர் கிழிக்காமல் ஊர்ந்துக் கொண்டிருந்தன
வெள்ளைப் பறவைகள
கல்லெடுத்துத் தண்ணீர்க் குழிகள் பறித்துக்கொண்டிருந்தவன் மேல்
எச்சம் கழித்துப் பறந்தது இன்னுமொன்று.
ஏதோ அதனாலியன்றது.
This entry is part [part not set] of 34 in the series 20070816_Issue
கார்த்திக் பிரபு
கண் பொத்தி கைப்பிடித்து
அழைத்து செல்கிறது உன் சிரிப்பு
மூங்கில் நிறைந்த மலைகள் கடந்து
பிராணிகள் புணரும் காடு கடந்து..
கண் திறந்து விட்டு சுழன்றடிக்கும்
புயலின் பின்னால் ஓடுகிறாய்
திரும்ப வர வழித் தெரியாமல்
உன் சுவடுகள் மறைவதை கவனியும் போது
என் மேல் வந்து விழுகிறது
திசைத் தெரியாமல் பறக்கும்
ஒரு பறவையின் இறகு……
This entry is part [part not set] of 29 in the series 20070510_Issue
உஷாதீபன்
பிணக்கு
உனக்கும் எனக்குமான
உறவுச்சிக்கல்களுக்கிடையில்
தார்மீக முனைப்புகளாய்
பின்னிக் கிடக்கின்றன
ஏராளமான வார்த்தைகள்
வறண்டுபோன நம் வாழ்க்கைக்கு
சாட்சிகளாய் நிற்கின்றன
அதன் வீர்யம்
நீயும் நானும்
கூடிக்களித்தபோது
கும்மாளமிட்ட மெப்பனைகள்
காணாமல்போயின மாயமாய்
இந்தச்சொல்லடுக்குகளின் ஆழத்தில் இனி
நினைத்தாலும் அவிழ்க்க முடியாத
சிடுக்குகளை
ஒரு மூன்றாமவன் வந்து
முயன்று நிற்கலாமா?
எல்லாம் பொய்யென்று
இழித்துணர்ந்த வேளையில்
இந்த இடைப்பட்டவன் எதற்கு இங்கே?
விட்டில் அகண்ட ககன வெளித் தனிமையில்
உன் வருகைக்காகக் காத்துக் கிடக்கிறது மனம்
காற்றில் அலைபாயும் இருண்மை விலகி
ஒளி பீறிடத் துடித்து நிற்கிறது எண்ணங்கள்
ஏக்கப் பெருமூச்சுக்கள் அனலாய்ப் பரவி
உனக்கான நேரத்தை நீட்டிக்கின்றன
விழித்திரையிலிருந்து பரவும் கதிர்கள்
விட்டில் பூச்சிகளாய் மினுமினுத்துப்
பறந்தழிகின்றன
கனல் துண்டமாய்ச் சிதறும்
கண் ஓர நீர்த்துளி
நம்மின்
கதையைச்சொல்லி மடிகிறது
பயணம்
தவறாமல் வருகிறான் ஒருவன்
ஞாயிறன்று அவன்
நம்பிக்கை தளராத
நயமான ஓசை
நீள் தெருவில்
நெடுக மோதி எதிரொலித்து
அதிர்ந்து அலைந்து
மாயமாய் மறைந்து
அழிந்து போகிறது
எல்லோர்க்கும் வாழ்க்கை
ஏதோவோர் நம்பிக்கையின்பாற்பட்டு
தவறாமல் வருகிறான் ஒருவன்
ஞாயிறன்று அவன்
செருப்பூ பழைய செருப்பூ
காலணி ஓசை கானலாய்க் கரைய
குரல் தழுவிய என் பூஞ்சை மனசு
கலங்கிப் போகிறது
இன்னும் அவன்
போகவேண்டிய தொலைவு
எவ்வளவோ?
எப்பொழுது முடியுமோ அவனின்
இன்றையபொழுது
பசியாற்ற பறவை
இரைதேடும் உயரத்தில்
உயர உயர வட்டமிட்டு
விரைந்தே பறக்கும்
பார்வையை விஞ்ச
வியக்குமொரு நாழிகையில்
தேய்ந்து துகளாய் கலக்கும்.
சக ஜீவிகள்.
மிருக காட்சி சாலையில்
வினோத மிருகங்களையும்
விடாடு மகிழ்வாய் கண்டுகழித்து
திரும்ப சக மனிதர்களும்
உற்ற உறவுகளும்
வலம் வந்த நாழியில்
அங்கே ஒவ்வொன்றும்
கம்பிக் கூண்டுக்குள் இருக்க
பயமில்லாமல் போனது
நினைவுக்கு வந்தது.
சடையிடை இடையறா
பிரவாக நீர் ஊற்று,
முடி நனைத்து – பின்
தலை இறங்கலாம்.
ஸ்தலம் புகழ் பெற்றால்
சன்னதி, மற்றும் சுற்றுத் தெருக்களிலும்
நிறுத்தம், வழி செல்லும் வாகனங்கள்
நின்று பின், ஓடும் வழியெங்கும்
தூசு, ஒலிப்பான், மன மாசு.
இரவும் பகலும், எந்நேரமும்,
கூட்ட நெரிசலின் நாற்றம் போக்க
உயர்ந்த கோபுரத்தின் கீழ்
ஓலமிட்டு ஓடும் ஏ.சி.
அன்றாடம் அபிஷேகம்.
இடையிலோ எனில், புலித்தோலை
விரும்பிப் போர்த்தி, ஒரு காலை
உயர்த்தி எப்போதும்
சுழன்றாடுகின்றாய்!
உடம்பில் ஒரு சாணளவும்
வஸ்திரம் அற்ற நீ மட்டும்
அருவி மூக்கிலிருந்து
தப்பிப்பது எங்கனம்?
சற்றே ரகசியமாய் கூறு
எனக்கு மட்டுமாவது.
இழப்புகள்
இரவில் உரங்கும் வரை
அந்நியக் குத்தகை மாம்பழங்கள்
விழும் சப்தம் கொண்டு கணக்கிடுவேன்,
அத்தையின் கதைகளோடு.
எனக்குப் பின்னும்
வீட்டோடு இருக்கும் விதவை அத்தை
விடியும்வரை எண்ணி வைத்திருப்பாள்.
கருக்கலோடு பைகொண்டு
வீட்டை அடையும் பழங்கள்;
எண்ணிக்கையைவிடக் கூடுதலாகவே
அனைவரும் சுவைத்தாலும்
அப்பா என்னவோ வேதனைகொள்வார்.
குத்தகைப் பணத்தை அப்பாவே கட்டி
அந்த ஆண்டு சொந்தமாக்கினார் மரத்தை.
வேண்டியதற்கு மேலும் விழுந்தும் பறித்தும்
எப்போதும் மாம்பழ வாசம்- வீடெங்கும்.
அனைத்து நண்பர்களும் சுற்றத்தாரும்
கொண்டதுபோக அலுத்தது மரம்.
இந்த மாம்பழம் இன்று
என் வயதை வெறும் பத்தாக்கியது,
தியாசாபிகல் சொசயடியின்
எங்கும் மரம் சூழ் வீட்டு முற்றமும்
உறக்கமில்லா அத்தையின்
நினைவுகளோடும்.
This entry is part [part not set] of 24 in the series 20070412_Issue
தாஜ்
நேற்று இன்றல்ல.
கண்ணாமூச்சி ஆடியக் காலம்
தாவிமேவிய நட்புகள்
தூங்க விடாதக் காதல்
மூச்சாய் தெரிந்த அரசியல்
வாயை கட்டிய மதம்
கண்களை பொத்திய கலாச்சாரம்
மண்டைக்குள் குடைந்த கடவுள்
இன்னும் ஒரு துள்ளலாய்
விசேசப் பூச்சோடு
நாளொரு தத்துவங்கள்.
எல்லா தினங்களின் வீறும்
அமைதியில் தோய்ந்து
இருளில் மறைய
உதயத்தின் சிரிப்பில்
முந்தைய நாளில் காணா
புதிய துளிர்களின்
குதூகலத்தை
எங்கும் பார்க்கலாம்.
சித்து.
மானத்தை மூடும் உடுப்பு
வெள்ளை அழுக்காய்
அழுக்கு வெள்ளையாய் மாறும்
மூடின உடலுக்குள்ளே
என் செல்லப் பிசாசு
துரு பிண்டம்
கட்டி வெளுக்க துறை
பல உண்டென்கிறார்கள்
மயக்கமும் தயக்கமும் கவிழ
இப்பவும்
உடுப்பே பிரதானம்
எளிதாய் வெளுக்கலாம்
வெள்ளையாய் மின்னலாம்.
ஞான விலாசம்.
வாசஸ்தலமான
மயிலாடுதுறையை விட்டு
பேருந்தில்
கும்பகோணம் செல்ல
இறங்கியப் பிறகே தெரிந்தது
சிதம்பரம் மார்க்கமாக
சென்றடையும் ஸ்தலம்
எளிதென்று
திரும்பி சிதம்பரம் தொட்டு
ஸ்தலமாம் நெய்வேலி
புறப்பட்டு போனபோது
கும்பகோணம் – நெய்வேலி
அகண்ட மாற்றுப் பாதை
உண்டென உறைத்தது.
பேருந்து நிறுத்தத்தில்
அசுவாசமாகி
முகவரி அட்டையில்
ஞான விலாசம் –
பேரொளி சபா –
முத்தி முதல் சந்து –
திருநெல்வேலி. என்று காண
விதியேயென அடுத்த
பேருந்தில் பயணப்பட்டு
விடியலில்
பேரொளி தரிசனமாக
‘ஞான பிரவாக விளக்கம்’
ஒத்தி வைப்பு
தகவல் பலகை எதிர்பட்டது.
தீர விசாரித்தபோது
இமயம் அடியிலிருந்து
திரு. மஹா ஞான சுடர்
பழக்கமான
திருநெல்வேலியின்
வசீகர நினைவுகளோடு
கடல் தாண்டினாரென்று.
***
‘ஞான விலாசம்’ பின் குறிப்பு:
1. கும்பகோணத்திற்கும், சிதம்பரத்திற்கும்
மையத்தில் ‘மயிலாடுதுறை’உள்ளது.
2. தமிழக ஊர்களது பெயர்கள்
அர்த்தம் பொருந்தியவை.
3. ஸ்ரீலங்காவில்
திருநெல்வேலி என்கிற பெயரில்
ஓர் ஊர் உள்ளது.
**********
– தாஜ்
This entry is part [part not set] of 37 in the series 20070329_Issue
தாஜ்
தேடிய அழகு
கற்றுத் தந்த காலம்
வானவீதியை காட்ட
பறப்பதில் இருப்பு
உச்சமென்றானது
மனப்புத்தன்
சிரிப்பை கிழித்து
பறந்த க்ஷணம்
அந்தரத்தில்
தொலைந்தது
நிழலும்.
தந்தையின் காலம்
என் பிள்ளைகள்
படிக்கிறார்கள்
சுமக்க இயலா
சுமக்கவே
படிக்கிறார்கள்.
வீட்டில் யென்
அசைவுகளிலும்
பார்வை அகலா
சிரத்தையோடே
படிக்கிறார்கள்.
மண்ணில் யென்
பாதம் பதியும்
இதம் வேண்டி
காலணிகளை
விட்டுச் செல்ல
படிப்பால்
தெளிகிறார்கள்.
குறுக்கீடுத் தவிர்க்க
சப்தமற
காலடிகளை அளந்து
பாதை ஒற்றியே
நடக்க வேண்டியிருக்கிறது.
என் உடுப்புகளில்
கறைபட்ட எச்சங்கள்
இன்னும் அவர்களுக்கு
புலப்படாதது ஆச்சரியம்.
அவர்களது புத்தகக்
குவியலுக்குப் பக்கத்தில்
நான் நகலெடுத்த
என் கவிதைத்
தொகுப்பொன்று
விரிந்து கிடக்கிறது
இன்னொரு புத்தகமாக.
காலம் காலமாக
எல்லோரும்
கவிதைகளை
விரும்புவதில்லை
சந்தோஷமாக இருக்கிறது.
நிர்வாண முகம்
கண்ணாடிக்கு முன்னால்
கண்கள் என்
முகம் தேடும் நேரம்
நிஜமான நண்பன்
உத்தம கணவன்
அன்பு பிரவாக தந்தை
அரசியல் பேச்சில்
சிவப்பவன்
பெண்ணுரிமை தாங்க
பேச்சிலும் தீரன்
கவிதையில் செய்திகள்
சொல்லும் ஆவலன்
இன்னும் அறிவு ஜீவியென
நேரத்திற்கு நேரம்
கட்டின காட்சிகள்
கிளர்ச்சி யூட்ட
புலி வேஷம்
பூனை வேஷம்
நரி வேஷம் நாய் வேசம்
இட்டுக் கலைத்ததும்
கூடவே விரிந்தது.
This entry is part [part not set] of 35 in the series 20070301_Issue
சோ.சுப்புராஜ்
இலவசங்கள்
சமைக்க மசாலாக்கள்
சல்லாபிக்க காண்டம்கள்
சருமத்திற்கு களிம்புகள்
முகத்திற்கு பௌடர்
முலை வளர மூலிகைகள்
குளிக்க சோப் மற்றும் ஷாம்ப்புகள்
பற்பசைகள்; தலைவலித் தைலங்கள்
மகளிரின் மாதப் பிரச்சினைகளூக்கும்
தீட்டுத் துணி பொட்டலங்கள்;
இன்னும் என்னென்னெவோ
எல்லாம் கிடைக்கும்
எங்கே? புத்தகக் கடைகளில்; அதுவும்
குறைந்த விலைகளில் கூடவே
மெலிந்த தமிழிதழ் ஒன்றும்
தருவார்கள் இலவசமாய்…..
வாசிக்க ஒன்றும் தேறாது; ஆயினும்
வாங்கி வர மறக்காதீர்கள்
குழந்தைகளின் மலந்துடைத்து
குப்பையில் வீச
உதவும் உத்திரவாதமாய்…….!
தாம்பத்யம்
உனக்கும் எனக்குமான
கயிறு இழுக்கும் போட்டி தொடங்கியது
நம் திருமண நாளிலிருந்து……
இருவரும்
ஒருவரை நோக்கி ஒருவர்
இழுக்கத் தொடங்கினோம் மூர்க்கமாக!
அவ்வப்போது தன்னிலை மறந்து
ஒருவரை நோக்கி ஒருவர்
நகர்ந்து விட நேர்ந்தாலும் சீக்கிரமே
இயல்புக்குத் திரும்பி
இழுவையை தொடர்கிறோம்…..
கயிற்றின் மையம்
இற்றுக் கொண்டிருக்கிறது;
இருவரின் கைகளிலும் கொப்புளங்கள்
கால்களும் தளர்ந்து போயின
இருந்தும்
இழுவையின் பிடி மட்டும்
இன்னும் இன்னுமென
இறுகிக் கொண்டு தானிருக்கிறது…..
வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டு
விளையாட்டு விதிகளையும் மீறி
வெகுதூரம் வந்து விட்டோம்;
விலகிப் போவது சாத்தியமில்லை
விட்டுக் கொடுக்கவும் மனமில்லை
இலக்குகள் எதுவுமின்றி வெறும்
பழக்கத்தால் தொடர்கிறோம்;
அவ்வப்போது பாவணைகளிலும்…….!
எங்கெங்கு சென்றாலும்
பிரமுகர்களைப் பார்க்கப் போகிறார்கள்
மரியாதை நிமித்தம்
மாலைகளுடனும் சால்வைகளுடனும்….
கோயில்களுக்குச் செல்கிறார்கள்
அனேக வேண்டுதல்களுடனும்
அர்ச்சகர்கள் மற்றும் பிச்சைக்காரர்களுக்கான
சில்லரைகளுடனும்….
சிறைக்கூடங்களுக்குச் செல்கிறார்கள்
சிற்றுண்டிகளுடனும்
சிதைந்த வாழ்க்கை சித்திரங்களுடனும்….
மருத்துவமனைகளுக்குப் போகிறார்கள்
ஆறுதல் மொழிகளுடனும்
ஆர்லிக்ஸ் மற்றும் பழங்களுடனும்…..
இழவு வீடுகளுக்குப் போகிறார்கள்
வலிமிகு இரணங்களுடனும்; சிலர்
வலிந்து வரவழைத்த கண்ணீருடனும்….
உறவுகளைத் தேடிப் போகிறார்கள்
குசல விசாரிப்புகளுடனும்
குழந்தைகளுக்கான தின்பண்டங்களுடனும்…..
இறந்த பின்பும் சுமந்து போகிறார்கள்
நிறைய பாவங்களையும்
நிறைவேறா ஆசைகளையும்; சிலர் மட்டும்
உதிர்கிறார்கள் ஒரு பூவைப் போல்
உரமாகிறார்கள் வேரடி மண்ணிற்கே….!
எதிரெதிர் இலக்குகள்
அந்தரத்தில் தொங்குகிறது
நமக்கான ஒற்றையடிப் பாதை
எதிரெதிர் திசைகளில்
நமது இலக்குகள்!
ஏதேதோ புள்ளிகளில் பயணம் தொடங்கி
எதிரும் புதிருமாய்
நிற்கிறோம் இப்போது;
விலகவோ துளியும் இடமில்லை
இருபுறமும் அதல பாதாளம்
எப்படி அடைவது
அவரவர் இலக்கை…..?
சேர்ந்து நடக்கத் தொடங்குவோம்
வேறுவழி எதுவுமில்லை இருவருக்கும்;
உலகம் உருண்டை என்பது
உண்மையானால்
இருவர் இலக்கையுமே கடந்தும்
தொடரலாம் நம் பயணம்…..!
வாக்குமூலம்
என் வழ்க்கை என்னுடையதில்லை;
நதிபோல் குறுகி
கரைகளுக்குள் அடங்கி நடக்காமல்
பாதைகளற்ற நீரோட்டமாய்
கிடைத்த வெளிகளில்
கிளைத்துப் போகிறதென் வாழ்க்கை!
என் பயணத்தின் திசைகளை
எதெதுவோ தீர்மானிக்க
இலக்கற்று ஓடிக் கொண்டிருக்கிறேன்!
இளவயதின் இலட்சியங்கள் எல்லாம்
சிதறிப் போயின சீக்கிரமே;
சின்னத் தடயமுமில்லை
வரித்துக் கொண்ட வாழ்க்கையை
வாழ்ந்ததின் அடையாளமாக…..!
தமிழ் இலக்கியம் படிக்கும்
தாகமிருந்தது பால்யத்தில்;
எதிர்காலப் பயம் பற்றிய
பொறியில் விழுந்ததில்
பொறியாளனாய் வெளியேறினேன்; குடும்பத்தின்
பொருளாதார சிரமங்களையும் மீறி……!
கலை இலக்கியத்தை வாழ்க்கையாய் வரிக்கும்
கனவுகள் இருந்தது நிறைய
கஞ்சிக்கும் வழியற்றுப் போகுமென்ற கவலையில்
உத்தியோகம் பார்த்துத்தான்
உயிர் வளர்க்க நேர்ந்தது…..!
காதலித்து கலப்பு மணம் புரிந்து
சாதியின் வேர்களைக் கொஞ்சம்
கில்லி எறியும்
வேகம் இருந்தது ஆயினும்
சுயசாதியில் மணமுடித்து
சுருங்கி வாழத்தான் வாய்த்தது….!
உயிர் குழைத்து உருவாக்கிய அம்மாவை
மகாராணியாய் பராமரிக்க
ஆசை இருந்தது மனம் நிறைய; ஆயினும்
பிழைப்புக்காக பிறிதொரு நாட்டில் நானுழல
பிறழ்ந்த மனதுடன் பிதற்றியபடி
பிச்சைக்காரியாய் வீதிகளில் அவள்
அலையத்தான் நேர்ந்தது…..!
கிராமத்துடனான
தொப்புள் கொடி உறவருந்ததில் – அம்மா
உயிருடன் இருக்கிறாளா இல்லையா என்ற
உண்மை கூட தெரியாமலே போனது….!
கடுகு போல் சிறுக வாழாமல்
ஊறுணி போல் கிராமத்திற்கே
உபயோகமாய் வாழ்ந்து விடுகிற
இலட்சியங்கள் கொண்டிருந்தேன்; ஆயினும்
சொகுசான பட்டணத்து வாழ்வில்
சொத்து சேர்ப்பதே
வாழ்வின் தேடலானதில்
வறண்டு தான் போனேன்
இதயத்தில் துளியும் ஈரமற்று……!
சிறுசிறு கணக்குகளிலும்
சில்லரைப் பிணக்குகளிலும்
நட்புகள் நழுவிப் போயின;
சொந்தமும் சுற்றமும்
விலகிப் போய் வெகு நாளாயிற்று;
பிரியங்களையும் பிரேமைகளையும் மீறி
மனைவியுடனான உறவும்
முறுக்கிக் கொள்கிறது அடிக்கடி…..!
விரிந்து பரவும் வெறியோடு
வேர் பிடிக்கத் தொடங்கினேன்;
சுற்றிலும் வேலியிட்டு
சூனியத்தை அடை காத்தேன்
கிளை விரித்துக் காத்திருந்தும்
அண்டவில்லை புள்ளினமெதுவும்
அப்புறந்தான் புரிந்ததெனக்கு
வளர்ந்து வந்தது முள் மரமென்று…..!.
இலைகள் பழுத்து உதிர்ந்து விட்டன
மொட்டுக்களெல்லாம்
மலராமலே கருகி விட்டன
காயில்லை; கனியில்லை; அதனால்
விதைகளும் விழுகவில்லை
மொட்டை மரமாய் நிற்கிறேன்
வெட்ட வெளிதனில்…..
வீழ்ந்தால் விறகுக்காவது ஆவேனோ
வெறுமனே மட்கி
மண்ணோடு மண்ணாகிப் போவேனோ….!
குறுங்கவிதைகள்
நெரிசல் மிகுந்ததாயிற்று வாழ்க்கை
நெருக்கித் தள்ளுகிறார்கள்
எல்லோரும் என்னை;
நானும் மற்றவர்களை…..!
யாவரும்
கடந்து போகிறார்கள்
புள்ளினங்களை;
பதற வைக்கும் அவசரங்களோடும்
பறத்தலின் பரவசங்களோடும்;
உயிர்களின் பசி உணர்ந்த
சிலர் மட்டுமே
வீசிப் போகிறார்கள்
கைப்பிடியளவு தானியங்களையும்…..!
விதிக்கப்பட்ட வாழ்க்கை
ஒரே ஒரு நாள் தான்; ஆயினும்
எத்தனை சந்தோஷமாய்
அலைந்து பறக்கும் ஆவலுடன்
புற்றிலிருந்து புறப்படுகின்றன
மழை ஈசல்கள் –
வாசலில் காத்திருக்கும்
வலைகளையும் மீறி…..!
ஓடுகிறோம்; ஓடுகிறோம்;
ஓடிக்கொண்டே இருக்கிறோம்….
எதற்கென்று தெரியவில்லை;
எங்கென்றும் புரிவதில்லை;
ஓட்டம் மட்டும் தொடர்கிறது
வெறிகொண்ட வேகத்தில்
விழுமியங்களை விழுங்கியபடி…..!
கூண்டுக்கிளி
கூண்டிலடைத்த கிளி ஒன்றை
கொண்டு வந்து மாட்டினார்கள்
என் வீட்டு முற்றத்தில்…..
வயதின் வலிகளோடும்
புறக்கணிப்பின் இரணங்களோடும்
புரண்டு கொண்ண்டிருந்த எனக்கு
கிளியின் வருகை
களிப்பூட்டுவதாய்த் தானிருந்தது….
எனது இறுமலும் கிளியின் மழலையும்
இசையென இயைந்து போனதும்
சினேகமானோம் சீக்கிரமே1
ஆயினும்…….
எப்போதும் கீச் கீச்சென்றபடி
எதையோ பறிகொடுத்த பாவணையில்
சீக்கிரமே அலையலாயிற்று கிளி!
சின்ன அரவம் கேட்டாலும்
சிலிர்த்து நடுங்கியது;
எலி தேடி அலையும் பூனையின்
புள்ளிக் கண்களின் பசிவெறியோ
கிலி கொள்ளச் செய்தது கிளியை…..
சிறுவர்களின் உயிருள்ள பொம்மையாய்
சின்னஞ் சிறு கிளி!
உண்ணப் பழங்கள்; உறங்கக் கூண்டு
எல்லாம் கிடைக்கிறது; இருந்தும்
விரிந்த வானத்தில் சிறகசைத்துப்
பறந்த சந்தோஷம்
கூண்டுக்குள் கிடைக்குமா கிளிக்கு?
கிராமத்தின் வீதிகளில்
சுதந்திரமாய் சுற்றி அலைந்த
பால்யம் நினைவிலாடிய தெனக்கு!
பறந்து பார்க்கத்தானே கிளி அழகு!
கூண்டுக்குள் அடைத்து இரசிப்பது
குரூரமாயிருந்தது எனக்கு;
பள்ளிக்கும் பணிக்குமாய்
பலரும் கிளம்பிப் போனபின்
கிளியும் நானும் தனித்திருந்த வேளையில்
கூண்டைத் திறந்து வைத்து
பறந்து போக அனுமதித்தேன்;
வெளியே போகாமல் கிளி
வேடிக்கை பார்த்தது என்னை!
ஒருவேளை பயப்படுகிறதோ என்றெண்ணி
ஒளிந்து பார்த்தேன் கொஞ்ச நேரம்!
சலனமில்லை கிளியிடம்;
சாவகாசமாய் உலவியது உள்ளேயே!
வழிமறந்து போயிருக்கலாமென்று
கூண்டுக்குள் கை நுழைத்து கிளி பிடித்து
வெட்டவெளியில் வீசினேன் பறந்து போவென்று…..
தத்தி தத்தி நடந்து
தானே கூண்டிற்குள் நுழைந்து
ஓரத்திற்குப் போய் ஒடுங்கிக் கொண்டது;
வெளியேற்றி விடுவேனென்கிற பயத்தில்
வெடவெடவென நடுங்கி பம்மிக் கொண்டது;
பழகிய சிறை வாசம் பாதுகாப்பாக
பறத்தல் மறந்த கிளிக்கு
விரிந்த வானம் வெறுமையாயிற்றோ!
ஐயகோ….
மனித அவலம் கிளிக்குமா……?
விக்கல்; சில நினைவுகள்
தலையில் தட்டவும் யாருமற்ற
தனிமையில் இரையெடுக்கும் போது
முதல் கவளம் சோறே விக்கிற்று!
சிறுவயதில் அடிக்கடி விக்கும்;
அப்போதெல்லாம்
ஆறுதலாய் தலையில் தட்டி
அன்பாய் சொல்வாள் அம்மா
‘உன்னை யாரோ நினைக்குறாங்கடா’!
இப்போது…..
யாரிருக்கிறார் நினைப்பதெற்கு?
ஞாபக அடுக்குகளில் துழாவினால்
பெருமூச்சே மிஞ்சிற்று!
பால்யகால நட்பெல்லாம்
பள்ளி இறுதி நாளன்றில்
பசுமை நிறைந்த நினைவுகளே….
பாடியதோடு கலைந்து போயிற்று !
கல்லூரி கால நட்போ
கத்தை கத்தையான கடிதங்களில்
செழித்து வளர்ந்து
நலம்; நலமறிய அவா; எனும்
கார்டு கிறுக்கல்களில் குறுகி
வருஷத்துக் கொருமுறை
வாழ்த்து அட்டைகளாய் சுருங்கி
கடைசியில் வேலை கிடைத்ததும்
கரைந்து காணாமலே போயிற்று!
அலுவலக உறவுகளெல்லாம்
அசட்டுப் புன்னகைகள்;
அவ்வப்போது கைகுலுக்கள் தவிர்த்து
ஆழமாய் வேர் பிடிப்பதில்லை மனதில்….
சொந்தம் சுற்றமெல்லாம்
சடங்கு சம்பிரதாயங்களில்
முடங்கிப்போய் வெகு நாளாயிற்று!
இலக்கற்று ஓடிக் கொண்டிருக்கும்
இயந்திர வாழ்க்கையில்
யாரும் யாரையும்
நெஞ்சார்ந்து நினைப்பதற்கு நேரமேது?
பால்ய சினேகிதி
முச்சந்தியில் வாகன நெரிசலில்
மூச்சிறைக்க நின்றிருந்தபோது
பின்கொசுவம் வைத்த சேலைகட்டி
பிள்ளையை இடுக்கியபடி கடந்துபோன
பேதைப் பெண்ணிடம்
பால்ய சினேகிதியின் சாயல்!
திருக்கார்த்திகை தினமொன்றில்
உரிமையாய் என் தலையில் நீ
தேய்த்துப்போன
ஒட்டுப்புல்லின் அடர்த்தியாய்
உதிர்கின்றன உன் நினைவுகள்!
அம்மணமாய் நாமலைந்த நாட்களில்
தொடங்குகிறது நமக்கான அந்தரங்கம்!
உன் “அரைமுடி” கேட்டு நானழுததாக
சின்ன வயதில் சொல்லிச் சொல்லி
சிரித்திருக்கிறாள் அம்மா!
செப்பு வைத்து நீ சோறாக்க
வயலுக்கு போவதாய் சொல்லி – நான்
வைக்கோற் போரில் விளையாடிவர
சோறு குழம்பு கூட்டென்று
மண்ணைக்குவித்து பரிமாறி
அவுக் அவுக் என
பாவணைகளில் தின்று முடித்ததும் – அம்மா
பசிக்கிறதென்றபடி ஓடியிருக்கிறோம்….!
தானியத்தை மென்று
நுனி நாக்கில் ஏந்தி நாம் வளர்த்த
புறாக் குஞ்சுக்கு
புகட்டி இரசித்திருக்கிறோம்….!
காடுகளில் தேடி அலைந்து
பொன்வண்டுகளைப் பிடித்து
தீப்பெட்டிகளில் வளர்த்திருக்கிறோம்!
களிம்ண்ணில் கோயில் கட்டி
கடவுள் சிலை வடித்து
வீடுவீடாய் கொண்டு காட்டி
எண்ணெய் வாங்கி வந்து
விளக்கேற்றி விளையாடியிருக்கிறோம்….!
உணர்ச்சிகள் அரும்பாத வயதில்
புணர்ச்சி என்று புரியாமலே
உறுப்புக்களை ஒட்டி வைத்து
புருஷன் பொஞ்சாதி என்று
உறவாடி மகிழ்ந்திருக்கிறோம்…..!
பக்தி கொஞ்சமும் இல்லாமல் – உன்
பக்கத்தில் நடந்து போகிற சந்தோஷத்திற்காகவே
மலையேறிப் போய்
சாமி கும்பிட்டுத் திரும்பிய நாட்கள்!
சைக்கிள் கற்றுக் கொள்ளும் சாக்கில்
பரஸ்பரம் பரிமாறிக் கொண்ட
பவள முத்தங்கள்!
என் கைகளில் தவழ்ந்து
நீ பழகிய நீச்சல்!
உன் கைகளுக்குள் அடங்கி
நான் சிலிர்த்த மோகம்!
புத்தம் புதிய பூவாக நீ வந்திருந்து – என்
மனங் கொள்ளை கொண்ட
மயானக் கொள்ளை!
நீ வராமல் போனதால்
அழகிழந்த தெப்பத் திருவிழா!
இன்னும் இன்னுமென….
நெஞ்சின் ஆழத்தில் இனிக்கும்
நினைக்க நினைக்க சிலிர்க்கும்
நினைவுகள் ஏராளம்!
அறியாத வயதில் அருகிருந்தோம்;
வளர வளரத்தான்
விலகிப்போனோம் வெகுவாக….
கல்வி பிரித்தது; காலம் நம்மை
வேரோடு பிடுங்கி வீசி எறிந்தது
திசைக் கொருவராய்……..
திருவிழாவில் தொலைந்த சிறுபிள்ளைகளாய்
தேடிக் கண்டடையவே முடியாதபடி
தொலைந்து போனோம்
நீண்ட நெடுங்காலமாய்……
நவீன தாலிகள்
நவீன பெண்களுக்குத் தான்
எத்தனை எத்தனை தாலிகள்!
கம்பீரமாய் கழுத்தில் தொங்கும்
கம்பெனியின் அடையாள அட்டை;
மாலையாய்த் தழுவி
மனதை நிறைக்கும் கைத்தொலைபேசி!
மருத்துவரென்றால் ஸ்டெத்தாஸ்கோப்;
கணிணி நிபுணி என்றால்
கழுத்திலொரு ஞாபக குறுந்தகடு!
இன்னும் என்னென்னவோ
அத்தனையையும் சுமக்கிறார்கள்
அலாதியான சந்தோஷங்களுடன்….!
புருஷர்கள் அணிவிக்கும்
பொன் தாலிகள் தான்
காலத்திற்கும் கனக்கும் நகரவிடாமல்…..!
யானைகளுக்கு அங்குசங்கள்;
நம் பெண்களுக்கு
தாலி என்னும் மஞ்சக்கயிறு!
ஆயினும்……
காகிதப் பூக்களே கவர்ச்சி என்றும்
கட்டிடங்களின் பிரம்மாண்டமே
நாட்டின் வளர்ச்சி என்றும்
கற்பிதங்கள் நிறைந்த
கடும்பாலை வெளியில் வாழ நேர்ந்த
வெயில் கொளுத்திய ஒரு நாளின்
மங்கிய மாலை வேளையில்
வெளியில் கிளம்பிய புருஷனிடம்
மழை பெய்யுமின்று மறக்காமல்
குடைகொண்டு போங்களென்றாள்;அவன்
மறுத்தபோதும் திணித் தனுப்பினாள்!
கட்க்கத்தில் கனக்கும் குடையுடன்
மனைவியை மனதுள் வைதபடி
வெளியில் சென்ற வேலை முடித்து
வீட்டுக்குத் திரும்பும் வழியில்
அதிசயமாய்ப் பிடித்தது
அடைமழை!
துளியும் நனையாமல் வீடு திரும்பியதும்
மனைவியிடம் கேட்டான்
எப்படி அறிந்தாய்
இன்று மழை பெய்யுமென்று?
நீயும் பத்தினி தான்……..!
முறைத்தபடி சொன்னாள் அவள்;
மன வலியை
முகத்தில் படிக்க முடிவது போல்
மழைவழி அறிய வானத்தை
வாசிக்கத் தெரிந்தால் போதும்…..!
பத்தினி என்கிற
பாசாங்குகள் தேவையில்லை;
ஆயினும்
ஞாபக அடுக்குகளில்
குவிந்து கொண்டிருக்கும் குப்பைகளும்
துடைக்கத் துடைக்க பெருகும்
தூசுகளும்
கடந்த காலங்களின் வயதைக்
காட்டிக் கொடுத்து விடுகின்றனவே
எப்படி மறைத்தாலும்…….!
குறுங்கவிதைகள்
உலகம் சுருங்குகிறது கிராமமாக…..
விரிந்து கொண்டிருக்கின்றன
மனிதர்களுக்குள்ளான இடைவெளிகள்!
**** **** ****
கடவுள் இல்லை என்று
எத்தனை தீவிரமாய் நம்பினாலும்
நெருக்கடிகள் நேரும் போதெல்லாம்
அலைபாயும் மனம் சரணடையும்
ஆண்டவனிடமே…..!
**** **** ****
காலம் கடந்து கொண்டிருக்கிறது – நமது
கர்வங்களை நகைத்தபடி
தத்துவங்களைத் தகர்த்தபடி…..!
**** **** ****
அங்கீகாரங்களுக்கு அலைகிற
அவலம் தொடர்கிறது
ஆயுள் முழுதும்…..!
**** **** ****
கவனம்; மிகக் கவனம்
கையாளுங்கள் கண்ணாடி மாதிரி
கொஞ்சம் பிசகினாலும் நொறுங்கி விடும்
மனித மனங்கள்…..!
**** **** ****
வருஷந் தவறாமல் வாங்கிக் குவித்தும்
அனுப்ப யாருமில்லாததால்
என்னிடமே தேங்கிப் போயின
காதல் வாழ்த்து அட்டைகள்!
**** **** ****
ஒருவருடனும்
ஒத்துப்போக முடிவதில்லை;
ஒதுங்கி வாழ முயன்றாலோ
கொல்கிறது தனிமை!
**** **** ****
உயிரோடிருக்கும்போது ஒருவாய்
உணவும் தந்து உபசரிக்காதவர்கள்
பிணத்திற்குப் படைக்கிறார்கள் விதவிதமாய்
பிரியத்தினால் அல்ல;
பேய் பற்றிய பயத்தினால்….
**** **** ****
– சோ.சுப்புராஜ்
This entry is part [part not set] of 35 in the series 20070222_Issue
சரவணபவன்
ஜுவனுள்ள சாவு
எட்டுக்கு எட்டு அறைக்குள்
எந்திரமாய் சுழன்று
பொங்கி புழ(ழு)ங்கி
வளர்வதாய் தளர்ந்து
கனவுகளாலே
வாழ்க்கை நடத்தி
அழுக்காக்கவே குளித்து நிரம்பிட துடிக்கும்
துளை குடம் உடைய
நிர்வாணம் தேடும் நிரந்தரமாய்
அடைபட்ட கூண்டிலிருந்து
யதார்த்தத்தை நோக்கி
எட்டி வைத்த முதலடியாய்
இறந்து கிடக்கின்றேன்…
அது பாவம் பரமசாது யாரோடும்
வம்பு சண்டைக்கு போகாது ரத்தமோ
வன்முறையோ
கேள்விபடாத வார்த்தைகள்
எப்பொழுதாவது முட்டிக்கொள்ளும்
யார் எங்கே அழைத்தாலும்
முரண்டு பண்ணாமல் போய்வரும்
இன்னைக்கும்,
எல்லோரும் கிளம்பியதும்
ஆசையாய் அதுவும்
கூடவே வருகிறது
தான் போவது கோவிலுக்கென்றோ
சாமி இருக்கிறதென்றோ
எதையும் அறியாத
பலி கடாவாய்.?
This entry is part [part not set] of 29 in the series 20070201_Issue
ம.நவீன், மலேசியா
மிக பயங்கரமானது
ஏதாவது இடுக்கில்
கைவிடுகையில் தட்டுப்படும்
பிரிந்த நண்பர்களின்
வாழ்த்து அட்டைகளும்
அதன் வாசகங்களும்.
####################
எனக்குத் தெரியும்
மிகத்திறமையான எனது நீச்சல்
மரணத்தை நோக்கிதான் என்று.
###################
நேற்று
என் அறை சாவி தொலைந்துவிட்டது
அதை தேடி சென்ற
பூட்டையும் காணவில்லை
வியப்பாக உள்ளது
அவைகளுக்கு அறையில் உள்ள
எனது உடமைகளைப் பற்றி
கவலையில்லாதது.
######################
மிக நுட்பமானது
மரணச் செய்தியைச் சொல்ல
கதவு தட்டும் கைகள்
கொண்டிருக்கும் மொழி.
######################
காலியாய் இருக்கும்
வீட்டின் மூலையில்
பொருட்களை வைத்து நிரப்புதல்
அத்தனை சுலபமானதல்ல
காலியான இடம் தன்னகத்தே
எல்லா பொருட்களையும் கொண்டுள்ளது
ஆது சூனியத்தைத் தவிர
This entry is part [part not set] of 31 in the series 20060908_Issue
கோ.கண்ணன்
(அறிமுகம்:- கோ.கண்ணன். தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில்
தமிழ்த் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். முனைவர் பட்டம் பெற்ற இவருடைய முனைவர் பட்ட ஆய்வு ‘தமிழ் நாவல்களில் தலைமுறை இடைவெளி’ காவ்யா பதிப்பகத்தால் நூல் வடிவம் பெற்றுள்ளது. சமகாலத் தமிழ்க் கவிதைகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். துணைக்கு ஆள் கிடைக்கும் போதெல்லாம் நவீன தமிழ் இலக்கியக் கூட்டங்களுக்கு போய் வருவதை வழக்கமாகக் கொண்டிருப்பவர். தன்னளவில் ஒரு நுட்பமான கவிஞரும் கூட. அவருடைய முதல் கவிதைத் தொகுப்பு ‘ஓசைகளின் நிறமாலை’ விரைவில் வெளிவர உள்ளது. இந்தத் தருணத்தில், கண்ணன் (அவரைப் போன்ற பிறர்) பார்வையிழந்தவர் என்பதைச் சொல்ல வேண்டியது அவசியமா? அனாவசியமா? இதுகுறித்து இரு மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றன. இரண்டு கருத்துக்களுமே பொருட்படுத்தத் தக்கவையே. என்றாலும், பார்வையற்றவர்களுக்கு எழுத்தறிவு கிடைப்பதும், அப்படியே கிடைத்தாலும் பாடபுத்தகங்கள் ‘பிரெய்ல்’ எழுத்தில் கிடைப்பதே கடினமாக இருக்கும் போது , படித்துக் காட்ட ஆள் கிடைப்பது சிரமமாக இருக்கும் போது அவர்களுக்கு இலக்கியம் அறிமுகமாவதற்கான வழிகள் வெகு சொற்பமாகவே இன்றளவும் நடப்புண்மையை கணக்கில் எடுத்துக் கொண்டால் அவர் பார்வையிழந்தவர் என்ற தகவலையும் தர வேண்டிய தேவை உணரப்படுகிறது. சமகால இலக்கியம் பற்றி அறிவதற்கான வாய்ப்புகள் எங்களுக்கு அரிதாகவே வாய்க்கின்றன என்று பல பார்வையற்ற மாணவர்கள் வருத்தமாகச் சொல்லக் கேட்பதுண்டு. போதிய வாய்ப்புகளும், வழிவகைகளும் செய்து தரப்பட்டால் புதிய படைப்பாளிகள், வாசகர்கள் தமிழுக்குக் கிடைப்பது நிச்சயம். சமீபத்தில் திரு. சுகுமார் (‘நெருப்பு நிஜங்கள்’), தாயாரம்மாள்(உதயக்கன்னி), மு.ரமேஷ்(‘வார்த்தைக்குள் சிக்காத இரவின் உயரம்’) முதலிய பார்வையற்றவர்களின் கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. அவை பரவலான கவனம் பெற வேண்டும். பெறும் என்று நம்புகிறேன். கண்ணனின் வரவிருக்கும் கவிதை நூலிலிருந்து சில கவிதைகள் இங்கே தரப்பட்டுள்ளன.
– லதா ராமகிருஷ்ணன்)
1/ பந்தயம்
ஓடுதல்
எல்லையை அடைதல்
முச்சிரைத்தல் என்பவை
எவர்க்கும்
எக்காலத்துக்கும்
எவ்விடத்தும்
பொதுவான ஒன்ட்ரு தான்.
ஆயின்
பந்தயம் என்பது
எப்படி
சமமாய் சாத்தியமாகும்?
2/ப்ரியமுடன் யாழ்மதிக்கு
ஜலதரங்க இசைபொழியும்
எனது கை குடை
கோவர்த்தன கிரிசுமந்த
கோபாலனாய் நீ.
கொற்ற குடை நிழல் கீழ் தங்கிடும்
குடிமகனாய் நான்.
3/அப்பாவின் வாசனை
கண்ணனின் கவசகுண்டலம் போல், அப்பாவோடு
சேர்ந்தே பிறந்திருக்கக் கூடும் இது.
தீர்த்தமாடிய கங்கையாலும் கழுவ முடியாதது.
ஒரு நாளும் அப்பா செயற்கை மணப் பூச்சுக்களாலோ,
வாசனை திரவியங்களாலோ
களங்கப்படுத்தியதில்லை இதனை.
அப்பாவின் அடிச்சுவட்டோசை செவிபோகும் முன்
யானையின் மணியோசையாய் நாசியில் நுழைந்து
உறையும் இது.
இதயத்தில் சிலிர்ப்பூட்டும் அப்பாவின் உடல்வாடை
தனித்துவம் மிக்கது;
மகத்துவம் நிறைந்தது.
உழைப்பின் பொருளை எந்த அகராதியிலும்
துலாம்பரமாய் துலக்கிக் காட்டுவது.
மண்மணம் நிறைந்தது
மண்ணில் கரைந்தது அப்பாவின் வாடை.
4/ பதிவுகள்
எவரெவர் கால்களுக்கெல்லாமோ
நிர்ப்பந்திக்கப்படும்
நான் கடக்க வேண்டிய பயண தூரம்.
எவெரெவர் தோள்களுக்கெல்லாமோ
சுமத்தப்படும்
என்னுடைய சிலுவை பாரம்.
எவரெவர் திருவாஇகளிலெல்லாமோ
ஒளி-ஒலிபரப்பு செய்யப்படும்
எனக்கான கேள்வி, காட்சிகள்.
எவரெவர் விரல்களிலோ
மலை மலையாய் குவிந்திடும்
என்னுடைய எண்ணப் பதிவுகள்.
நானும்
அத்தனை கால்களையும்,
அத்தனை தோள்களையும்,
அத்தனை முகங்களையும்,
அத்தனை கரங்களையும்,
ஆரத்தழுவித் தழுவி
முத்தமிட்டு, முத்தமிட்டு
ஆனந்தமாய் முறுவலிப்பேன்
அழுது ஓய்ந்திடும் சிறு குழந்தையென.
5/என்ன செய்யலாம்?
(ஆத்மாநாமின் தாக்கத்தில் எழுதப்பட்ட கவிதை)
காகிதத்தை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம்?
குழந்தையோடு குழந்தையாய் பொம்மைகள்
செய்து விளையாடலாம்.
முடியா விட்டால்
கிழிக்கப்பட்ட மனசைப் போல
சுக்குநூறாக்கிடலாம்.
காகிதம் கோபித்தால் கழிவிரக்கம் கொண்டு
மண்டியிட்டு அதனிடம் மன்னிப்பு கோரலாம்.
காகிதத்தை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம்?
பொறுப்பான ஆசிரியரைப் போல
தேவையான குறிப்புகள் எழுதலாம்.
ஒரு கவிஞனைப் போல , குடிக்காமல் போதை கொண்டு
பொருள் பொதிந்த, பொருள் புரியாச் சொற்களைக்
காகிதத்தில் உதறிக் கொட்டலாம்.
கதாநாயகன் போல், வில்லன் போல்
சட்டப்படி, சட்டமேந்தி
மக்களைத் திகைக்கச் செய்யலாம்.
‘மைக்கேல் ஆஞ்ஜெலோ’வைப் போல்
மறையா ஓவியம் தீட்டலாம்.
காகிதத்தை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம்?
என்னமும் செய்யலாம்.
ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கலாம்.
வேண்டாமென்றால் தகர்க்கலாம்.
வேறென்ன செய்யலாம்?
காதலரைப் போல கவலையின்றி
கடிதங்கள் போடலாம்.
வெள்ளைக் காகிதத்தை வைத்துக் கொண்டு
என்ன செய்யலாம்?
வெற்றுக் காகிதத்தை வைத்துக் கொண்டு
என்ன செய்யலாம்?
வெள்ளைக் காகிதத்தில் , அதன் வெறுமையில்
ஒரு புத்தன் பிறந்தான்.
காற்றுச் சிறகேந்திப் பறக்கும் ஒற்றைக்
காகிதம் போல் நாமும்
பற்றற்ற சுதந்திரவாதியாய் பறக்கலாம்.
உளறல் பற்றி ஆய்வு செய்வாய்.
உழைப்புப் பற்றி கனவு காண்பாய்.
மனிதனைத் தேடுவாய்.
மனத்துக்காக மாய்வாய்
முடியாமல் திணறும்
உன் இயலாமைக்காக அழுவாய்.
உன் வாழ்வுப் பாதையை விசாலிக்க
முயற்சிக்கும் எதுவும் முதிராது போகலாம்.
அப்போது நீ அழுவாய்.
நீ மல்கும் போது
உன் விழி உன்னையே நோவும்.
உன் வேகத்துக்குள்
உன் வாகனம் உன்னை இயக்கும் போது.
புhசத்தின் அர்த்தம்
பருமனாவதற்குள்
நான் ஆயிரம் கனவுடன் போராடியிருக்கிறேன்.
நிலவோடு கோபித்து இருக்கிறேன்.
காற்றுக்கு கல்லெறிந்து இருக்கிறேன்.
தெரியுமா உனக்கு?
நெஞ்சுரம் என்பது
தெரியுமா உனக்கு
கர்வத்தின் முதுகை
எதுவும் இங்கு உயர்வுக்கே மரியாதை.
மனசை பாலைக்கு உவமிக்க
உன்னால் தான் முடியும்
என்னுள் வீசும் காற்று
சுழன்றடிப்பதற்குள்
தென்னையைச் சாய்த்துவிட முயல்கிறேன்.
என் உள்ளத்தின் அத்திவாரம்
உறுதியாக இருக்க
என் இரு கரங்களும்
என்னைவிட உதியாக இருக்கிறது.
24 மணி நேரமும்
உயிரின் பெரும் பகுதியை
முத்திரைப்படுத்திய இயலாமையே
ஏன்னுள் உராய்ந்து கொண்டிருக்கிறது.
வுhழ்வின் புத்தகத்தின்
எல்லா பக்கங்களும்
சுpவப்பு நிறத்தால் கிறுக்கப்பட்டுள்ளன.
நேரிய உணர்வின்
புhரிய விளைச்சலை
அறுவடை செய்து கொண்டிருக்கிறேன்.
உறவு பொய்மைக்குள் விழுந்து
எழ மறுத்து என் பகுதிகள்
நசிந்து தொங்குகின்றன.
மனசுக்கு என்ற கௌரவம்
து}க்கிலிடப்பட்ட போது
துடியாய்த்துடித்த காலம் வெறுமையாகிவிட்டது.
நாவுக்கு மனிதன் கொடுத்திருக்கும் ஆரோக்கியம்
உறவின் வலிமைக்குக்
கொடுக்கத் தவறிவிட்டான்.
பருந்துகளின் விழிகளிலிருந்து
என் எறும்பு மனசு
ஒளிந்து கொள்வதில்
இன்னமும் முற்சிக்கையில்
வுhழ்வு வயதாகிவிட்டது.
This entry is part [part not set] of 42 in the series 20060623_Issue
எச்.முஜீப் ரஹ்மான்
ஒன்று : நிச்சயமின்மை
வெறுமையில் இருப்பதாக
சுய பிரஸ்தாபம் கொள்ளுமொரு நிலை
இனியில்லை
மையம் விளிம்பை காவுக் கொண்டு விட்டது
எந்த நேரத்திலும்
சூனியப் பிளவில் பிரவேசிக்க நேரலாம்
காற்றின் வேகத்தில் செல்லும்
மேகங்கள் கூட கரு கொண்ட பின்னே
பிரசவிக்கின்றன.
இது முன்னின்றலின் இயங்கா விதி
எந்த ஒரு தருணமும்
ஒரு பித்தனாகவோ
சித்தனாகவோ செய்யலாம்.
நிச்சயமின்மையில் சிக்கி
தவிப்பதாக எழுந்த அவிப்பிராயம் கூட
வெறுமையில் சென்று முடிகிறது
இனி சுய பிரஸ்தாபம் தேவையில்லை.
இரண்டு : நட்சத்திரங்கள் மறையுமா?
நேற்றைய நாளின் கடைசி
கணங்களில் உதித்திருக்கும் சில
நட்சத்திரங்களைப் பற்றி
சொல்லியாக வேண்டும்
நட்சத்திரங்களை இதற்கு முன்பு
அறிந்ததைப் போல இல்லை
என்று நம்புவதிலிருந்து தான்
இந்த நட்சத்திரங்களைப் பற்றி
சொல்லமுடியும்
ஒரு புழுக்கத்தில் உதித்த இவை
அசாதாரணமாக
சூரியனை விட பெரிதாக இருக்கிறது.
நான்கு திக்கிலுமாக நின்று
நான்கு வர்ணங்களில் ஒளியை
உமிழ்ந்து கொண்டிருப்பதாக
கடைசியில் கிடைத்த தகவல்கள் சொல்லுகின்றன
எனினும் ஒன்றை மட்டுமே
ஊர்ஜிதம் செய்ய வேண்டியிருக்கிறது
அவை மறையுமா என்று.
மூன்று : வேகவேகமாய் ஒரு வேகம்
ஒரு வேகம் சிறந்தது என்றுச் சொல்லப்பட
ஆயிரம் காரணங்கள் இருக்கிறது
அந்த வேகத்துக்கு முன்னால்
எதுவும் சென்றுவிட முடியாது
என்ற நம்பிக்கையும்.
வேகவேகமாய் ஒடிக்கொண்டிருக்கும்
அந்த வேகத்தைப் பற்றி ஓரிரு நாள்களுக்குள்
ஏதாவது முடிவுக்கு வரலாம்
ஆனால் வேகம் முடிவுக்கு வராது என்று தெரியாமலாயிருக்கும்
என்றோ துவங்கிய அந்த வேகம்
எங்கே செல்லுகிறது என்று
அவதானித்தே காலங்கள் மேலிருந்து கீழாக
விழுந்துக் கொண்டிருக்கிறது
ஒரு நிலையில் தான் வேகம் செல்கிறது
என்று சொல்வதற்க்கான நிலை
வேகத்திலிருந்தே பெறப்படுகிறது என்று
சொல்லமுடிந்தாலும்
வேகம் பற்றிய நிச்சயமின்மையே
மீண்டும் மீண்டும்
அதை பேசச் சொல்கிறது.
ஒரு பிடிபிடித்து
ஓரக்கண் நிமிர்ந்து பார்ப்பர்
ஓடிக்கொண்டிருக்கும் கடிகாரத்தை.
நேரம் இருப்பின்
நெடிய வாழைப்பழங்கள்
நாலு உட்சென்றுவிடும்
நாழிகை ஆகுமுன்னே.
அதற்கும் மேலே
அரையவியல் முட்டையொன்று.
அதைக் கீழிறக்க
அப்பிள்ஜூஸ் வேறு
ஆஹா! இதுவல்லவோ ஸஹர் உணவு.
இத்தனையும் இழந்து
இத்தரை மறந்து
புறப்பட்டீர் புலம்பெயர்ந்து
புதுயுகம் படைத்திடவே.
தேன்மதுரத் தமிழோசை போதும்
தமிழரெனத் தலை நிமிர
இயல் இசை நாடகம் – புலம்பெயர்
இலக்கியங்கள் படைத்திடவே.
இத்தரையில் விட்டபிழை வேண்டாம்
எத்தரையும் எல்லோர்க்கும் சொந்தமென
உலகமயமாக்கலில் உங்கள் பங்கு
உயரட்டும் இமயம் வரை.
தொலைத்துவிட்ட சொந்தங்களை – உயர்
தொழில்நுட்பம் பெற்றுத் தருமென்றால்
தொடக்கி விடுங்கள் ஆய்வுகளை
தொலைவில் இருந்து கொண்டே.
சுனாமி – நல்ல தருணம்.
அழகிய அக்பர் கிராமம்
அன்பான மௌலானா வீட்டுத்திட்டம்
இன்னொரு இருபத்தைந்து மீனவர்திட்டம்
இன்றைய மக்பூலியாபுரம் (அன்றைய பஞ்சாப்) என
ஆண்டாண்டுகாலமாக எங்கள் முதியோர்
ஆதியில் தடம் பதித்த
சுவடுகளையெல்லாம் ஒரு நொடிப்பொழுதில்
சுருட்டி எறிந்து விட்டாய்.
பணம் நகை பாத்திரங்கள்
பத்திரப் படுத்திய ஆவணங்கள்
வீடுவாசல் எதுவும் வேண்டாமென
வீதிக்கு ஓடிவந்த எம்மக்களை,
உடுத்த உடைகள் கூட
உடலில் காக்க விடாமல்
உக்கிரமாய்ப் பிய்த் தெடுத்து
உள்வாங்கிக் கொண்டாய் நீ!
பிறக்கப் போகும் பிள்ளையையோ
இறக்கப் போகும் தறுவாயையோ
கண்டுகொள்ளாமல் குருவிக் கூட்டுக்குள்
குண்டு வைத்ததுபோல் ஆக்கிவிட்டாய்!
ஆக்குவதும் அழிப்பதும் நீதான்
அவனியிலே அதற்கு இணையில்லை
எனவுணர்த்தவா ஆழிப்படைகளை அனுப்பி
அரைமணிக்குள் ஆக்கிரமித்து விட்டாய்!
ஆகாயம் கடல் தரையென
அதி நவீன ஆயுதங்கள்
அதிலும் உயர் தொழிநுட்பம்
அத்தனையும் இருந்தென்ன பயன்?
கடல் ஆகாயம் தரைகளையே
படைகளாக்கி ஆட்டங் காணவைப்பேன்
என நீ உணர்த்திவிட்டாய் –
அகிலத்தையே நடுநடுங்க வைத்துவிட்டாய்.
கடலில் கால் பதித்து
அலைகளை அள்ளி முத்தமிட்டு
அணைத்து புரண்டு விளையாடி
ஆனந்தப் பட்ட நாங்கள்,
ஆலை என்றதும் அலறி அடித்துக்கொண்டு
ஏறுதற்கு இடம் தேடுவதையும்
ஓடுதற்கு வழி பார்ப்பதையும்
வேடிக்கை பார்ப்பதற்கா எங்களுயிர் காத்தாய்?
இல்லையில்லை இது எச்சரிக்கை மட்டும்தான்
இன்னும் உன் தண்டனை இறங்கவில்லை!
இரவு பகலாகவும் பகல் இரவாகவும்
சூரியன் மேற்கிலும் விழிகள் உச்சியிலும்,
மாறும் நாள் வருவதற்குள் எங்களை
மாற்றிக் கொள்ள ஒரு சந்தர்ப்பம்
இது ஒரு நல்ல தருணமும்கூட
உன்னை நன்கு புரிந்து கொள்வதற்கு.
—————————————-
abdulgaffar9@gmail.com
This entry is part [part not set] of 39 in the series 20060609_Issue
பாஷா
எது அது
ஒரு முதல் புன்னகையின்
அலை நீளத்தில்
இரு கண்கள் கவிழ்த்த
கூடாரத்தினுள் கோழிகுஞ்சாய்
மனம் சிக்கிகொண்ட
ஒரு பிற்பகலை நம்மிடம்
எடுத்து வந்தது
எது அது!
இரு விரல் உரசி
இரு தோள் உரசி
உன்னருகில் அமர
ஒரு வேண்டுகோளாய் என்
தைரியம் தரையிறங்கியபோது
ஒற்றை பார்வையால்
என்மேல் ஒட்ட வைத்தாயே
எது அது!
தோழனாய்,தமயனாய்
தொடரும் பயணத்தில்
துணைவனாய்
உன் கருவறையில் சூல்கொண்டு
பின்னொரு நாளில் நீ மடிதாலாட்டும்
தலை மகனாய்
எல்லா விருப்பத்திலும் உன்
அருகாமை விரும்பும்
எனக்குள் இருக்கும்
எது அது!
குகை புகுவாய்
கொண்டாடி மகிழ்வாய்
வாழ்த்தொலிகள் முழங்க
எந்தையும் தாயும்
மகிழ்ந்திருந்ததாய் சொன்ன
குகைபுகுந்தேன் ஒரு நாள்
குகையின் சுவரெல்லாம்
விந்துக் கறைகள்
முத்தத்தின் ஒழுகலில்
வழியும் எச்சில்கள்
இதில் எழுதப்போவதில்லை
என் சரித்திரத்தை
வெள்ளைத் தாளொன்றுண்டு என்னிடம்
குகையிருட்டை கையள்ளி
எழுதுகோலை நிரப்புகிறேன்
எழுதும் முனையில்
எதுவும் இல்லை
விரலில் எடுத்து
விந்து பீய்ச்சி
வெள்ளைத் தாளில் எழுதுகிறேன்
பின்னொரு நாள் குகைபுகும்
யாரேனும் படிக்க கூடும்!
குகையின் வாயிலில்
சாரல் விழுகிறது
சிறகை நனைத்து
சிலிர்த்து குகை
விளையாட்டில்!
குகை வாழ்க்கைக்கு
சிறகு வேண்டுமா
குகை தத்துவம்!
உரக்க சொல்லி
உயர பறக்க எத்தனித்து
சுவர் மோதி தரைதொடுகிறேன்
பறத்தல் கூடாது
குகை விதிகள்!
பறவையென்றே சொல்லத்தான்
இறகுதிரும் சிறகுகள்!
அகன்ற வானமும்
ஆழ் பள்ளத்தாக்கும் மோதும்
குகை மறுமுனை நோக்கி
மெல்ல நடக்கிறேன்
சுவாசிக்க வேண்டும்
சிறகடிக்க பறக்க வேண்டும்.
குகையை கூடு எனக்கொள்ளுமோ
கிளையாட்டும் பறவைகள்!
This entry is part [part not set] of 32 in the series 20060407_Issue
பெருந்தேவி
கடைத்தெருவில் குட்டிச்சீதை
குரங்குப்படைகளும் சீதையும் லட்சுமணனும் இல்லாமல் தகர வில்லோடு ராமன் வேஷமிட்ட குழந்தையைப் பார்த்தேன் ஒருநாள் கடைத்தெருவில். நீலநிறத்துக்கும் அட்டைக் கங்கணத்துக்குமிடையே சொறிந்துகொண்டிருந்தவனுக்கு காசு கொடுத்துவிட்டு சீதையைப் பற்றிக் கேட்டேன். அம்மாவோடு முறுக்கு சுற்றிக்கொண்டிருப்பதாகச் சொன்னான் அவன். அதே வழியில் அடுத்த நாள் சீதை வேஷமும் அனுமானும் எதிரே. மட்கிய பாவாடை கமகமத்தவளிடம் ராமன் எங்கே என்றேன். இஸ்கோலுக்குப் போய்விட்டானாம். ராவணனை விசாரித்ததும் தெரியலை என்றுவிட்டு நகர்ந்தாள். அனுமான் அப்போது குச்சிமிட்டாய் வாங்கிக்கொண்டிருந்தது. சீதை இலங்கையை மறந்தே விட்டாளா அல்லது ராவணன் அவர்கள் கதைக்குள் இன்னும் நுழையவே யில்லையா என்று விசாரித்தறிய வாடா உறுதியோடிருந்தும் ராவணக் குழந்தையை இன்றுவரை நான் பார்க்கவேயில்லை.
கண்
எப்போதும் நேர் கோணத்தில் பார்க்க சச்சதுரமாக ஏன் செவ்வகமாகவேனும் இருந்திருக்கலாம்.
This entry is part [part not set] of 32 in the series 20060407_Issue
டான்கபூர்
உலகம் நசிந்து மூட்டைப் பூச்சிகள் என்னிதயத்தைக் கடித்துத் தின்னுகிறது. இதயங்களில் வால் இருக்கும் மூளையில் கொம்பு முளைத்திருக்கும் மனிதர்கள் விழிகளை விழுங்கும் போது.
சூறாவளியால் சிக்குப்பட்ட கோழிக் குஞ்சாக என் நினைவுகள். என் தூக்கம் மலையிலிருந்து குதித்துச் செத்துக்கிடக்கிறது. கனவுகளை பாம்புகள் தின்ன சுவாசிக்கும் மனிதனாக மட்டும் நான் இருக்கிறேன். இந்த நசிந்த உலகத்தில் நான் ஒருவனாக இருப்பதால்.
என் உலகமே! உனக்கு சூடு சொரணை வராதா ? சூரியன், சந்திரன், காற்று, நீர் அத்தனைக்கும் எத்தனை ஒழுங்கு பார்த்தாய். அதனால்தான் இன்னும் இந்த உலகம் மூச்சுவிடுகிறது. இவை ஒழுங்கு தப்புவதற்கு முன் பூனை கக்கிய உங்கள் இதயங்களைக் கழுவி சுருண்டு படுத்து படமெடுக்கும் பாம்பு மனசை எச்சிலாகத் துப்புங்கள்.
வண்ணத்துப் பூச்சிகளை உங்கள் இதயங்களில் மேயவிடுங்கள். மேகத்தோடு பேசி, வெள்ளிகளோடு விளையாடி சந்திரைனக் கொஞ்சி தென்றலில் நீந்தி மலர்கள் மீது உறங்குங்கள்.
இரத்தக் கடலுக்குள் தூக்கிப் போட்டதால் செத்துக்கிடக்கும் இந்த உலகம் மீண்டும் சவாசிக்கிறதா என்று பார்க்க ?
ஒருத்தி
போதும் உன் சிரிப்பு. பாராங்கல்லை தலையில் போட்டு ஒரு மழலையின் சிரிப்பாகக் கழிந்த வாய். மல்லிகை மொட்டுக்கு ஒப்பானதாய் விரியும் உன் சிரிப்பை இதோ பாடசாலை சுவர் மறைவில் போடு. தங்கு மடத்திற்கு மேல் ஏற்றி வை. பயணி அழுவான். உன் கொண்டைக்கிளாத்தான் கொண்டையில் விழுந்து.
வரும் பேரூந்தும் தவறிப் போகும். கையைக் காட்டு. என்னை விடு. என்னிதயத்தை விடு. என் கண்களை விடு. பின்னாலே வரும் நவிந்த துருப்பிடித்த வேனில் ஏறுகிறேன். நெருங்கி நொருங்கிப் போவது காதலைப் போல எனக்குப் பிடிக்காது.
உன் சிரிப்பைப் போல எனக்கானவை எல்லாமே தவறிப் போவதைப் போல ஒரு வண்ணத்துப் பூச்சியின் இறக்கை. ஒரு தும்பியின் வால். ஒரு மாலை வெயில். தவறிப் போகுமிடத்து என் வேகநடையைக் காட்டுவேன். குதிரைக்கு ஒத்ததாய் ஓடுவேன். எருமையில் ஏறுவேன். உன் சிரிப்பைக் குறைக்கப்பார். என்காதலியைப் போல.
சூரியனின் இளமை நரையாகி
சூரியனின் இளமை எனக்குப் பிடித்தது. என்மடிக்குள் விழுந்து முச்சுவிடும். மனிதனைக் கொய்து புதைக்கத் தெரியாத அரசியல்வாதி. பட்டவன் கையிலெல்லாம் அரிவாள் இப்போது.
பூக்கல்லின் வழியாக முதற் கதிரைப் பாய்ச்சுவது எனக்குத்தான். சூரியனின் ஒரு கதிர் எப்போதும் எனக்கு உரித்து. என் கதிரையில் அமர்ந்து ஆறுதல்படுத்திய நாட்களுக்கு எப்போதும் முட்கள் விதைத்ததில்லை.
சூரியன் கவலை கொள்வான். மேசைப் பேச்சுக்களின் நாற்காலி சுழன்று முடிவதில் ஒரு மலரின் வாடலில் வேதனை தெரியும். மலர்களெல்லாம் மலர்வதும் உதிர்வதும் மிஞ்சுமோ ?
மாலையையும் காலையையும் அழகுபடுத்தும். அதன் தூரிகை என்னு}ர் வாசலில் கீறும் கிளையிடையே விழும் கதிரின் லயிப்பில் வேம்பு சிரிப்பதும் தென்னையின் குருத்தில் தாலிகட்டிப் புணர்வதும் நான் ரசிப்பவை. ஒரு மிரளயம் தொடரும் வரை.
சூரியன் பிரசவித்த மழைக் குழந்தையின் சிறு நீரில் நான் குளித்து விளையாடிய காலம்…. பல அரசியல்வாதிகள் மேகத்தையம் வானத்தையும் என் சூரிய நண்பனின் முகவரிக்கு விண்ணப்பித்து.
ஒரு கதிரின் பெறுமதியை நான் காலை எழும்போது உணர்வேன். ஒரு துப்பாகியின் சத்தமோ ஒரு வதந்தியின் மொழியோ என்னை அடையாத வரை…. பெருவிரல் அடையாளத்தையாவது இட்டு மேசைப்பேச்சுக்கு சூரியனை அழையுங்கள். அவன் போடும் வெளிச்சத்துக்கு.
மாலையில் கதிரவன் கோடியில் நழுவி கிளரும் பொன் வயல் வானத்தை. வரும் என்று, வரும் என்று, கேடியில் மனம் வெதும்பி கறிவேம்புக் கன்றுகளும், பப்பாசி மரம் ஒன்றும். கதிரவன் கதிரில் கூதல் காயவோ ? இல்லை.
நாளை விடியுமா ? வேர்விட்ட யுத்தத்தை நற்செய்தியாக்கி.
நானாக என்ன செய்ய ? முற்றமும் கோடியும், கோடியும் முற்றமும். என் நாட்கள் ஊர்கின்றன. கதிரவன் கதிரோடு.
குறுக்குக் கோழிக்கு கூந்தலைக் கட்டி விரட்டவும் பயமாக, பயமாக… என் வெளி உலகம் குடியிருக்கும் என் வளவாய் சுருங்கி… சுருங்கி…. நான் இருக்கின்றேன். கிணற்றுத் தும்பியாக படியிறங்கி. என் வளவுப் பாசியில் தங்குகிறேன்.
நாளை விடியுமா ? வேர் விட்ட யுத்தத்தை நற் செய்தியாக்கி.
மரங்கொத்தி வரலாம் இனி
தென்னையைப் போல வெறும் ஈக்குக்குடல்… இவனிலிருந்து வராது. இதயம், ஈரல், குடலோடு சேர்ந்த உறுப்புக்கள் உன் சொண்டில் வரும். நரம்புகளும் அதில் சிக்கும்.
உலாவப் பிறந்தவன் மனிதன். தென்றலை உடலுக்குக் குடில் கட்டிக் கொடுப்பவன். இயற்கையை கண்ணுக்கு விருந்தாளியாய் அழைப்பவன். ஆயினும் இவன் ஓரிடத்தில் நின்று வளரும் மரம் போல நகராமல் அடியைப் பதிக்கவும் அஞ்சிக்கிடக்கின்றான். தன் கிராமத்து வேரை இறுகப்பிடித்தபடி.
கடல் சார்ந்த இடம். வயல் சார்ந்த இடம் அலுப்பூட்டிக் கிடக்கிறது.
மொத்தத்தில் இவன் ஜடம். மரங்கொத்திக் குருவியே நீ வரலாம். கண்ணிகள் இவனில் புதைக்கப்படவில்லை. தென்னையைக் கொத்திக் காயப்படுத்தி அதன் உடம்பில் ஓவியம் வரைந்து “போர்” ஒன்றைச் செய்து இல்லறம் நடத்தியது போதும் குருவி….
மரங்கொத்திக் குருவியே நீ வரலாம். நம்பி. துப்பாக்கி உன்னை நோக்கி இல்லை. இவன் உடம்பில் வந்து தங்கு. தோளில் நின்று எச்சில் அடி.. ஒரு “போரை” வடிவமைக்க இவன் நெஞ்சிலோ முதுகிலோ நின்ற கொத்து. மரமான இம் மனிதனின்.
தேர்தலில் குதியாத வேட்பாளனாக
நான் தேர்தலில் குதியாத வேட்பாளன். என் காடு தீப்பிடித்த போது என் வானம் அழுது அணை உடைத்தது. கறுப்பு நிலவுக்குள்.
என் மூச்சு சுழலும் காற்றையே சுவாசிக்க என் கிடுகுகள், என் தகரங்கள் சிறகோடு கிளம்பின.
ஏன் கார் புழுதியை கொளித்து சேற்றை விசிறி உழுத தெருவில் நான் தோற்றுப் போனதில்லை. என் வாக்குகள் செதுக்கப்பட்டு நடப்படுகின்றன. சந்தி மகிழந்;தது.
வாக்காளன் ஒரு வரம்பினுள் துப்பிய நீராக பாய்கிறான். தந்திரம் பற்றிய பாடலை அவனுக்கு நரி கற்றுக்கொடுத்தது. இரவுகள் குமிக்கப்பட்டு.
சக்கர தேசத்திற்குள் எவனும் நிமிர்ந்திட இயலா. ஆகாயம் தட்டும் தலையில். உருட்டிடும் குண்டுமணியாக என் நனவுகள் ஒரு தடைக்குள் விழிக்கின்றன.
பச்சைக்குள் பிடித்த புழுக்களையும் நீலத்தில் படிந்த கறைகளையும் சொண்டுகளால் பருகிக் கழிக்க தேர்தலில் குதியாத வேட்பாளனாக.
அமைதியை ஒரு படுகுழி மரணமாய் பேச கற்பனையிலேயும் எனக்குள் ஒரு அமைதி தேசத்தை உருவாக்க ஏந்த அடையாள அட்டையும் தேவையில்லை எனக்கு.
சாத்தியம்தான் இவையனைத்துங்கூட விடைபெறும்போது வெளியிடும் ஆழ்ந்த பெருமூச்சு சுமந்த கனத்த மவுனத்தை மொழிபெயர்க்க திரிந்தலைகிறேன் உலக மொழிகளின் காடுகளுள். —- anbaadhavan1963@gmail.com
This entry is part [part not set] of 46 in the series 20060331_Issue
எச்.முஜீப் ரஹ்மான்
ஷஃபாஅத்(பரிந்துரை)
என்வீட்டு நாலுகெட்டில் மூலையில் பதுங்கியிருக்கும் அந்த கருமை பலதலைமுறைகளாக சிறுவனாய் இருந்த போதும் இப்போதும் அது பற்றியே யோசனை சில சமயம் எல்லோாரையும் பற்றிப்பிடிக்கும் சினேகமிழந்து ஆக்ரோஷம் கொண்டு வெறியுடன் சண்டைபிடிக்க தோன்றச் செய்யும் கருமை பிடித்தவரை யாரும் விரும்புவதில்லை என் ஒரு தவத்தில் வாசியடக்கி உரூ ஜெபித்து நிசக்ருமணி ஓமெனச் சொல்லி மண்டலத்திலிருந்து நீரை தெளித்தார். வாரியெழுந்து துள்ளிவிட்டு ஓட முயன்றது கருமை. அருளுமறிய மகாதற்பன மாபாவிகமென்று சீரிசைத்து சிறங்கை தண்ணீர் உண்ணு சாதாரத்தை கண்டபோது சாரி விட்டம் போடும் ஸ்தானம் பண்ணும் பறக்கும் புனல்கும்பம் பதித்திடு விதித்த விதியின் உள்ளிருந்து ஆடும் வித்தை தட்டுவிக்கும் உரைத்த இடம் தனக்காவும் நஞ்சு வாங்கி உபாயமிட்டு பெருவிரலில் தடவிக்கொண்டு போகுமிடமெல்லாம் வம் என்று டம் என்று பம்பம் என்று குரைத்துக்கொள் ஜந்துருவில் கருமை வீழும்
ஜிகாத்(யுத்தம்)
சவால் விட்டு சொல்கிறேன் கேள் முகமது திருவடிப் பற்றி முகையிதீன் திருவுளம் கொண்டுநின்று கருவறுக்கும் பூதகணங்களே கவனம் ஜின் வாரானப்பா ஏவல் கொண்டு றீம்-றீம்-சிம்-சிம்-றிங்-றிங் றாறா றாறா அம்அம் டும்டும் அரி அரி உச்சாடனமதை முன்னுரைத்தே ஜோதியொளியொன்று அக்கினி குண்டத்தில் வீறுகொண்டு நிற்கிறது மண்ணோடு மண்ணாக நசி நசி கும்பட் றாறா றாறா
This entry is part [part not set] of 42 in the series 20060324_Issue
சாரங்கா தயாநந்தன்
ரோமங்களின் கதை
என்மனத்தின் ஆசைகள் ரோமங்களாய்…. பிள்ளைப்பராயத்தில் அவை பொன்னிறமாய்த் துலங்கின. மனோரம்யமிக்க அவற்றின் மயிர்க்கால்கள் அன்னைமடித் தூக்கத்திலும் அன்றலர்ந்த மல்லிகை காவி குதி தொடும் கூந்தலிலும் இளந்தென்றல் வருடுமோர் இனிய பொழுதின் ஊஞ்சலிலும் ஆரம்பங் கொண்டிருந்தன. பருவ வயது தொடக்கமுற்றதும் இருள் விலகியிருக்காததுமான ஒரு அதிகாலைப் பொழுதில் எனது ‘பால் ‘ விலகிய தொடுகைக்கான பிடிப்பை உணர்ந்த போது கரிய நிற ரோமம் ஒன்றின் தோற்றத்தினை மனதோரங் கண்டேன் நான். ஆயினும்…. என் முதிர்கன்னிமையை வெறிச் சிரிப்போடு காலம் கடக்கின்ற இந் நிகழ் காலத்தின் ஒற்றை இறகான நேற்றில் அதிர்ந்தேன். பொன்னிற ரோமங்கள் எதுவும் அங்கில்லை. மனதின் உடல் முழுதும் விரவியிருந்தன கரிய நிற ரோமங்கள். ஒரு மிருகத்தினது போல….
குழந்தையின் அழுகை
அழுகையில் மனசு கரைகிறது. பூமுகம் குழம்பி விழிகள் சிவந்து தளம்பும் குழந்தையின் அழுகை கொஞ்சமும் சகிப்பிற்குரியதல்ல. கன்னங்களில் வழிகிற கண்ணிரின் கோடிடும் எத்தனிப்பை தன் புறங்கைத் தேய்ப்பில் தோற்கடிக்கிறது குழந்தை. கண்ணீரானது தேம்பியபடி பார்ப்போர் மனதில் ஒட்ட. பின்னர் அழுகைக்குச் சக்தியற்று அதை விசும்பலாக மாற்றுகிறது குழந்தை. விசும்பலின் களைப்பில் கேவலுக்குத் தாவுகிறது. சிறிது பொழுதிற்கப்பால் மெளனத்தை அழுகையின் சத்தக்குறைப்பாக அர்த்தங் கொண்டபடிக்கு மழை மந்தாரக் கவிவை பிஞ்சுமுகத்தில் தேக்கியபடி வெற்றுத் தரை பார்த்து உட்கார்ந்திருக்கிறது. இப்போதும் கூட ஊட்டம் மிக்க உணவுக் கோப்பையுடன் எட்டிப் பார்க்கிற தாயின் முகத்தில் உணவுண்ண விரும்பாத தன் பிடிவாதத்தை வீசியடிக்கிறது . —-
பெருகிவரும் நெரிசலில் அரிதாய் கிடைக்கும் தனிமையின் வரங்கள் இச்சைக்களைந்து மனதை மீட்டுத்தரும் சீறிய உரங்கள்
ஒலியின் அளவுகோளில் மென்மையின் பதங்களாய் நடுப்புள்ளித்தொட்டு நிற்கும் மொழியும் இசையும் மெளனத்தைப் பிரிந்து
தூர செல்ல செல்ல வன்மை பெருக்கியபடி நரம்புகளின் அயர்ச்சிக்கு வித்திட்ட வண்ணம் ஓங்கி நிற்கும் இரைச்சல் ஒலியின் எல்லைக்கோட்டில்- இயந்திரங்களின் தொடர் சப்த வடிவிலும் வாகனங்களின் இடையறாத ஓட்டத்தில்லும் கேளிக்கை பேரொலிகளிலும்,
மனதை மாசுறுத்திவரும் பெருநகர நாகரிகத்தின் உப விளைவுகளாய்
பெருகிவரும் நெரிசலில் அரிதாய் கிடைக்கும் தனிமையின் வரங்கள் இச்சைக்களைந்து மனதை மீட்டுத்தரும் சீறிய உரங்கள்
ஒலியின் அளவுகோளில் மென்மையின் பதங்களாய் நடுப்புள்ளித்தொட்டு நிற்கும் மொழியும் இசையும் மெளனத்தைப் பிரிந்து
தூர செல்ல செல்ல வன்மை பெருக்கியபடி நரம்புகளின் அயர்ச்சிக்கு வித்திட்ட வண்ணம் ஓங்கி நிற்கும் இரைச்சல் ஒலியின் எல்லைக்கோட்டில்- இயந்திரங்களின் தொடர் சப்த வடிவிலும் வாகனங்களின் இடையறாத ஓட்டத்தில்லும் கேளிக்கை பேரொலிகளிலும்,
மனதை மாசுறுத்திவரும் பெருநகர நாகரிகத்தின் உப விளைவுகளாய்
This entry is part [part not set] of 46 in the series 20060217_Issue
தேவமைந்தன்
அவன் அவள் அது – என்னும்….
வேதாந்தம் படித்தது போதும்
சித்தாந்தம் படி
என்றார் நண்பர். தத்துவ வித்தகர்.
நன்றாய்த் தேடினேன். கிடைத்தது.
சைவ சித்தாந்தக் களஞ்சியம்.
‘அவன் அவள் அதுவெனும்
அவைமூ வினைமையின்…. ‘
சூத்திரம் படித்தேன். மறுபடி. மறுபடி.
விளக்கமும் படித்தேன்.
மலைத்தேன்.
‘அவன் ‘ – சரி.., ‘அவள் ‘ – ம்..ம்.., அது எது ?
அறிவு மிக்கவர் பலரைக் கேட்டேன்.
சொற்களை அம்பாரமாகக் குவித்தனர்.
ஆகவே குழப்பமும் அதிகம் ஆனது.
எல்லோரை யும்தான் கேட்டோம்; இவனையும்
கேட்டே வைப்போம் என்றொரு சின்னஞ் சிறுவனை
அழைத்தேன். கேட்டேன்.
கேட்ட என் விழிகளை ஆழமாய் நோக்கினான்.
வினைக்கு எதிர்வினை மீண்டது போல
‘ம்..ம்.. ? தெரியாது தாத்தா..தெரியாது! ‘
ஓடினான், சிறுமியோடு விளையாட்டுத் தொடர.
ஒற்றைச்சொல்தான் ‘தெரியாது! ‘ –
தெரியாது இருப்பது அது.
ஒற்றைச் சொல்லைத் தவிர்ப்பதால் விளைவது
கற்றை கற்றைக் கூளமாய், விளக்கமே.
வெறுமை
வெறுமையை விரட்ட வழிகள் தேடினேன். வழிகளா இல்லை ? வந்தன வரிசையாய். கடற்கரை சென்றேன். கடலலை சுருண்டு தடபுட லாக வந்தே கரையைத் தழுவி நுரைவிரல் நுனிகளை நீட்டி நண்டு வளைகளை நெண்டிக் கிளப்பி எட்டும் வரை கைகளை நீட்டித் துழவி மீண்டும் பின்னே உள்ளுக் கிழுத்தது. திரும்பவும் மறுஅலை அதையே செய்தது. திரும்பத் திரும்பப் புதிய அலைகள் வந்து போயின. செய்ததே செய்தன. சித்தத் திரைக்குப் பின்னே இருந்து தலையை நீட்டிப் பார்த்தது வெறுமை. தப்பித் தோடவே திரும்பினேன். ஆகா! அரசு விளம்பரம். ‘அரிய நூல்கள். அரிய வாய்ப்பு! அந்தவூர் இந்தவூர் எங்கெங் கிருந்தும் அந்தப் பதிப்பகம் இந்தப் பதிப்பகம் அந்த மொழியில் இந்த மொழியில் இத்தனை இத்தனைத் தலைப்புகள் இவரவர் எழுதிய இந்தநூல் அந்தநூல்.. ‘ விடுவேனா ? நாடினேன். தெரிந்தவர் தேடி வணக்கம் பண்ணியும் தலையைச் சாய்த்து ‘விஷ் ‘ஷைச் செய்தும் அவரவர்க்கு ஏற்ப, காலே அரையே முக்காலே மூணுவீசம் பதவிக்கு ஏற்பவே புன்னகை வீசியும் நகர்ந்தேன். அவ்வப் பொழுது காட்சியில் பரப்பிய புத்தகம் பற்பல பார்த்தேன். அரைத்த மாவையே அரைத்தவை, அச்சில் அழகு பூண்டுஉள் அடக்கம் அற்றவை, கடைசி அட்டையில் கவனம் வைத்துநூல் ஆசான் புகழை அவரே சொன்னவை, தமிழைப் படித்த தகுதியால் அவரவர் விரும்பிய வண்ணம் வகுத்த திருக்குறள் உரைகள், சிரிப்பு வரவே கூடாதெனக் கங்கணம் கட்டி அங்கங் கிருந்து ‘அடித்த ‘ ‘ஜோக் ‘குகள் நிரம்பிய ‘சொதசொத ‘ ‘புக் ‘குகள், ஜாதகம் சமையல் வாஸ்து பெங்சூயி எண்ணியல் பெயரியல் மணியியல்.. எண்ணவே இயலா அத்தனை ‘டைட்டில் ‘கள். ‘எத்தைத் தின்றால் பித்தம் தீரும் ? ‘ என்பது போல எதைவாங் குவது எதைத்தான் படிப்பது ? குழப்பம். சித்தத் திரைக்குப் பின்னே இருந்து தலையை மட்டும் அல்ல; உடம்பையே வெளியில் கொண்டு வந்து ‘பப்ப ரப்ப ‘ எனக் கால்களைப் பரப்பி, ‘இப்போ தென்ன செய்வாய் மானுடா ?! ‘ என்றது வெறுமை. என்னதான் செய்வேன்.. ‘வெடுக் ‘கெனக் கால்களில் விழுந்து,தாள் பணிந்தேன். சிரித்தது. பரிவாய்ப் பார்த்தது. சொன்னது. ‘நானே மையம். என்னைத் தவிர்க்க உனது முன்னோர் பாடுகள் பட்டதால், காணும் சிற்பம் கேட்கும் இசைகள் பூணும் புதுப்புதுப் புனைவுகள் அறிவியல் வசதிகள் எல்லாம் வந்தன. என்னைத் தவிர்க்க விரும்பினால் போன போக்கில் போகும் போக்கை விடுத்து ஆக்க வழிக்குத் திரும்பு! ‘ என்றது. ‘கற்பனை அடா,இது! ‘ என்கின் றீர்களா ? என்னதான் செய்வது! இருக்கலாம். ஆனால் ஒன்றும் அடாத கற்பனை அல்லவே ? **** karuppannan.pasupathy@gmail.com
This entry is part [part not set] of 45 in the series 20060120_Issue
கி சீராளன்
(1) எனக்கான அரிசியில் என்பெயரெழுது இறைவா பசிக்கிறது. (2) ஏழையென்றும் அடிமையென்றும் எவனுமில்லை நாட்டினில் – பாரதி நீ சொன்னசொல் பலித்ததில்லை என்றுமிந்த பூமியில் செல்வந்தன் ஒப்பவில்லை ஒருநாளும் உன்மொழி. காசின்றி கப்பல்கள் ஓடவில்லை விண்முட்டும் மாளிகை கட்டவில்லை சொகுசு காாாார்கள் மாயமில்லை மந்திரத்தில் மாங்காய் விளைவதூமிலை. கொள்ளையடிக்கும் காசினில் இங்கே சொர்க்கத்தை காட்டுவம் வாரீர் இந்திர சுகமிங்கு தோற்கும் நட்சத்திர விடுதிகள் பாரீர் எளிமையென்றொரு சொல்லே ஏழ்மைக்கு மட்டும்தான் இங்கே. பகட்டு பீதாம்பரங்கள் தானே இந்தப் பாரினை ஆளுது காணீர் ஏழு தலைமுறையல்ல – சேர்ந்த ப ணம் ஏழுலகில் கொடி நாட்டும். மொட்டை வெயிலினில் வியர்த்து வெட்ட வெளியினில் கூடும் பஞ்சை பராரியை கேளும் தின்னும் ஓருருண்டை சோறு – அவர் தொண்டைக்கு மட்டுமே போறும். தத்தத்தரிகிட தித்தோம் தத்தத்தரிகிட தித்தோம் நித்தம் சோற்றுகிங்கே ததிங்கின தத்தோம் ஏழைகள் யாருமில்லை என்றீர் நாங்கள் எங்கே மாள்வது கேளீர் காசாய் தின்னுது ஒரு கூட்டம் அவர் கட்டையில போனாலும் வேண்டுமொரு கூட்டம். கடைவழிக்கு வாராது காண் வேதாந்தம் வெட்டிப் பேச்சோடு போயாச்சு உள்ளவரை தூற்றிக்கொள் நியதியாச்சு பிறந்தபின் சாவதற்குள் மிச்சம் எதுவென்றால் அஃதிங்கே வாழ்ந்த சுகமென்றே சொல்லிடுவார் நாங்கள் வாழ்ந்தே சாகின்றோம் என் றவரே மற்றவர் குருதி மஞ்சள் குளிக்கின்றார். காலம் காலமாய் சேர்த்தாச்சு அவன் பிள்ளைக்கும் சேர்த்து வச்சாச்சு என்பிள்ளைக்கும் சேர்த்து வச்சேனே ஒரு திருவோடு மட்டும் அவன் சொத்தாச்சு. பாரதி உன்சொல் உண்மையில்லை ஏழையென்றோரும் ஒழியவில்லை செல்வ ஏறியவன் உன்சொ ல் கேட்பதில்லை. கி. சீராளன் punnagaithozhan@yahoo.com
எண் சாண் வயிறு ஏட்டுக் கல்வி எட்டு முழ வேட்டி எட்டடி நிலம் போதாதா வாழ்வதற்கு….
ஆதிகாலம் போல, கதிரவனைக் கை தொழுதால், பொதுவாகப் போய்விடும்! புண்ணிய பூமியில் பிரச்சனை எழாது.
உலகத்தின் வரைபடத்தில் எல்லைக் கோடுகளை எடுத்து விட்டால்…. ஓருலகமாய் வாழ்ந்திடுவோம்….
நம்பிக்கை இருக்கிறது….
இதுவும் கடந்து போகும் புதியதோர் உலகம் இவ்வுலகம் காணும்.
யுத்தம்
வெறிக்கைகளால் பலரது ரத்த துளிகளை தெறிக்கச் செய்து பல பெண்களின் நெற்றிப் பொட்டுகளை இழக்கச் செய்து தான் பொட்டிட்டுக் கொண்டது யுத்தம்!!
எழுதக் கூடாத வாழ்க்கையை எம் பெண்களுக்கு எழுதி விட்டு, ஏடுகளில் எழுத்தாகிப்போனது.
அப்போதெல்லாம் இயற்கை சொல்லாமல் செய்த நாசத்தை இப்போதோ யுத்தம் சொல்லி விட்டு செய்கிறது.
மனிதர்களின் மன்னிக்கும் மனதை மடக்கிப் போட்டுக் கொண்டு மாசு படுத்திச் செல்கிறது.
மனிதன் யுத்தத்தில் வென்றது போய், இப்போது யுத்தமில்லா உலகை யுக்தியுடன் வெல்ல யக்ஞும் செய்ய வேண்டும்!
போதும் யுத்தத்திற்குக் கூழைக் கும்பிடு இட்டது. யுத்தத்தைக் காலால் எட்டி உதைக்கும் காலம் வந்து விட்டது.
யுத்தமே! மனித யுத்தத்திற்கு சித்தமாயிரு! மனிதன் விழித்து விட்டான்.
எனக்கு கொஞ்சம் சோகம் வேண்டும்
சோகத்திலும் ஒருசுகம் உண்டு.
மனதில் மெல்லிய ராகம் இசைக்க வாழ்வில் சோகமும் சுகமுமாக…. மனிதர்கள் நடுவில்.. ..சுவை உண்டு. பிரச்னைகள் வரும் போது ஓடிய கால் நின்று ஓரு நிலையாய் மனம் குவிந்து சீராகும். இது நாள் தேடிய நண்பனும் எதிரியும் தெளிவாகும்.
நேர்க் கோட்டில் போகும் நிர்ணயித்த வாழ்க்கையை நிிறுத்தி வைக்கும் கடிவாளக் குதிரை கண்ணை சுழற்றி பார்க்கும். இறந்த, நிகழ், எதிர் காலங்கள் அலசப்படும்.
பிரச்னைகளே இல்லாத போது பயம் வரும்- பெரிதாய் என்ன வருமோ என்று.
தினசரி உணவு செரிப்பதற்கு விரதம் தினசரி நடைமுறை சரிபடுத்த சோகம்.
நிழலைப் போல சோகம்- நம்மோடு இழைந்தே இருக்கும்.
இரவுக்கு பின் பகலாய் சோகத்திற்கு பின் சுகத்தை மனம் எதிர்நோக்கும். குளிா; கால வெயிலாய் அவ்வபோது தேவை சோகம் வாழ்க்கையில்.
புயலுக்கு பின் அமைதியாய் சோகத்திற்கு பின் மனம் நிதானம் காக்கும். அலசிஆராய்ந்து முடிவெடுக்கும். பழைய சோகம் நினைத்து பார்த்து பரிதவிக்கும். அனுபவத்தில் பாடம் கற்கும். திரும்ப தவறு நேராமல் தடுக்கும். கர்வம் கொண்ட போதெல்லாம் இறந்த கால கஷ்டம் மறக்காமல் நினைவு வரும். யதார்த்தம் தரும்.
வாழ்க்கையை உணர்த்தும் இந்த சோகம் எனக்கு பிடிக்கும். நிதானம் உணர்த்தும் இந்த சோகம் எனக்கு வேண்டும்-அவ்வப்போது என்னை உணர்த்த…
ஆயிரம் முகம் உடையாள்..
மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்துள்ளோம்!! முந்தைய மாதர்களை முந்தி வருகிறோம்!!
பள்ளிப்படிப்புக்கு புள்ளி வைத்தது பழைய கதையாயிற்று.
பெண்ணைப் பெற்றால் பாரமாய் எண்ணியது மண் மூடிப்போயாச்சு.
புத்திசாலி பெறுவாளாம் தலைச்சனை பெண்ணாய். நிஜம் தான்! அலுவலகத்தில் அன்னை ஆழ்ந்து பணியாற்ற அன்னையாயிருந்து உடன் பிறந்தவர்களை கவனிக்கிறாளே!!
பத்து வயதில் பையன்கள் பந்து விளையாட கண்மணிகளோ கணிணியில் கலக்குகிறார்கள்..
பூப்பெய்தும் போதே பூ விழியாள் குறிக்கோளை குறித்துக்கொள்கிறாள்!! டாக்டரையா பொறியாளரையா ? எவரைத்திருமணம் செய்வதென்பதல்ல.
கோலமும் ஜாலமும் பயின்றது போதும் சிலம்பும் கராத்தேவும் பயிற்றுக் கொடு!
உனக்கில் இருக்கும் ஆண்மையை வெளியில் அரங்கேற்று.
உன்னால் எதுவும் முடியுமென உன் திறனை எதிலும் பங்கேற்று.
கண்ணுக்கு மை எழுதி மயங்கச் செய்தது போதும். இனி- கண்ணுக்கு தீ எழுதி தீவிரமாக்கு.
நாணல்களாய் வாழ
கிணற்றுத் தவளைக் கூட்டம் காதல் மணம் புரிந்தவரை மயக்கத்தில் முடிவெடுத்ததாய் உளறுகிறது.
தனக்குத் தானே விலை பேசிக் கொண்ட பேதைகள்- இவர்கள் பேத்தித் திரிவதை பெரிது படுத்தாதீர்கள்;
இருவர் நல்ல தனத்தையும் முலதனமாகக் கொண்டு நாணல்களாய் வாழுங்கள்.
உள்ளங்கள் கொள்ளையில் உலகப் பட எல்லைகள் உருவம் இல்லாது போகட்டும்.
அன்புப் போரில் அகிலப் போர் காணாமல் போகட்டும்.
ஜாதி மத இன நிற மனித பேதம் மறைந்து மாக்களாய் இல்லாது மக்களாய் வாழ்ந்திட.
ஆதலினால் காதல் செய்யுங்கள் உலகத்தீரே!!
உயிருடன் இருப்பது இல்லை வாழ்க்கை. உயிர்ப்பாய் இருப்பதே வாழ்க்கை.!!
ஆதலினால் காதல் செய்யுங்கள் உலகத்தீரே!!
யாதுமாகி நின்றாய் நீ!!
நான் நானாகவேயிருந்த போது நானாய் மட்டுமிருந்த போது நாட்களும் நட்புகளும் முட்களாய் உறுத்தியது. நர்ட்காட்டி நத்தையாய் நகர்ந்தது. வருங்காலம் என்ன வைத்துள்ளது ? நெடுங்காலத்துக் கேள்வி.
This entry is part [part not set] of 59 in the series 20050318_Issue
கவிநயா
பாறை
பாறை பேசாதிருக்கிறது…
கட்டிப் பிடித்துக் கொண்டாடும் போதும் முத்த மிட்டுக் கூத்தாடும் போதும் கோபம் கொண்டு குமுறும் போதும் கண்ணீர் விட்டுக் கதறும் போதும் போற்றிப் பாடித் துதிக்கும் போதும் தூற்றித் தூக்கி எறியும் போதும் முட்டி இரத்தம் கசியும் போதும் வலியே வாழ்வாய் ஆகும் போதும்…
அசையாதிருக்கிறது, பாறை…
நிலவும், நானும்
உன்னைப் போல் எனக்கு உலகெங்கும் ரசிகரில்லை உன்னைப் போல் என்னை புலவரெல்லாம் பாடவில்லை உன்னைப் போல் நானோ பார்புகழும் சாட்சியில்லை உன்னைப் போல் அழகில் முடிசூடா ராணியில்லை ஆயினும் உன்னைப் போல்தான் நானும்… முடிவில்லா வெளியினில் தனியளாய்…
மலர் சேரும் வண்டிற்கு மணிநா முடித்த மாண்புண்டு! மான் பிணை கொண்டதென்று மருவி நின்ற பெண்ணுண்டு!
நாரையே சாட்சி என்று நவின்ற ஒரு நங்கை உண்டு! அறத்தோடு நிற்றலென்ற அற்றை நாள் மாண்புண்டு!
மரத்தை மூத்தாள் என்று மன்னவனை மறுத்தாள் உண்டு! சங்கத்தை சாட்சிக்கிழுக்கும் சடமே! நீ தெளிவாய் கண்டு!
பண்பு கெட்ட உன்னிடம் – நான் பண்பாட்டைக் கேட்கவில்லை! உனைப் படிக்கும் வெளிநாட்டார் உரைப்பரே! எம் பெண்டிரையும் கேவலமாய்!!
உன்னிடத்தில் ஒன்று சொல்வேன்! அதை உன்னவர்க்கும் உரைக்க மறவாதே! ‘எழுத்தில் பரத்தமை ‘ – அதை இனிமேலும் தொடராதே!
பறவை தொலைத்த கூடு
தேடிக் கொண்டதில்லை – உற்றார் தேடித் தந்த உறவு! ஆலாய் நான் தழைக்க – ஆணி வேராய் உந்தன் வரவு! இன்றும் என் நினைவில்… கதவிடுக்கில் நீ நின்றதும், கை மட்டும் தண்ணீர் தந்ததும்! என் ஒவ்வொரு அசைவிலும் அர்த்தம் உணர்வாய் நீ! உன் பனிப் பார்வையில் பக்குவம் அடைவேன் நான்! சொல்லிப் புரிந்ததைவிட சொல்லாமல் தெளிந்தது ஏராளம்… நமக்குள்! அதட்டியும் அடிபணிய வைப்பேன் உன்னை… தலைகுனிந்து மவுனமாய் நிற்பாய், என் அதட்டலுக்கும்…அவ்வப்போது வெளிக்காட்டும் அன்பிற்கும்! ஆசை முளைக்கையில் அரும்பிய காதல், மீசை நரைக்கையில் முழுமை கொண்டதோ ?! கலவி தீர்ந்த நாளில் தான் – உண்மை காதலை நாம் கண்டுகொண்டோம்! கருத்தினில் ஒன்றாய் கலந்து நின்றோம்! எழுபதைத் தாண்டிய இன்றும்கூட.. மொழிபெயர்க்கத் தெரியவில்லை, உன் மவுனத்தையும் என் காதலையும்! நான் இல்லாத ‘நீ ‘ க்கு நாளும் வகுப்பெடுத்தேன்! ‘நீ ‘ இல்லாத ‘நானை ‘ எண்ணவும் நான் மறந்தேன்! இதோ, என் முன்னே கூடிழந்த பறவையாய் நீ! உன் முன்னே பறவையைத் தொலைத்த கூடாய் நான்! மணக்கோலத்தில் மணவறை ஓரத்தில் மெட்டி மாட்ட என் விரல் நீள ‘வெடுக் ‘கென்று காலை இழுத்துக் கொண்ட உன் வெட்கம்…. நேற்று வரை உன்னோடு! வெறும் நினைவு மட்டும் இன்று என்னோடு! நீரில் மூழ்குபவனுக்குத்தான் தெரியும், உயிரைவிட கோவணத்தின் அருமை! மானம் காத்தவள் நீ! – இன்று மண்ணிற்குத் துணையாய்… விண்ணிற்கு உறவாய்… ‘என் முன் வாய் திறக்க மாட்டாள் ‘ மார் நிமிர்த்திச் சொன்னதுண்டு! மவுனம் மரணத்தின் கொடிது…. மண்டியிடுகிறேன் இன்று! தடியூன்றி நான் வந்தால் – தினமும் கையூன்றி எழுந்து நிற்கும் நீ… உன் கால் பிடித்துக் கலங்கும்போதும் காணாத உறக்கத்தில்…! கலையாத மவுனத்தில்…! உன்னோடு வாழ்ந்ததெல்லாம் – உன் நினைவோடு வாழ்வதா! ? – இல்லை மண்ணோடு புதைந்து உன்னோடு கலப்பதா ?! – அருகே விண்மீனாய்ிி முளைப்பதா ?! கண்மூடிப் பார்க்கிறேன்…. உள்மனத்தின் உள்ளே, உணர்வாய்… என் உயிராய் நீ! கண்திறந்து பார்க்கிறேன்…. சன்னலுக்கு வெளியே என் வானமாய்… காணும் வண்ணமாய் நீ!
This entry is part [part not set] of 59 in the series 20050318_Issue
ஏக்நாத்
சாமிகள் ….
வாயைக்கட்டிய சாமிக்கு மீண்டும் ஆங்காரம் வர கும்பாபிே ?கம் நடத்தணுமாம். தலைக்கட்டுக்கு ஆயிரம் வரியென விதித்ததில் வாயைக்கட்ட ஆரம்பித்தேன் நான். …. எல்லா பெண்களுக்கும் குங்குமம் வைக்க சாமியாடிகளால் மட்டுமே முடிகிறது. …. வேட்டைக்குப்போன மந்திரமூர்த்தியடித்து செத்துப்போனாள் சொல்லமாடனுக்கு ஆடும் வயித்து பாப்பாவின் மனைவி. …. ‘எனக்கு வல்லயம் செஞ்சு போடுவியா ? ‘ ‘திருநாத்துக் கொப்பறை எடுத்து வைப்பியா ? ‘ பட்றையனை கும்பிடும்போதெல்லாம் கேட்கிறார் Aாமிக் கொண்டாடி. கோரிக்கை வைக்க போனவன் கோரிக்கை எற்று திரும்புகிறேன். …. பூதத்தாருக்குச் சங்கிலி. மந்திரமூர்த்திக்கு குத்தீட்டி. பலவேசக்காரனுக்கு வீச்சருவா. கருப்பசாமிக்கு கோங்கருவா பட்றையனுக்கு வல்லயம் ஆயுதங்கள் எல்லாம் சாமிகள் கையில் பலிகளை மட்டும் மனிதர்களே பார்த்துக்கொள்கிறார்கள். …. அருள் வந்து எல்லோருக்கும் குறி சொல்லும் அம்மா எனக்கோ அக்காவுக்கோ சொன்னதேயில்லை. …. பூடம் தெரியாமலேயே சாமி ஆடினான் புதிதாக அருள் வந்த அரைக்கொடியான் மகன். …. ஒவ்வொரு கொடைக்கும் ஆடுவதற்கு ஆளின்றி அமைதியாகவே இருக்கிறார் உள்ளிவிளை சாமி. …. பிணமெரியாத சுடுக்காட்டுக்கு வேட்டைக்குப் போகும் பெரிய சாமி கொண்டுவரும் எலும்புத்துண்டு யாருடையது ? …. egnath_raj@sifycorp.com egnath_raj@sify.com
This entry is part [part not set] of 48 in the series 20050127_Issue
இளைய அப்துல்லாஹ்
ஆத்மார்த்தம்
—- அவன் தர முடியாத எல்லாவற்றையும் நீ தருகின்றாய் உள்உரமாக உன்னிலும் மேலானதை என் மீதான அக்கறை பற்றிய நெடும் நினைவுகளில் நான் திளைக்கும்படிஸ
என் எல்லா உணர்வுகளின் நேரங்கள் பவித்திரமானவை அவை அவனுக்கானவை ஆனால் உன்னிடம் தான் இருக்கின்றன.
என் ஆகர்ஷிப்பை நீ சுவாசமாக்கியதனால் என்னுள் நீ பஸ்ப்பமானாய் உன்னை என்னுள் புகுத்தி அல்லது பத்திரப்படுத்தி எனக்குள்ளாகவே இருத்திக்கொள்வேன்.
எக்காலத்திலும் அவன் உன்னாக ஆக முடியாது நெடுங்காலமான சிறுமைகளை விட உன் நொடிப்பொழுதும் திருப்தியும் என்னோடு ஸ்பரிசிக்கும்.
எனது சுய சிந்தனையின் தெளிவிலும் விகர்ஷிப்பிலும் உன்னுள் என்னை செலுத்துவதை விரும்புகிறேன்.
அது உயிரில் உயிர் மீதான ஒருவகை கேளிக்கை.
நான் எப்பொழுதும் நானாக இருந்தபடிக்கு உன் நேசங்களை எல்லாப்பொழுதிலும் சுதந்திரமாக உணர்வேன்.
ஏனெனில் நான் சுதந்திரமானவள்.
அது —- அந்த உற்பவிப்பு எல்லோருக்கும் வாய்க்காதது. ஒரு முகிழ்த்தல் போலத்தான். முகிழ்த்தல் என்பது எவ்வளவு அற்புதம.;
பூக்கள்,விதைகள்,குழந்தை,மனம்,என்றபடிக்கு முகிழ்த்தல் அகலும். ஒரு மெனளத்துள்; ஆழ்வதும் அதனை ஸ்பரிஸிப்பதும் ஒரு முகிழ்த்தல்தான்
ஒரு சூழலுக்கு இயைவதும் சூழல் எமக்குள் புகுவதும் இன்பம் மென்புல் வெளியில் மெதுவாய் இறகசைத்து சிறு குருவி நுழைவதும் மென்மை
மனத்திடை சில நேரம் உதிர்த்தும் மென் இழைகள்,நெகிழ்வுகள்,மெல்லியகாதல், ஒரு பச்சாதாபம் எல்லாமே அற்புதம் நிகழ்த்தும் முகிழ்த்தல்கள்.
எரியும் தீயிடை ஊன் உருகுவதுமாகி எந்த ஒப்பனையுமற்றதும் எதிர்கால அச்சமின்மை பற்றிய உறுதியும் உள் மனதில் அது பற்றிய ரீங்காரமும் எப்பொழுதும் ஒரு வகை உச்சாய்ப்பில் கிளர்வதும்
This entry is part [part not set] of 47 in the series 20050120_Issue
இளைய அப்துல்லாஹ்
அவன்
அந்தி கரையாப்பொழுதுகளில் அவளோடுறைந்திருந்து விட்டு அப்படி ஆகுமென்றென நான் நினைத்திருக்கவில்லை
அழகிய வானத்தையும் இளம் தெனறலை விடவும் அவள் அணைப்பும் அவள் அருகும் அழகாகவே இருந்தன் இருந்தாள். வெறிகொண்ட முத்தத்தால் இருவரும் நனைந்தழுதோம். இந்நிலை வருமெண்றெண்ணா கனவுகளில் புதைந்து..
அவள்
என்னுரிமைகளில் அவன் பங்கெடுத்தவனாகி விட்டான் அவனணைப்பினதும் அரையாடையின்றிய கட்டிலருகும் என்னை வெகுவாகவும் கவர்ந்ததில் வியப்பில்லை அவன் ஆண்மை அற்புதமானதுதான். என்னுடையவனாய் வரித்துக்கொண்டதனால் அவனுக்கு என்னைக் கொடுக்க முடிந்தது.
அவனை இப்பொழுதெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலை வருமென்றெண்ணா கனவுகளில் புதைந்து.. எனது எதனை அவன் கேட்கிறான் ?
அவனிழப்பறியாததும் நான் நானாகவும் இருப்பேன். என்னைப்புரிந்துகொள் ஒரு பெண்ணாக மட்டுமல்ல என்பதனையும்ஸ..
அவன்
சோராமல் நீண்டு கரையும் அவள் நினைவுகளும் அவளும் வேண்டுமெனக்கு.. அவள் யாரென்றறியா முன்னரை விடவும் எனக்கு பிடித்தமாகி விட்டாள்.
(18.01.2005)
நான் வந்த பொழுது ..
மானுடனே! உன்னை நான் அங்கீகரித்த பொழுதுகளிளெல்லாம் எனே;னாடு அளவளாவினாய் என் மடியில் படுத்துறங்க உன்னை ஆண்டாண்டு அனுமதித்தேன்.
உன் லீலைகளையெல்லாம் என் மீது அரங்கேற்றினாய்.
மானுடனே! நான் உன்னிடம் வந்த பொழுது ஏன் என்னைஸ.
செல்வங்கள் கொடுத்து சீராட்டி வளர்த்தேனே உன் வாழ்வுக்காய் உன் விடியலுக்காய்
ஒரே ஒருமுறை தானே உன்னிடம் வந்தேன் ஊழிக்காலம் என்று ஏசி வைகின்றாயே
மானுடனே நான் உன்னிடம் கோபப் பட்டு நீ பார்க்கவில்லையல்லவா இன்றைத்தவிர இப்படி
குளித்து குதுாகலித்து குடும்பத்தோடு மகிழ்ந்திருந்து கொஞ்சி விளையாடிய நாட்களெல்லாம் மறந்து போய் ஒரே ஒரு முறை உன் வீட்டுக்கு வந்த என்னை வைது வாங்குகின்றாய்.
போகிறேன் என்னோடு கோபப்பட்டு என்ன முடியும் உன்னால் ? ஆனால் உனக்கு கோபம்; போகிறேன். நீ மீண்டும் என்னிடம் வருவாய் என்பது எனக்குத்தெரியும்.
உன் காலடி மண்ணைத்தொட்டுக்கும்பிடவே வந்தேன். இறந்து போய் விட்டாய்.
கோபக்கார மானுடனே! உன் கோபம் தணியும.;
மீண்டும் உன்னை வரவேற்கிறேன் உன் வருகை எனக்கு மகிழ்ச்சிதான்.
வாழ்வின் வனப்புகளையெல்லாம் என்னுள் வைத்திருக்கிறேன்.
வா என்னிடம் வருவாய் மீண்டும் ஒரு முறை நான் வரலாம் எத்தனை ஆண்டுகளாகுமோ!
அப்பொழுது என்னை வரவேற்பாயா என் ஆதங்கங்களோடு இப்படிக்கு கடல். 30.12.2004
பிடுங்கப்பட்ட மண்ணும் ஒரு கிழவியின் வேதனையும்
உம்மா உன் பார்வையின் ஏக்கம் எனக்குப் புரிகிறது! எழுத்தறியா உன் வேதனையை என் விளக்கங்களால் விளங்கிக் கொள்ள முடிகிறது. உன் பூநிலம் பிடுங்கப்பட்ட தரிசுபோல நீ சுருக்கமிழந்து அழுவது எனக்குக் கேட்கிறது! எந்த மண்ணும் ஒத்து வராது என்கிற உன் அஞ்சுதலை என்னால் ஆதரிக்க முடிகிறது..
அந்த வேப்பங்காற்றும் பனையோலைத் தென்றலும் நிழல் கிழுவையின் மணமும் கத்தாழை பரந்த வீதியும் உன் கிடுகு வீடும் என்றுமே நீ யாசித்தவை என்பது எனக்குத் தெரியும் தாயே!
உம்மா! நீ சிறு வயதோடு பிரயாசப்பட்ட மண் பலவந்தமாகப் பிடுங்கப்பட்டது உன்னைப் போல எனக்கும் அதிா;ச்சிதான் தாயே ? யாாிடம இதனைக் கேட்க செவிகளை மூடிவிட்ட தேவர்களோடு என்ன பேசி என்ன விளங்க ?
கரைந்தொழுகும் காலங்களில் உனக்கும் நம்பிக்கையில்லைத்தான் மூப்பும் நரையும் உன்னை இறப்புக்கு அழைக்க முன்னம் இந்தக் காதகச் சுமைகளால் அரசியல் பட்டவர்த்தனமற்ற ஒரு சுபீட்சத்தை நீ தேடுவது தெரிகிறது தாயே.
காதல் பற்றிய ஒரு விவாதம்
மானுட எல்லைகளைக் கடக்க முடியாது என்றா நினைக்கின்றாய் ? எல்லாமே உதிரிகளல்ல உன் சிந்தனை எனக்கு விளங்காமலா ? உறவுகளின் வீரியம் பற்றிய சிந்தனைகளில் நான் இன்னும் ஏமாறவுமில்லை தோற்றுப் போகவுமில்லை… எத்தனை காலங்கள்… இது ஒரு வித்தியாசமாகத்தான் இருக்கிறது அவளின் கடிதங்களை நானும் என் கடிதங்களை அவளும் சேகரிக்கத் தொடங்கிய காலம் அது இன்னும் அன்னியமாகிவிடப்போய்விடவில்லைதான்.. அவளுடைய கவிதைகளில் வீாியம் உண்டென்று சொல்லுவேன் என் கவிதைகளை அவள்.
கவிதைகள் அவளால் வீரியம் பெறுகிறதா என்றெல்லாம் தனிய சிந்திக்கவேண்டும் போலிருக்கிறது. ஒரு பொழுது ஆகி விடப்போவதில்லை அவளின் சிரி;ப்பொலி என் காதில் கேட்காமல்… அவளுக்கும் எனக்கும் ஒற்றுமை இருப்பதாய் அடிக்கடி சொல்லிக் கொள்வாள். சிலவேளைகளில் பேய்த்தனமாகவும் உரையாடுவாள்.
ஆனால் எல்லாவற்றையும் ரசித்துக் கொண்டிருக்கும் படியாய் நான் ஆக்கபப்பட்டிருக்கிறேன். ஆண்கள் அழுது காணவில்லையென்றும் அதைக் காண்பதற்கு ஆசையென்றும் சொன்னாள். இப்பொழுதெல்லாம் அடிக்கடி அவளுக்கு அழுதுகாட்டுகிறேன். ஒருமுறை தொலைபேசி செக்ஸ்பற்றி இருவரும் கதைத்தோம். காதல் பற்றி இப்பொழுதெல்லாம் ஒரு விவாதம் வருகிறது மனதில்…
This entry is part [part not set] of 55 in the series 20041111_Issue
விசிதா
உறை பனி வார்த்தைகள்
சொன்ன சொற்களில் சில உறைபனிக்குள் சிக்கி உறங்குகின்றன வேறு சில இலையுதிர்கால இலைகள் போல் உதிர்ந்து எங்கோ போயின மக்கின இன்னும் சில என் மனதிற்குள் நுழையவே இல்லை வழியிலே தொலைந்துவிட்டன ஆயினும் சில என்னுள் சூல் கொண்டுள்ளன வேறு சில நானறியாமல் என்னுள் நம் சொற்களாயின இரவுகளிலும் பகலிலும் துணையாயின
இவற்றில் எதுஎதுவென நீயறியாய் நான் சொன்னாலும்
மூன்று கடிகாரங்கள்
இதயத்தில் மூன்று கடிகாரங்கள் உன் காலத்தினை உணர்த்த ஒன்று என் காலத்தினை அறிய ஒன்று என்றோ வரக்கூடும் நம் காலத்திற்காக இன்னொன்று
தேடல்
நினைவுகள் போதாத போது குரலோ புகைப்படமோ வேறெதற்கோ இட்டுச் செல்லும் போது தேடுகிறேன் உன் உடலை நீயோ வேறொரு காலப்பிரதேசத்தில் தினம் உன் உறக்கத்தினைக் கலைக்கும் என் நெருப்பு மூச்சு உன்னது என்னதை கலைப்பது போல் —- wichitatamil@yahoo.com http://wichitatamil.blogspot.com
This entry is part [part not set] of 51 in the series 20041007_Issue
பாஷா
காத்திருப்பேன் காதலா
பாஷா
என்னைச்சுற்றி நீ விட்டுப்போன கேள்விகள் நீயில்லாத வெற்று நிமிடங்களை சுமந்துகொண்டு சூன்யவெளியில் அலைந்திருக்கும்!
கனவில் வந்து கன்னம் வருடிப்போகும் உன் உள்ளங்கை உரசலை இனி யாரிடம் சொல்வேன்!
மறுபிறவி நம்பியவளில்லை உன்னை மறுக்கும்வரை இன்று சொல்கிறேன் இந்த பிறவியுடன் இனியென் உடன் நீ வரும் பிறவிகள் ஏராளம்!
இனிஒரு பிறவியில் உன் மதத்தில் உன் குலத்தில் உன் பிரிவில் உன் முறையாக பிறக்கும் ஒரு நாளில் பிறந்த என் காதல் சொல்வேன் அதுவரை இறந்துகிடக்கட்டும் சொல்லப்படாத என் காதல் முற்றுபெறாத இந்த கவிதையுடன்!
மயானம்
பாஷா
அது ஒரு தனி உலகம் அலைபாயும் காற்றில் நிபந்தனைகளற்ற அன்பு தொட்டில்கட்டி ஆடுமிடம்! ஆரம்பத்தின் பிறப்பிடம் அந்த சாம்பல்மேடு அர்த்தநாரீஸ்வரன் ஆடும் காடு ஆணவம் தொலைப்பவர் வீடு!
திருவாசகம் பாடும் மாணிக்கவாசகர்களும் தெருகல்லென தூற்றும் நாத்திக நீசர்களும் நித்திரைகொள்ளுமிடம்!
குடுமிகொண்ட மண்டையோடும் குருதிதொலைத்த பிண்டமும் கணக்கில்லா உடல் எச்சங்களும் கூடிக்கிடக்கும் ஒரே குலமிலா உலகது!
காதலாய்,கண்ணீராய் அவமதிப்பாய்,அன்பாய் தெளிக்கப்படும் வார்த்தை கலைந்து ஆபாச நகர இரைச்சல்களுக்கிடையே அமைதி சொல்லும் மயான பூமியின் துருப்பிடித்த கதவு திறந்து விருப்பி வாருங்கள் தனியனாக ஒருமுறையேனும்!
This entry is part [part not set] of 61 in the series 20040805_Issue
இவா
என் செல்லத் தோழி சாய்த்து வைக்கப்பட்டிருக்கிறாள் அற்புதமாக அலங்கரிக்கப்பட்ட நாற்காலியில்… தாடையும் தலையும் சேர்த்து கட்டப்பட்டிருக்கிறது கண்கள் திறக்க முடியாதவாறு மூடப்பட்டிருக்கின்றன கைகள் நாற்காலியின் கைகளுடன் கட்டப்பட்டிருக்கின்றன குரலை வைத்து என்னை அடையாளம் கண்டுகொண்டாள் போல… அவள் விட்ட பெருமூச்சின் சூட்டில் காற்றில் அனல் பறக்கிறது.
—-
புதைந்து போன சொற்களின் அர்த்தங்களைத் தேடி புதைந்து கொண்டிருக்கிறேன் இதோ சிறிது தூரம் சிறிது தூரம் எனச் சொல்லி ஆழமாய்ப் புதைந்து கொண்டிருக்கிறேன் என்னைப் போலவே பலர் உயிர்ப்பும் உணர்வும் அற்ற ஒரு உருவம் நின்று கொண்டிருந்தது மெதுவாகச் சென்று உற்றுப்பார்க்கிறேன் திடாரென ஒரு அசைவு கொண்ட அது மெதுவாய்ப் புன்னகைத்து கட்டித்தழுவி நெற்றியில் முத்தமிட்டது அது உணர்வோடுதானிருந்தது கண்கள் மிளிரச்சொன்னது நாம்தான் அவைகளின் அர்த்தங்கள்
அவனா நான் என்ற என் இயல்பான குழப்பத்தில் நான்( ?) ,இயந்தரத்தின் உண்மையால், சரியாக வரையறுக்கப்பட்டு, அவன் நேரேயும், நான் மேலேயும் சென்றோம், இருந்தும், அவனா நான். —- klnarayan@yahoo.com
This entry is part [part not set] of 54 in the series 20040722_Issue
கோமதி நடராஜன்
பிறந்த பயன் —- அடுத்து அடுத்து வீசிப் பார்த்தோம் அடுக்கடுக்காய் அடித்துப் பார்த்தோம் ஏன் வந்தோம் எதற்கு வந்தோம் என்றே அறியாமல் பூமியின் விளிம்பைத் தொட்டுத் தொட்டு மறைந்தோம். பள்ளிச் சிறாரின் விரல் தொட்டு கலகலவென்று சிரிக்க வைப்போம் பல்லிழந்த மூத்தோர் பாதம் தொட்டு ஆசிபெற்று மகிழ்வோம். ஆழ்கடல் சாட்சியாகக் காதலிப்போர், ஆடையில் ஒட்டிய மணலைத் தட்டும் போதே காதலையும் தட்டி விட்டுச் செல்லும், காதலர்களென்று கண்டு வியப்போம். இதற்கு மட்டும்தானா நாங்கள் என்று, எண்ணியதுண்டு- இதற்கும் மேலாக ஏதுமுண்டா என்று ஏங்கியதுண்டு. இதைக் காணவா ஓயாமல் அடித்தோம் ? இதற்காகவா உறங்காமல் ஒலித்தோம் ? மக்கள் தண்இருக்காக வாடும் பொழுதும் தண்இர் தேடி திணறும் பொழுதும், உப்புக்கரித்து, ஊருக்கு உதவாமல், உருவெடுத்தோமே என்று அழுவோம் தவித்த வாய்க்குத் தண்இர் தராதவனென்று பேரெடுத்தோமே!என்று பதறுவோம். சிதம்பர ரகசியமாய் இருந்த எங்கள் ஆதங்கத்தைப் புரிந்து கொண்டார் ஒருவர். அவலத்தை அறிந்து கொண்டார் ஒருவர். எங்கள் வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தமுண்டு, எங்கள் பிறப்பிற்கும் ஒரு காரணமுண்டு என்றெம்மை உணர வைத்தார், தமிழர்களின் தாகம் தீர்க்க வந்த, தங்க மகன். அன்று ஆழ்கடலில் கப்பல் ஓட்டினார் வ.ஊ. சிதம்பரம். இன்று ஆழ்கடல் நீரை அமுதமாக்கத் திட்டமிட்டார் ப. சிதம்பரம். இனி அடிக்கும் எங்கள் ஒவ்வொரு அலைக்கும் ஒரு அர்த்தமுண்டு. ஒவ்வொரு அலையோசைக்குள்ளும் ஒரு இசையுண்டு. நாங்கள்- பிறந்த பயனைப் பெற்று விட்டோம் வந்த நோக்கம் புரிந்து கொண்டோம். வாழ்க தமிழ்! வளர்க தமிழர்! ஒளிர்க தமிழ்நாடு!. —-கோமதி நடராஜன்
[லண்டன் மாநகரில் கால் எடுத்து வைத்த முதல் நான்கு மாதங்கள்,தமிழ் கேளாது வாடி நின்ற வேளையில்,பி.பி.சி.வானொலியின் தமிழ் ஒலிபரப்புச் சேவையைச் செவிமடுத்த அடுத்த கணமே என் பேனா எழுதிய வாழ்த்துமடல் இது. 1991 ஜனவரியில் லண்டன் சன்ரைஸ் வானொலியில் வாசிக்கப்பட்டது.] —- மரக்கலம் ==== தணியாத,தமிழ்தாகத்துடன் தனியாக நான் இங்கு தவிக்கின்றேன். அடங்காத என் தாகத்துக்குத் துளி நீரென, ‘ஸன்ரைஸ் ‘ தமிழ் தருகிறது. பைந்தமிழ் ஆற்றில் பலமணி நேரம் நீந்தி மகிழ எண்ணும் என் தவிப்பை இச்சிற்றோடை நீர் எங்ஙனம் ஆற்றும் ? தமிழ் பேசாது நா துவழ்கிறது, தமிழோசை கேளாது, செவியும் செயலிழக்கிறது. தமிழ் இல்லாத இடம் அது- சொர்க்கமென்றாலும் கசக்கிறதே! ஆழ்கடலில் வீழ்ந்தவனுக்கு அற்ப மரத்துண்டும்,மாபெரும் மரக்கலமாவது போல் இச்சொற்ப நேரத் தமிழ் எனக்கு உவகை அள்ளித் தருகிறது. உலகை மறக்கச் செய்கிறது. இரவில் தமிழொளி வீசும் இவ்வானொலி ஆதவனுக்கு என் மனம் கனிந்த பாராட்டுக்கள், இப்பணி இனிதே தொடர என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள். —-
[1989 ஆகஸ்ட், ஊட்டியில் ஒரு சாலை விபத்தில்,மயிரிழையில் உயிர் பிழைத்து ,மருத்துவ மனையில் இருந்து வீடு திரும்பிய அடுத்த நிமிடம்,எழுதப்பட்ட கவிதை.காலனின் காலடிவரை சென்று திரும்பிய கர்வமே, என் எழுத்துக்குத் தூண்டுகோல்.] —- காலனே காத்திரு! —- எல்லோருக்கும் விடியும் காலைப் பொழுது எனக்காகவும் விடியுமென்று தலையில் எழுதியிருந்தால் மலையுச்சியிலிருந்து நான் குதித்தாலும் -குதித்த என்னைப் பதமாகத் தாங்கிக் கொள்ளப் பஞ்சுமெத்தைகள் பரந்து கிடக்கும். அகிலத்துக்காக எழும் ஆதவன் அடியேனுக்கும் சேர்த்து எழுவது தொடருமென்றால் ஆழ்கடலில் நான் வீழ்ந்தாலும் வீழ்ந்த என்னைப் பூவாய் ஏந்திக்கொள்ளப் புல்தரைகள் புதிதாய் முளைத்து நிற்கும் இழுத்து விடும் என் இறுதிமூச்சு இன்னும் தள்ளிப் போகுமென்று விதித்திருந்தால், ஆலகால விஷத்தை விழுங்கினாலும், நான் விழுங்கிய விஷத்துக்கும் விஷமாகி விடியலைக் காண விழித்தே இருப்பேன். —-
—- உதிரிப் பூக்கள். —- 1-தானாக வந்த தீமைக்குப் பின்னே ஒரு நன்மை இருக்கும் தேடிப் போய் பெற்ற ஒரு நன்மைக்குப் பின்னே ஒரு தீமை இருக்கும். 2-எல்லோருக்கும் உங்களைப் பிடிக்கும் என்று நீங்கள் நினைத்தால்,யாரோ ஒரு சிலரிடம் நீங்கள் ஏமாந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். 3-எல்லோரையும் எனக்குப் பிடிக்கும் என்று நீங்கள் சொன்னால்,ஒரு சிலரிடம் நீங்கள் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். 4- ஒரு பகைவனை நண்பனாக்குவது நூறு நண்பர்களை உருவாக்குவதற்கு சமம். 5-பக்திக்கு அடையாளம் அன்பு,அந்த அன்புக்கு அடையாளம் மன்னிப்பு.அந்த மன்னிப்புக்கு அடையாளம் புன்னகை,அந்தப் புன்னகைக்கு அடையாளம் பளிங்குபோல் உள்ளம்.அந்தப் பளிங்கு போல் உள்ளத்துக்கு அடையாளம் பக்தி. 6-பிறரிடம் பெற்ற உதவிகளைக் கல்லில் செதுக்கி வைப்போம்,பிறருக்குச் செய்த உதவிகளைக் கற்பூரமாய்க் காற்றில் கரைய விடுவோம். 7-நாம் சிரித்து மகிழ, நான்கு இடங்கள் சென்றால்,அடுத்தவரை, சிரித்து மகிழ்விக்க ஒரு இடமாவது சென்று வருவோம் 8-நேருக்கு நேர் நடத்தப் படும் போரை விட,பனிப்போர் ஆபத்தானது. 9-கோபத்தை,அடுத்தவரைத் தாக்கும் ஆயுதமாக எடுக்காமல்,நம்மைக் காத்துக் கொள்ளும் கேடயமாக ஏந்துவோம். 10- ‘வயது தந்து வருவதில்லை விவேகம் ‘,இந்த உண்மைக்கு சாட்சியானார் , ஸ்வாமி விவேகாநந்தர். 11- ‘எளிமையிலும் ஏற்றம் காணலாம் ‘ ,இந்த வாக்கியத்தை உண்மையாக்கினார்,கடமை வீரர் காமராஜர். 12- ‘அன்பினால் உலகை ஆளலாம் ‘,இதை வாழ்க்கைக்குத் தேவையான வாக்கியமாக்கினார் அகிலத்துக்கும் பாசக் கடலான அன்னை தெரசா. —- கோமதி நடராஜன். ngomathi@rediffmail.com
This entry is part [part not set] of 46 in the series 20040701_Issue
ஜீவன்
1.
வாழ்க்கை
தேவையாயிருக்கிறது அவசரமேதுமில்லாதொரு மாலைப்பொழுது பொன் மஞ்சள் நிறத்தொரு வானம் மெத்தென கிடக்க ஒரு பச்சைப் புல்வெளி மெதுவாய் தாலாட்டிப்போக கொஞ்சக் காற்று
வேலையில் தொலைந்து போகிறது பகல் வேலைக்காய் தொலைகிறது இரவு
சூரியனைப்பார்த்து நெடுநாளாகிறது எனக்கு.
இயந்திரம் சப்பியது போக எப்போதாகிலும் தேவையாயிருக்கிறது அவசரமேதுமில்லாதொரு மாலைப்பொழுது
—-
2.
வாழ்க்கை
வீசும் காற்றின் சுகம் தொலைந்து போயிற்று மெல்லிய பூவின் சுகந்தம் நினைவிலின்றிப் போகிறது
ஓர் இனிய இசையை கேட்கமறுத்து மறுநாள் வேலைக்கென்றானது இன்றைய துாக்கம்
பார்த்துப்புன்னகைக்கும் சிறு குழந்தையின் கையசைப்பை தழுவமறுத்து செல்லுகிறது காலம்
அலாரம் வைத்து புணர்ந்தாயிற்று
இன்னுமென்ன ?
நேரத்தில் தொலைத்து பெரும் நகரத்து இயந்திரச்சகதிக்குள் சிக்கி குடல் தெறிக்க ஓடும் வேகத்தில் தேய்கிறது மிச்சமிருக்கும் வாழ்வு.
—-
3.
நினைவு
நம்பத்தகுந்த சேதிகள் ஏதும் இருப்பதாகப்படவில்லை சொல்லி பெருங்குரலெடுத்து ஊளையிட்டு போகிறது காற்று
சன்னதமாடி தொடர்ந்து துரத்துகிறது உயிர் பிடுங்கிப்பிசாசு இன்னமும் எனக்கான புதைகுழியை தோண்டுகிறார்கள் அவர்கள்
என்முன்னே ஓடிக்கொண்டிருக்கிறான் நேற்றுக்கிழித்து உப்பு வைத்துத்தைத்த முதுகின் சொந்தக்காரன்
குண்டுதுளைத்துப் போகிறது உடல்
நினைவில் வந்து போகிறாள் கையசைத்து விடைசொன்ன காதலி
விரித்தபடி கிடந்த ஓலைப்பாயை சுருட்டும் போது அழுதிருப்பாள் அம்மா
கண்களை மூட தொடர்ந்து துரத்துகிறது உயிர் பிடுங்கிப்பிசாசு
—-
4.
ஊர் திரும்பல்
மெதுவாய் கேட்கும் அதிகாலைப் புகைவண்டிச் சத்தம் கால் நனைத்துப் போகும் காலைக்கடல் காங்கேசன்துறைப்புகை களங்கண்டி மீன் இரட்டைப்பனை கோவில் புளிமாங்காய் சம்பேதுறுவார் கோவில் மணியோசை
This entry is part [part not set] of 47 in the series 20040624_Issue
பாஷா
கல்லறை பாடல்
உனக்காக என் உணர்வுக் கருவறையில் உற்பத்தியாகும் வார்த்தைகளுக்கு ஒரே முகம்தான். வார்த்தைகளை கோர்த்து வாக்கியம் உருவாக்கும் உணர்வுகளை உனக்குள் தேடிக்கொள் தேவையெனில் உன்னால் ஜனித்த நாளன்று எனக்குள் உதித்த உன் உணர்வுகள் என் கல்லறையையும் அதன் கருவறையாக்கி உனக்கான என் பாடலை பிரசவித்துகொண்டிருக்கும் ஒற்றை ரோஜாவுடன் ஒரு நாள் வந்து என் கல்லறை பாடலை காதால் கேட்டு செல்!
This entry is part [part not set] of 52 in the series 20040617_Issue
பாஷா
நிகழ்வுகள்
சில சொற்களால் சில நிகழ்வுகள் நித்தம் நடந்தேறிகொண்டிருக்கிறது சொற்கள் சம்பிரதாயமாக தெளிக்கப்பட்டபோதும்….
உணர்வுகள் உள்ளத்தில் புதைந்து உதடுகள் வார்த்தைகள் ஒப்பிக்கும் இயந்திரங்களாய் மாறிப்போனது.
சமூக பார்வையாளர்களின் ஜன்னல்வழி காட்சிக்காக நித்தம் ஒரு நாடகம் நடந்தேறிகொண்டிருக்கிறது.
கல்யாணமென்றே வழிப்போக்கர்களின் வாழ்க்கை குப்பை காகிதத்தில் கோட்பாடுகளாக நிரப்பபடுகிறது.
சகித்துகொள்வேனென்றே சாவிகொடுக்கும் பொம்மைகளாய் மாறிப்போனது அன்னையர் இனம்
காதல்,கண்ணீர் பாசம்,அன்பு இவையெல்லாம் இலக்குதேடி பிரபஞ்ச வெளியில் அலைபாய்ந்துகொண்டிருக்கிறது நாகரீகம் மட்டும் நைல் ஆற்றிலேயே மூழ்கிப்போனது! —- நீ இல்லாத நான்
அந்திம நாட்களின் இருண்ட இரவுகளோ இவை ? உன்சுவடுகள் வருடாமல், மூன்று இரவுகள் நினைவுதப்பி கருந்துளையில் காணாமல்போய்விட்டது.
உன்குரல் எழுப்பாமல் என் தொலைபேசி உறக்கத்திலேயே உயிர்துறந்துவிட்டது பூஜையறை,சமையலறை இவற்றுடன் என் உயிரிலும் ஒரு வெற்றிடத்தை விதைத்துவிட்டாய்.
இப்பொழுதெல்லாம் எழுதும் என்கவிதைகளை கிழித்தெறிகிறேன் உன்பிரியத்தை எனக்கல்ல, என்கவிதைக்கே கொடுத்தாயென்ற பொறாமையால்….
கடல்நடுவில் மிதக்கும்கட்டையில் தனித்துவிடப்பட்ட குழந்தையாய் கதறியழுகிறேன்! வேலைபளு கொண்டவனாய் வேதனை புதைக்க வேடம்தரித்து திரிகிறேன் இதயம்பிளக்கும் வேதனையை நீ இல்லாத வெறுமைக்கு சொல்லிகொண்டிருக்கிறேன்! —- sikkandarbasha@hotmail.com
This entry is part [part not set] of 48 in the series 20040610_Issue
பாஷா
காத்திருக்கிறேன்
உன் தங்கைகளுக்காகவும் சொப்பனத்திற்கு பிந்திய பின்னிரவுகளில் உன் உறவுகளை நினைத்து என் நெஞ்சில் நீ வடிக்கபோகும் கண்ணீருக்காகவும் என் காதலை என் நெஞ்சில் சமாதிவைத்து மலர்கொத்தும் வைத்துவிட்டேன்!
ஒருவருக்கொருவர் உடன்வர முடியாத திசைகளின் விளிம்பில் ஒரு நாள் சந்தித்தோம் நீ வந்த திசையின் சாலையிலெல்லாம் நீ தெளித்த கண்ணீர். ஒரு புன்னகையை மட்டும் உன்னிடமிருந்து வாங்கி உன்னை உன் திசை அனுப்பிவிட்டு கரையான்களாய் அரிக்கும் உன் நினைவுகளுக்கு வெற்று வெளியில் சிதைமூட்டிகொண்டிருக்கிறேன்!
இருந்தாலும்…. உன் ஜானவாசத்தில் என் ஜன்னலோரம் தாமதிக்கும் உன் உறவு கூட்டம் உன்பெயர்கொண்ட கடவுள் வானொலியில் அடிக்கடி ஒலிக்கும் உனக்கு பிடித்த பாடல் நீ விரும்பி கேட்கும் அரிசிமுறுக்கு. இவையாவும் உன் நினைவுகளை எரியும் சிதையிலிருந்து எடுத்து போடுகிறது!
காதலை காற்றில் கரைத்து வாழ்க்கை அங்கிகரித்த அந்தஸ்த்தின் பரிவட்டத்தை தரித்திருக்கிறாய் இன்னும் நான் உன் நினைவுகளுடன் மட்டுமே போராடி தோல்வியுற்று ஆயுளை அவசரமாய் கழிக்க ஆண்டவனிடம் வரம்கேட்டு நீ வரும் குளக்கரையில் கல்லெறிந்து காத்திருக்கிறேன்! —- நிராகரிப்பு
மழைகழுவிய சாலையில் நிலைகுலைந்த நிர்வாண பிச்சைக்காரியாக ஏழைவீட்டில் மரபுசிறையிலிருக்கும் இளம் விதவையாக ஆயிரம்காலத்து பயறுக்காய் ஆறாண்டுகளாக அரிதாரம்தரிக்கும் கனவுசுமந்த பெண்ணின் கனத்த மெளனாமாய் நரைகொண்டு உடல்கூனி தீர்ந்த இருமல் மருந்தை தன்மகனிடம் சொல்ல வார்த்தகள்கோர்த்து ஒத்திகைபார்க்கும் கிழவனின் வறட்டு இருமலாய் காற்றின் திசையாவும் நிராகரிப்பு….
தரையோடு தரையாக தேயினும் திரும்ப திரும்ப எழும் வீம்பாய் விழுந்த இடத்திலேயே வீழ்ந்துகிடக்கும் விரக்தியாய் உரிமைகள் மறுக்கப்பட்டபோதும் உயரத்தைமட்டும் பார்க்கும் பிடிவாதமாய் ஒருதலை காதலில் உயிர்துறக்கும் மடமையாய் ஒன்றாய் தோன்றி பலபரிமாணங்களெடுக்கும் நிராகரிப்பு….
சுடலைமாடனாடும் செங்காட்டில் சவக்குழியாவும் சொல்லும் கதையிலெல்லாம் கருவாக இருக்கும் நிராகரிப்பு…. —- sikkandarbasha@hotmail.com
புத்தகம் புறட்டினான் சின்னவன் என்னவன் கிளையிலிருந்த கிளிகளை எண்ணினான்.
கிளிகள் பறந்த பின் கிளையிலிருப்பது ?
இருப்பது இல்லையென்று சொல்லாமல் கிளையில் கிளி சுழி என்றான் சுட்டிப்பயல்.
3.ஓவியமாய்…
உங்களுக்கனுப்ப வாங்கிய வாழ்த்தட்டை படத்தில் உங்களோடு நானுமிருக்கிறேன்.
ஆமாம் யார் கண்ணிலும் படாமல் அந்த ஒவியத்தில் அதோ… அந்த மரத்துக்குப் பின் மல்லிகைப்பூச்செடி மறைவில் நீங்களும் நானும் ஒளிந்து பிடித்து விளையாடிக்கொண்டிருக்கிறோம் வெகுநேரமாய் இந்த வாழ்த்தட்டை வண்ணப் பூங்காவில்.
— மூலம்; யுவான் சுவாங் [JOURNEY TO THE WEST Eng. by Anthony C.YU
****
முரண்பாடில்லை ****
புகழுக்காக அலைபவர்கள்
புகழுக்கே பலியாவார்கள்.
பொருளுக்கு அலைபவர்கள்
பொருளாலே அழிவார்கள்.
புலிவால் பிடித்தவர் தாம்
பதவிக்கு அலைபவர்கள்.
பாம்பு சுற்றிய காலுடன் நடப்பவர்கள்
சலுகை தேடுபவர்கள்.
நீலம் கவிந்த மலைகளிலும்
நீலம் தெளிந்த நீரோடைகளிலும்
கவலையற்று வாழும் நம்
வாழ்க்கைக்கு
ஈடாகுமா ? அவர் தம்
இழிவாழ்க்கை ?
வறுமையிற் செம்மை தேடும் நமக்கு
விதியுடன் முரண்பாடில்லை.
****
பண்டமல்ல பிண்டம் ****
நொந்து சலித்துப் போன
குடும்பத்தலைவன்
(அலுவலகம்) – தொழிற்சாலையில்
உழைத்துக் களைத்து உளைத்துப் போன
(வணிகன்) – தொழிலதிபர் – அதிகாரி
குடும்பத்திற்குள்
பெரும்பாலும்
ஒன்றுக்கொன்று
முட்டாள் தனமாக முரண்படுவதும்
சூழலுக்குச் சூழல்
மாறுபடுவதுமான
உட்பொருளைச் சுமந்து சுமந்து
இளைத்துப் போனவர்கள்
என்பது மட்டுமல்ல….
வெவ்வேறு உள்முகமான சமூகப் போக்கின் உயிரிகளாக உண்மையில் சாட்சிய மாகிறவர்கள். இணை இணையான பொருட்கள் அல்லர்.
****
கரையோர அலைகள் ****
விருப்பு , வெறுப்பு சினம் , சமரசம் நம்பிக்கை, அவநம்பிக்கை என நிரந்தரமான உணர்ச்சிப் பிழம்புகள் ஏதொன்றும் இல்லை – ஓர் உயர்மட்டப் புரிதலில் சிறப்பாகவும், பருண்மையாகவும் விசேஷமாகவும், ஸ்தூலமாகவும் வரையறை செய்து – எவ்விதமாகப் பொதுமைப்படுத்தினும் ஒவ்வொரு உணர்ச்சியும் ஒருவர் அல்லது மற்றவரின் குழுச் சார்பை பொறுத்த உள்வாங்கலின் விகற்பமான வெளிப்பாடு தான். சமூகச் சார்பின் பின்புலத்தில் ஒருவனின் உள்ளும், புறமும் ஆன உறவுகளுக்குப்பால் அடிப்படையான உணர்வுகளோ உணர்ச்சிகளோ ஆளுமையோ இல்லவே இல்லை.
****
சீறும் புயலில்
குமுறும் கடலில்
தத்தளிக்குமொரு தோணியில்
நம் பயணம்
ஒருவருக் கொருவர்
கை கோர்த்து
நம்பிக்கையளிப்பது
நம் தலையாய கடமை.
****
மனமற்ற மனம் ****
மனம் தான் புத்தர் புத்தர் தான் மனம் மனமும் , புத்தரும் உன்னதமானவை. மனமும் இல்லை பொருளும் இல்லை என்று நோக்கினால் தர்மகாயம் உன்னுடையதாகும் காட்சியும் இல்லை வடிவமும் இல்லை தர்மகாயத்துக்கு. முத்தன்ன ஜொலிப்பில் பலதையும், பிரதிபலிக்கும் உடலற்ற உடல்தான் உண்மைக் காயம். வடிவற்ற வடிவம்தான் உண்மை வடிவம்.
****
உயர்வு தாழ்வு பேசும் மனம் ****
வடிவமும் இல்லை வெளியும் இல்லை வெற்றிடமும் இல்லை வருதலும் இல்லை போதலும் இல்லை இல்லை ‘ முரணுமில்லை சமனுமில்லை உளதுமில்லை அலதுமில்லை கொடுத்தலும் எடுத்தலுமில்லை நம்பிக்கையின் ஏக்கமும் இல்லை. உள்ளிலும் வெளியிலும் ஒளிரும் சுடர் ஒன்றே.
****
துளி மணலில் ****
துளியத்தனை மணலில் பல்லாயிரம் துகள்கள் கொண்ட புத்தரின் ஆட்சி ஒரு மனம் அல்லது ஓர் உடல் பதினாயிரமாய்க் காட்சி தருகிறது. மனமற்ற மனநிலையைக் கைக் கொள்ள வேண்டும். இம்மாட்சிமையறிய. பிணைப்பும் களங்கமும் அற்றது தான் தூய வினை. நல்லதும் பொல்லதும் பலதும் செய்யாதே ‘ சாக்கிய முனியைச் சரணடையும் சன்மார்க்கம் இது வென்றுணர்.
****
பாழ் ****
ஒரு கணமும் விடுதலறிது ‘தாவோ ‘ – வை விடுக்க முடிவது ‘தாவோ ‘ அல்ல. தெய்வீக ஆயுதங்கள் களவு போனால் தேடியவன் உழைப்பு பாழ் ‘ பாழ் ‘ ‘ பாழ் ‘ ‘ ‘
****
தீர்வின் கனி ****
பிரதோஷத்துக்குப் பிரதோஷம் அமுதின் சுவை இயல்பானது – நிலை முழுமையானது. பொறுக்கி எடுத்ததை ஸ்புடம் போட்டு (உலையிலிட்டு) வஸ்திர காயம் செய் (சுத்திகரி) தீர்வின் கனி மேல் உலகில் உள்ளது.
(அமாவாசைக்கும் பெளர்ணமிக்கும் மூன்று நாள் முன்பு வருவது பிரதோஷம்.)
****
திடஉரு ****
நூற்றாண்டுகள் உருண்டோடுகின்றன ஓடையில் பிரவகிக்கும் வெள்ளம் போல. ஆயுள் பரியந்தம் ஆற்றிய பணிகள் நொப்பும், நுரையுமாய்… நேற்றைய முகம் ஜொலித்தது மாம்பழச் சிவப்பாய். ஆனால் இன்றைய நெற்றி குருதியற்று பனித்துகளாய்ப் பாரித்து…. கரையான் புற்றெனக் கலைந்து போயிற்று வாழ்வெனும் மாயத்தோற்றம். ‘திரும்பி வா — திரும்பி வா ‘ எனக் கருங்குயில் அழைக்கிறது. இரகசியமாய்ச் செய்யப்படும் நற்பணிகள் நீட்டிக்கக் கூடும் வாழ்வை ஒழுக்காற்றில் ஒழுக கழிவிரக்கம் தேவையில்லை – ஏனெனில் விண்ணுலகம் அதனைக் கவனித்துக் கொள்ளும்.
****
ரசவாதம் ****
நீரும், நெருப்பும் கலந்து ஒன்றையொன்று இழுக்கும் – இத்தகைய இணையொன்றை உருவாக்க அன்னை பூமியின் அருள் வேண்டும். வெறுப்பும், பகையுமின்றி மூன்றையும் கலக்க வேண்டும். நீண்ட நதியில் நீரும் அகண்ட வானில் நிலவும். முதல் கால் ஆணுக்கும் பின் கால் பெண்ணுக்கும் பெண்ணுக்கு மத்தியில் ஆணுக்கு இடையில் உலோக நீரை(metal water) திடவுருவின் திரவத்தை எப்படிப் பெறுவாய் ?
****
போகுமிடம் வெகு தூரமில்லை ****
பிறப்பிலிருந்து மூப்புவரை நடக்கலாம் – பின்னர் மீண்டும் இளமை பெறும் வரை. ஆயிரம் முறை இவ்வாறு சுழன்றாலும் அடைய வேண்டிய இலக்கு அப்பாலுக்கும் அப்பால். எண்ணத் திண்மையில் கண்ணுற்று நோக்கினால் எல்லாப் பொருளிலும் புத்தரைக் கண்டால் எல்லா சிந்தனைகளும் தோற்றுவாய்க்குத் திரும்பினால் அக்கணம் அடைவாய் ஆன்மீக மலையை.
–யுவான் சுவாங்
****
சோதி ****
மங்கலாக இருந்தது சிந்தனை இளமைக்காலம் தொட்டே. மந்த கதியான சோம்பல் வாழ்க்கை ருசித்திருந்தது எனக்கு. பயிற்றுவிக்கவில்லை என் இயல்பை கடைப்பிடிக்கவில்லை சத்திய நெறியை. நாட்களைக் கடத்தி வந்தேன். மாயையிலும், குழப்பத்திலும் – திடாரென சந்திக்க நேர்ந்தது நிச்சலனத்தில் வீற்றிருந்த சத்திய புருஷனை வெப்பத்தையும் குளுமையையும் வாதத்தையும், பித்தத்தையும் வகைத்துரைத்தார் எந்தனுக்கு வாழ்வு என்பது முடிவற்ற துயரம் விட்டொழி உலகியலை என்றார். மனந்திருந்து ‘ ஒருநாள் வாழ்வின் அந்திமத்தை எட்டுவாய் அப்பொழுது…. காலம் கடந்த பின்னர் எண்வகைத் தவிப்பும் மூவகைப் பாதையும் வெருட்டி விழிக்க வைக்கு என்றார். உன்னிப்பாய்க் கேட்டு உறுதி பூண்டேன் மனந்திருந்த. வருந்தி மனம் மாறி வாழ்பியல்பை விட்டொழிந்தேன். ஊழ்ப்பயனாய் உயர்ந்ததோர் குருவாகி விண்ணையும், மண்ணையும் நவகோளின் சுழற்சியையும் வியத்தகு அற்புதங்களை விளங்க உரைத்ததுடன் நவகோளின் குளிகைதனை நயமாக ஊட்டிவிட்டார். இரவும் பகலுமாய்த் தொடர்ந்து என் பயிற்சி சிரசின் சேற்றுப் பரப்பையும் உட்காலின் ஊசித்துளைகளையும் சென்றடைந்தது நவ பாஷாணம்.
This entry is part [part not set] of 54 in the series 20040527_Issue
சாந்தி மனோகரன்
இறந்தவன் சொன்னது…!!!
புரியாத உண்மைகள் பொதிந்துள்ளதோர் புதிரான புத்தகமே வாழ்க்கை உண்மைகள் சில நேரம் புரியும்போது-இந்த உலக வாழ்வே பொய்யென்பதுவும் புரிந்துபோகும்..ஏனென்றால் ஒன்றுமில்லாத ஒன்றைத்தவிர வேறொன்றுமில்லாதா ஒன்றுதானே இந்த ஒப்பற்ற வாழ்க்கை
இறப்பவன் சொன்னது..!!!
கண்களை திறக்க நினைக்கின்றேன் முடியவில்லை கைகளை அசைக்க நினைக்கின்றேன் அசைவில்லை உறக்கத்தில் விழித்துக்கொண்டது உள்மனது… இன்னும் எனக்கு புரியவில்லை நான் இறந்து கொண்டிருப்பதை…!!
தாரை தப்பட்டைகளுடன் வீர முழக்கமிட்டே…யார்மீதோ சேறை வாரியிறைத்து கொடியேற்றி வாக்குறுதி தந்தார் தலைவர்… எல்லாம் பறந்தது வழக்கம்போல் காற்றில்
This entry is part [part not set] of 54 in the series 20040527_Issue
ப.வேல், சிங்கப்பூர்
காதல் நடப்பு ஆண்டு நகரா ஆண்டாகிறது! நாட்காட்டி நங்கூரம் போடுகிறது! கடிகாரம் கடிவாளம் போடுகிறது! நிமிடங்கள் நிலைக்குத்தி நிற்கிறது! நொடிகள் நொடித்துப்போய் நிற்கிறது! தெரிந்தால் சொல்… காதலுக்கு காப்புறுதி எடுக்கும் வழி! —- காதல் உன் பார்வைப் பிச்சைக்காகத்தான் அந்த வானம் நிலாத் தட்டு ஏந்துகிறது! நீ… அண்ணாந்து பார்ப்பாய் என்றுதான் அந்த நிலா குப்புறக் கிடக்கிறது! உன் ஒவ்வொரு நடையிலும் பூமி தன்னைத் தன்னைத் துடைத்துக் கொள்கிறது! நீ குளிக்கும் போது தண்ணீர்தான் குளித்துக் கொள்கிறது! பார்த்தாயா ? நடப்பனவாய் பிறந்த நான்.. உன்னால் பறப்பனவாவதை! —
This entry is part [part not set] of 49 in the series 20040212_Issue
ரஞ்சினி ,ஃப்ராங்ஃபர்ட்
———————–
காலம் – மாற்றம் – தலையிடி
என் இரவுகள் பகலைவிட நீண்டவை என் உணர்வுகள் அறிவைவிட அதிகமாகி அமைதியை வேண்டியே பொழுதுகள் கழிகிறது ஏன் என்று எழுவது நின்று இருக்கலாம் என்று ஆகிவிடுகிறது அலையாக வந்த சிந்தனைகள் அமைதியாகிப் போய்விடுகிறது இப்போதெல்லாம் வாழ்வு பற்றிய பயம் – எதிர்காலம் பற்றிய சிந்தனை விசுபரூபமாகி மனம் சோர்ந்து கழைத்து கவலைப்படுகிறது பகலை விரும்பா இரவும் .இரவை விரும்பா பகலுமாக வாழ்கை நகருகிறது முன்பில்லாமல் புதியவை பழையவையை அதிகம் நினைவுட்டி பயத்தைத்தருகிறது
மோகம்
விலக்க முடியாத போர்வையின் கண கணப்பை விலக்கி நான் உன்னைத்தேடுகிறேன் நீ அங்கு இல்லை நாம் பகிர்ந்து கொண்ட காதலும் இனிய முத்தங்களும் நினைவுகளும் மட்டுமே
உனது மார்பில் கனவுகாணவோ உனது உடலை ரசித்திருக்கவோ உனது இதளைச் சொந்தமாக்கிடவோ உனது குரலில் மயங்கிக்கிடக்கவோ உனது கரங்களை வருடிக் கொடுக்கவோ அணைத்திருந்து விவாதங்கள் செய்யவோ மெல்லிய இரவில் உனது தேகம் தந்துவிட்ட மோகத்தை நினைத்திருக்கவோ ஏல்லாத்திற்குமாகவே உன்னை என்னவனாக்கவோ முடியாதிருப்பினும் அன்பைக் கொடுக்கவும் அன்பை எடுக்கவும் எமக்கிருக்கும் உாிமை பறிபோகாதவரை நாம் காதல் செய்வோம் .
This entry is part [part not set] of 33 in the series 20040205_Issue
பாஷா
1. கோபமாய்,கெஞ்சலாய் அழுகையாய்,ஆத்திரமாய் உன்னிடம் கொட்டிவிடத்தவிக்குது என்னில் நீ நிரைத்து வைத்த காதல்!
2.
நட்சத்திரங்கள் தொலைந்த நள்ளிரவு நேரம் நிலா இல்லாத வானம் கன்னம் வருடிப்போகும் தென்னங்காற்று என் வீட்டு மாடியிலமர்ந்து நீயில்லா நிமிடங்களை தீயிட்டுக்கொண்டிருக்கிறேன்
நான் இருக்கும்போதெயென்னை இறக்கும் நிலையெய்ய செய்துவிட்டாய். அனிச்சையாக நடக்கும் உடலின் இயக்கங்கள் நான் இறந்தவனாகவே கட்டியம் கூறுகின்றன இறப்பு துயறமானதுதான் இருந்தபோதும் நீ எடுத்து தந்ததால் ஏற்றுக்கொள்கிறேன்! ——————————- sikkandarbasha@hotmail.com
எனக்குவெளியே எதிரொலி மறுத்த நிஜமாய் .. பறந்து சென்ற குருவி அற்ியாத ரகசியமாய். சொல்லின் பொருளுக்கப்பால் செயலாய் சுயமுற்றெழுந்த நான் இனி சிட்டுக்குருவிகளிடமிருந்து கற்பதற்கொன்றுமில்லை.
-மோனிகா
வாமனப்பிரஸ்த்தம்
அப்பாவுக்கு போன்சாய்களைப் பிடிக்காது. அம்மாவின் பிறந்தகத்தை குந்தகம் சொல்வார். ஓவியம் தெரிந்தும் அம்மா வரைய மட்டாள். பாடத்தெரிந்தும் லவகுசா மட்டுமே பாடி கண்ணீர் துளிர்ப்பாள் அம்மாவின் செருப்பு எப்போதும் குழந்தைகளின் அளவுகள் நடுவே. நாற்பது வயதில் நடு வீட்டில் கோலி விளையாடும் குழந்தையானாள். வாமனப்பிரஸ்த்தமாம் போன்ஸாய்கள். அப்பாவுக்கு போன்ஸாய்கள் பிடிக்காது.
-மோனிகா
காதல் கொண்டு செல்
களம் பெரிது. கையகப்பட்ட வாழ்க்கையும் அதுவே. நிலவு, நித்திரை, நேற்றிரவு கண்ட மொட்டை மாடியென நினைவு பொய்யில்லை. நெருஞ்சியென நீர்க்கோர்த்துப் பருத்துக் கிடக்கும் கனவும் அப்படித்தான்.
நினைவுகள் கனவுண்டு நகருகையில் நீண்டு நீண்டு நெருங்க முடியாமல் ஒடும் நாட்குறிப்பு. குறிக்க நாளா இல்லை கொண்டா கொண்டாவென களம் வெரியும் காற்றேபோல். நினைவுகள் பெரிதாகிப் பின் நாட்குறிப்பை கிழித்துக்கொண்டு கொட்டும். வருகின்ற நாட்கள் முட்டித்தலை சாய்க்க கடந்ததன் நகமாய் காலம் பிடித்துந்த, கழிவிரக்கம் கொண்டு சொல்லும் காதல் கொண்டு செல் என.
-மோனிகா
அழகிகள் உறங்கும் நகரம்
இரவு நேரத்தில் ஒலி எழுப்புவதாய் தோன்றிற்று இந்த அலமாரி. கட்டிவைக்கப்பட்ட உலகங்களாய் தோன்றின புத்தகங்கள். சொல்லும் கருத்தும் தாண்டி வடிவுற்று வியாபித்த செவ்வகங்கள். புதியன கொண்ட வாசனை, பழையன கொண்ட பூச்சி வாசம், அட்டை கிழிந்து தொங்கும் அழகு, நூலகத்திலிருந்து தப்பி வந்தவை, நண்பர்கலிடம் திருப்பித்தராதவை என நித்திரை கொள்ளுமுன் பார்த்தேன் எனது அலமாரி, அழகிகள் உறங்கும் நகரம் என.
-மோனிகா
பாலத்தின் கீழ் நிற்கும் ஒற்றை மரம்
இப்படியே நின்றது அன்றும் இரவிரவாய் காயும் நிலவு ந்ிற்காமல் ஒடும் நீர்நிலையென. இன்று காணக்கிடக்கிறது மணற்படுகை. நடுவிலுள்ள பாலம். பாலம் சுமக்கும் மக்கள் மணற்கடலில் நிலாச்சோறுண்டு மரத்து உச்சி நிலவில் காதல் பேச பாலம் கனவு மரம் உண்மை. ஒற்றை மரக் கிழிக்குஞ்சு உயரப் பறக்கும் கனவுகள் உரக்கக்கத்தியும் தொலைவுகளில் மணல்வெளி. ஒற்றை மரமும் கனவு மணல்வெளிபோல்.
-மோனிகா
மெளனம் – சாத்தியம்
வெற்றுத்தாளென ஒரு ஒற்றைத்தாளை பார்க்கையில் விளையும் சந்தோசம் ஏன் ஒரு வெற்று நாளின் வெறுமையை கவலைக்கிடமாக்குகிறது.
பொருளற்ற அறையின் எதிரொலிச் சாத்தியம் மனதிற்கும் வாய்க்கையில் மெளனம்தான் அரவம். புற்றின் வெறுமை – காற்றோட்டம் புதிய பரிணாமம் – வளர்ச்சி. வெற்றுத்தாளின் முன் மட்டுமே எண்ணற்ற சாத்தியம்.
பாதங்களுக்குக் கீழ் பூமி ஏறிட்டுப் பார்த்தால் வானம் காற்று வீசுகிறது உலைத்தீ எரிகிறது கொண்டல்கள் கொட்டுகின்றன பூமி தந்துகொண்டேயிருக்கிறது சூரியனோ சந்திரனோ வானத்தில் நட்சத்திரங்கள் சுடர்விட்டதும் சாப்பிட்டுவிட்டுத் தூங்கலாமே பாப்பா நமக்கென்ன பிரச்னை வேறே
மலை வளரும் என்கிறார்கள் நம்ப முடியவில்லை கடல்கொண்டது என்கிறார்கள் நம்ப முடியவில்லை வெள்ளம் வந்து அழித்தது என்பார்கள் நம்பத்தான் வேண்டியிருக்கிறது தீ அழித்தது எத்தனையோ என்பார்கள் சூறாவளி இழப்பு என்பார்கள் தெரியும்
எந்தப் பக்கமாய் விலகியிருக்கும் இடதுபுறமா வலதுபுறமா எப்படி இருந்த இடத்திலிருந்து எழுந்து இன்னோரிட்டத்தில் அமர்வது மெனக்கிடவில்லையோ நந்தனிடமிருந்து சிவனை மறைத்துக்கொண்டிருந்த குற்றவுணர்வு தோன்றியிருக்கக் கூடுமோ அப்பொழுது
ஆதிதிராவிடர்களைக் கோயிலுக்குள் விடாததுகுறித்து நந்தியெம்பிரான் என்ன கருதியிருப்பார் அன்று
பொன்மாலைப் பொழுதுகளை இழந்து போகப் போகிறாயா நீ இழந்ததெல்லாம் என்றும் இழப்புதான் காகமே இழக்காதே எதையுமே நீ
காகமே எங்கே போனாய் நீ
துணை தேடிப் போனாயா நீ துணைதேடி அவ்வளவு தூரம் போயிருக்க முடியாது எங்கே போனாய் நீ எல்லோரும் கலக்கமுறும்படி
காகமே எங்கே போனாய் நீ
காகத்துக்குத் தெரியும் காகத்தைப் பற்றி கவலைப்படுகிறவனுக்குத் தெரியாது
காகமே எங்கே போனாய் நீ
காகம் உள்ளூர்தாண்டிப் போகாது காகத்துக்கு என்ன கவிதை காகம்போல வாழக் கற்றுக்கொள் முதலில்
காகமே எங்கே போனாய் நீ
குறுக்குத்துறைப் படிக்கட்டுகளில் கொட்டிக்கிடக்கும் பருக்கைகளை கொத்தித் திங்கப் போனேன் போ சங்கிலிபூதத்தானுக்குப் போட்ட படையல் மிச்சமிருக்கு எனக்கு போ புட்டார்த்தியம்மா சந்நிதிக்கு வெளியே பிரசாத இலைகள் குவிந்து கிடக்கு போ
என்று சொல்வாயோ
திருநெல்வேலி மண் விட்டுப் போக பிரியப்படாத காகம் நான் மருதமர நிழலில் குடியிருக்கும் காகம் நான் லெவல் கிராஸிங் இசக்கியம்மன்தான் என் இஷ்டதெய்வம் போடா போ போக்கத்தவனே போ
என கரையும் காகமே எங்கே போனாய் நீ
கேட்டதையே கேட்டு சலிப்பூட்டாதே கேள்விமேல் கேள்வி கேட்டு அயர்வூட்டாதே கேட்பது சுலபம் கிழவி போல கிளைக்கேள்வி வேர்க்கேள்வியென்று கேட்டு நீ இம்சிக்காதே குஞ்சுமுகம் தேடுது கூடு செல்ல நேரமாகுது கொண்ட ஜோடி நினைவு வாட்டுது கோபித்துக் கொள்ளாதே போய் வருகிறேன் நான்
(பேராசிரியர் எம்.டி. முத்துகுமாரசாமி அவர்களுடன் இணைந்து எழுதியது. கேள்விகள் எம்.டி.எம். உடையவை. பதில்கள் என்னுடையவை. சோதனை முயற்சியாக எழுதிப் பார்த்தது இந்த கவிதை) –விக்ரமாதித்யன் நம்பி
கண்ணில் தெரிவதெல்லாம் மலை முகடுகள் ஒரு நறுஞ்சுனை தொலை தூரத்தில் சிற்றாறு மரம் செடி கொடிகளில் கனி சுமந்த கிளைகள் உச்சியில் கொம்புத் தேன் கூடுகள் அதிசயமாய் துலங்கும் அருவிகள் மெளனமே இருப்பான சித்தர்கள் முன்னை பழங்குடிகள் வானம் தொடும் மஞ்சுக்கூட்டம் தண்ணீர் பட்டுத் தெறிக்கும் தேக்குகள் மூங்கில்கள் பக்கத்திலேயே பாக்குமரங்களும் ஏலக்கொடிகளில் எச்சமாய் மணம் சிந்திக் கிடக்கும் மலை முந்திரி படர்ந்து தழுவும் மிளகுக் கொடிகள் வேரில் பழுத்துக் கிடக்கும் பலாக்கள் தேன் கதலிகள் வேட்டுவ வள்ளியின் விழிப்பார்வைக்கும் எச்சில் முத்தத்துக்கும் யாசித்து நிற்கும் வடிவேலன்
* * *
முல்லை
காதைக் குடையும் சிள்வண்டுகள் சப்தம் பார்க்கும் இடமெல்லாம் பச்சை நிறக்காடு இருள் நிறைத்திருக்கும் தாவரங்கள் உலாவும் உயிர்பிராணிகள் குழிபறித்து விளையாடும் குறுமுயல்கள் காற்று கொண்டுவரும் செண்பக மணம் கொடிவலைப் பின்னல்களில் காட்டுக் குயில்கள் ஆகாயம் மறைத்துக் கிடக்கும் இலையடர்த்தி பூமியே தெரியவிடாத புதர்கள் புல்காடுகள் கலகலப்பாய்த் திரியும் காடை கெளதாரிகள் மலையணில்கள் வழிமறிக்கப் பார்க்கும் நரிக்கூட்டம் அலைபாயும் மயில்கள் மிரண்டோடும் மான்ஜாதி ஆடுமாடுகளுக்கு அற்றுப்போகாத இரை ஆயர்கள் மனம் போல அழகுபட்ட முல்லைக்காடுதான்
* * * * *
மருதம்
காடு திருத்துகிறார்கள் கழனி யாக்கிறார்கள் அருவி வந்து விழுந்து ஆறாய்ப் பெருகிப் பெரும் பேறாய் நயத்தக்க நாகரிகம் விதைத்தது முளைத்தது கண்டு பசேலென்று வயல் வைத்தார்கள் வாழை நட்டார்கள் கரும்பு போட்டார்கள் கொடிக்கால் செய்தார்கள் ஆணும் பெண்ணும் நாளும் பாடுபட்டார்கள் கோடையில் உழுந்து பயறுச் செடிகள் கூடவே வெள்ளரியும் இஞ்சி மஞ்சள் கிழங்கென்று வகைவகையாய்ச் செய்வித்தார்கள் ஆதிமனிதனுக்கு அறிவு முளைத்தாற்போல பாதி மனிதன் முழு மனிதனான் தலை வாழை இலையிட்டு சோறு கறி பரிமாறினாள் திலவி பந்தியில் பாலும் பலாச்சுளையும் இட்டார்கள் நெய்போட்டார் மோர் விளம்பினார் பால்பாயாசம் வைத்துப் பகிர்ந்துண்டார் கூட்டென்றார் பொரியலென்றார் பச்சடியில் பத்து தினுசு செய்தார் சொதியில் தனி ருசி சேர்த்தார் வேளாளன் கைவிருத்தி மனச்செழிப்பு வீட்டுக்கூடம்தாண்டி வீதியெங்கும் விருந்துகள் விழாக்கள் தோரணங்கள் தானதருமங்கள் பூஜை புனஸ்காரங்கள் ஆசாரங்கள் அன்றாட வாழ்விலும் அழகுகள் பொன்னும் பொருளும் குவிந்துக் கிடக்க போகமும் பூரிப்புமாகப் பொலிந்தது வாழ்வு கல்லிலும் செம்பிலும் ஐம்பொன்னிலும் கலைவண்ணமாய் சிலை வடித்தார் கண்பார்த்ததைக் கைசெய்யும் வித்தை தேர்ந்தார் கூத்தும் பாட்டும் கொட்டி முழக்குகிறார் ஓய்வில் சொல்கொண்டு எழுத்தாக்கினார் பொருள்கொண்ட இலக்கியம் படைத்தார் நதி கொண்டு வந்த பண்பாடு தேறி காதலோடு கற்புக்கும் வகைசெய்தார் இந்திரன் போய் சந்திரன் கங்கைதரித்த சுந்தரன் வந்தான் முழுமுதற்கடவுளாக சைவத்தால் தமிழ் வளர்த்தார் தமிழால் சைவம் வளர்த்தார் மன்னர்கள் பணிசெய்தனர் சொகுசுமறந்து மானுடத்தின் உச்சம் காட்டும் மருதமர நிழலோர நஞ்சைக்கூட்டம் எழுதாக் கிளவி போல இருக்கும் சரிதம்
* * * * *
நெய்தல்
திரண்டு வரும் தண்ணீர் எங்கே போகும் தெறித்து விழுந்த தண்ணீரோடு சேரும் வந்துபோகும் அலைகளின் வருத்தமென்ன வாட்டமென்ன தொடுவானம் சொல்லும் இரகசியமென்ன விஷயமென்ன அடிவானத்துக்கப்பால் இருக்கும் மர்மமென்ன மாயமென்ன கடல் நடுவே பூமியா பூமிக்கு மத்தியில் சமுத்ரமா எப்படி வகைபடுத்த கடல் என்னது கடல்குதித்துச் சூடாற்ற கண்ணதாசன் கவிதைவரி நடுக்கடலில் நாளும் நெய்தலின் மக்கள் திரண்டிருக்கும் தேக்கு உடம்பும் ஆதிமனசும் எதன் கைவண்ணம் கடல்மீன்கள் நண்டுகள் முத்துகள் தோன்றுவதெப்படி பவளம் விளைவது எந்த முகூர்த்தத்தில் வலம்புரிச் சங்குகள் வடிவுகொள்வது எங்ஙனம் வருணதேவன் வகுத்து வைத்ததா காலமழை உப்பு நீரில் ஒரு கொள்ளைத் திரவியம் யார் செய்த மாயம் கடல் ஒரு அதிசயம் கடல் கொண்டிருப்பது போதிசயம் அது வைத்திருப்பது நிறைய அற்புதம் நெய்தல் நிலமே நிரம்ப அற்புதம்தான்
* * * * *
பாலை
வேரோடும் பிரண்டைக் கொடிகள் சப்பாத்தி கள்ளிகள் கானலெரிக்கும் வெயில் கையவு நீர் காணக்கிடைக்காத மண் புழுதி பறக்கிறது பேய்கள் இராஜ்யம் செய்கின்றன என்ன செய்வார்கள் ஜனங்கள் எப்படி வாழ்வார்கள் இந்த வெக்கையில் காளி மாதாவின் கருணை இப்படியா
This entry is part [part not set] of 59 in the series 20031106_Issue
மாலதி
சுக்கல் சுக்கலாய் என் சிதிலங்கள் என் பெயரால். தீவிரவாதம் என் உணர்வில். ஒளிந்து வாழ விதியும் பேரொளி எழுப்ப மனமும் ஒன்றோடொன்று போராடி எப்போதைக்கும். வெடிமருந்துகளை கிட்டிக்கிறேன் அழுந்த அழுந்த கிட்டங்கியில். வாழ்நாளில் வெடிக்கவிட மாட்டேன். தற்கொலைப்படையாகவும் மாட்டேன். நட்பில்லாத பெருங்காட்டில் புதைத்துப் போகிறேன் இருட்டுகளுக்காகும் வெளிச்சத்தை உங்கள் யாருக்கும் நான் சொந்தமில்லை துறந்து விடுங்களென்னை ஈரமின்றி.
கொள்ளை போனவீட்டுச்சொந்தக்காரன் போலீசுக்கு ஒப்புவிக்கும் பட்டியல் எலும்புகளைச் சேகரிக்க மயானத்தில் உட்கார்ந்த மகன் காணாமல் போன மகளின்புத்தகக்கட்டில் தடயம் தேடுகிறபெற்றோர் தவறின காதலின் ஈமெயில் ஐடியை வெறிக்கும் தருணங்கள் போல்கின்றேன் முதல் சுற்றில் வேகாத கவிதைகளை இரண்டாம் கட்டத்துக்குத் தேற்றும் அவசியங்களில்.
இரவுப்படுக்கையில் என்னைப்புரட்டிப்போடுகின்ற துக்கங்கள் அநேக முதல் நாட்களாலானவை. அழிந்த ஆதிகள். கிழிபட்டுக்குதறப் பட்ட முடிவுகளை ஆரம்பத்திலேயே வைத்திருந்தவை. புரளும்போதெல்லாம் ஒரு கனவைத் தேடுவேன் கண்மூடி. குளிர்மடி கிடைக்கும் வரை விரல் குவிந்து மயானத்தைச் சூட்டும்வரை. கடைசிக்கான ஆயத்தங்களின் நபரோடு.
This entry is part [part not set] of 42 in the series 20031023_Issue
அ.முஹம்மது இஸ்மாயில்
ரமலானே வருக! இறையருளை தருக!! உலகம் அழிக்கும் மடமை ஒழிக்க உலகம் வியக்கும் மறையை வழங்கிய உயர்வான ரமலானே வருக! இறையருளை தருக!! உலகம் அழிக்கும் மூடநம்பிக்கை ஒழிக்க உலகம் காக்கும் இஸ்லாம் அருளிய துணிவான ரமலானே வருக! இறையருளை தருக!! புனித மாதம் பசியில்லாத இறைவனை பசிபொறுத்து உணரும் மாதம் பெருமான் நபிகள் போற்றி புகழ்ந்த மாதம் மாறாத மறையாத மறைகுரான் இறங்கிய மாதம் பசியெனும் ஏழையினாடையை பணக்காரரும் அணியும் மாதம் கஞ்சனாய் இருந்தவரும் கணக்கின்றி வாரிவழங்கும் மாதம் இரும்பிதயம் படைத்தவரும் இதயம் கனியும் மாதம் விரட்டப்பட்ட ஷைத்தான் விலங்கு பூட்டப்படும் மாதம் அகிலமாளும் அல்லாஹ்வின் அருள்மழை பொழியும் மாதம் முக்காலம் அறிந்தவராம் முஹம்மதுநபி அகமகிழும் மாதம் இந்த புனித மாதம் நோன்பு தொண்டையில் தாகமிருக்கும் வயிற்றில் பசியிருக்கும் மனம் நாடாது பொறுத்து இருக்கும் வறுமை அல்ல கடமை.. ஜகாத்* கழுத்துவரை தேவையிருக்கும் கையளவே காசிருக்கும் மனம் விரும்பி ஜகாத் கொடுக்கும் விரயம் அல்ல விவேகம்.. (ஜகாத்* – ஏழைவரி) நபிமொழி பசி வந்தால் பத்தும் பறக்கும் – இது பழமொழி பசி பொறுத்திருந்தால் சொர்க்கம் திறக்கும் – இது நலமொழி என்றும் நல்லமொழி எங்கள் நபிமொழி முற்றும்.
விருந்துக்காய் வளர்க்கப்படுகின்றன வெள்ளை உடை ஆட்டுக்குட்டிகள், கல்லறைகளின் மேல் தொடர்கின்றன எங்கள் கட்டுமானப்பணிகள்…
தாலியைக் காப்பாற்றும் கவனத்தில் கணவனை மறந்தவர்களாய், தேசியக்கொடியை நாட்டும் வேகத்தில் தேசத்தை புதைத்தவர்கள் நாங்கள்.
எல்லாக் கதவுகளும் இறுக்கமாய்த் தாழிடப்பட்ட பின்னும், மிட்டாய்களோடு மட்டும் இன்னும் தொடர்கிறது எங்கள் சுதந்திர தின விழாக்கள்
குருட்டு மனசு…
கட்டுக்கட்டாய் திணிக்கப்பட்ட அறிவு மூளையின் மூலைகளிலும் குடைவிாிக்கும்.. இரத்தப் பாசனம் மட்டுமே செய்யும் இடப்பக்கம் இருக்கும் இதயப்பை… கணக்குகள் போட்டு காலண்டர் கிழிக்கும் சுருக்குப் பையாய் மரங்கொத்தி மனசு.
அறிவு இன்னும் வேண்டுமென்று ஒவ்வோர் செல்களுக்குள்ளும் தேனீக்களின் குடைச்சல்.
சேமிப்புக்கள் இல்லையேல் நாளைய வாழ்க்கை வழியோரத்தில் சிந்தக்கூடும்… எனவே உண்டியல்களை உதாசீனம் செய்யாதீர்கள். தெருமுனையெங்கும் வருங்காலத்துக்காய் வாி வாியாய் வழிமுறைகள்.
குழாய்த் தண்ணீர், மனைவியின் கண்ணீர் எனும் அன்றாடப் பிரச்சினைகளுக்கு காலத்தை முழுசாய் உயிலெழுதி முடித்த மனித உணர்வுகள்…
இப்படியே தொடரும் எங்கள் வாழ்க்கை… எப்போதேனும் தோல்விகள் முன்வாசலில் தாழிட்டால், முழங்கால்கள் முன்வந்து அர்ச்சனைத் தட்டு முன் மண்டியிட்டும்… கர்ப்பக்கிரகங்கள் முன் கன்னங்கள் நேர்ச்சையிடும்.
சோி கடக்கையில் மனசு சொல்லும்.. ‘நல்லவேளை.. அவனைப்போல் நானில்லை ‘… எப்போதேனும் பாவம் என்னைப்போல் அவனில்லையே என்று மெதுவாய் எழும் கேள்விகளை மென்று விழுங்கி மனசு வெற்றிடமாகும்.
நேரம் இருக்கிறதா ?
வாருங்கள் என் தோழர்களே…
கருப்பு அங்கி அணிந்து கிள்ளி வரப்பட்ட புள்ளிவிவரங்களும், கட்டம் போட்ட அட்டவணைகளும், அணைத்து வாதிடப்போக உங்களை நான் அழைக்கவில்லை…
நாடித்துடிப்பு பிடித்தெடுத்து, இரத்த வகைகளை நறுக்கி மாத்திரைப் பெயர்களைக் கிறுக்கும் மருத்துவர் வேலைக்கும் உங்களை அழைக்கவில்லை…
பாறைகளைப் புரட்டி, மலைகளைக்குடையும் மந்திரவாதி வேலைக்கும் அல்ல நான் உங்களை அழைப்பது… அது எனக்கும் வசதிப்படாது.
அறிவுகளை அடுக்கடுக்காய் அடுக்கி வைத்தவர் வேலைக்கு உங்களை அழைக்கமாட்டேன்…
தினவெடுத்த தோள்களின் வேலைக்கும் நான் உங்களை அழைக்கவில்லை…
எனக்குத் தேவை மனசு… கல்வியின் கரையான் கூட்டில் நாம் மறந்து விட்டுப் போன மனசு… பண்டமாற்றுப் பண்டங்களுக்காய் நாம் விற்றுத் தீர்த்த மனசு…
நான் உங்களை அழைத்தது நம் தேவைகளின் தேசத்துக்கல்ல… சேவைகளின் தேசத்துக்கு அசோகச் சக்கரத்துக்கு அவசரத்தேவை மனிதாபிமானம் எனும் அச்சாணியாம்.
ஒற்றைக்காலில் ஒரு தவம்…
அந்த பருத்தி வண்ண பட்டுக் கொக்கு ஓடையில் மெல்ல ஒற்றைக் காலூன்றி, வயிற்றுத் தவம் இருக்கிறது…
நீளமான அலகுகளை அவ்வப்போது நீாில் அலசி, கண்கள் இரண்டை தண்ணீாில் நீந்தவிட்டு நல்ல மீன் நடந்து வரட்டுமென்று நாக்கை ஈரப்படுத்தி காத்திருக்கிறது.
வெள்ளிச் சிமிழ்களை விளக்கி விட்டது போல் சின்னச் சின்ன மீன்கள் மெல்ல கொக்கின் கால்களைக் கொத்திக் கொத்தி கடந்து போனது.
கிளிகள் அமர்ந்த கிளைகள் மகிழ்ச்சியில் கிள்ளி விட்ட சில வெள்ளைப்பூக்கள் ஓடை நீாின் முதுகில் அமர்ந்து குதிரைச் சவாாி செய்து வந்தது.
பழுத்த ஓர் மஞ்சள் மாவிலை சிவப்பு எறும்பிற்குத் தோணியாய் மாறி சுய துடுப்பு செலுத்தி தாண்டிப்போனது.
வெண்கல நிறத்தில் சில விரால் மீன்கள் நீர்மூழ்கிக் கப்பல்களாய் நகர்ந்து மறைந்தன.
மெல்ல மெல்ல சிறகு நனைத்து அருவியோடு கதைபேசிக் கதைபேசி, கால் மாற்றிக் கால் மாற்றி வந்த வேலையை மறந்து இன்னும் ரசனை கொத்திக்கொண்டிருக்கிறது கொக்கு.