பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 53 << நீ வறுமைப் பெண் >>
ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
வறுமையில் பிறந்தவள் நீ
பெரு நாட்டின்
தென்னகத்தில் உன் குடிசை !
கரடு முரடான
குளிர்ந்து போன
பூகம்ப மேடு பள்ளம் அது !
வரப் பிரசாதமாய்
வந்தவை நமக்கு
தடுக்கி விழும் தெய்வங்கள்
மடிந்த பிறகு !
வாழ்க்கைக் கலைப்பாடம்
வடித்தது
களி மண்ணிலே !
++++++++++
கருமைக் களிமண்ணில்
உருவான
சிறு குதிரை நீ !
அருமைக் காதலியே !
கருஞ் சகதி முத்த மிட்ட
களிமண்
நாய்க் குட்டி நீ !
வீதிகள் வழியே பறந்த
வைகறை
மெல்லொளிப் புறா !
உண்டியல் கும்பாவில் கண்ணீர்
மண்டியது உன்
இளமை வறுமையில் !
+++++++++++
சின்னப் பெண்ணே !
நின் வறுமை வாழ்வை
உன் நெஞ்சுக் குள்ளே
ஒளித்து வைத்தாய் !
உன் பாதங்கள்
பாறைகளைக் கூராக்க
உதவும் !
உந்தன் வாய்
உணவும் இனிப்பும்
சுவைக் காதது
எப்போதும் !
++++++++++++
வறுமைத் தென்னகத்தில்
பிறந்தவள் நீ !
என் ஆத்மா வளர்ந்தது
அங்குதான் !
உயர் மேட்டில்
ஆடை துவைப்பாள்
உன் அன்னை
இன்னும்
என் தாயோடு !
ஆதலால்
நானுன்னைத் தேர்ந்தெடுத்தேன்
பேணும்
துணைவியாய் !
++++++++++++++
தகவல் :
1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.
2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA
3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia
***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (September 21, 2009)]
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -12
- அப்படியே….!
- விஸ்வரூபம் – ஒரு அறிவிப்பு
- நல்லாசிரியர்
- அணுவளவும் பயமில்லை
- கடற்பறவையின் தொழுகை
- தொலைக்காட்சி
- கண்ணோடு காண்பதெல்லாம்
- ஆயுதங்களால் போரிடுவது எளிதானது
- நாடகம் நிகழ்வு அழகியல் _வெளி ரங்கராஜன்
- அவிழ்க்கப்படாத சில முடிச்சுகள்
- பட்டாளத்து மாமா
- வேத வனம் விருட்சம் -51
- பணமா? பாசமா?
- விண்கோள்களின் சுற்று விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர் (1571-1630)
- அண்ணா – வேலுமணியின் வரைபடம்
- கடவுளிடமிருந்து பறிக்கப்பட்டவர்கள்
- ‘தேவனி’ன் நாவல் ‘கல்யாணி’
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு கவிஞனின் கூக்குரல் >> கவிதை -16 பாகம் -1 (மரணத்தில் எஞ்சியவை)
- சாகித்திய அகாதமி: ஆனந்தகுமாருக்கு சா அ பரிசு
- அப்துல் அஸீஸ் எழுதிய கட்டுரை, வஹாபி சிந்தனையின் நீட்சி
- முடிந்த முடிவாக இஸ்லாம் இருக்கிறது என்றும் வாதத்திற்கும், மருநோக்கல்களுக்கும் இடமில்லை என்பதைத் தெளிவு படுத்தியமைக்கு
- அறிவியல் புனைகதை:8 ஐஸ்வர்யா பாட்டியும் தமிழ் பேசும் கிளியும்
- சிங்கப்பூர் கவிமாலை விருது விழா
- PRESTIGE GROUP Presents “Katha Collage” & Ismat Apa Ke Naam – II
- நியூஜெர்ஸி பாரதி தமிழ் சங்கம் – தமிழ் வகுப்புகள்
- சிறப்புமிக்க படைப்பிலக்கியமானதொரு கட்டுரை: கி.ரா.’வின் ‘அண்ணாச்சி’
- தவறியவர்களுக்கு
- அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,
- விவேகனுக்கு எனது பதில்
- அப்துல் அஸீஸ் உலகம் தட்டை என்று சொல்கிறாரா?
- முத்துசாமி பழனியப்பன் கவிதைகள்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 53 << நீ வறுமைப் பெண் >>
- ரசனை
- நட்புடன் நண்பனுக்கு