பாப்லோ நெருடாவின் கவிதைகள் -41 << காதலி இறந்தால் ! >>
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
திடீரென நீ வசிக்காமல்
போனால்
திடீரென நீ வாழாமல்
மாண்டால்
உயிரோடு வாழ வேண்டும்
நான் மட்டும் !
துணிவில்லை எனக்கு
எழுதிட !
துணிவில்லை எனக்கு நீ
இறந்து போவாய்
என்று சொல்ல !
வாழ்ந்திருக்க வேண்டும்
நான் மட்டும் !
ஏனெனில்
ஒரு மனிதனுக்கு உரிமை ஓசை
எங்கே இல்லையோ
அங்கே இருக்கும்
என் ஓசை !
கறுப்பர் அடிக்கப் படும்
நாட்டிலே
மரிக்கக் கூடாது
நான் மட்டும் !
என் சகோதரர் எல்லாம்
சிறைக்கு
ஏகும் போது நானும்
போக வேண்டும்
அவரோடு !
எப்போது வெற்றி யானது
எனது வெற்றியாக
இல்லாது
பெரிய வெற்றி கிடைத்தால்
ஊமையாய் இருப்பினும் நான்
பேச வேண்டும் !
குருடனாய் இருப்பினும் நான்
நோக்க வேண்டும் !
இல்லை என்னை மன்னிப்பாய் !
இனி நீ வாழாது போனால்
என் கண்மணி !
என்னருமைக் காதலி ! நீ
மரித்துப் போனால் என்
மார்பின் மீது
இலை தளைகள் பொழியும் !
மழை அடிக்கும் என் ஆத்மாவில்
பகலிரவாய் !
பனித் துளிகள் கொட்டி
எரிந்து போய் விடும்
என் நெஞ்சு !
சூட்டிலும், குளிரிலும்
இறப்பிலும் பனி மீதும்
தடம் வைத்து
உன் மரணத் தளம் நோக்கி
என் நடை இருக்கும் !
எல்லா வற்றுக்கும் மேலாக
எவராலும் கட்டுப்படுத்த
இயலாது
வாழ வேண்டும் நான்
தொடர்ந்து !
ஏனெனில் நீ விழைந்தாய்
அவ்விதம்
நானிருக்க வேண்டும்
என்று !
நானொருவன் மட்டும் இங்கே
மானிடன் இல்லை
எல்லா மாந்தரும்
என்னவராய் இருப்பதை நீ
அறிவாய்
அருமைக் காதலி !
(தொடரும்)
***************************
தகவல் :
1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.
2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA
3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia
***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (June 15, 2009)]
- இன்னும் சில வார்த்தைகள், நட்புணர்வுடன்
- அக்கா பையன் சுந்தரம்
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – எட்டாவது அத்தியாயம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பது
- ஒரு பெண்ணின் டைரி சொல்லும் கதை
- பேரழகியும்,அறபுநாட்டுப் பாதணிகளும் !
- மன்னிப்பு
- அறிவியல்கதை: வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா
- சட்டம் தெரியாத சட்ட அமைச்சர்!
- பருந்துகளும் என் வீட்டுக்கோழிக்குஞ்சும்
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 6
- பூவேந்திரன் ஹாங்காங்கில் நிகழ்த்திய 28 மணி நேர யோக சாதனை
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)<< மனிதனின் கானம் >> (முதற் பாகத் தொடர்ச்சி)கவிதை -11 பாகம் -2
- படைப்பு
- வேத வனம் -விருட்சம் 38
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -41 << காதலி இறந்தால் ! >>
- வாழ்வின் நீளம்
- இருளில் ஒளி?
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399)மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -7
- “முதலாவது பன்னாட்டுச் செவ்வியல் மாநாடு-2009”
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! பரிதி வடுக்களின் காந்த வீச்சுகள் பூமியில் பூகம்பத்தைத் தூண்டுமா ?
- வார்த்தை ஜூன் 2009 இதழில்
- Latest Information of Solar Cycle 24
- வெண்சங்கு
- சங்கச் சுரங்கம் – 19: ஆடுகள மகள்
- நிலத்திற்கு மேலே நடப்பவர்களின் கதை
- விசுவாசம்
- ட்ரேடு
- “உண்மை இல்லாத புனைவு எது?”
- வசதி போலப் பொருள் கொள்ளவா சொற்கள்?
- ‘வலக்கர விளக்கம்’
- இஸ்லாம் : திண்ணை விவாதங்கள்
- சொல்வனம் என்ற புதிய மாதமிருமுறை இணைய இதழ்
- உலகத் திருக்குறள் பேரவையின் மூன்றாவது மாநில மாநாடு
- பதவி உயர்வு
- ‘உலகக் கிராமத்து’ மக்களே!