நறுமணமான பாடலொன்று

This entry is part [part not set] of 34 in the series 20101128_Issue

வருணன்



இறந்த பகலின்
சலனமற்ற பிரேதம் போல
அசைவற்ற இரவு
தனிமையில் காய்கிறது.
நிசப்தத்தில் கருக்கொண்டு
பிரவாகித்த மௌனத்தின் பாடல்
பாடப் பட்டது
பூக்கள் அவிந்த பொழுதின்
முந்தைய கணம் வரை
மறுகணமே பரவத் துவங்கியது
நறுமணமாய் போன பாடலொன்று.
jolaphysics@gmail.com
– வருணன்

Series Navigation

வருணன்

வருணன்