பாப்லோ நெருடாவின் கவிதைகள் -42 << உன்னை நேசிப்பது எப்படி ? >>
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
விலை மிக்க அணிகலக்
கற்களாய் நீ இருப்பாய் என்றோ
ரோஜாக்
கணை அம்புகளைக்
கனல் மூலம்
அனுப்புவாய் என்றோ
நானுன்னை நேசிக்க வில்லை !
ஏதோ கறுப்பி ஒருத்தியாய்
நினைத்து
உனை நேசிக்கிறேன்
இரகசியமாய்
என் நிழலுக்கும் ஆத்மா வுக்கும்
இடையிலே !
பூவே ஒருபோதும் மலராத,
ஆயினும்
ஒளிந்துள்ள மலர்கள் ஏந்தி
நிமிர்ந்துள்ள
பூச்செடி போல் உன்னை
நேசிக்கிறேன் !
பூதளம் மேல் எழுந்து
கருமையாய் என் உடம்பில்
இருக்கும்
ஒரு நறுமணம் நாடும்
உன் இச்சைக்கு
நன்றி கூறுவேன் !
எப்படி யானவள் நீ,
எங்கிருந்தவள் நீ,
எப்போது வந்தவள் நீ
என்று அறியாமலே
உன்னை நான் நேசிக்கிறேன் !
கர்வப் படாமல்
சிக்கல் ஏதும் இல்லாமல்
நேர்மையாக நான் உன்னை
நேசிக்கிறேன் !
ஏனெனில் இவ்வழி தவிர எனக்கு
வேறெதுவும் அறியாததால்
நானுனை நேசிக்கிறேன் !
“எனக்கு” என்று எதுவும்
இருப்ப தில்லை
அது போல்
“உனக்கு” என்று ஒன்றும்
நிலைப் பில்லை !
அருகில்
என் நெஞ்சின் மேல் இருக்கும்
உன் கரம்
என் கைகள் தான் !
உன் கண்களும் மூடி விடும்
அண்டையில்
என் கண் மூடி நான்
விழும் வேளை !
(தொடரும்)
***************************
தகவல் :
1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.
2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA
3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia
***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (June 22, 2009)]
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – ஒன்பதாவது அத்தியாயம்
- நல்லது … கெட்டது.
- பேசும் மௌனங்கள்…
- மென்மையான உருளைக்கிழங்குகள்
- அவன்
- ஹேண்டில் பார்…
- ஒரு மனநோயாளியின் நாட்குறிப்பு – 1
- ஒரு மனநோயாளியின் நாட்குறிப்பு – 2
- பதிப்புரிமை, எழுத்தாளர்கள், சுரண்டலின் பல வடிவங்கள்
- வாணிமஹால்
- சுய நிர்ணயத்தில் வாழும் வாழ்வு ஒன்று – 1
- சுய நிர்ணயத்தில் வாழும் வாழ்வு ஒன்று – 2
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 7
- விளம்பரம்
- கண்ணீர்ப் பிரவாகம்
- வேத வனம் -விருட்சம் 39
- முத்துக் குளியல்
- கனவுப் பெண்ணின் புன்னகை
- மலை உச்சியில் கரையும் மரவீடுகள் ( குறுநாவல் பாகம் 1 )
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -42 << உன்னை நேசிப்பது எப்படி ? >>
- ஒரு கனவும் ….கனவு கொடுத்த ஆசைகளும்…….
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << காதல் கீதம் >> கவிதை -12 பாகம் -1
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -1
- நாற்பது ஆண்டுகள் கடந்து நாசா வெண்ணிலவை நோக்கி மீண்டும் விண்ணுளவச் செல்கிறது !
- விமர்சனக் கடிதம் – 4
- இன்னும் கொஞ்சம் … நட்புடன்!
- நகர மாந்தரும், நகர் பற்றிய அவர்தம் மனப்பிம்பங்களும், பேராசிரியர் ‘கெவின் லிஞ்ச்’ இன் நகரொன்றின் பிம்பக்’ கோட்பாடு பற்றிய புரிதலு
- சங்கச் சுரங்கம் – 20: மலைபடு கடாம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தொன்று
- கைத்தட்டி ஓர் உயிரை மீட்கலாமா? – ‘பசங்க’ திரைப்பட விமர்சனம்
- மீறும் பெண்மையின் சித்திரம் -(சல்மா கவிதைகளை முன்வைத்து)
- கி பி அரவிந்தன் நூல் வெளியீட்டு விழா
- அறிவியல் புனைகதை: நான் எங்கிருக்கிறேன்? நான் யார்?
- கவிதா ஜெயச் சந்திரன் -நேச குமாரின் கட்டுரைகளைப் பற்றி
- உன்னதம் சூன் மாத இதழ் இலங்கைச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.
- சொல்வனம் 26-06-2009 இதழின் உள்ளடக்கம்
- தொடக்கத்திலிருந்து வந்து தொலைகிறேன்