கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஓ இரவே -கவிதை -32
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
“குருதி ஆறுகள் ஒருநாள் ஒயின் மது ஓடும் நதிகளாய் ஆகிவிடும் ! பனித்துளிகளாய் ப் பூமி மீது பொழிந்த கண்ணீர்த் துளிகள் ஒருநாள் நறுமணப் பூக்களை விளைவிக்கும் ! இருக்கை விட்டுப் பிரிந்த ஆத்மாக்கள் ஒன்று கூடிப் பொழுது புலர்ச்சியின் புதுத் தொடு வானாய் அமையும். அப்போது மனிதன் நியாயத்தையும், நீதியின் காரணத்தையும் அடிமைச் சந்தையில் விலை கொடுத்து வாங்கி விட்டதாக உணர்வான். தனக்குள்ள உரிமைக்காக ஊழியம் செய்து செலவழிப்பவன் ஒருபோதும் தான் இழப்ப தில்லை என்று புரிந்து கொள்வான்.”
கலில் கிப்ரான். (The Giants)
++++++++++++++++++++++++++
<< ஓ இரவே >>
++++++++++++++++++++++++++
இரவுக் காதலரே ! நீவீர்
இளங் கவிஞர், பாடகரின்
இதய உணர்வை உசிப்பி விடுவீர் !
ஆன்மாக்கள், மர்மத்தின்
போலித் தோற்றத்தின் இரவே !
புனித நம்பிக்கை, நினைவுகளின்
மோக இரவே ! நீ ஓர்
பூத வடிவில் தோன்றி
மாயமாய்க் குள்ள மாக்குவாய்
மாலை முகில்களை !
காலையில்
ஆலயக் கோபுர மாக்குவாய்
அச்ச மென்னும் ஆயுதம் ஏந்தி
ஒளிநிலவைத்
தலைக் கிரீடமாய் அணிந்து
மௌனத்தை
முகத் திரை யாக்கி !
++++++++++++
ஆயிரம் விழிகளோடு
ஆழமாய் ஊடுருவி வாழ்வினை
ஆய்வு செய்கிறாய் !
ஆயிரம் செவிகளோடு
வாழ்வு அறுந்து
மரணத்தின் முணுமுணுப்பு
அரவத்தைக் கேட்கிறாய் !
சொர்க் கத்தின் விளக்கு
சுடரொளி பாய்ச்சு கிறது
உனது இருட்டறைக்கு !
பகற் பொழுதில் ஒளி வெள்ளம்
மூழ்க்கி விடும் நம்மை
பூமியின்
புரிவற்ற நிலையால் !
நித்திய வாழ்வின் நினைவச்சம்
விழிகளைத் திறந்து
நம்பிக்கை அளிக்கும் முன்பு
நாள் என்பது
நம்மைக் குருடாக்கி ஏமாற்றும்
அளக்கும் கோலோடும்
பருமப்
பரிமாணத் தோடும் !
****************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (July 5, 2010)
- வேத வனம்- விருட்சம் 94
- களம் ஒண்ணு கதை பத்து – 8 குற்றம் காப்பார்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 3
- கஷ்டப்படாமல் வெண்பா செய்யுங்கள்
- ரிஷியின் மூன்று கவிதைகள்
- இராக்கவிதை!
- உயிர் பிழைத்திருப்பதற்காக..
- கொஞ்சம் கண்பனித்துப் போ…
- விடுபட்டுப்போன மழை
- இரவில் உதயமாகும் சூரியன்கள்…
- பிறந்த மண்ணும் பெற்ற மகனும்
- நிலம் என்பது வெறும் எல்லைக்கோடுகளல்ல இரும்புக்கோட்டையுமல்ல
- ஒவ்வொரு ‘திராவிட’ செயலுக்குப் பின்னாலும் ஒரு ‘கிறுத்துவ’ ஆதரவு உண்டு – 2
- பரிமளவல்லி
- முள்பாதை 37
- பஸ் ஸ்டாண்ட்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஓ இரவே -கவிதை -32
- குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -3
- அவரவர் மனைவியர்
- வட்டம்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -12 – பாகம் -4
- ஹாஜி.E.குல்முஹம்மது – வாழ்நாள் சாதனையாளர் விருது
- தமிழ்ச்செல்வனின் திண்ணை கட்டுரை தொடர்பாக
- ஜூலை மாத நியூஜெர்ஸி கலாச்சார நிகழ்வுகள் அட்டவணை
- அற்புதமான திரைக்காவியம் – மதராச பட்டினம்
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -22
- கவிஞர்கள் போற்றிய கல்வி வள்ளல் அழகப்பர்
- செல்வராஜ் ஜெகதீசனின் “இன்னபிறவும்” கவிதை நூல் மதிப்புரை
- சம பாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – முன்னுரையும் முதல் பகுதியும்
- சுக்கிரன் வேக விண்கப்பல் நான்கு ஆண்டுகளாய் அனுப்பிய புது விஞ்ஞானத் தகவல் (Venus Express) (2006–2010) (கட்டுரை: 1)
- இவர்களது எழுத்து முறை – 1 – லா.ச.ராமாமிர்தம்