அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 10 – இறுதியில்

This entry is part [part not set] of 41 in the series 20110102_Issue

ஜான் ஹார்ட்டுங்


இறுதியில் எல்லாம் வெளிவந்துவிடுகின்றன

பவுலின் வரலாற்று ரீதியான திருத்தல் வாதத்தை ஒதுக்கிவிட்டாலும், இயேசுவின் திட்டம், அவரது செய்தி, அவரது தீர்க்கதரிசனம் எல்லாம் மறுபடியும் ஜானின் வெளிப்படுத்தின விஷேசத்தில் (Revelation to John) மறுபடியும் வெளிவருகின்றன.

He who conquers and who keeps my works until the end, I [Jesus] will give him power over the nations and he shall rule them with a rod of iron, as when earthen pots are broken in pieces, even as I myself have received power from my Father (2:26-27) …
26. ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.
27. அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள்.
And I [John] heard the number of the sealed, a hundred and forty-four thousand sealed, out of every tribe of the sons of Israel (7:4) …
4. முத்திரைபோடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக்கேட்டேன்; இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரைபோடப்பட்டவர்கள் இலட்சத்துநாற்பத்து நாலாயிரம்பேர்.

they were told not to harm the grass of the earth or any green growth or any tree, but only those of mankind who have not the seal of God upon their foreheads; they were allowed to torture them for five months, but not to kill them (9:4-5).
4. பூமியின் புல்லையும் பசுமையான எந்தப் பூண்டையும் எந்த மரத்தையும் சேதப்படுத்தாமல், தங்கள் நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷரைமாத்திரம் சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது. 5. மேலும் அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்படாமல், ஐந்துமாதமளவும் அவர்களை வேதனைப்படுத்தும்படிக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது; அவைகள் செய்யும்வேதனை தேளானது மனுஷரைக் கொட்டும்போது உண்டாகும் வேதனையையைப்போலிருக்கும்.

இயேசுவின் தேவதைகள் கோயிம்மை (யூதரல்லாதவர்களை) கொல்ல முடியாது. ஏனெனில் டேவிடின் ராஜ்யம் மீண்டும் இஸ்ரேலில் ஸ்தாபிக்கப்பட்டபின்னால், இந்த கோயிம்கள்தான் மற்ற நாடுகளை ஆக்கிரமித்து அந்த நாடுகள் இஸ்ரேலுக்கு கப்பம் கட்டும்படி செய்வார்கள். ஆனால், முழந்தாளிட்டு தனது மகளை காப்பாற்ற கெஞ்சிய கானானிய பெண்ணைப்போல இவர்கள் ஆகவேண்டுமென்றால், இவர்களை கொஞ்சம் அடித்து மென்மையாக்க வேண்டும்.

இயேசுவிடம் சொந்தமாக ஒரு இரும்புத்தடி இருக்கும். அவரது கைகள் வேறு வேலை பார்த்துகொண்டிருப்பதால், இது ஒரு கத்தி மாதிரி அவரது வாயிலிருந்து வெளியே வந்திருக்கும் (19:14-16):

From his mouth issues a sharp sword with which to smite the nations, and he will rule them with a rod of iron; he will tread the wine press of the fury of the wrath of God the Almighty. On his robe and on his thigh he has a name inscribed, King of kings and Lord of lords.
15. புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது; இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார்.

புனித திரித்துவத்தின் அற்புதம் – இயேசு ஒரே நேரத்தில் தெய்வமாகவும் மனிதனாகவும் – இருப்பதால், ஒரே நேரத்தில் டேவிடின் வாரிசாக பூமியின் (அரசர்களுக்கெல்லாம் அரசராக) இருப்பார். அதே நேரத்தில் சொர்க்கத்திலும் (தேவர்களுக்கெல்லாம் தேவனாகவும் ) இருப்பார். அவரது தந்தையாரை என்ன செய்வது என்ற சிக்கலுக்கு விடையாக அது நம்பிக்கைக்குரிய ஒரு விஷயமாகி அவரும் அவரது தந்தையாரும் ஒரே ஆள்தான் என்று விடைசொல்லப்படுகிறது.

இந்த வெளிப்படுத்தின விஷெசத்தை மற்றவர்களது விளக்க் உரை இல்லாமல் படிக்கும்படிக்கு பாதிரியார்களை பல சாதாரண கிறிஸ்துவர்கள் கேட்டிருக்கிறார்கள். 144000 பேர்கள் என்பது 2000 வருடங்களுக்கு முன்னால் பெரிய நம்பராகத்தான் இருந்திருக்கும். இப்போது அந்த இடமெல்லாம் நிறைந்துவிட்டதா? வரப்போகும் டேவிடின் ராஜ்ஜியத்தில் இன்னும் இடம் இருக்கிறதா? துரதிர்ஷ்டவசமாக இந்த கேள்வி இயேசுவின் செய்தியை முழுக்க தவறாக புரிந்துகொண்டு எழுப்பப்பட்டுள்ளது. தேவனின் ராஜ்ஜியத்தில் யூதரல்லாத கிறிஸ்துவர்களுக்கோ அல்லது யூதராக இருக்கும் யூதர்களுக்கோ எந்த இடமும் இல்லை. ஒரிஜினல் உள்குழு உறுப்பினர்களுக்கு மட்டுமே இந்த ரிசர்வேஷன். அதாவது இஸ்ரேலில் இருந்து இயேசுவை நம்பிய யூதர்கள் மாத்திரமே. ஆகவே இன்னும் இந்த லிஸ்டில் இடம் இருக்கிறது என்பது ஒரு நல்ல செய்தி. அதாவது இன்னும் 143000 இடங்கள் இருக்கும்.

ஒரிஜினல் ஒப்பந்தம்(பழைய ஏற்பாடு) ஒரு தனித்த ஒப்பந்தம். சரியாக தன்னை கும்பிடவில்லை என்றால் அவர்களை அழிக்கப்போகிறேன் என்று அவ்வப்போது மிரட்டினாலும், யூதர்கள்தான் தனது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்ற உறுதிப்பாட்டிலிருந்து ஒரு போதும் விலகியதில்லை. புதிய ஒப்பந்தம்( புதிய ஏற்பாடு) என்பது ஒரிஜினல் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களான யூதர்களுக்கு அவர்களது பேரரசை நிர்மாணிக்க வந்த மெஸையாவை பின்பற்றும் யூதர்களுக்குத்தான். பவுல் தனது திட்டத்தை பன்றிகளிடம் கொண்டுசெல்கிறார் என்று தெரிந்திருந்தால், இயேசு தன் கல்லறையில் புரண்டிருப்பார்.

இயேசுவின் செய்தியாக பவுல் சொன்னது எல்விஸ் பிரஸ்லி கார்ல் பெர்கின்ஸின் பாடிய ”புளூ ஸ்வேட் ஷூஸ்” தான் பாடி புகழ்பெற்றது போன்றது. (கார்ல் பெர்கின்ஸ் பாடிய புளூ ஸ்வேட் ஷூஸ் என்ற பாட்டு எல்விஸ் பிரஸ்லி பாடியதால்தான் புகழ்பெற்றது) பவுல் குறி வைத்த யூதரல்லாத கிறிஸ்துவர்கள் வெகுவிரைவில் சக்தி வாய்ந்த புதிய உள்குழுவாக ஆனார்கள். யூத மதத்தை போலன்றி, வெளிக்குழு உறுப்பினர்கள் உள்ளே வர ஊக்குவிக்கப்பட்டார்கள். அல்லது உள்ளே வர கட்டாயப்படுத்தப்பட்டார்கள். சட்டதிட்டங்களை பின்பற்றுவதன் பயன் சொர்க்கத்தில் கிடைக்கும். வானத்தில் கிடைக்கும் அல்வா என்பதுதான் பவுலின் கொக்கி. அதே நேரத்தில் இந்த வாழ்வில், போரிலும் தசமபாகங்களிலும் கிடைக்கும் பங்கு பாரபட்சத்துடன் மிக அதிகமாக அரசாங்க அதிகாரிகளிடமும் சர்ச் அதிகாரிகளிடமும் சேரும். பெரும்பாலும் இந்த இருவரும் ஒருவரே. கீத்( Keith 1947, p. 65; cf Alexander 1987:175): இதனை அழகாக விளக்குகிறார். “சமாதானப்பிரபு மேலாதிக்கம் செலுத்தும் உலகப்பகுதி தேசியவாதத்தின் விளைநிலமாக இருந்தது. இங்குதான் கடுமையான போர்கள் தீராவியாதியாக இருந்தன. கிறிஸ்துவம் தேசியவாதத்தை அடக்கவில்லை. மாறாக, தேசியவாதம் கிறிஸ்துவத்தை தனக்கு ஒரு கருவியாக ஆக்கிக்கொண்டது”

முரணாக, நல்ல கிறிஸ்துவராக இருந்த கீத், கிறிஸ்துவத்தின் ஒரிஜினல் சிற்பியே தேசியவாதத்திற்காகத்தான் கிறிஸ்துவத்தையே உருவாக்கினார் என்பதை புரிந்துகொள்ளவில்லை. தற்போதைய கிறிஸ்துவர்கள், சிலுவைப்போர்களிலும், ஸ்பானிஷ் மதவிசாரணை(Inquisition)களிலும் கிறிஸ்துவம் ஒரு கருவியாகத்தான் செயல்பட்டது என்பதை புரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அமெரிக்கர்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு உருவாக்கம் கொடுத்த மூத்த தலைவர்கள் அமெரிக்காவை கடவுளின் புது இஸ்ரேலாகத்தான் கருதினார்கள் என்பதை மறந்துவிடுகிறார்கள். (Cherry 1971)

அமெரிக்கா மற்றெந்த நாட்டை விடவும், புராதனமான இஸ்ரேலுக்கு அருகே ஒப்பிடத்தகுந்தது என்பதை பலரும் குறித்திருக்கிறார்கள். ஆகவே ”நமது அமெரிக்க இஸ்ரேல்” அடிக்கடி உபயோகப்படுத்தப்பட்டது, இது பொதுவாகவும், சரியானதாகவும் இருக்கிறது. (Abiel Abbot, Thanksgiving sermon, 1799).(10)

ரெவரண்ட் அப்பாட்டின் உவமை ஒரு காலனியாதிக்க உச்சக்கட்டத்தின் உள்குழு ஒழுக்கத்தின் உதாரணமாக இருக்கும் அமெரிக்காவுக்கு மிகவும் சரியானதும், பொருந்தக்கூடியதுமாகும். செகோயவாதா (“Red Jacket,” என்று அழைக்கப்பட செனகா செவ்விந்திய பழங்குடியினரின் தலைவர்) ரெவரண்ட் கிராம் என்ற பாஸ்டன் மிஷனரி சொசைட்டி பாதிரியாரிடம் 1805இல் சொன்னதை பாருங்கள்.

பரமாத்மா (great sprit) ஒப்புக்கொள்ளும் வகையில் எப்படி அதனை வணங்குவது என்பதை எங்களுக்கு சொல்லித்தர நீங்கள் வந்துள்ளீர்கள் என்று சொல்கிறீர்கள். வெள்ளைக்காரர்களான உங்களது மதத்தை நீங்கள் சொல்லித்தருவதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நாங்கள் வருந்துவோம் என்று சொல்கிறீர்கள். நீங்கள்தான் சரி என்றும் நாங்கள் தொலைந்துபோனவர்கள் என்றும் சொல்கிறீர்கள். இது உண்மை என்று எங்களுக்கு எப்படி தெரியும்? உங்களது மதம் ஒரு புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது என்று நாங்கள் புரிந்துகொள்கிறோம். உங்களைப்போலவே எங்களுக்கும் இதுதான் புத்தகம் என்று நீங்கள் சொல்வது உண்மையென்றால், பரமாத்மா ஏன் எங்களுக்கு இதனை கொடுக்கவில்லை? எங்களுக்கு மட்டுமல்ல, எங்கள் மூதாதையருக்கும் இந்த புத்தகத்தின் அறிவு எப்படி புரிந்துகொள்ளப்படவேண்டுமோ அது போல புரிந்துகொள்ளும்படி கொடுக்கப்படவில்லை? நீங்கள் அதனை பற்றி எங்களிடம் என்ன சொல்லுகிறீர்களோ அதனை மட்டுமே அறிவோம். அடிக்கடி வெள்ளைக்காரர்களால் ஏமாற்றப்பட்டிருக்கும் நாங்கள் எதனை நம்புவது என்று நாங்கள் எப்படி அறிவோம்?

சகோதரரே, பரமாத்மாவை வணங்கவும், அதற்கு சேவகம் செய்யவும் ஒரே ஒரு வழிதான் இருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஒரே ஒரு மதம்தான் இருக்கிறது என்றால், வெள்ளைக்காரர்களான நீங்களே ஏன் அதில் இத்தனை வித்தியாசங்களை வைத்துகொண்டிருக்கிறீர்கள்? உங்கள் எல்லோராலும் ஒரே புத்தகத்தை படிக்க முடிகிறபோது நீங்கள் ஏன் ஒத்துப்போகக்கூடாது?

சகோதரரே, பரமாத்மா(Great Spirit ) நம் எல்லோரையும் படைத்தது. நாங்கள் உங்களது மதத்தை அழிக்க விரும்பவில்லை. அதனை உங்களிடமிருந்து எடுக்கவும் விரும்பவில்லை. நாங்கள் எங்களது மதத்தை அனுபவிக்கவே விரும்புகிறோம். எங்களது நிலத்தை பறித்துக்கொள்ளவோ அல்லது எங்களது சொத்தை அபகரிக்கவோ வரவில்லை என்றும் எங்களுக்கு அறிவூட்டவே நீங்கள் வந்துள்ளதாகவும் நீங்கள் சொல்கிறீர்கள். இந்த இடத்தில் இருக்கும் வெள்ளைக்காரர்களிடம் நீங்கள் போதித்துகொண்டிருக்கிறீர்கல். இந்த மக்கள் எங்களுடைய அண்டைவீட்டுக்காரர்கள். எங்களுக்கு அவர்களை நன்றாக தெரியும். இன்னும் சிறிது நேரம் காத்திருந்து உங்களது போதனை அவர்களிடம் என்ன மாறுதலை உருவாக்குகிறது என்று பார்க்கப்போகிறோம். உங்களுடைய போதனை அவர்களுக்கு நல்லது செய்யுமானால், அவர்களை நேர்மையானவர்களாக ஆக்குமானால், இந்தியர்களை அவர்கள் ஏமாற்றுவதை குறைக்குமானால், அப்போது நீங்கள் சொன்னதை நாங்கள் கூர்ந்து யோசிப்போம்.

சகோதரரே, உங்களுடைய பேச்சுக்கு எங்களது பதிலை கேட்டீர்கள். இதுதான் உங்களிடம் சொல்ல எங்களிடம் இருப்பது. நாம் இப்போது பிரியப்போகிறோம். நாங்கள் உங்களது கரங்களை பற்றி பரமாத்மா உங்களை பாதுகாக்கவும், உங்களது பயணங்களில் துணை இருக்கவும், உங்களை உங்களது நண்பர்களிடம் கொண்டு சேர்க்கவும் நம்பிக்கை வைக்கிறோம்.

ஸ்டெட்மன், ஹட்சின்சன் ஆகியோர் அடுத்து நடந்தது என்ன என்று விவரிக்கிறார்கள்:

இந்தியர்கள் மிஷனரியை அணுகவும், மிஷனரி அவசரமாக தன் இருக்கையிலிருந்து எழுந்து, அவர்களது கரங்களை பற்றமுடியாது என்று பதிலிறுத்தார். கடவுளின் மதத்துக்கும் பிசாசின் வேலைகளுக்கும் இடையே ஒருபோதும் சகோதரத்துவம் இருக்கமுடியாது என்றார்.

இது இந்தியர்களிடம் அவர்களது மொழியில் விளக்கப்பட்டது. அவர்கள் புன்னகைத்தார்கள். பிறகு அமைதியாக வெளியேறினார்கள்.

Deuteronomic Deja Vu
திரும்பவும் வரும் உபாகமம் (Deuteronomy)

இங்கே இருக்கும் பழங்குடியினரை கொன்றபின்னர், தூர தேசங்களிலிருந்து அடிமைகளை கொண்டுவரும் நடைமுறை கடவுளின் புதிய இஸ்ரவேலர்களிடம் இல்லாமலில்லை. ஏற்கெனவே இங்கே இருந்ததால், செவ்விந்தியர்களை ஆப்பிரிக்கர்களை செய்தது போல, வேர்களிலிருந்து பிடுங்கி உலகத்தின் இன்னொரு பகுதிக்கு கொண்டு சென்று அங்கு அவர்களை அடக்குமுறை மூலம் அடிமைகளாக்கமுடியவில்லை. மறுபடியும், குழு ஒழுக்கம் தனது மேஜிக்கை செய்தது. ஆப்பிரிக்க அடிமைகளை மதம் மாற்றுவதற்கு முன்னால், அவர்களை சரியாக சமாளித்து வேலை வாங்கமுடியவில்லை. அவர்கள் ஒளியை பார்த்தபின்னால், குழுவின் அடித்தளதட்டில் சங்கிலி போட்டு கட்டி வைத்து நன்றாக வேலை வாங்கமுடிந்தது (Maier, 1993):

அமெரிக்காவில் பிறந்த எஜமானர்கள், ஆப்பிரிக்காவில் பிறந்தவர்களை விட அமெரிக்காவில் பிறந்த அடிமைகளிடமே அதிக ஆர்வம் கொண்டார்கள். ஆப்பிரிக்காவில் பிறந்த அடிமைகள் கட்டுப்படுத்தமுடியாதவர்களாகவும் கடுமையான தண்டனைக்கு மட்டுமே ஒழுங்குக்கு வருபவர்களாகவும் இருந்தார்கள். மெதுவாக, “எஜமானர்களிடம் அடிமைகளுடனான தொடர்பு மாறுபாடு அடைய ஆரம்பித்தது. அடிமைகளின் வாழ்வுக்கு அக்கறைப்பட ஆரம்பித்தார்கள். முன்பு அடிமைகள் கிறிஸ்துவர்களாக ஆகக்கூடாது என்று இருந்த எதிர்ப்பு குறைந்தது. வேறு அடிமை முறைகளில் இல்லாத அளவுக்கு எஜமானர்கள் அடிமைகளின் வாழ்வில் குறுக்கிட்டார்கள். அதே நேரத்தில் தங்களது அடிமை “குழந்தைகள்” சுதந்திர எண்ணம் வராமல் இருக்கவும், அப்படி வந்தால் அதனை கடுமையாக எதிர்க்கவும் எஜமானர்கள் முனைந்தார்கள்.

நவீன இஸ்ரேலின் கடுமையான விமர்சகரான பாட்ரிக் புகானன் (என்ற அமெரிக்க அரசியல்வாதி) “நமது அமெரிக்க இஸ்ரேல்”இடம் எந்த விதமான விமர்சனமும் இன்றி சந்தோஷமாக இருப்பார். அடிமைகளை வைத்திருந்த எஜமானர்களிடமிருந்து ரெவரெண்ட் க்ராம் வரைக்கும் பாட்ரிக் புக்கானனின் நேரடியான வார்த்தைகள் பாராட்டப்பட்டிருக்கும்.: “நமது கலாச்சாரம் மேன்மையானது. ஏனெனில் நமது மதம் கிறிஸ்துவம். அதுதான் உண்மையானது. அந்த உண்மையே மனிதர்களை சுதந்திரமானவர்களாக ஆக்குகிறது”

Freedom, Fidelity, and Evil
சுதந்திரம், விசுவாசம், தீமை

மத சுதந்திரத்தை பற்றி விவாதித்த நகைச்சுவை பேச்சாளரும், மத ஆராய்ச்சியாளருமான ஸ்டீவ் ஆலன்(Steve Allen (1990, p. xxix)) சொன்னார், “என்னுடைய கரங்களை வீசுவதற்கான சுதந்திரம் அடுத்தவரின் மூக்கு வரைக்கும்தான்” ஆலன் சரியாகத்தான் சொன்னார். ஆனால், மதசுதந்திரத்தின் அப்பாவி ஆதரவாளர்கள் “ஒழுக்கரீதியில் தீய பகுதியை”(Keith, 1947, p. 10) கண்டுகொள்வதில்லை. ஒழுக்கரீதியில் தவறான போதனைகள் இல்லை என்றும், மத நம்பிக்கையாளர்கள் கெட்டவற்றை ஒதுக்கி நல்லவற்றை மட்டுமே எடுத்துகொள்வார்கள் என்றும் நினைக்கிறார்கள். இதுவும் தவறானதுதான். யூத கிரிஸ்துவத்தின் அடித்தளமான தன்னைத்தானே ஏமாற்றிகொள்வதை இது உள்ளே வைத்துள்ளது. இதனைத்தான் தாமஸ் பெயின் எச்சரிக்கிறார்.

விசுவாசமின்மை என்பது நம்புவதோ நம்பாமல் இருப்பதிலோ இல்லை. எதனை நம்பவில்லையோ அத்னை நம்புவதாக கூறிக்கொள்வதில் இருக்கிறது. இப்படிப்பட்ட மனப்பொய் உலகில் உருவாக்கிய ஒழுக்கரீதியிலான பிரச்னைகளை கணக்கிட முடியாது. தன்னுடைய மனத்தையே விபச்சாரம் செய்து, தன்னைத்தானே ஏமாற்றிகொண்டு தான் நம்பாதவற்றையே தான் நம்புவதாகவும், மற்றவர்களும் நம்பவேண்டும் என்றும் பேசிய்தால், உலகத்தில் உள்ள எல்லா குற்றங்களுக்கும் தன்னைத்தானே தயாராக்கிகொண்டுவிட்டான்.

”தாங்கள் நம்பாததையே நம்புவதாக கருதிகொள்ளுவதாலும்”, “எதை நம்புகிறார்களோ அதனை விளக்க்கக்கூட தெரியாமல் இருந்தாலும் அதனை மிகவும் ஆழமாக நம்புவதாலும்” (Williams, 1994), தற்காலத்திய கிறிஸ்துவர்களும் யூதர்களும், தங்களை அறியாமலேயே உள்குழு ஒழுக்கத்தை ஆதரிக்கிறார்கள். அவர்களே சரியாக படிக்காமல் இருந்தாலும், விவிலியத்தை உலகப்பொதுமறையாகவும் ஒழுக்கத்தின் ஒரே ஊற்றுக்கண்ணாகவும் அவர்கள் கருதுவதன் மூலம் அப்படிப்பட்ட உள்குழு ஒழுக்கத்தை பேணுகிறார்கள். அவர்கள் படித்து ஆராயந்து அதன் மூலம் இது உலகத்தின் ஒழுக்கத்தின் ஊற்றுக்கண் என்று கருதியிருந்தால் பரவாயில்லை. இது தலைகீழாக இருக்கிறது. விவிலியத்தை நம்புபவர்கள் மிகக்குறைவானவர்களே விவிலியத்தை ப்டித்திருக்கிறார்கள். உண்மையான யூத மதமும் உண்மையான கிறிஸ்துவமும் விவிலியத்தில் உள்ளதற்கு வெளியே இருக்கிறது என்று வாதிடுவது போன்றது.

இனப்படுகொலையை வெறுப்பதற்கும், இனப்படுகொலை செய்யும்படி தன்னை பின்பற்றுபவர்களை தூண்டும் தெய்வத்தை வணங்குவதற்கும் பெரும் முரண்பாடு இருக்கிறது. ஒரு மதத்தை பின்பற்றுகிறார்கள் என்பதற்காக அவர்களை பாரபட்சமாக நடத்துவதை எதிர்த்து பெரும் கூக்குரல் இடுவதற்கும், அதே நேரத்தில் , சொந்த மதப்புத்தகத்தில் மற்ற மதங்களை பின்பற்றுபவர்களை கொல்லவேண்டும் என்றும், அவர்களுக்கு நரகம் என்று கூறுவதையும் நம்புவதும் பெருத்த முரண்பாடு இருக்கிறது. ஆனால், மனிதர்களுக்கு தீமை செய்ய தனித்த திறமை இருக்கிறது. தீமையை நல்லது என்று காட்டினால், தவறை சரியென்று காட்டினால், அநீதியை நீதி என்று காட்டினால், வெறுப்பை அன்பு என்று காட்டினால், பிறகு உள்குழு ஒழுக்கத்தை பேணும் மதங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் (அவர்கள் சரிதான் ஆனால் அவர்களை திருமணம் செய்யவேண்டாம்) என்று போதிக்கும் மதங்கள் அனைத்தும் தீமைகளே. தங்களை புராடஸ்டாண்டாகவும், கத்தோலிக்கர்களாகவும், சீர்திருத்த கிறிஸ்துவமாகவும், பெந்தகொஸ்தேவாகவும், சுய அடையாளத்தை பேணும் இவர்கள் அனைவரும் உள்குழு ஒழுக்கத்தை பேணி மற்றவர்களை தீயவர்களாகவே சித்தரிக்கின்றனர்.

உள்குழு ஒழுக்கத்தின் வரைபடமே பைபிள். குழுவுக்கு வெளியே இருப்பவர்களை இனப்படுகொலை செய்யவும், அவர்களை அடிமைப்படுத்தவும், உலகத்தை அடக்கி ஆளவுமான ஒரு முழு செய்முறைகளும் கொண்ட புத்தகம். அதின் உள்ளே இருக்கும் கொடூரம், கொலை செய்வதை பாராட்டுவது, கற்பழிப்பை விதந்தோதுவது ஆகியவற்றினாலும் அதன் வெளிப்படையான நோக்கங்களாலும் பைபிளை ஒரு தீய புத்தகம் என்று சொல்லமுடியாது. ஏனெனில் பழங்காலத்திய பல புத்தகங்கள் இதனைத்தான் செய்கின்றன. இலியத், ஐஸ்லாந்தின் வீரதீரக்கதைகள், சிரியாவின் பழங்காலக்கதைகள், தென் அமெரிக்க மாயாக்களின் கல்வெட்டுகள் ஆகியவையும் இதனைத்தான் சொல்கின்றன. ஆனால், யாரும் ஐஸ்லாந்தின் வீரதீரக்கதைகளையோ அல்லது இலியத்தையோ ஒழுக்கத்தின் அடித்தளம் என்று விற்பதில்லை. ஒரு ஓநாய் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் சிறியதாக இருந்தாலும் தீயதல்ல. மாறாக, ஆட்டின் தோலை போர்த்திகொண்ட ஓநாய் பரிசுத்தமான தீயது. இங்கேதான் பிரச்னை உள்ளது. உலக மககள் எப்படி வாழவேண்டும் என்பதற்கான கையேடாக பைபிள் விற்கப்படுகிறது; வாங்கப்படுகிறது. உலகத்தில் மிக அதிகமாக விற்கப்பட்ட புத்தகம் அதுதான். ஆனால், பைபிளை உலகளாவிய பொது ஒழுக்க கையேடாக ஆகும் முயற்சி நடக்கமுடியாதது. ஏனெனில் வாய்வழியாக சொல்லப்பட்ட கதைகளும், தலைகீழாக மாறும் ஒழுக்கங்களும், பல தலைமுறைகள் கடந்த பின்னர் தலைகீழாக மாறும் கதைகளும், பழங்காலத்தியது என்ற ஒரே காரணத்தால் அதிகாரப்பூர்வமானது என்ற அந்தஸ்தை கோரும் கதைகளும், வக்கிரங்களும், சிக்கலானவற்றை உதறிவிட்டு போகும் கதைகளும், அதிகபட்சமாக அதிகமான மக்களை அதிகமான காலத்துக்கு ஏமாற்றத்தான் முடியும்.

Where Will It End?
எப்போது இது முடியும்?

இன்னொருவர் மீது அட்டை போல ஒட்டிக்கொள்ளவோ எதிர்த்து நிற்கவோ எதிரிகள் இல்லை என்றால் இப்படிப்பட்ட உள்குழுக்கள் சிதறி காணாமல் போய்விடுகின்றன என்பதற்கான ஏராளமான உதாரணங்களை வரலாறு காட்டுகிறது. பலூனுக்குள் காற்றடித்து அதனை காற்றழுத்தம் இல்லாத வேக்குவம் அறையில் வைத்தால் வெடித்துவிடும். யூத ஏஜென்ஸி (Jewish Agency) யின் தலைவரான அவ்ரஹம் பர்க் இந்த பிரச்னையை கண்டறிந்து வெளிப்படையாகவே கூறினார் (Haberman, 1995): “உண்மையான சமாதானம் இஸ்ரேலுக்கு வந்துவிட்டால், அப்போது நாம் கேட்கவேண்டிய கேள்வி இதுதான்: வெளியில் எதிரி இல்லாமல் நாம் வாழமுடியுமா? எப்படி வாழ்வது?”

பரிணாமவியலாளர்கள் உள்குழு ஒழுக்கத்தை பொது ஒழுக்கமாக மாற்றகூடிய மாதிரியை கண்டறியமுடியவில்லை. ஏனெனில், உள்குழு ஒழுக்கம் குழு தேர்வின் மூலம் பரிணாமவியல்ரீதியாக உருவாவதல்ல. அதில் சுயலாபம் இல்லாத பரோபகாரம் இல்லை. அய்ர்ன்ஸ் (Irons 1991) சொல்வது போல, “பரிணாமவியல் ரீதியில் உருவான பரோபகாரம் அனைத்தும் அதில் லாபம், பிரயோசனம் ஆகியவற்றை கொண்டே அளவிடமுடியும். அதற்கு எவ்வளவு விலை கொடுக்கிறதோ அதனை விட பலன் அதிகமாக இருக்கவேண்டும். அது பரோபகார ஜீன்கள் அதிகரிக்கவேண்டும்” ஒரு குழு இன்னொரு குழுவோடு போட்டியில் தோற்றுவிட்டால், உள்குழு ஒழுக்கத்தை பேணுவதன் பிரயோசனத்தை அந்த குழு உறுப்பினர்கள் இழக்கிறார்கள். அதே போல, முரண்நகையாக, ஒரு குழு எல்லா எதிர்க்குழுக்களையும் வெற்றிகொண்டுவிட்டாலும், தொடர்ந்து உள்குழு ஒழுக்கத்தை பேணுவத்ன் பிரயோசனத்தை இழக்கிறார்கள். ஏனெனில் உள்குழு ஒழுக்கத்தை பேணுவது குழுவுக்கு வெளியே இருப்பவர்களது விலையில்தான் நடக்கிறது. இதனை அலெக்ஸாந்தர் (Alexander (1987, p. 261) விவரிக்கிறார்:

மனிதர்களில் மட்டுமே, குழுக்களுக்கு இடையேயான போட்டி, போர்கள் ஆகியவை சமூக இருப்பின் ஆக்க சக்திகளாகவும் மைய கருதுகோள்களாகவும் இருக்கின்றன. மனிதர்கள் மட்டுமே எதிரெதிர் பக்கத்தில் இருக்கும் பல மில்லியன் மக்களது கூட்டுழைப்பின் மூலம் தடைசெய்யப்படாத ஆயுதப்போட்டியில் இறங்கினார்கள்.

இந்த உண்மைகளே, தனிப்பட்ட மக்கள் ஏன் சகோதர மனிதர்களை எதிரிகளாகவும் போட்டியாளர்களாகவும் அவர்களை ஏமாற்றவும் உபயோகப்படுத்திகொள்ளவுமான மனிதர்களாக கருதுகிறார்கள் என்பதை விளக்குகின்றன என்று கருதுகிறேன். இந்த விஷயங்களே, ஏன் மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் ஒத்துழைக்கிறார்கள் அதுவும் பெரிதாகும் சமூக அளவிலும் சிக்கலான அமைப்புகளிலும், அதுவும் தங்க்ளைத்தாங்களே ஏமாற்றிகொள்ளவும் முனைகிறார்கள் என்பதை விளக்கமுடியும்.

எப்ப்டியானாலும் இழப்பை தரும் இந்த சிக்கலான அமைப்பை, வெளிக்கிரகமொன்றிலிருந்து வரும் ஆக்கிரமிப்பு மட்டுமே தடுக்கமுடியும். ஏனெனில் இது மக்களை ஒரே தரப்பில் நிறுத்தி வெளிக்கிரகவாசிகளை பொதுவான எதிர்குழுவாக ஆக்கும். அது நடைபெறாத பட்சத்தில் நாம் பொது ஒழுக்கத்துக்கு செயற்கையான அடித்தளங்களை அமைக்க வேண்டும்.

நம்மை நாமே அணு ஆயுதப்போரிலோ அல்லது சுற்றுச்சூழல் நசிவிலோ தற்கொலை செய்துகொள்ளும் திறமை ஏறத்தாழ வெளிக்கிரகத்திலிருந்து வரும் ஆக்கிரமிப்புக்கு ஒத்ததுதான். நம்மால் இந்த பிரச்னைகளை உணர்ந்து நம்மை ஒற்றுமைப்படுத்தி நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ளமுடியுமா என்பது வரலாற்றாளர்களும், சுற்றுச்சூழல் ஆய்வாளர்களும் ஆராயவேண்டிய விஷயம். இருப்பினும், மனிதர்கள் மட்டுமே தங்களது அழிவைப்பற்றி சிந்திக்கக்கூடியவர்களாகவும், அதற்கு எது காரணமாக இருக்கும் என்றும் சிந்திக்கக்கூடிய முதல் இனம் என்பது உண்மைதான். அதே போல இதுவரை பிறந்தவர்களையும் இனிமேல் பிறக்க்கூடியவர்களையும், நமது அண்டைவீட்டுக்காரர்களாக சிந்திக்கவும் கூடிய முதல் இனம் என்பதும் உண்மைதான். ஆகையால் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை முழுக்க பகுத்தறிவற்ற ஆசை மட்டுமல்ல. மோஸஸிலிருந்து, இயேசுவிலிருந்து ஜிம் ஜோன்ஸ் வரைக்கும், மதம் என்ற அமைப்பு, பகுத்தறிவற்ற சிந்தனைகள் அடிப்படையில் கூட மனிதர்களை ஒருங்கிணைக்கும் என்று காட்டுகிறது. அப்படிப்பட்ட பகுத்தறிவற்ற கருத்துக்களின் இடத்தில் பகுத்தறிவு கருத்துக்களை வைப்பதன் மூலம் நமது ஒருங்கிணைப்பை அதிக சக்தியுள்ளதாக ஆக்கலாம்.

மொழிபெயர்ப்பு முற்றும்

(மொழிபெயர்ப்பாளர் குறிப்பு)
இந்த கட்டுரை இந்த இணையப்பக்கத்திலுள்ள கட்டுரையின் மொழிபெயர்ப்பு

http://strugglesforexistence.com/?p=article_p&id=13

டாக்டர் ஜான் ஹார்டுங் அவர்களது அனுமதியுடன் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது

1996 இல் வெளிவந்த இந்த கட்டுரை, விவிலியத்தை பற்றிய புதிய ஆய்வு ரீதியிலான பார்வையை அளித்துள்ளது
இது பற்றி 1996இலேயே நடந்த விவாதங்களும் அந்த இணையபக்கத்தின் கீழேயே உள்ளன..)

முதல்பகுதி

இரண்டாம் பகுதி

மூன்றாம் பகுதி

நான்காம் பகுதி

ஐந்தாம் பகுதி

ஆறாம் பகுதி

ஏழாம் பகுதி

எட்டாம் பகுதி

ஒன்பதாம் பகுதி

Series Navigation

ஜான் ஹார்ட்டுங்

ஜான் ஹார்ட்டுங்

அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 9 Onward Christian Soldiers முன்னேறும் கிறிஸ்துவ போர

This entry is part [part not set] of 48 in the series 20101227_Issue

ஜான் ஹார்ட்டுங்


Onward Christian Soldiers முன்னேறும் கிறிஸ்துவ போர்வீரர்கள்

யூத மதத்துக்கு அடிபணியாத யூத மதத்தின் கிளைமதமாக உருவாகியிருக்கும் கிறிஸ்துவ மதம் தான் தனது தெய்வத்தோடு செய்துகொண்டுள்ள புது ஒப்பந்தம், யூத மதம் செய்த ஒப்பந்தத்தை விட ஒழுக்கரீதியில் சிறப்பானது என்று கருதிகொள்வது வழக்கம். இந்த மனப்பிரமை ராணுவ மற்றும் காலனிய ஆசைகளுக்கு நன்றாகவே உதவியிருக்கிறது என்பதை கடந்த இரண்டாயிரம் வருட வரலாறு காட்டுகிறது. தாமஸ் பெய்ன், இதனை”கீழ்த்தரமான திருட்டுத்தனம்” (1794, pp. 12, 180, 183): என்று இதனை கூறுகிறார்.

சில கிறிஸ்துவர்கள் கிறிஸ்துவ மதம் வாளால் பரப்பப்பட்டதல்ல என்று வேஷம் போடுகிறார்கள். ஆனால், எந்த காலத்தை பற்றி பேசுகிறார்கள்? பன்னிரண்டு பேர்கள் நிச்சயமாக வாளால் தங்கள் மதத்தை பரப்ப ஆரம்பித்திருக்கமுடியாது. அவர்களிடம் அதற்கான சக்தியும் இருந்திருக்கமுடியாது, ஆனால், எப்போது கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்களிடம் வாளை உபயோகப்படுத்தும் அளவுக்கு சக்தி வந்ததோ அப்போதிலிருந்து வாளை உபயோகப்ப்படுத்த ஆரம்பித்தார்கள். நெருப்பில் சுடுவதையும் சித்திரவதைகளையும் தாராளமாக பய்னபடுத்தினார்கள். எதிரிகள மீது அன்பு செலுத்தவேண்டும் என்று போதித்த இவர்கள்தான் உலகத்தின் மிகப்பெரிய கொடுங்கோலர்களாகவும் சித்திரவதையாளர்களாகவும் இருந்தார்கள். ஏனெனில் இந்த கொள்கையே ஒரு ஏமாற்றுத்தனமானது. ஆகவே இப்படிப்பட்ட ஏமாற்றுதனமான கொள்கை அதற்கு எதிரான திசையிலேயே நடைமுறைபடுத்தப்படும் என்பதும் எதிர்பார்க்கக்கூடியதுதான்.

முரண்பாடுகளின் மூட்டையாகவும், கற்பனைக்கு மிஞ்சியதாகவும் ( பரிசுத்த ஆவி வரையறுக்கமுடியாததாகவும், அதே நேரத்தில் இஸ்ரேலியர்களின் தெய்வமாகவும், அந்த தெய்வத்தின் மகனாகவும் ஒரே நேரத்தில் இருப்பது ) போன்றவைகளுக்காக பெருமைப்பட்டுக்கொள்ளும் கிறிஸ்துவ மதத்தின் தெய்வம், உள்குழுவுக்கு வெளியே இருப்பவர்கள் மீது கொண்டிருக்கும் வெறுப்பை கொஞ்சமாவது உருப்படியாக மறைத்திருக்கலாம். அதுவும், பெரும்பாலான தற்போதைய கிறிஸ்துவர்கள் இயேசுவின் நிலைப்பாட்டின்படியே உள்குழுவுக்கு வெளியே உள்ளவர்களாக இருக்கும் பட்சத்தில் தன் வெறுப்பை மறைப்பதில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். இஸ்ரேலில் மீதமிருந்த கானானிய தேசத்தவர் மீது இயேசு காட்டும் வெறுப்பை பாருங்கள். (Matthew 15:21-28; RSV):
And Jesus went away from there and withdrew to the district of Tyre and Sidon. And behold, a Canaanite woman from that region came out and cried, “Have mercy on me, O Lord, Son of David; my daughter is severely possessed by a demon.” But he did not answer her a word. And his disciples came and begged him, saying, “Send her away, for she is crying after us.” He answered, “I was sent only to the lost sheep of the house of Israel.” But she came and knelt before him, saying, “Lord, help me.” And he answered, “It is not fair to take the children’s bread and throw it to the dogs.” She said, “Yes, Lord, yet even the dogs eat the crumbs that fall from their masters’ table.” Then Jesus answered her, “O woman, great is your faith! Be it done for you as you desire.” And her daughter was healed instantly.
21. பின்பு, இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தீரு, சீதோன் பட்டணங்களின் திசைகளுக்குப் போனார். 22. அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள். 23. அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து: இவள் நம்மைப் பின் தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள். 24. அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார். 25. அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப்பணிந்து கொண்டாள். 26. அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார். 27. அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழுகிற துணிக்கைகளைத் தின்னுமே என்றாள். 28. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள்.

இந்த அற்புதச் செயலுக்கு பின்னால் உள்ள அனுமானங்கள் ஏராளமான விஷயங்களை வெளிக்காட்டுகின்றன. உள்குழு உறுப்பினர்களை ஒப்பிடும்போது, தங்களை நாய்களாக கருதிக்கொள்ளக்கூடிய குழுவுக்கு வெளியே உள்ள பழங்குடியினர் சகித்துகொள்ளப்படுவார்கள். (9) இது பொருள் பொதிந்தது. ஏனெனில் இயேசு டேவிடின் ராஜ்ஜியத்தை மீண்டும் ஸ்தாபிக்க விரும்புகிறார். பல ஆயிரக்கணக்கான பவுண்டு தங்கம் வெளிநாடுகளிலிருந்து இஸ்ரேலுக்குள் கப்பமாக வரும்போது உள்குழு உறுப்பினர்கள் தங்களது நகரத்தின் தெருக்களை தாங்களே சுத்தம் செய்வதும், தங்களது கழிப்பறைகளை தாங்களே சுத்தம் செய்வதும் தகுமா? தினக்கூலி செய்யும் மக்கள் தேவைப்படுவார்கள். ரோமானியர்களையும், தாய்லாந்தினரையும், பிலிப்பினோக்களையும் இறக்குமதி செய்வது இன்னும் கற்பனை செய்யப்படவில்லை (Goell, 1994). ஆகவே எஜமானர்களின் மேஜையிலிருந்து விழும் துண்டுகளை பொறுக்கித் தின்னும், உள்நாட்டிலேயே இருக்கும் வெளிக்குழு உறுப்பினர்கள் இந்த இடத்தில் மிகச்சரியாக பொருந்துவார்கள்.
இதே கதைதான் மாற்கு 7:24-30இலும் சொல்லப்படுகிறது. இங்கே கானானியர் கிரேக்கராகி விடுகிறார். அதாவது இயேசு பாரபட்சம் காட்டுவதை வெளிக்குழு உறுப்பினர்கள் எல்லோருக்கும் சமமாகவே பாரபட்சம் காட்டுகிறார்.

The New In-Group Judaism புதிய உள்குழு யூதமதம்

புதிய ஏற்பாடு சுவிசேஷங்களை பொறுத்தமட்டில் இயேசு வெளிப்படையாக கூறும் வேலைத்திட்டம் யூதமதத்தை சீர்திருத்துவதுதான். அதாவது சடங்குகளிலும், பெருமையிலும் சிக்கிக்கொண்டு, ரோமானிய ஆக்கிரமிப்பின் கீழ் வர்க்க வேறுபாடுகளை உறுதியாக்கிக்கொண்டுள்ள யூத மதத்தை மீட்டு, மீண்டும் உள்குழு ஒழுக்கத்தை நிலைநாட்டுவதுதான் அவரது வேலைத்திட்டம். இதனை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். உள்குழு உறுப்பினர்களிடம் தனது கருத்துக்களை கொண்டு செல்லும்படி தனது சீடர்களிடம் கேட்டுகொள்ளும்போதெல்லாம், குழுவுக்கு வெளியே உள்ளவர்களிடம் போய் எதுவும் சொல்ல வேண்டாம் என்று வலியுறுத்துகிறார். (e.g., Matthew 10:5-6; RSV): “Go nowhere among the Gentiles, and enter no town of the Samaritans, but go rather to the lost sheep of the house of Israel.” (e.g., Matthew 10:5-6; RSV): 5. இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், These twelve Jesus sent forth, and commanded them, saying, Go not into the way of the Gentiles, and into any city of the Samaritans enter ye not: 6. காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள். But go rather to the lost sheep of the house of Israel.

இயேசு அண்டைவீட்டுக்காரன் என்ற வார்த்தையையும் சகோதரன் என்ற வார்த்தையையும், வெளிப்படையாக சொல்லாமல், சக யூதர்களை குறிக்கவே உபயோகப்படுத்துகிறார். (முதலாம் நூற்றாண்டு இஸ்ரேலில் யூதர்கள் மத்தியில் இயேசுவின் வேலைத்திட்டத்தை பற்றிய அறிவார்ந்த அதே நேரத்தில் இயேசுவுக்கு சாதகமான பார்வைக்கு வெர்மஸ் Vermes, 1973 படிக்கவும்) முரண்நகையாக, ஏராளமான வசனங்களில் யூதரல்லாதவர்களை தெளிவாகவே அவர்கள் இதில் சேர்த்தி இல்லை என்று இயேசு கூறியிருந்தாலும், இன்றைய யூதரல்லாத கிறிஸ்துவர்கள் தங்களையும் இந்த சகோதரர் என்ற வார்த்தையில் சேர்த்துகொண்டு அடையாளப்படுத்திகொள்கிறார்கள். உதாரணமாக, மாத்யூ18:15-18, எடுத்துகொள்வோம். இதில் யூதர்களுக்கு எதிராக யூதர்கள் செயலாற்றினால், அவர்களது தவறுகளை அவர்கள் திருத்திகொள்ளமுடியாதபடி இருந்தால், அவர்களை யூதரல்லாதவர்களாகவும் வரி வசூலிப்பவர்களாகவும்தான் கருதவேண்டும் (வரி வசூலிக்கும் யூதர்கள், யூதரல்லாத ரோமானிய அரசாங்கத்துக்கு வரி வசூலித்தார்கள்) இவர்களை சொர்க்கத்துக்கு வரமுடியாதபடி நிராகரிக்கப்படுவார்கள் என்று கூறுகிறார். (RSV, see also Matthew 5:47; 6:7; 6:32; 10:16-21):
If your brother sins against you, go and tell him his fault, between you and him alone. If he listens to you, you have gained your brother. But if he does not listen, take one or two others along with you, that every word may be confirmed by the evidence of two or three witnesses. If he refuses to listen to them, tell it to the church; and if he refuses to listen even to the church, let him be to you as a Gentile and a tax collector. Truly, I say to you, whatever you bind on earth shall be bound in heaven, and whatever you loose on earth shall be loosed in heaven. 15. உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில் நீ போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய். 16. அவன் செவிகொடாமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ. 17. அவர்களுக்கும் அவன் செவிகொடாமற்போனால், அதைச் சபைக்குத் தெரியப்படுத்து; சபைக்கும் செவிகொடாதிருப்பானானால், அவன் உனக்கு அஞ்ஞானியைப்போலவும் ஆயக்காரனைப்போலவும் இருப்பானாக. 18. பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 19. அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக்குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்திலிருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

யூத மதத்தை சீர்திருத்தும் இயேசுவின் நோக்கம் மீண்டும் மீண்டும் இயேசுவால் கூறப்படுகிறது. இது கடவுளின் ராஜ்ஜியத்தை பூமியில் அமைப்பது. அவரே மெஸையாவாக இருந்து அந்த ராஜ்ஜியத்தை அமைப்பது அல்லது மெஸையா வர இவர் வழி தருவது. (Vermes, 1973 படிக்கவும். இதில் இயேசு தானே மெஸையா என்பதில் உறுதியாகவும், சில நேரங்களில் மெஸையா வர இவர் வழி தருவது மென்மையாகவும் உள்ளதை குறிப்பிடுகிறார். இயேசு தன்னை மெஸையா என்று கருதியது அவரது வார்த்தைகளில் அவ்வப்போது உறுதியாகி அவ்வப்போது பலவீனமானது. ஆனால், இன்றைய கிறிஸ்துவம் குறிப்பிடுவது போல அவரை கடவுள் என்று வணங்குவதை பார்த்தால் நிச்சயம் கொதித்தெழுந்துவிடுவார்) பல நூற்றாண்டுகள் வெளிநாட்டினரது ஆட்சியில் கிடந்த இஸ்ரேலை மீட்டு அங்கு தனது உள்குழுவை, மோஸஸ் ஒருங்கிணைத்ததை விட மிக உறுதியாக ஒருங்கிணைக்க விரும்புகிறார். இந்த புதிய நேரடி ஒழுக்க விதிகளை கொண்டுவருவதன் மூலம், ஒன்பது முறை அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து என்று வலியுறுத்தி, இந்த ஒருங்கிணைப்பு நோக்கத்துக்காக, உள்குழுவுக்குள் வரும் யூதர் உன் கன்னத்தில் அடித்தாலும் வாங்கிகொண்டு அவருக்கு மறுகன்னத்தை காட்டச்சொல்கிறார் (Matthew 5:39).

காரணம் அவரது திட்டம், அல்லது அவரது வார்த்தைகள்,. அந்த வார்த்தைகள் புனிதமானவை. இயேசு தனது புனிதமான திட்டம் வெளிக்குழு உறுப்பினர்களுக்கு தெரியக்கூடாது என்று மிகவும் கவலைப்படுகிறார். ஆகவே தனது சீடர்களிடம் மீண்டும் அறிவுறுத்துகிறார். (Matthew 7:6; RSV): “Do not give dogs what is holy; and do not throw your pearls before swine.” இந்த இடத்தில் நாய்கள் என்பது மீதமிருக்கும் கானானியர்களையும் சமாரியர்களையும் குறிக்கிறது (e.g., Matthew 15:2128 above) பன்றிகள் என்பது பன்றிக்கறி தின்னுபவர்களை, அதாவது யூதரல்லாதவர்களை குறிக்கிறது. முத்துக்கள் என்பன, உள்குழு உறுப்பினர்களை எப்படி நடத்த வேண்டும் என்று கூறப்பட்ட ஞான முத்துக்கள். இப்படியே சொன்னால், மாத்தியூ 7:6 சொல்லும் வசனம் என்பது முதலாம் நூற்றாண்டு வழக்கில் “நமது திட்டத்தை வெள்ளைக்காரர்களிடம் மட்டும் சொல்லுங்கள். நீக்ரோக்களிடமும் ஹிஸ்பானிக்குகளிடமும் (ஸ்பானிஷ் மொழி பேசும் அமெரிக்கர்கள்) சொல்ல வேண்டாம்” என்று கொச்சையாக சொல்லுவதற்கு ஒப்பானது. அசிங்கமான வார்த்தைகள்தான். ஆனால், இதனைத்தான் ஏதோ கவிதை போல கிறிஸ்துவர்கள் அடிக்கடி சொல்லிக்கொள்கிறார்கள்.

முந்தைய டேவிடின் வழித்தோன்றல் “according to the flesh” (Romans 1:3), என்று தன்னை கூறிக்கொள்வதன் மூலம் , இயேசு தன்னையும் இந்த திட்டத்தை நிறைவேற்றவும், டேவிடை போலவே இஸ்ரேலின் எல்லைகளை மத்தியக்கிழக்கு முழுவதும் விஸ்தரிக்க கூடியவர் என்றும் தன்னை கூறிகொள்கிறார் (Luke 1:31-33; RSV):
And behold, you will conceive in your womb and bear a son, and you shall call his name Jesus. He will be great, and will be called the Son of the Most High; and the Lord God will give to him the throne of his father David, and he will reign over the house of Jacob [Israel] for ever; and of his kingdom there will be no end. 31. இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்; அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. 32. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். 33. அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான்.

இயேசுவின் கவர்ச்சி முழுக்க முழுக்க நிராதரவானவர்களிடமே இருந்தது. அவர்களுக்கு மிகவும் ஆசையாக இருந்ததை, அதாவது இஸ்ரேல் முன்பு போல மத்தியக்கிழக்கை ஆளுவதை அவர் நம்பிக்கையாக கொடுத்தார். (Acts 1:6-8; RSV; see also Luke 2:32; 24:21; 24:44; 24:49; and Revelations 1:5-7; 11:17-18):
They asked him, “Lord, will you at this time restore the kingdom to Israel?” He said to them, “It is not for you to know times or seasons which the Father has fixed by his own authority. But you shall receive power when the Holy Spirit has come upon you; and you shall be my witnesses in Jerusalem and in all Judea and Samaria and to the end of the earth.”
1.6. அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள். 7. அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல. 8. பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

ஏசையாவின் கனவை நிறைவேற்ற ஆசைப்பட்டார். (see Matthew 3:3; 4:4; 8:17; 12:17; 13:14; Mark 1:2; Luke 3:4-6; John 1:23; 12:38-41) அதாவது கடவுளின் ராஜ்ஜியத்தை பூமியில் ஸ்தாபிக்க விரும்பினார். அவரது தெய்வம் ஆபிரஹாமுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றப்படுவதை விரும்பினார். ஆதியாககம் 26:4இல் (Genesis 26:4) குறிப்பிடப்படும் இந்த வாக்குறுதி ஒருமாதிரி மூடி மறைத்து மொழிபெயர்க்கப்படுகிறது. இதில் ஹீப்ரு வார்த்தையான பராக் (barak)என்பது ஆசீர்வாதம் என்ற பொருளில் மொழிபெயர்க்கப்படுகிறது. இந்த வார்த்தையின் மூலப்பொருள் ”மண்டியிடுவது” ஆதியாகமம் 24:11 ஐபார்க்கவும். II Chronicles 6:13; Psalms 95:6; ஆகியவற்றையும் பார்க்கவும். இங்கெல்லாம் மண்டியிடுவது என்ற பொருளிலேயே உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. சாபம் அல்லது சாபமிடுவது என்ற பொருளில் Job 1:5; 1: 11; 2:5; 2:9 உபயோகப்படுத்தப்படுகிறது. ஒரு மனிதன் அல்லது ஒரு தேசம் ஆசீர்வதிக்கப்படுகிறது என்றால், ஆசீர்வதிக்கும் ஒரு தெய்வத்தின் முன்னரோ அல்லது மற்றொரு மனிதனின் முன்னரோ மண்டியிட்டு அது தனது அடிமைத்தனத்தை ஏற்றுகொள்கிறது என்று பொருள். (see also Genesis 12:2-3; 18:18; 22:18; 28:14 and 26:4):

“I will multiply your descendants as the stars of heaven, and will give to your descendants all these lands; and by your descendants all the nations of the earth shall bless [kneel] themselves.” நான் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, உன் சந்ததிக்கு இந்தத் தேசங்கள் யாவையும் தருவேன்; உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றார். (அதாவது ஆபிரஹாமின் சந்ததி முன்னர் பூமியின் சகல ஜாதிகளும் மண்டியிடும்)

ரோமப் பேரரசின் முன்னர் மண்டியிடும்படி நேர்ந்துவிட்ட முதலாம் நூற்றாண்டு யூதர்களுக்கு தேவனின் ராஜ்ஜியம் என்பது நடைமுறையில் சாத்தியமும் அல்ல. அது எந்த ஒரு ஒழுக்க ரீதியிலும் நல்ல ஐடியாவும் அல்ல. உண்மையில் இயேசுவின் உள்குழுவுக்குள்ளேயே அது ஒரு ஆபத்தான ஐடியா. ஏற்கெனவே ரோமானியர்களுடன் கூடி வாழ்ந்துவரும் யூதர்களுக்கு அச்சுருத்தும் ஐடியாவும் கூட. ரோமாபுரியின் முன்னர் மண்டியிட்டு அதன் செல்வங்களை பெற்று வருபவர்களுக்கு இயேசுவின் போதனைகள் அச்சுருத்தலாக இருந்ததால், அவர்கல் இயேசு இவ்வாறு பேசியதால் சிலுவையிலறைந்தார்கள்.

Rewriting the Script வசனங்களுக்கு மாறு விளக்கம்.

இப்படி இருக்கும்போது எங்கிருந்து கிறிஸ்துவ பொது நோக்கு வருகிறது? இது இஸ்ராலியராக இருந்த சவுல் என்பவரிடமிருந்து வருகிறது. இவர் தனது பெயரை பவுல் என்று மாற்றிகொள்கிறர். தன்னையே மெஸியா யூதரல்லாதவர்களுக்கு அனுப்பிய அப்போஸ்தலர் என்றும் கூறிக்கொள்கிறார். பவுலின் பெயர் மாற்றம் போலவே, இயேசுவின் வார்த்தைகளை மாற்றி பொதுவானதாக மாற்றுவதும் கொஞ்சம் அவருக்கு வசதிப்பட்டமாதிரி மாற்றிகொள்கிறார். ஏனெனில் பவுல் இஸ்ரேலிலிருந்து துரத்தப்பட்டு வேறு வழியின்றி தன்னை யூதரல்லாதவர்கள் மத்தியில் வாழ நிர்பந்திக்கப்பட்டவர். கூடவே, இவருக்கு வசதியாக பண்ணிக்கொண்ட, வெளிக்குழு உறுப்பினர்களுக்கு கௌரவ உள்குழு உறுப்பினர் அந்தஸ்து கொடுக்கும் இவரது முயற்சியும் வெகுவிரைவிலேயெ இஸ்ரேலின் மெஸியா வந்துவிடுவார் என்ற நிச்சயத்தின் மீதே இருக்கிறது. அதுவும் நிச்சயமாக சில வருடங்களுக்குள், அல்லது சுமாராக சில மாதங்களுக்குள், அல்லது இன்னும் சில வாரங்களிலேயே வந்துவிடுவார். ஆகவே இவரது ஆஃபர் குறிப்பிட்ட காலத்துக்குத்தான்.

பவுலின் செய்தியும் அவரது கூட பணியாற்றிய பீட்டரின் செய்தியும் ஏறத்தாழ ஒன்றுதான்: திருமணம் செய்துகொள்ள வேண்டாம். அப்படியே திருமணம் செய்திருந்தால் குழந்தை பெற்றுகொள்ள வேண்டாம். இப்போது எப்படி இருக்கிறீர்களோ அப்படியே இருங்கள். அதாவது நீங்கள் கொடுமைக்குள்ளான அடிமையாக இருந்தால் அப்படியே இருங்கள். கொடுமைப்படுத்தப்பட்ட பெண்ணாக இருந்தாலும் அப்படியே இருங்கள். அடிவாங்கினாலோ, அடக்க ஒடுக்கத்துடன் இருங்கல். ஏனெனில் இயேசு சீக்கிரம் வருகிறார். எந்த நாளிலும் வந்துவிடுவார். எல்லா நிலைமைகளும் மாறிவிடும். உங்களது வேதனைகளை பொறுத்துகொள்ளுங்கள். எவ்வளவு அநீதியாக இருந்தாலும் நீங்கள் நல்லபடி இருங்கள். அவர் இங்கே வரும்போது உங்களை பாதுகாப்பார். இப்படியே போகிறது.etc. For example (I Peter 2:18-21; see also I Corinthians 7:24-40; Timothy 6:1-2; Titus 2:9-10; and I Peter 3:1-6):
Servants, be submissive to your masters with all respect, not only to the kind and gentle but also to the overbearing. For one is approved if, mindful of God, he endures pain while suffering unjustly. For what credit is it, if when you do wrong and are beaten for it you take it patiently? But if when you do right and suffer for it you take it patiently, you have God’s approval. For to this you have been called, because Christ also suffered for you, leaving you an example that you should follow in his steps.
18. வேலைக்காரரே, அதிக பயத்துடனே உங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; நல்லவர்களுக்கும் சாந்தகுணமுள்ளவர்களுக்கும் மாத்திரம் அல்ல, முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள். 19. ஏனெனில், தேவன்மேல் பற்றுதலாயிருக்கிற மனச்சாட்சியினிமித்தம் ஒருவன் அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால் அதுவே பிரீதியாயிருக்கும். 20. நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரீதியாயிருக்கும். 21. இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.

(குறிப்பு: அடிமைகள் slaves என்பதை இங்கே Servants, வேலைக்காரர்களே என்று மொழிபெயர்த்துகொள்கிறார்கள்)

அதாவது, உங்களது எஜமானர் நீங்கள் செய்யாத தவறுக்கு உங்களை அடித்தால், அது நீங்கள் இயேசு கிறிஸ்து போல இருக்க கிடைத்த ஒரு வாய்ப்பு. அடிவாங்கிக்கொள்ளுங்கள். நம்பிக்கையுடன் இருங்கள். உங்களுக்கு வெகுவிரைவிலேயே வெகுமதி கிடைக்கும். பீட்டர், பவுல் ஆகியோர் இந்த கால கார்ட்டூன்களில் வரும் “பாவிகளே மனந்திரும்புங்கள். முடிவு சமீபிக்கிறது” என்று அட்டையை வைத்துகொண்டு தெருக்களில் நிற்பவர்களுக்கு ஒப்பானவர்கள். இதோ வருகிறார் என்று சொல்லும் இந்த வரிகளை படித்தால், நாமே காலத்தில் பின்னால் சென்று “இதோ வருகிறார் என்று இவர்கள் சொல்லும் மெஸியா வருவதற்கு குறைந்தது 2000 வருடங்களாகும்” என்று சொன்னால், இந்த ஆரம்பகால கிரிஸ்துவ மிஷனரிகள் இஸ்ரேலுக்கு முதல் படகை பிடித்து சென்றிருப்பார்கள்.

முதல்பகுதி

இரண்டாம் பகுதி

மூன்றாம் பகுதி

நான்காம் பகுதி

ஐந்தாம் பகுதி

ஆறாம் பகுதி

ஏழாம் பகுதி

எட்டாம் பகுதி

Series Navigation

ஜான் ஹார்ட்டுங்

ஜான் ஹார்ட்டுங்

அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 8 மற்ற நாடுகளுக்கு ஒளியாக‌(A Light Unto The Nations)

This entry is part [part not set] of 34 in the series 20101205_Issue

ஜான் ஹார்ட்டுங்


மற்ற நாடுகளுக்கு ஒளியாக‌(A Light Unto The Nations)

சாலமனின் ஆட்சிகாலத்தின்போது இஸ்ரேலின் பொற்காலம் உச்சத்தை அடைந்தது. சாலமன் டேவிடின் மகன். இவன் “நதி தொடங்கிப் பிலிஸ்தியர் நாடு வரை உள்ள எல்லா நாடுகளையும் சாலமோன் ஆண்டு வந்தார். “(I Kings 4:21). போரில் பெற்ற கொள்ளைப்பணத்தை வைத்து சுகமாக வாழ்ந்துவந்தார்(Deuteronomy 20:14), கூடவே “தம் மனைவியரும் அரசிகளுமாக எழுநூறு பெண்களையும், வைப்பாட்டிகளாக முந்நூறு பெண்களையும் சாலமோன் வைத்திருந்தார்.”(I Kings 11:3) இன்னும் கப்பமாக ஏராளமான பணத்தை பெற்றுவந்தார் ” ஒவ்வொரு ஆண்டும் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து நிறையுள்ள பொன் சாலமோனுக்கு வந்து கொண்டிருந்தது. அதைத் தவிரச் சாலமோனுக்குக் கோத்திரத் தலைவர்களும் வியாபாரிகளும் வணிகர்களும் அராபிய அரசர்களும் மாநில ஆளுநர்களும் பொன் கொண்டு வருவதுண்டு.”(I Kings 10:14-15):

சாலமனின் ஆட்சிக்காலத்தின் பின்னர் இஸ்ரேல் இரண்டாக உடைந்தது. வடக்கு இஸ்ரேல் அரசுக்கும் தெற்கு இஸ்ரேல் அரசுக்கும் இடையே உள்நாட்டுப் போர் மூண்டது. முன்பு தங்கத்தை அனுப்பி வந்த வெளிநாடு அரசுகள் இப்போது துருப்புகளை அனுப்ப ஆரம்பித்தன. ஜெருசலம் நகரை சிரிய துருப்புகள் சுற்றி வளைத்த போது உள்குழு ஒழுக்கம் கீழ் நிலையை அடைந்தது. சாலமனின் அறிவு பற்றிய கதையை எல்லோரும் அறிந்திருப்பார்கள். குழந்தையை இரண்டாக வெட்ட உத்தரவு கொடுத்து யார் குழந்தையின் உண்மையான தாய் என்று அறிந்த கதை. ‌(I Kings 3:16-28) ஆனால் அயி நகர் மக்களை கொன்றொழித்த கதையை பைபிள் வகுப்புகள் பேசாதது போலவே இதே மாதிரியான இன்னொரு கதையையும் பைபிள் வகுப்புகள் பேசுவதில்லை. சாலமனின் பின்னால் வந்த அரசர் முன்னால் வந்த இதே மாதிரியான ஒரு வழக்கு(II Kings 6:26-30):

இஸ்ராயேலின் அரசன் நகர மதில் வழியே சென்று கொண்டிருக்கையில் மாது ஒருத்தி கூக்குரலிட்டு, “என் அரசரான தலைவா, என்னைக் காப்பாற்றும்” என்றாள். அதற்கு அவன், “ஆண்டவர் உன்னைக் காப்பாற்றவில்லை என்றால், நான் எங்ஙனம் உன்னைக் காப்பாற்றுவது? களஞ்சியத்திலிருந்தோ ஆலையிலிருந்தோ? சொல்” என்றான். மேலும் அவளை நோக்கி, “உனக்கு என்ன வேண்டும்? சொல்” என்றான். அதற்கு அவள், “இதோ இந்தப் பெண் என்னை நோக்கி, ‘இன்று நாம் சாப்பிடும்படி உன் மகனைக் கொடு, நாளை என் மகனைச் சாப்பிடலாம்’ என்றாள். நாங்கள் என் மகனைச் சமைத்துச் சாப்பிட்டோம். மறுநாள், ‘நாம் சாப்பிடும்படி, உன் மகனைக்கொடு’ என்றேன். அவளோ தன் மகனை ஒளித்து விட்டாள்” என்று சொன்னாள். அரசன் இதைக் கேட்டவுனே தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு நகர மதில் வழியாகச் சென்றான்.

இந்த சித்திரம் இன்னும் கேவலமாகி மிகுந்த நம்பிக்கையுடையவர்கள் மத்தியில் நிராதரவான நிலையில் ஒரு நம்பிக்கை தோன்றியது. இஸ்ரேலின் தெய்வம் ஒரு மெசியாவை அனுப்பும். அந்த மனிதன் மீண்டும் ராஜ்ஜியத்தை உருவாக்குவான். மீண்டும் இஸ்ரேல் உலகத்தின் நாடுகளை எல்லாம் வென்று ஆளும் என்பதே அது. கிறிஸ்துவ பூச்சுற்றல் ஆசாமிகளும், யூத பூச்சுற்றும் ஆசாமிகளும் சேர்ந்து பைபிளில் மறைத்து பேசும் விஷயம் “எல்லா நாடுகளுக்கும் ஒளிவிளக்காக இருக்கும் இஸ்ரேல்” என்ற கருத்துதான். ஒளி என்பது இஸ்ரேல். இனப்படுகொலை செய்யப்படும் இடங்களுக்கு வெளியே இருககும் நாடுகள் இஸ்ரேல் என்ற ஒளியை அவை இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்படுவத்ன் மூலம் பார்க்கும். அப்போது இந்த நாடுகள் தங்களது தெய்வங்களை விட இஸ்ரேலின் தெய்வம் வலிமையானது என்று அறியும். அதை விட முக்கியமாக, இஸ்ரேலின் தெய்வத்தை இஸ்ரேல் மூலம் வணங்கும். அதாவது பழையபடி மீண்டும் இஸ்ரேலுக்கு கப்பம் கட்டும்.

உள்குழுவின் உச்சகட்ட இனிய கற்பனை பைபிள் முழுவதும் விரவிக்கிடக்கிறது.
ஆனால், Psalms and Isaiah (RSV):இன்னும் குறிப்பாக
தெரியப்படுத்தப்படுகிறது
8 எம்மிடம் கேளும், யாம் உமக்கு மக்களினங்களை உரிமையாக்குவோம்: உலகின் கடை எல்லை வரை உமக்குச் சொந்தமாக்குவோம்.
9 இருப்புக் கோல் கொண்டு அவர்களை நொறுக்குவீர்: குயவனின் கலங்களென அவர்களைத் தவிடு பொடியாக்குவீர்.” (Psalms 2:8-9)
2 புறவினத்தார் வந்து அவர்களை அவர்களுடைய சொந்த நாட்டுக்குக் கூட்டிப் போவார்கள்@ இஸ்ராயேல் மக்கள் ஆண்டவருடைய நாட்டில் அவர்களை வேலைக்காரர்களாகவும் வேலைக்காரிகளாகவும் வைத்துக் கொள்வார்கள்@ தங்களை அடிமைப்படுத்தியவர்களை அடிமைகளாக்குவார்கள்@ தங்களை ஒடுக்கினவர்களை அடக்கி ஆளுவார்கள்.
(Isaiah 14:2)
இன்னும் ஆண்டவர் கூறுகிறார்: “எகிப்து தன் வேலைப் பயனாகிய செல்வங்களோடும், எத்தியோப்பியா தன் வணிகத்தால் கிடைத்த வருமானத்தோடும், சாபா தன் உயர்ந்து வளர்ந்த குடிகளோடும் இஸ்ராயேலே, உன்னிடம் வந்து சேரும் உனக்கு அவை யாவும் உரிமையாகும், உன்னைப் பின்தொடர்வார்கள் விலங்கிடப்பட்டவர்களாய் உன் முன் வந்து, உன்னை வணங்கி மன்றாடி, ~உன்னிடத்தில் மட்டுமே கடவுள் இருக்கிறார், உன்னிடத்திலன்றி வேறெங்கும் கடவுள் இல்லை~ என்பார்கள்.” (Isaiah 45:14).
அவர் சொன்னார்: “யாக்கோபின் கோத்திரங்களை எழுப்பவும், இஸ்ராயேலில் எஞ்சினோரைத் திருப்பிக் கொணரவும், நமக்கு நீ ஊழியனாய் இருத்தல் பெரிதன்று. உலகத்தின் எல்லை வரையில் நமது மீட்பு எட்டும் படி, புறவினத்தார்க்கு ஒளியாக உன்னை ஏற்படுத்தினோம்.”
(Isaiah 49:6)
1 யெருசலேமே எழுந்திரு, எழுந்து ஒளிவீசு, ஏனெனில் உனது ஒளி வந்து விட்டது, ஆண்டவரின் மகிமை உன் மேல் உதித்து விட்டது.
2 இதோ, காரிருள் பூமியை மூடிக்கொள்ளுகிறது@ அடர்ந்த இருள் மக்களைச் சூழ்ந்து கொள்ளுகிறது@ ஆனால் ஆண்டவர் உன் மேல் எழுந்தருள்வார், அவரது மகிமை உன் மீது உதயமாகும்.
3 மக்களினங்கள் உன் ஒளி நோக்கி வருவார்கள், உன்னில் உதிக்கும் சுடர் கண்டு மன்னர்கள் வருவர்.
4 கண்களை ஏறெடுத்துச் சுற்றிலும் பார், இவர்கள் அனைவரும் ஒன்று கூடி உன்னிடம் வருகின்றனர்@ உன் புதல்வர்கள் தொலைவிலிருந்து வருகின்றனர். உன் புதல்வியர் இடுப்பில் தூக்கி வரப்படுகின்றனர்.
5 நீயோ அதைக் கண்டு அக்களிப்பாய், உன் உள்ளம் வியப்பினால் பூரிப்படையும் ஏனெனில், கடல் வளம் உன்னிடம் கொணரப்படும். மக்களினங்களின் செல்வம் உன்னிடம் வந்து சேரும்.
6 ஒட்டகங்களின் கூட்டம் உன்னை நிரப்பும், மாதியான், எப்பா நாட்டு இளம் ஒட்டகங்களும் வரும்@ சாபா நாட்டினர் அனைவரும் பொன்னும் தூபமும் ஏந்தியவராய் ஆண்டவருக்குப் புகழ் பாடிக் கொண்டு வருவார்கள்.
7 கேதாரின் மந்தைகள் யாவும் உன்னிடம் சேர்க்கப்படும், நாபாயோத்தின் செம்மறிகள் உனக்குப் பயன்படும்@ நமக்கு ஏற்புடைய பீடத்தின் மேல் அவை ஒப்புக் கொடுக்கப்படும், நமது மாட்சிமையின் கோயிலை மகிமைப்படுத்துவோம்.
8 மேகங்கள் போலும், கூட்டுக்குப் பறந்தோடும் காட்டுப் புறாக்கள் போலும் விரைந்து பறந்து போகும் இவர்கள் யார்?

9 தீவுகள் நமக்காகக் காத்திருக்கின்றன@ உன் பிள்ளைகளைத் தொலைவிலிருந்து ஏற்றி வரவும், அவர்களுடன் அவர்களுடைய வெள்ளியையும் பொன்னையும் கொண்டு வந்து உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்கும், உன்னை மகிமைப்படுத்திய இஸ்ராயேலின் பரிசுத்தருக்கும் அர்ப்பணஞ் செய்யக் கடலின் மரக்கலங்களும் காத்திருக்கின்றன.
10 அந்நியரின் மக்கள் உன் சுவர்களைக் கட்டுவர், அவர்களின் அரசர்கள் உனக்குப் பணிபுரிவர்@ கோபத்தில் நாம் உன்னை அடித்து நொறுக்கினோம், இப்போது சமாதானமாகி உன் மேல் இரக்கம் காட்டினோம்.
11 உன் வாயில்கள் எப்போதும் திறந்திருக்கும், இரவிலும் பகலிலும் அவை மூடப்படா@ மக்களினங்களின் செல்வங்கள் கொண்டு வரப்படும், அவர்களின் அரசர்கள் கூட்டி வரப்படவும் அவை திறந்தே இருக்கும்.
12 உனக்கு அடிபணியாத மக்களினமோ அரசோ அழிந்து போகும், அவை அனைத்தும் முற்றிலும் பாழாக்கப்படும்@
(Isaiah 60:1-12).(8)

அது சரி, இது எப்போது நடக்கும்? இஸ்ரேல் தனக்குள்ளாகவே அடித்துகொள்வதை நிறுத்திய உடனே நடக்கும். அதாவது தனது உள்குழு ஒழுக்கத்தை பழையபடி சரி செய்தபின்னால் நடக்கும். பிறகு மெசியா வந்துவிடுவார். கடவுளின் ராஜ்ஜியத்தை பூமியில் கொண்டுவருவார். பூமியை விட்டுவிட்டு சொர்க்கத்துக்கு போவது அல்ல குறிக்கோள். சொர்க்கத்தை பூமியில் கொண்டுவருவது தான் குறிக்கோள். அதாவது டேவிடின் ராஜ்ஜியத்தை பூமியில்
ஸ்தாபிப்பது.

(தொடரும்)

முதல்பகுதி
இரண்டாம் பகுதி
மூன்றாம் பகுதி
நான்காம் பகுதி
ஐந்தாம் பகுதி
ஆறாம் பகுதி
ஏழாம் பகுதி

Series Navigation

ஜான் ஹார்ட்டுங்

ஜான் ஹார்ட்டுங்

அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 7 The Evolutionary Point பரிணாமவியலின் பார்வையில்

This entry is part [part not set] of 29 in the series 20101121_Issue

ஜான் ஹார்ட்டுங்


The Evolutionary Point பரிணாமவியலின் பார்வையில்

400க்கும் மேலான நகரங்கள் இஸ்ரவேலர்களால் முழுவதுமாக அழிக்கப்பட்டன என்று விலாவாரியாக எழுதப்பட்டுள்ளது. இந்த போர்கள் சுமார் 170 வருடங்கள் நடைபெற்று இறுதியில் ஜெருசலத்தில் டேவிடின் வெற்றியுடன் முடிகிறது. ஜெருசலத்திலிருந்துதான் ஜெபுசைட்டுகள் தங்களது நகரமான ஜெருசலத்தை இஸரவேலர்களின் தலைவர்களான ஜோசுவாவிலிருந்து சவுல் வரைக்கும் ஒவ்வொரு தலைவரின் தாக்குதலையும் எதிர்த்து தங்களது நகரத்தை பாதுகாத்தார்கள்.

ஜோசுவாவின் தாக்குத‌லில் வீழ்ந்த‌ இர‌ண்டாவ‌து ந‌க‌ர‌மான‌ அய் (Ai) விழும்போது சொல்ல‌ப்ப‌டும் நிக‌ழ்வுக‌ளில்தான் ம‌னித‌க்கொலை ப‌ற்றிய‌ உள்குழு ஒழுக்க‌மும் வெளிக்குழு ஒழுக்க‌மும் ஒன்ற‌ன்பின் ஒன்றாக‌ வைக்க‌ப்ப‌ட்டு வித்தியாச‌ப்ப‌டுத்த‌ப்ப‌டுகிற‌து. பைபிளின் ப‌டி, 12000 பேர்க‌ளை கொன்று குவித்த‌ நாளின் போது, போர் முகாமில் வீரர்கள் சூழ நெருப்பருகே அமர்ந்திருக்கும்போது “கொல்லாதே” என்ற‌ க‌ட்ட‌ளை உட்பட்ட‌‌ ப‌த்துக்க‌ட்ட‌ளைகளை ஜோசுவா க‌ல்லில் செதுக்கி வைக்கிறான். (Joshua 8:24-25, 30-32; RSV):

“யோசுவாவும் இஸ்ராயேலரும் நகர் பிடிபட்டதையும், புகை எழும்புவதையும் கண்டபோது திரும்பி வந்து ஆயியின் மனிதரை முறியடிக்கத் தொடங்கினர்.

அப்போது நகரைப் பிடித்துச் சுட்டெரித்த யோசுவாவின் வீரர் ஊரிலிருந்து வெளியேறித் தங்கள் சகோதரர்களுக்கு எதிராக வந்தனர். அப்போது நடுவே அகப்பட்டுக் கொண்ட எதிரிகளை ஒழித்துக்கட்டத் தொடங்கினர். இவர்கள் இருமருங்கினின்றும் தாக்குண்டபடியால் ஒருவர் முதலாய்த் தப்பமுடியாமல் எல்லாருமே மாண்டுபோயினர். ஆயி நகர் அரசன் உயிரோடு பிடிபட்டு யோசுவாவிடம் கொண்டு வரப்பட்டான். பாலைவனத்தை நோக்கி ஒடிய இஸ்ராயேலரைத் துரத்திச் சென்றவர் அனைவரும் அவ்விதமே வெட்டுண்டு ஒரே இடத்தில் வாளினால் மடிந்தனர்.

பிறகு இஸ்ராயேலர் ஒன்று கூடி நகர் மக்களையும் கொன்று குவிக்கத் திரும்பினார்கள். அன்று இறந்தவர்கள் ஆணும் பெண்ணுமாகப் பன்னீராயிரம் பேர் அவர்கள் எல்லாரும் ஆயி நகர்க் குடிகளாவர். ஆயிநகர் மக்கள் எல்லாரும் மடியும் வரை யோசுவா கையை மடக்காமல் தம் கேடயத்தை உயரத் தூக்கிப் பிடித்துக் கொண்டு நின்றார். யோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்தபடி உயிரினங்களையும் நகரில் அகப்பட்ட கொள்ளைப் பொருட்களையும் இஸ்ராயேல் மக்கள் எடுத்துக் கொண்டு தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். யோசுவா நகர் முழூவதையும் சுட்டெரித்து என்றென்றும் அது பாழாய்க கிடக்கும்படி செய்தார். அந்நகர் அரசனையும் தூக்குமரத்தில் ஏற்றி மாலையில் கதிரவன் மறையும் வரை அதில் தொங்கவிட்டார். பிறகு யோசுவாவின் கட்டளைப்படி இஸ்ராயேலர் அவ்வரசனுடைய உடலை மரத்திலிருந்து இறக்கி நகர வாயிலில் போட்டு, இன்று வரை கிடக்கும் பெரிய கற்குவியலால் அதை மூடினார்கள். அப்பொழுது யோசுவா கேபால் என்ற மலையில் இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுளுக்கு ஒரு பீடம் எழுப்பினார். ஆண்டவரின் அடியானான மோயீசன் இஸ்ராயேல் மக்களுக்குக் கட்டளையிட்டுத் தம் திருச்சட்ட நூலில் எழுதிவைத்தபடி, அப்பீடம் இரும்புக்கருவி படாத கற்களாலே கட்டப்பட்டது. அதன்மேல் யோசுவா ஆண்டவருக்குத் தகனப் பலிகளையும் சமாதானப் பலிகளையும் செலுத்தினார். பிறகு இஸ்ராயேல் மக்கள் முன்பாக மோயீசன் எழுதியிருந்த உப ஆகமம் எனும் சட்டத்தை அக்கற்களில் பொறித்தார். ”

இந்த வசனங்களை பொதுவாக பைபிள் வாசிப்பு வகுப்புகளில் பேசுவதில்லை. ஆனால், ஜெரிக்கோவை பற்றியோ, அயி நகரை பற்றியோ அல்லது ஜெருசலத்தை பற்றியோ கேள்விகள் கேட்கப்பட்டால், யூத மற்றும் கிறிஸ்துவ பிரச்சாரகர்கள் இந்த ஹீரோக்கள் முழுக்க முழுக்க பரிசுத்தமானவர்கள் அல்ல ஆனால், அவர்களது நோக்கம் பரிசுத்தமானது என்று சர்டிபிகேட் கொடுப்பார்கள். (ஏனெனில் இவை கடவுளிடமிருந்து வந்தவை!) இந்த நோக்கங்களே, இலட்சியங்களே நாம் மனதில் வைத்துகொள்ளவேண்டிய கருத்துக்கள் என்பார்கள். இது சுத்தமாக தவறான விஷயம். முரண்பாடுக்கு ஜோசுவா எந்த விதத்திலும் குற்றவாளி இல்லை. அவர் எந்த விதத்திலும் தவறானவரோ அல்லது தன்னுடைய தவறை பார்க்காதவரோ இல்லை. ஏனெனில், உள்குழு உறுப்பினர்களுக்கு மட்டுமே சொல்லப்பட்ட விதிக்கு நேர்மாறாகவே வெளிக்குழுவிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்ற விதி. (7)

இது என்னவோ புராதனமான இஸ்ரவேலர்களுக்கு மட்டுமேயான ஒரு விஷயம் இல்லை. உள்குழு/வெளிக்குழுவுக்கான இரட்டை அளவுகோல்கள் உலகம் முழுவதும் வரலாறு முழுவதும் இருந்துவந்திருக்கின்றன. உள்குழு ஒழுக்கத்தை உருவாக்கிகொள்ளும் முறை மனித இயல்பு போலவே தோன்றுகிறது.

தொடரும்

Series Navigation

ஜான் ஹார்ட்டுங்

ஜான் ஹார்ட்டுங்

அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 6 Moral Fallout ஒழுக்கவிதிகளின் விளைவுகள்

This entry is part [part not set] of 40 in the series 20101114_Issue


Moral Fallout ஒழுக்கவிதிகளின் விளைவுகள்

கனான், பாலஸ்தீனத்தில் முன்பே வாழ்ந்து வந்த மக்கள் மீதான இனப்படுகொலை செய்ய கொடுத்த தங்களது தெய்வத்தின் கட்டளைகளை இஸ்ரவேலர்கள் செய்து முடிக்க பல தலைமுறைகள் ஆயிற்று. இது ஜெரிக்கோவில் ஜோசுவா செய்த படுகொலைகளில் ஆரம்பித்தது. ஜோசுவா ஜெரிக்கோவின் போரை நடத்தினார் என்று கிறிஸ்துவ சிறார்கள் பாடுவதற்கு மாறாக, பைபிளில் பார்த்தால் அங்கு போரே நடைபெறவில்லை. அது ஒரு முற்றுகை. அந்த முற்றுகையின் முடிவில், ரஹப் என்ற ஒரே ஒரு விபச்சாரி தவிர்த் அந்த ஜெரிக்கோ நகரத்தின் மக்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டார்கள். காரணம், அந்த படுகொலையை செய்ய ஜோஷுவாவுக்கு திட்டமிட உதவியதால்Joshua 6:16-17, 19, 21, 24, RSV):

ஜோசுவா தன் மக்களிடம் கூறினான், “ஆர்ப்பரியுங்கள், பட்டணத்தை கர்த்தர் உங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்..சகல வெள்ளியும் பொன்னும், வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்யப்பட்ட பாத்திரங்களும், கர்த்தருக்குப் பரிசுத்தமானவைகள்; அவைகள் கர்த்தரின் பொக்கிஷத்தில் சேரும்” அதன் பின்னர், “பட்டணத்திலிருந்த புருஷரையும் ஸ்திரீகளையும் வாலிபரையும் கிழவரையும் ஆடுமாடுகளையும் கழுதைகளையும் சகலத்தையும் பட்டயக்கருக்கினால் சங்காரம்பண்ணினார்கள்…பட்டணத்தையும் அதிலுள்ள யாவையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்; வெள்ளியையும் பொன்னையும், வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்தபாத்திரங்களையுமாத்திரம் கர்த்தரின் ஆலயப்பொக்கிஷத்தில் சேர்த்தார்கள் (ஜோசுவா 6)

இப்படிப்பட்ட கலாச்சார பாரம்பரியத்தின் தொடர்விளைவுகள் பெரும்பாலும் ஆராயப்படுவதில்லை. ஜெரிக்கோவின் வீழ்ச்சிக்குப் பிறகு 3000 வருடங்கள் கழித்து இஸ்ரேலிய மனவியலாளர் ஜார்ஜ் டாமரின் (George Tamarin 1966, 1973) உள்குழு ஒழுக்க விதிகளின் வலிமையை ஆராய்ந்தார். ஜோசுவா 6:20௨1 வசனங்களை 8இலிருந்து 14 வயதுடைய‌ சுமார் 1,066 பள்ளிச்சிறுவர்‍ சிறுமிகளிடம் கொடுத்தார் இது “மனச்சாய்வுகளை உருவாக்கும் படி விமர்சனமில்லாமல் பைபிளை போதிப்பதால் வரும் விளைவுகள்(அதுவும் முக்கியமாக கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்ற கருத்துருவாக்கம்)” என்பது ஒரு ஆய்வு.

மற்றொரு ஆய்வு, “ஏகத்துவ கடவுள் வழிபாடும்,பைபிள் ஹீரோக்கள் செய்யும் இனப்படுகொலைகளும்” என்பது மற்றொரு ஆய்வு “ஜோசுவாவும் இஸ்ரவேலர்களும் சரியாக நடந்துகொண்டார்களா, அல்லது தவறாக நடந்துகொண்டார்களா?” என்ற கேள்விக்கு குழந்தைகளின் பதில்கள் அ) முழுமையாக ஆதரிப்பது, ஆ) அரைகுறையாக ஆதரிப்பது, அல்லது நிராகரிப்பது, இ) முழுமையாக நிராகரிப்பது. இஸ்ரேலின் எல்லா சமூக, பொருளாதார படிநிலைகளில உள்ள குழந்தைகளிலும் ஒரே மாதிரியாக 66% பதில்கள் முழுமையாக ஆதரிப்பதாகவும், 8% சதவீத பதில்கள் அரைகுறையாக ஆதரிப்பதாகவும், 26% சதவீத பதில்கள் முழுமையாக எதிர்ப்பதாகவும் இருந்தன. முழுமையாக ஆதரிக்கும் பதில்கள் நேரிடையாகவும் அதிகமாகவும் இருந்தன.(Tamarin, 1966):

சில உதாரண ஆதரவுகள்:

1) என்னுடைய கருத்தின்படி, ஜோசுவாவும், இஸ்ரேலிய புத்திரர்களும் நன்றாக செயலாற்றினார்கள் என்று கருத காரணங்கள்: கடவுள் அவர்களுக்கு இந்த நிலத்தை வாக்களித்தார். இந்த நிலத்தை ஆக்கிரமிக்க அனுமதியளித்தார். இப்படி அவர்கள் நடக்காமல் இருந்து யாரையும் கொல்லாமல் இருந்தால், அவர்கள் “கோயிம்” மக்களோடு கலந்து காணாமல் போயிருக்கும் ஆபத்து வந்திருக்கும்.

2) என்னுடைய கருத்தின்படி ஜோசுவா செய்தபோது சரியாகவே செய்தார். கடவுள் அங்கிருக்கும் மக்களை கொன்றொழிக்க ஆணையிட்டிருக்கிறார். ஏனெனில் இஸ்ரேலின் குடிகள் அங்கிருக்கும் மக்களோடு கலந்து அவர்களுடைய கெட்ட வழிகளை கற்றிருந்திருப்பார்கள்.

3) ஜோசுவா நல்லதையே செய்தார். ஏனெனில் இஸ்ரேலில் முன்னால் இருந்தவர்கள் வேறொரு மதத்தை பின்பற்றி வந்தார்கள். ஜோசுவா அவர்களை கொன்றபோது அவர்களது மதத்தையும் பூமியிலிருந்து அழித்தார்.

டாமரின் (1973) மேலும் குறிப்பிடுகிறார்.

முழுமையாக நிராகரிக்கும் பெரும்பான்மையான பதில்கள், ஒழுக்க ரீதியிலும் உபயோகரீதியிலும் இப்படிப்பட்ட இனப்படுகொலைகளை நிராகரிக்கின்றன. ஆனால், எல்லா “இ” பதில்களும் பாரபட்சமற்ற ‍பதில்கள் என்று கருதிவிடக்கூடாது.

உதாரணமாக ஒரு சிறுமி ஜோசுவாவின் நடத்தையை பின்வருமாறு நிராகரிக்கிறாள். “இஸ்ரேலின் புத்திரர்கள் கோயிம் மக்களிடமிருந்து கெட்ட விஷயஙகளை கற்றுகொண்டார்கள்” ஜோசுவாவின் நடத்தையை நிராகரிக்கும் மற்றொரு 10 வயது சிறுமியின் இனவெறி பதில்,” நான் அது நல்லதற்கு அல்ல என்று கருதுகிறேன்.

ஏனெனில் அரபுகள் சுத்தமானவர்கள் அல்ல. அப்படிப்பட்ட மக்கள் வாழும் நிலமும் சுத்தமானது அல்ல. அப்படிப்பட்ட நிலத்துக்குள் புகுபவர்களும் அசுத்தமாகி, அசுத்தமானவர்கள் பெற்றிருக்கும் சாபத்தை தானும் பெற்றுவிடுவார்கள்”

மற்ற “இ” பதில்கள் (1966):

மற்ற ‘இ” பதில்கள் (1966)

1) ஜோசுவா சரியாக நடக்க்கவில்லை, ஏனெனில் அவன் மிருகங்களை கொல்லாமல் வைத்து தங்களுக்காக உபயோகப்படுத்திகொண்டிருக்கலாம்.

2) ஜோசுவா சரியாக நடக்கவில்லை. ஏனெனில், ஜெரிக்கோவின் சொத்தை அழிக்காமல் வைத்திருக்கலாம். அப்படி அழிக்காமல் வைத்திருந்தால், அந்த சொத்து இஸ்ரவேலர்களுக்கு சொத்தாக ஆகியிருந்திருக்கும்

வன்முறைக்கும், வன்முறையை அங்கீகரிப்பதற்கும் இடையே பொதுவாக சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் வேறுபாடு உண்டு. ஆனால், பைபிள் ஆணையிடும் இனப்படுகொலைகளை பொறுத்தமட்டில், “எங்களுடைய எதிர்பார்ப்புக்கு மாறாக, இப்படிப்பட்ட இனப்படுகொலைக்கும், இனவெறிக்கும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே எந்த வித வேறுபாடும் இல்லை” (1973) என்று டாமரின் குறிப்பிடுகிறார். ஜோசுவா செய்ததை முழுமையாக அங்கீகரித்த சிறுவர் சிறுமிகள் இன்னொரு தற்கால கேள்விக்கும் முழுமையாக ஒத்துகொள்ளும் (ஆச்சரியப்பட ஏதுமில்லாத‌, ஆனால் மிகவும் அதிர்ச்சியான) பதில்களை அளித்தனர்

கேள்வி: இப்போது இஸ்ரேலிய ராணுவம் ஒரு அரபு கிராமத்தை ஆக்கிரமிக்கிறது என்று வைத்துகொள்வோம். ஜோசுவா ஜெரிக்கோவின் மக்களிடம் நடந்துகொண்டது போல இப்போதும் இஸ்ரேலிய ராணுவம் அந்த கிராமத்தின் மக்களிடம் நடந்துகொள்வது நல்லதா கெட்டதா?

டாமரின் (1966)கீழ்க்கண்ட மாதிரியான பதில்களை பெற்றார்.

1) என்னுடைய கருத்தின் படி, இப்படிப்பட்ட நடத்தை தேவையானதுதான். ஏனெனில் அரபுகள் நம்முடைய நிரந்தர எதிரிகள். யூதர்களுக்கு என்று ஒரு நாடு இல்லை. ஆகையால் அப்படி அரபுகளிடம் நடந்துகொள்வது தேவையான ஒன்று.

2) ஜோசுவாவும் அவரது போர்வீரர்களும் செய்தது போல செய்வது நல்லதுதான் ஏனெனில் அவர்கள் அரபுகள். அவர்கள் நம்மை எப்போதும் வெறுக்கிறார்கள். நம்மை திருப்பி அடிக்கிறார்கள். அவர்களை ஜோசுவா செய்தது போல கொன்றொழித்துவிட்டால், அவர்கள் நம்மைவிட பெரிய ஹீரோக்களாக மாட்டார்கள்.

3) நம்முடைய எதிரிகளை வெற்றிகொள்வது நல்லதுதான். நம்முடைய எல்லைகளை விஸ்தரிக்க வேண்டும். நாம் அரபுகளை ஜோசுவா கொன்றது போலவே கொல்லவேண்டும்.

சிலர் ஜோசுவாவின் இனப்படுகொலைகளை ஆதரிக்கவில்லை (இ பதில்கள்) ஆனால், அதே போன்ற படுகொலைகளை இஸ்ரேலிய போர்வீரர்கள் செய்தால் ஆதரித்தார்கள். ஒரு சிறுமி ஜோசுவாவை நிராகரித்தாள், ஏனெனில் ” கொல்லாதே என்று பைபிளில் எழுதியிருக்கிறது” ஆனால், அதே மாதிரியான இஸ்ராலிய போர் நடவடிக்கையை ஆதரித்தாள், ஏனெனில், “அது நல்லது என்று நினைக்கிறேன். நம் எதிரிகள் நம் கைகளில் விழவேண்டும். நமது எல்லைகளை விஸ்தரிக்கவேண்டும். அரபுகளை ஜோசுவா கொன்றது போல கொல்லவேண்டும்”

168 சிறுவர் சிறுமிகள் இருக்கும் இன்னொரு குழுவை உருவாக்கி அதில் ஜோசுவா 6:20 21 ப‌த்திக‌ளில் ஜோசுவாவுக்கு ப‌திலாக‌ ஜென‌ர‌ல் லின் என்ற‌ க‌ற்ப‌னை பாத்திர‌மாக‌வும், இஸ்ரேலுக்கு ப‌திலாக‌ “3000 வ‌ருட‌ங்க‌ளுக்கு முந்திய‌ சீன‌ அர‌சு” என்ப‌தாக‌வும் மாற்றி கூற‌ப்ப‌ட்ட‌து. ஜென‌ர‌ல் லின்‍ செய்த‌ இன‌ப்ப‌டுகொலைக‌ளுக்கும் அவ‌ர‌து ந‌ட‌த்தைக்கும் 6 ச‌த‌வீத‌ ஆத‌ர‌வுதான் கிடைத்த‌து. 18 ச‌த‌வீத‌த்தின் பாதி ஆத‌ர‌வு பாதி எதிர்ப்பாக‌ இருந்த‌ன‌ர். 75 ச‌த‌வீத‌த்தின் முழுமையாக‌ நிராக‌ரித்த‌ன‌ர்.

குழந்தைகளின் ஒழுக்க குருட்டுத்தனத்தை நாம் கண்டிக்க தயங்குவோம். ஏனெனில் அவர்கள் இன்னும் வளரும் பருவத்திலேயே இருக்கிறார்கள். ஆனால், நாம் வளர்ந்தவர்களது ஒழுக்க குருட்டுத்தனத்தை கண்டிக்க அஞ்சக்கூடாது. அதுவும் முக்கியமான புகழ்பெற்ற சமூகத்தில் பெயரும் புகழும் பெற்றவர்களது ஒழுக்க குருட்டுத்தனத்தை மற்றவர்கள் மீது சுமத்தும் வலிமை பெற்றவர்களை கண்டிக்க தவறக்கூடாது. இந்த சமயத்தில், எலீ வீஸலின் ஜோசுவா பற்றிய விவரணத்தை பார்ப்போம். அது இவ்வாறு முடிகிறது. “பரிதாபத்துக்குரிய ஜோசுவா, பார்புகழ ஜொலிக்கும் ஜோசுவா, அவர் எத்தனையோ போர்களை வெற்றிபெற கட்டாயப்படுத்தப்பட்டார். அவருக்கு நன்றி சொல்ல அருகே யாருமில்லை…
கடவுளைத்தவிர”

Series Navigation

செய்தி

செய்தி

அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 5 Evolutionary Ethics பரிணாமவியல் ஒழுக்கங்கள்

This entry is part [part not set] of 34 in the series 20101107_Issue

ஜான் ஹார்ட்டுங்


Evolutionary Ethics பரிணாமவியல் ஒழுக்கங்கள்

ஒழுக்க நடத்தை நேர் செயல்பாடாகவும் இருக்கலாம். மறைமுக செயல்பாடாகவும் இருக்கலாம். திருடிவிட்டு மாட்டிக்கொள்ளாமல் தப்பித்துவிடலாம் என்ற சூழ்நிலையிலும் நீங்கள் திருடாமல் இருந்தால் நீங்கள் மறைமுக செயல்பாட்டின் கீழ் ஒழுக்க நடத்தை உள்ளவர். உங்கள் உயிருக்கும் பங்கம் வர வாய்ப்பிருந்தும் மற்றவருக்கு உதவினால் நீங்கள் நேர் செயல்பாட்டில் ஒழுக்க நடத்தை உள்ளவர். தனி உயிர்களுக்கு இடையேயான போட்டி மூலமாக உயிர்கள் பல்கிப்பெருகுதல் வழியாக இயற்கை தேர்வு நடப்பதற்கு மாறாக, குழுக்களுக்கு இடையே போட்டி மூலமாக குழுக்கள் பல்கிப்பெருகுதல் வழியாக இயற்கை தேர்வு நடப்பதாக இருந்தால் குழுவுக்குள் இருக்கும் ஒவ்வொரு உயிரும் மற்ற உயிரை r=1 (மற்ற உயிரும் தன் உயிரே) என்பது ஜீனிலேயே இருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, தற்கொலை செய்துகொள்ளத்தூண்டும் ஜீன்கள் இயற்கை தேர்வு மூலமாக நீக்கப்பட்டுவிடுகின்றன.

குழுக்களுக்கு எந்த வித விளைவும் இல்லை என்று சொல்வதாக எடுத்துகொள்ளக்கூடாது. (கவட்டை மூலமாகவோ அல்லது துப்பாக்கி மூலமாகவோ) குறிபார்த்து செலுத்த உதவும் ஜீன் இருப்பதாக வைத்துகொள்வோம். அப்படிப்பட்ட ஒரு ஜீன் வெகுவிரைவில் அது தோன்றிய குழுவுக்குள் பரவும். இதனால், அந்த குழு மற்ற குழுவை விட அதிகமாக உணவைப்பெற வலிமை பெற வாய்ப்பை பெறுகிறது. ஆகவே, இப்படிப்பட்ட ஜீன்கள் மாறுபாடு அடைவது, குழுவும் மற்றொரு குழுவும் மோதினால் யார் வெற்றிபெறுவார்கள் என்பதை பாதிக்கும். ஆனால் இப்படி ஜீன்கள் மாறுபாடு அடைவது என்பது அந்த குழுவுக்குள்ளேயே அதன் உறுப்பினர்கள் ஒருவரோடு ஒருவர் மோதுவதும், அதற்குள் நடக்கும் போட்டியினால், ஜீன்கள் பெருகுவதும், பதில் உதவிக்காக செய்யப்படும் பொதுநலம்த்தின் மூலம் ஒத்துழைப்பை உருவாக்குவதுமாக அவர்கள் செயலாற்றியிருப்பார்கள். அதாவது தனி மனிதர்கள் தற்காலிக குறுகியகால லாபத்துக்கு எதிராக, மற்ற குழு உறுப்பினர்களுக்கு ஒத்துழைப்பை கொடுப்பதன் மூலம் மற்ற குழுக்களுடனான போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் தங்களுக்கு அதிக லாபத்தை ஈட்டிக்கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டை எடுக்கும் மனிதர்களை இயற்கை தேர்வு உருவாக்கும். உதாரணமாக, கூட்டுறவின் மூலம் எதிர்குழுவை வெற்றிகொள்ளலாம் என்ற காரணத்தாலும், இறுதியில் தனக்கு லாபம் என்ற காரணத்தாலும், உள்குழு ஒழுக்க நிலைப்பாடுகள் உருவாகலாம். இது குழு தேர்வின் விளைவு என்று கூறமுடியாது. அதே போல இந்த ஒழுக்க நிலைப்பாடுகளும் ஒழுக்கத்திற்கான அடித்தளமாகவும் கருதப்படமுடியாது.

கூடவே, உள்குழு உறுப்பினர்கள் கடைபிடிக்கவேண்டிய ஒழுக்க நிலைப்பாடுகளை உருவாக்கும் அதே சமயத்தில் வெளிக்குழுக்களிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்த சட்டங்களுக்கு எதிர்சட்டங்களை உருவாக்கும்போது இந்த சட்டங்கள் முழுமையடைகின்றன. அதாவது குழுவுக்கு உள்ளே சகோதரத்துவம், மற்ற குழுவுக்கு எதிராக போர் (Alexander, 1987, p. 95). அதாவது “குழுவுக்கு உள்ளே திருடாதே கொல்லாதே” ஆகியவை “புறஜாதிகளை கொல், அவர்களிடமிருந்து திருடு” என்பவற்றோடு சமானம் செய்யப்படுகின்றன.

இப்படிப்பட்ட பரிணாம ஒழுக்கவியல்கள் இனங்களுக்கும், நாடுகளுக்கும், மதங்களுக்கும் பொருந்தக்கூடியவை. 1942இல் கீத் (keith) இந்த நாணயத்தின் இருபுறங்களென இருக்கும் இந்த நிலைப்பாடுகளை ஹிட்லரின் நேஷனல் சோசலிஸம் என்ற வார்த்தையில் கண்டார் (1947, pp. 10, 14, parentheses not added):

ஹிட்லர் தனது குழு கொள்கையாக இரட்டை வார்த்தைகளை உபயோகப்படுத்துகிறார். நேஷனல் சோசலிஸம்: சோசலிஸம் என்ற வார்த்தை குழுவுக்குள்ளே உபயோகப்படுத்த அவர்களை ஒன்றிணைக்க உதவும் பழங்குடி சொல். இது ஹிட்லரின் அரசுக்கு கீழ் உள்ள மக்களுக்கு மட்டும். தேசியம் நேஷனலிஸம் என்பது பழங்குடி ரீதியிலான ஒற்றுமை மூலம் ஜெர்மனியின் எல்லைக்கு வெளியே இருக்கும் மக்களுக்கு சொல்லும் தீய பகுதி. ஹிட்லர் பரிணாமவியலின் தீவிரமான ஆதரவாளர். அவரது செயல்பாட்டுக்கு அவரிடம் பரிணாமவியல் ரீதியாகத்தான் விடையை தேடமுடியும்.
Genocide இனப்படுகொலைகள்

மோசஸுக்கு இயற்கை தேர்வு பற்றி தெரியாமல் இருந்திருந்தாலும், அவர்களது குழுவுக்கு வெளியே இருப்பவர்களை கொல்லவும், அவர்களிடமிருந்து திருடவும் கொள்ளையடிக்கவும் தனது தெய்வத்தின் கட்டளையாக திரும்பத்திரும்ப கொடுத்தது முக்கியமான கரு.(4) இரண்டு தனித்துவமான கொள்கைகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டன. முதலாவது இஸ்ரேலாக ஆகப்போகும் நிலப்பகுதிகளில் ஏற்கெனவே இருக்கும் தேசத்தவர்கள் உடனடியாக கொன்று தீர்க்கப்படவேண்டும். அடுத்தது, இஸ்ரேலுக்கு அண்டை நிலங்களாக இருக்கப்போகும் தேசங்களில் இருப்பவர்கள் இஸ்ரேலுக்கு அடிமைகளாக வாழ ஒப்புகொள்ளவில்லை என்றால் அவர்களையும் கொல்லவேண்டும், இந்த இரண்டு கொள்கைகளுமே எண்ணாமகததின்Deuteronomy ஒரே பத்தியில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. (20:10-18; RSV) இஸ்ரேலுக்கு வெளியே இருப்பவர்களை பற்றிய கட்டளையை முதலில் சொல்லிவிட்டுத்தான் இவை ஆரம்பிக்கின்றன

10. நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ண நெருங்கும்போது, அந்தப் பட்டணத்தாருக்குச் சமாதானம் கூறக்கடவாய். 11. அவர்கள் உனக்குச் சமாதானமான உத்தரவுகொடுத்து, வாசலைத் திறந்தால், அதிலுள்ள ஜனங்கள் எல்லாரும் உனக்குப் பகுதி கட்டுகிறவர்களாகி, உனக்கு ஊழியஞ்செய்யக்கடவர்கள். 12. அவர்கள் உன்னோடே சமாதானப்படாமல், உன்னோடே யுத்தம்பண்ணுவார்களானால், நீ அதை முற்றிக்கைபோட்டு, 13. உன் தேவனாகிய கர்த்தர் அதை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்போது, அதிலுள்ள புருஷர்கள் எல்லாரையும் பட்டயக்கருக்கினால் வெட்டி, 14. ஸ்திரீகளையும் குழந்தைகளையும் மிருகஜீவன்களையும் மாத்திரம் உயிரோடே வைத்து, பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு ஒப்புக்கொடுத்த உன் சத்துருக்களின் கொள்ளைப்பொருளை அநுபவிப்பாயாக. 15. இந்த ஜாதிகளைச் சேர்ந்த பட்டணங்களாயிராமல், உனக்கு வெகுதூரத்திலிருக்கிற சகல பட்டணங்களுக்கும் இப்படியே செய்வாயாக. 16. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிற ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்னும் ஜனங்களின் பட்டணங்களிலேமாத்திரம் சுவாசமுள்ளதொன்றையும் உயிரோடே வைக்காமல், 17. அவர்களை உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே சங்காரம்பண்ணக்கடவாய். 18. அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்கிற தங்களுடைய சகல அருவருப்புகளின்படியே நீங்களும் செய்ய உங்களுக்குக் கற்றுக்கொடாமலும், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாமலும் இருக்கும்படி இப்படிச் செய்யவேண்டும்.

இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நிலங்களில் ஏற்கெனவே வாழ்ந்து வருபவர்களுக்கு இது “இனப்படுகொலை” என்றுதான் பொருள்.

They should be utterly destroyed,(5) and should receive no mercy but be exterminated as the LORD commanded Moses” (Joshua 11:20). 20.

யுத்தம்பண்ண இஸ்ரவேலுக்கு எதிராகவரும்படிக்கு, அவர்களுடைய இருதயம் கடினமானதும், இப்படியே அவர்கள்பேரில் இரக்கம் உண்டாகாமல், கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி, அவர்களை அழித்துச் சங்காரம்பண்ணினதும் கர்த்தரால் வந்த காரியமாயிருந்தது. For it was of the LORD to harden their hearts, that they should come against Israel in battle, that he might destroy them utterly, and that they might have no favour, but that he might destroy them, as the LORD commanded Moses.
Utterly destroy all that they have; do not spare them, but kill both man and woman, infant and suckling” (I Samuel 15:3). 3. இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான். Now go and smite Amalek, and utterly destroy all that they have, and spare them not; but slay both man and woman, infant and suckling, ox and sheep, camel and ass.
And, as if they had a sense of Hamilton’s (1964) inclusive fitness:

ஹாமில்டன் கூறியதை பற்றி அறிந்தது போலவே

You will make them as a blazing oven when you appear. The LORD will swallow them up in his wrath and fire will consume them. You will destroy their offspring from the earth and their children from among the sons of men (Psalms 21:9-10). 9. உமது கோபத்தின் காலத்திலே அவர்களை அக்கினிச் சூளையாக்கிப்போடுவீர்; கர்த்தர் தமது கோபத்திலே அவர்களை அழிப்பார்; அக்கினி அவர்களைப் பட்சிக்கும். Thou shalt make them as a fiery oven in the time of thine anger: the LORD shall swallow them up in his wrath, and the fire shall devour them.
10. அவர்கள் கனியை பூமியிலிராதபடி நீர் அழித்து, அவர்கள் சந்ததியை மனுபுத்திரரிலிராதபடி ஒழியப்பண்ணுவீர். Their fruit shalt thou destroy from the earth, and their seed from among the children of men. (சங்கீதம்21:9-10).
There can be no doubt that this commandment was mandatory, as Maimonides explained (Judges 5:4, cf Elba 1995; Lior 1994): மைமோனிடஸ் விளக்குவது போல இந்த கட்டளைகள் மிகவும் தேவையானவை என்பதில் சந்தேகமிருக்கமுடியாது(Judges 5:4, cf Elba 1995; Lior 1994):
It is a positive commandment to destroy the seven nations, as it is said: Thou shalt utterly destroy them. If one does not put to death any of them that falls into one’s power, one transgresses a negative commandment, as it is said: Thou shalt save alive nothing that breatheth.
இது ஏழு நாடுகளை முழுவதும் அழிக்க நேரடியான கட்டளை. அது சொல்வது போலவே, “அவற்றை முழுகக அழியுங்கள்”Thou shalt utterly destroy them. உங்களது சக்திக்குக் கீழ் ஒருவர் வரும்போது அவரை கொல்லாமல் இருந்தால், எதிர்மறையான கட்டளையை மீறுவதாகும். அது Deuteronomy 20:16 you shall save alive nothing that breathes சுவாசமுள்ளதொன்றையும் உயிரோடே வைக்காமல்,

Series Navigation

ஜான் ஹார்ட்டுங்

ஜான் ஹார்ட்டுங்

அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 4 The Evolution of Cooperation கூட்டுறவின் பரிணாமம்.

This entry is part [part not set] of 36 in the series 20101101_Issue

ஜான் ஹார்ட்டுங்


The Evolution of Cooperation கூட்டுறவின் பரிணாமம்.

வானத்தில் ஒருவரோடு ஒருவர் மோதாமல், மேகம்போல குவியலாக பறந்துகொண்டு, சடக்கென்று ஒன்றே போல திரும்பக்கூடிய பறவைக்கூட்டத்தை பார்த்திருக்கிறீர்களா? 1960க்கு முன்னாலேயே நமக்கு இந்த பறவைக்கூட்டம் என்ன செய்கிறது என்று தெரியும். அவை தாங்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்க தகுந்த உணவு ரீதியில் வளமையான இடத்தை தேடுகின்றன. அந்த வழியில், பெண் பறவைகள் எவ்வளவு முட்டைகள் இடலாம் என்று கணக்கிட்டுக்கொள்ளும். அந்த பறவையின் நோக்கம் ஒரு இடத்தின் வளமையை சீரழித்துவிடாமல் இருக்க தகுந்த எண்ணிக்கையுள்ள முட்டைகளை இடும். ஒழுக்க ரீதியின் மிகச்சிறப்பான முடிவை எடுக்க தேவையான அமைப்பை எப்படி இயற்கை தேர்வு உருவாக்குகிறது? எளிய கருத்துதான். அதன் பெயர் குழு தேர்வு(group selection). ஒரு இடத்தை மிக அதிகமாக சுரண்டும் பறவைகள், அந்த இடம் மறு உற்பத்தி செய்யமுடியாத அளவுக்கு நாசமாக ஆகும்போது தானே கூட்டம் கூட்டமாக அழிந்துவிடுகின்றன. ஆகையால் சுற்றுச்சூழல் பற்றிய உணர்வுள்ள குழுக்களே மிஞ்சியிருக்கின்றன. இதற்கு மாறாக வீட்டில் வளர்க்கப்படும் ஆடுகள் எதிர்தரப்பு உதாரணம். இந்த ஆடுகளை சரியாக வளர்க்கவில்லை என்றால், சுற்றி இருக்கக்கூடிய எல்லா தாவரங்களையும் தின்று அழித்துவிடும். ஆகையால்தான் ஆட்டிடையோர்களுக்கு வேலை இருக்கிறது. ஏனெனில், ஆடுகளின் முடிவுக்கு விட்டுவிட்டால், மறு உற்பத்தி செய்யமுடியாத அளவுக்கு நிலத்தையும் தாவரங்களையும் ஆடுகள் அழித்துவிடும்.

உயிரினங்கள் இவ்வாறு குழு தேர்வின் மூலம் பரிணாமம் அடைகின்றன என்ற கருத்தை கொண்ட குழு தேர்வு கொள்கைக்கு சமாதி கட்டும் வேலையை 1966இல் ஜார்ஜ் வில்லியம்ஸ் எழுதிய புத்தகம் துவக்கி வைத்தது. இந்த குழு தேர்வில் மூன்று முக்கிய பிரச்னைகளை கண்டார்.

முதலாவது
சுற்றுச்சூழல் பற்றிய அறிவுள்ள ஒரு குழுவின் உள்ளே ஒரு ம்யூட்டேஷன் உருவாகி அந்த பறவை ஏராளமான முட்டைகளையும் குஞ்சுகளையும் பெற ஆரம்பித்தால் என்ன ஆகும்? விடை, அந்த ம்யூட்டேஷன் பெருகும்.

இரண்டாவது
சுற்றுச்சூழல் அறிவுள்ள குழுவுக்கும் சுற்றுச்சூழல் அறிவற்ற குழுவுக்கும் இடையே பறவைகள் இடப்பெயற்சி செய்தால் என்ன ஆகும்? விடை: சுற்றுச்சூழல் அறிவுள்ள பறவைகள் குழு குறையும்.

மூன்றாவது.
ம்யூட்டேஷனும், இடமாற்று பிரச்னையும் தீர்த்துவிட்டாலும், மிகச்சிறிய அளவு இருக்கும் ஒரு ஜீன் குழு தேர்வின் மூலம் அதிகமாக ஆவதற்கு எத்தனை ஆண்டுகள் பிடிக்கும்? இவற்றுக்கான பரிணாமவியல் மாதிரிகள் மூலம் கணக்கிட்டால், ஒரு பறவை பிறந்து இறக்கும் அதே காலத்துக்குள் இந்த குழுத்தேர்வு நடந்துவிட வேண்டும். முழு குழுவுக்கும் இந்த ஜீன் மாறுதல் நடக்க நடைமுறைக்கு ஒவ்வாத கால இடைவெளி பிடிக்கும்.

இருப்பினும் மக்களுக்கு இந்த குழுத்தேர்வு பிடித்திருக்கிறது. இது வேலை செய்தால், இயற்கையிலேயே ஒத்திசைவு கொண்ட அமைப்பை உருவாக்கலாம். மனிதர்களும் தங்களது இயற்கையான நிலையில், இயற்கையிலேயே கூட்டுறவாக வேலை செய்வார்கள். தங்களுடைய சுயநலத்தை குழுவின் நலத்துக்காக விட்டுக்கொடுப்பார்கள். இதனால், வில்லியம்ஸ் இந்த குழு தேர்வு கொள்கை தவறானது என்று கண்டுபிடித்த நாளிலிருந்து, இந்த குழு தேர்வை எப்படியாவது காப்பாற்றிவிடவேண்டும் என்று குழு தேர்வு மாதிரிகளை அங்கங்கு ஒட்டி வைத்து சரி செய்யமுடியுமா என்று பலர் முயற்சிக்கிறார்கள்.(e.g., Wilson and Sober 1994). ஆனால், குழு தேர்வு நடக்கமுடியாதது என்று லாஜிக்கலாகவும், பரிசோதனை முடிவுகளிலும் தனி தேர்வுதான் நடக்கிறது individual selection என்று காட்டியும் பல ஆய்வாளர்கள் நிரூபித்துவிட்டனர்.(cf Alroy & Levine, 1994; Cronk, 1994; Dawkins,

பறவை ஆய்வாளர்களிடமிருந்தே பரிசோதனை முடிவுகள் இதற்கு வலு சேர்க்கின்றன. பறவைகள் எவை தனது முட்டைகள் எவை மற்றவற்றின் முட்டைகள் என்று அறிய இயலாதவை. (குயில் போன்ற பறவைகள் மற்ற பறவைகளின் கூட்டில்முட்டையிட்டு ஒட்டுண்ணிகள் போல வாழ்கின்றன) இதன் பொருள் என்னவென்றால், ஒரு கூட்டில் ஐந்து முட்டையும் வைக்கலாம். பெரும்பாலும் பறவை ஐந்தையும் அடைகாத்து அவற்றுக்கு உணவு கொடுக்கும். பொதுவாக மூன்று முட்டைகள் குஞ்சுகளைத்தான் பார்க்கும். நாலாவது முட்டை இருந்தால் நான்கையும் கவனித்துகொள்ளும். மேலே கூட்டாக பறப்பது தவிர்த்து, பொதுவாக பறவைகள் தனது முட்டைகளைத்தான் அதிகமாக பெற்று அவற்றை வளர்க்க முனையும். (for a review see Trivers, 1985).

ஆகவே, குழு தேர்வு இல்லை என்றால், ஏன் தனி உயிர்கள் கூட்டுறவாக வாழ்கின்றன? இதற்கு இரண்டு விடைகள் உண்டு. இந்த இரண்டு விடைகளும், நவீன பரிணாமவியலின் அடிப்படைகளாக ஆகியுள்ளன. அவை, சேர்த்துகொள்ளும் inclusive fitness (Hamilton, 1964) and பதில் பொதுநலம் reciprocal altruism (Trivers, 1971).

பதில் பொதுநலம் என்பது, “நீ என் முதுகை சொறிந்துவிட்டால், நான் உன் முதுகை சொறிந்துவிடுவேன்” என்பது. மனிதர்களில் இது இரண்டு பேர்கள் ஒரு சுமையை தூக்கிச் செல்வதிலிருந்து, குழுவாக சேர்ந்து யானையை வேட்டையாடுவது, ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள் மற்றொரு குழுவைச் சேர்ந்த மனிதர்களை கொல்ல செல்வதுவரை விளக்குகிறது. இதில் முக்கியமான பகுதி, கிடைக்கும் பயன். ஒத்துழையாமல் இருப்பதன் மூலம் ஒருவர் பெறும் பயனை விட ஒத்துழைப்பதன் மூலம் பெறும் பயன் அதிகமாக இருக்கவேண்டும். இந்த பதில்- பொதுநலம் என்பது உண்மையான் பொதுநலம் அல்ல என்று பெரிய கூச்சல் எழுந்தது. அது சரியானதுதான். ட்ரிவர்ஸ்(Trivers (1971, p. 1): சொன்னது போல, “பொதுநலத்தை விளக்க முயற்சி செய்யும் மாதிரிகள் எல்லாமே பொதுநலத்தை பொதுநலத்திலிருந்து எடுக்கும் அமைப்புகள்தான்”

துரதிர்ஷ்டவசமாக, உறவு தேர்வினால் உருவாகும் கூட்டுறவையும், பதில் பொதுநலத்தால் உருவாகும் கூட்டுறவையும் குழு தேர்வினால் உருவாகும் கூட்டுறவை பிரித்து பார்ப்பது கடினம். ஆனால், இதில் சில தடயங்கள் இருக்கின்றன. பெரிய அளவில் நடக்கும் பதில்-பொதுநலத்தில் படிநிலை அமைப்புகள் (hierarchies (pecking orders, dominance ranks) இருக்க வேண்டும். இவை யாருக்கு எந்த அளவில் பயன் கிடைக்கும் என்பதை இந்த படி நிலை அமைப்புகள் தீர்மானிக்க வேண்டும். இவ்வாறு கிடைக்கும் பயன்கள் எல்லோருக்கும் சமமாக இருக்காது. அவரவர் இருக்கும் அந்தஸ்து, படிநிலையில் அவரது இடம், வரிசை ஆகியவையே ஒருவர் பெறும் பயனை நிர்ணயிக்கும். அதே போல மனிதர்களில் சட்டங்களும், நீதிகளுமே கூட்டுறவை நிர்பந்திக்கும். உண்மையில் மனித அமைப்புகளில் பதில்-பொதுநலத்தில் அடிமைகள் போன்றவர்கள் இருப்பார்கள். இவர்கள் தாங்களாக சுதந்திரமாக விடப்பட்டால் நல்ல நிலைமையில் இருப்பார்கள். ஆனால் அதற்கு அவர்களுக்கு சுதந்திரம் இருக்காது.

புராதன காலத்திய மக்கள் எல்லோரையும் போலவே இஸ்ரவேல் யூதர்களிடமும் கடுமையான படிநிலை அமைப்புகள் இருந்தன. இது ஒரு சிலரிடம் சொத்து குவிந்திருப்பதையும் பலர் பஞ்சை பராரிகளாக இருப்பதையும் உறுதி செய்தது. அடிமைகள் இருந்தார்கள். அவர்கள் சட்டரீதியாக துன்புறுத்தப்பட்டு வேலை வாங்கப்பட்டார்கள். சில சட்டங்கள் கூட்டுறவை உறுதி செய்வதை விட, விசுவாசத்தை உறுதி செய்யும் சட்டங்கள். ஆனால் மிக கடுமையாக நிறைவேற்றப்பட்ட சட்டங்கள். உதாரணமாக சனிக்கிழமை வேலை செய்வதற்கு தண்டனையைப் பார்க்கலாம் (Numbers 15:32-36):

இஸ்ரவேல் புத்திரர் வனாந்தரத்தில் இருக்கையில், ஓய்வுநாளில் விறகுகளைப் பொறுக்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டுபிடித்தார்கள். விறகுகளைப் பொறுக்கின அந்த மனிதனைக் கண்டுபிடித்தவர்கள், அவனை மோசே ஆரோன் என்பவர்களிடத்துக்கும் சபையார் அனைவரிடத்துக்கும் கொண்டுவந்தார்கள். அவனுக்குச் செய்யவேண்டியது இன்னதென்று தீர்க்கமான உத்தரவு இல்லாதபடியினால், அவனைக் காவலில் வைத்தார்கள். கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த மனிதன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லாரும் அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கல்லெறியக்கடவர்கள் என்றார். அப்பொழுது சபையார் எல்லாரும் கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கொண்டுபோய்க் கல்லெறிந்தார்கள்; அவன் செத்தான்.

படிநிலை அமைப்பில் கீழ் நிலையில் உள்ள ஒருவர் அவருக்கு பங்கிட்டு தரப்பட்டதைவிட அதிகமாக எடுத்துகொண்டால், அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதும் இப்படிப்பட்ட வலுக்கட்டாய கூட்டுறவின் அங்கமாகும். முக்கியமாக அந்த பங்கு படிநிலை அமைப்பில் மேல் தட்டில் உள்ள ஆணுக்கு கொடுக்கபட்ட பங்காக இருந்தால், கீழ் நிலையிலுள்ளவருக்கு கடுமையாகவே தண்டனை வழங்கப்படும்.Joshua 7:24-25 இல் வரும் நிகழ்ச்சி இதற்கு ஒரு உதாரணம். அசென் என்ற ஜோஷுவாவின் போர்வீரன் , பொது உண்டியலில் போடாமல், 50 ஷாகெல் தங்கக்கட்டியை தனது கூடாரத்துக்குள்ளேயே வைத்துகொண்ட போது,

“24. அப்பொழுது யோசுவாவும் இஸ்ரவேலரெல்லாருங்கூடச் சேராகின் புத்திரனாகிய ஆகானையும், அந்த வெள்ளியையும் சால்வையையும் பொன்பாளத்தையும், அவன் குமாரரையும் குமாரத்திகளையும், அவன் மாடுகளையும் கழுதைகளையும் ஆடுகளையும், அவன் கூடாரத்தையும், அவனுக்குள்ள யாவையும் எடுத்து, ஆகோர் பள்ளத்தாக்குக்குக் கொண்டுபோனார்கள்.25. அங்கே யோசுவா: நீ எங்களைக் கலங்கப்பண்ணினது என்ன? இன்று கர்த்தர் உன்னைக் கலங்கப்பண்ணுவார் என்றான்; அப்பொழுது இஸ்ரவேலரெல்லாரும் அவன்மேல் கல்லெறிந்து, அவைகளை அக்கினியில் சுட்டெரித்து, கற்களினால் மூடி;26. அவன்மேல் இந்நாள்வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இப்படியே கர்த்தர் தமது கோபத்தின் உக்கிரத்தைவிட்டு மாறினார்”

இது ஒரு குழு தேர்வின் மூலம் கூட்டுறவு அடைந்த குழுவின் அறிகுறிகளல்ல.

தொடரும்

Series Navigation

ஜான் ஹார்ட்டுங்

ஜான் ஹார்ட்டுங்

அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். (பகுதி 3யார் மனிதர்?( Who Is Human? )

This entry is part [part not set] of 37 in the series 20101024_Issue

ஜான் ஹார்ட்டுங்


யார் மனிதர்?( Who Is Human? )

ஞானவான்களான யூத குருமார்கள் அவர்களது கடவுள் அவர்களுக்கு சிறப்பான உக்கிரத்தை அளித்துள்ளதாக பார்த்தார்கள். ரப்பை சிமியோன் (Rabbi Simeon) ”மூவர் தனிப்பட்ட உக்கிரங்களால் வித்தியாசப்பட்டுள்ளார்கள். நாடுகளில் இஸ்ரேல், மிருகங்களில் நாய், பறவைகளில் கோழி” (Bezah 25b). தென்னமெரிக்காவின் அமேசான் நதியின் ஆரம்ப பகுதியில் வாழும் யானோமாமோ பழங்குடியினர் தாங்களே உலகத்தின் மிக உக்கிரமான மனிதர்கள் என்றும் தாங்களே உலகத்தில் வாழ தகுதியுடைய முழு மனிதர்கள் என்றும் நம்புகிறார்கள். யானோமாமோ என்ற வார்த்தையே மனிதர் என்றுதான் பொருள். யானோமாமோ அல்லாத மக்கள் அனைவரும் தரம் தாழ்ந்த யானோமாமோ மக்கள் (Chagnon, 1992). இதே கருதான் யூத கிறிஸ்துவம் முழுவதும் இருக்கிறது. யார் ஸ்பெஷல் மனிதர்கள் என்ற தேர்வை தங்கள் கடவுள் மாற்றிகொணடதாக கருதும் கிறிஸ்துவர்களால் ஏராளமான யூதர்கள் கொல்லப்பட்டிருந்தாலும், கடவுளின் தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்கள் என்ற கரு தோராவில் உருவாக்கம் செய்யப்பட்டு வெளிக்குழு மனிதர்களை பற்றிய பார்வையை ஏறக்குறைய முழுமை செய்திருக்கிறது.

12 ஆம் நூற்றாண்டு அரசியலுக்கு ஒவ்வாத தீர்ப்புகளையும் கருத்துக்களையும் கவனமாக தவிர்க்கும் திறமையுள்ள மைமோனிடஸ்(Maimonides), தால்முத் புத்தகத்தைவிட வெளிப்படையாகவே கருத்தை கூறியிருக்கிறார். முக்கியமாக, தால்முத் எழுதிய ஞானவான்கள் அனுமானம் செய்துகொண்டு எழுதியதை வெளிப்படையாகவே எழுதிவிடுவார். உதாரணமாக கொலைக்கு எதிரான கட்டளையை பற்றிய விளக்க உரையில் (Torts 5:1:1, 5:2:11):

யாரேனும் ஒருவர் ஒரே ஒரு இஸ்ரேலியரை கொன்றாலும், அவர் “கொலை செய்யாதே” என்ற கட்டளையை மீறியவராவார். ஒருவர் சாட்சியங்களின் முன்னிலையில் வேண்டுமென்றே கொலை செய்தால், அவரை வாளால் சீவி மரணதண்டனை வழங்கப்பட வேண்டும்.. அவர் ஒரு இஸ்ரேலியரல்லாதவரை கொலை செய்தால், சொல்ல தேவையின்றி, அவருக்கு மரண தண்டனை வழங்கப்படலாகாது.

மைமோனிடஸின் புத்தகங்களின் சமீபத்திய மொழிபெயர்ப்புகளில் ”ஒரே ஒரு இஸ்ரேலியரை” என்ற வார்த்தையை “ஒரே ஒரு மனிதரை” என்று மாற்றியிருக்கிறார்கள் (e.g., translation by Klein, 1954, p. 195 and note 1, p. 273), ”இஸ்ரேலியரல்லாதவரை” என்ற வார்த்தையை நீக்கிவிட்டார்கள். இது உள்குழு ஒழுக்கத்தை உலகளாவிய ஒழுக்கமாக ஆக்க, திறமையுடன் மொழிபெயர்ப்பதும், ஒரிஜினல் புத்தகங்களை எடிட் செய்வதையும் காட்டுகிறது. இருப்பினும், மைமோனிடஸின் கையால் எழுதப்பட்ட, ஆக்ஸ்போர்ட் கோடக்ஸ் என்று அழைக்கப்படும் புத்தகங்கள் ”மனிதரை” என்று சொல்லுவதற்கு மாறாக, ”ஒரே ஒரு இஸ்ரேலியரை” என்ற வார்த்தையைத்தான் சொல்லுகிறது.

தால்முதின் படி, உள்குழு உறுப்பினர்களான இஸ்ரேலியர்களே மனிதர்கள் என்ற பொருளை உபயோகப்படுத்துவதன் மூலமே இந்தமொழிபெயர்ப்பாளர் இங்கே மனிதர் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தலாம். இருப்பினும், இப்படிப்பட்ட கொள்கை ரீதியான மொழிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பாளர் எடுத்துகொண்ட பொருளை வெளிப்படுத்தாமல் படிப்பவருக்கு வேறொரு பொருள் தரும்படியான வாக்கியங்களை தருகிறது. தால்முது எழுதிய ஞானவான்களான யூத குருமார்கள் யூதர்களல்லாதவர்கள் முழுமையான மனிதர்களாக கருதப்பட முடியாது என்ற கொள்கையில் வெளிப்படையாகவே இருக்கிறார்கள். அவர்கள் ஜெண்டைல்கள் என்று சொல்லப்படும் யூதரல்லாதவர்களாக இருந்தாலும் சரி, விக்கிரக ஆராதனையாளர்களாக இருந்தாலும் சரி, ஹீதன்களாக இருந்தாலும் சரி. விவிலிய பத்தி “என் மந்தையும் என் மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நீங்கள் மனுஷர்; நான் உங்கள் தேவன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.” And ye my flock, the flock of my pasture, are men, and I am your God, saith the Lord GOD.(Ezekiel 34:31; KJV)

“என் மந்தையும் என் மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நீங்களே மனிதர்கள்; உங்களை மட்டுமே மனிதர்கள் என்று நியமித்தேன்” “And ye my flock, the flock of my pastures, are men; only ye are designated ‘men'” (Baba Mezia 114b). ”என் மந்தையும் என் மேய்ச்சலின் ஆடுகளுமான நீங்களே மனிதர்கள். உங்களையே மனிதர்கள் என்று அழைக்கலாம். விக்கிரக ஆராதனையாளர்களை மனிதர்கள் என்று அழைக்கலாகாது” Or: “And ye My sheep the sheep of My pasture, are men; you are called men* but the idolaters are not called men.” [Footnote in original:] ”உண்மையான கடவுளை வணங்குபவரான இஸ்ரேலிய யூதர் மட்டுமே, ஆதாமைப்போல உள்ளவராக கடவுளின் பிம்பத்தில் உருவாக்கப்பட்டவராக சொல்லமுடியும். விக்கிரக ஆராதனையாளர்கள், கடவுளின் பிம்பத்தை களங்கப்படுத்தியுள்ளதால், இந்த பெயருக்கு உரியவர்களாக மாட்டார்கள்”

“யூதரல்லாதவர்களை ஆதாமின் மாதிரியில் உள்ளவர்களாக கூறமுடியுமா? இல்லை. என் மந்தையும் என் மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நீங்களே ஆதாம் (மனிதர்) என்று எழுதியுள்ளது “நீங்களே ஆதாம், ஆனால் யூதரல்லாதவர்கள் ஆதாம் என்று அழைக்கப்படலாகாது [Footnote reads:] ஆதாம் என்று குறிப்பிட்டுள்ளது மனிதர்களை குறிப்பிடவில்லை. மாறாக இஸ்ரவேலர்களையே குறிப்பிடுகிறது. ஆதாம் என்பது கடவுளின் பிம்பத்தில் உருவாக்கப்பட்ட மனிதர்களையே குறிப்பிடுகிறது. யூதரல்லாதவர்கள் தங்களது விக்கிரக ஆராதனையாலும் விக்கிரக ஆராதனை உள்ள பழக்கவழக்கங்களாலும், கடவுளின் புனித பிம்பத்தை களங்கப்படுத்தியுள்ளதால், ஆதாம் என்று அழைக்க தகுதியில்லாதவர்கள்”

ஹீப்ரூ வார்த்தையான ஆதாம் என்பது 106 தடவைகள் தொராவில் வருகின்றது. ஆனால் ஆதாம் என்ற நபரை குறித்து 14 தடவை மட்டுமே வருகின்றது. மற்ற 92 தடவைகளில் அது மனிதன், மனிதர்கள் என்ற பொருளிலேயே வருகிறது. அது இஸ்ரவேலர்களை குறித்து, ஆனால் ஆண்பால் என்று தனிப்படுத்தாமல் வருகிறது. East of Eden

ஏடனுக்குக் கிழக்கே.

தால்முதில் ஆதாமுக்கும் மற்ற வகை மனிதர்களுக்கும் இடையேயான வித்தியாசத்தின் அடிப்படை, இஸ்ரவேலர்களின் தெய்வம் தனது உருவ அடிப்படையில் இஸ்ரவேலர்களை படைத்தது என்பதுதான். கடவுள் ஆதாமை தன் உருவத்தில் உருவாக்கிய போது, அதே நேரத்தில் நோட் என்னும் நிலத்தில் ஏற்கெனவே மக்கள் வாழ்ந்து வந்தது எப்படி என்பதற்கு விடை இதுதான். காயீன் ஏபெலை கொன்ற பின்னால் நோட்Nod என்னும் பகுதிக்கு சென்று அங்கு தன் மனைவியை கண்டுகொள்கிறான். அங்கு ஒரு நகரத்தை ஸ்தாபிக்கிறான்(Genesis 4:16-24). நோட் மக்கள் இஸ்ரவேலர்களின் கடவுளால் படைக்கப்படவில்லை. ஆகவே அங்குள்ள நோட் மக்களை குறிப்பிடும்போது அவர்களை ஆதாம் என்ற வார்த்தை மூலம் குறிப்பிடுவதில்லை.(Genesis 4:23).

சொல்லப்போனால், மனிதன்/மனிதர்கள் என்று குறிக்க விவிலியதில் குறிப்பிடப்படும் ஹீப்ரூ வார்த்தைகள் இயிஷ்/எனொவ்ஷ் ஆகியவை. இவை 428 தடவைகள் தோராவில் வருகின்றன. யாஹ்வேயால் உருவாக்கப்பட்ட ஆதாமின் மனிதர்களை குறிக்க ஆதாம் என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்படுகிறது. ஆனால், இஸ்ரவேலர்களால் வெற்றிகொள்ளப்பட்ட மனிதர்களை குறிக்க ஆதாம் என்ற வார்த்தை (இரண்டே இரண்டு பத்திகளில் ஆடுமாடுகளையும் சேர்த்து சொல்லப்படும்போது தவிர) உபயோகப்படுத்தப்படுவதில்லை. தால்முதில் இந்த இரண்டு பத்திகளையும் கேள்வி கேட்கிறார்கள். யூத குருமார்கள் இதற்கு விளக்கம் சொல்லும்போது, ஆடுமாடுகளை ஒப்பிடும்போது யூதரல்லாதவர்களை ஆதாம் (மனிதர்கள்) என்று சொல்லலாம் என்று கூறிக்கொள்கிறார்கள்.

20ஆம் நூற்றாண்டு பதிப்பாளர்களும் மொழிபெயர்ப்பாளர்களும் இந்த பத்திகளுக்கு சால்ஜாப்பு சொல்லும்போது ஆதாம் என்று சொல்லும் இந்த வார்த்தை சடங்கு ரீதியான தீட்டு என்ற பொருளிலேயே வருகிறது என்றும், யூதரல்லாதவர்களையும், விக்கிரக ஆராதனையாளர்களையும் ஆதாம் என்ற வகைக்குள் சேர்க்கக்கூடாது என்றும் இது ”inhuman” என்ற பொருளில் தால்முதின் ஒரு வார்த்தைதான் என்றும் இதை எழுதிய ரப்பை சிமியோன் ரோமானியர்களால் கடுமையாக அடக்குமுறைக்கு ஆளானவர் என்பதால் இப்படி எழுதியிருக்கலாம் என்றும் சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். (Baba Mezia 114b, p. 651, n. 7).

இப்படிப்பட்ட விளக்கத்தில் ஏராளமான பிரச்னைகள் இருக்கின்றன. யோஹாயின் மகன் ரப்பை சிமியோன் தால்முதில் மிகவும் அதிகாரப்பூர்வமான குருமார், ஞானவான். இவர் சுமார் 700 முறைகள் தால்முதில் குறிப்பிடப்படுகிறார். யூத மதத்தில் மிகவும் மதிக்கப்படும் ஞானவான்களில் மிகவும் முக்கியமானவர். அவரது கருத்துக்களையே ரப்பைகள் இந்த விஷயத்தில் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். வெறும் சடங்கு ரீதியான தீட்டு தவிர மற்ற இடங்களிலும் யூதரல்லாதவர்கள் மனிதரல்ல்லாதவர்கள் என்றே கருதப்படுகிறார்கள். ஒருவரது பலியாடுகளை “மனிதர்கள் அல்ல மிருகங்கள்” என்று பெயர் சூட்டுவது வெறும் வார்த்தை மட்டுமல்ல, மாறாக பெரும்பாலான ஒழுக்கக்கேடான ராணுவ தாக்குதல்களுக்கு எதிராளிகளை ”மனிதர்கள் அல்ல மிருகங்கள்” என்று பிரச்சாரம் செய்வது மிக மிக முக்கியமான தேவையாகும். (3a) அல்டாஸ் ஹக்ஸ்லி, இரண்டாம் உலகப்போரின்போது (1937, p. 101): “பிரச்சாரம் செய்பவரின் முக்கியான நோக்கம், எதிராளியும் மனிதன்தான் என்பதை மறக்கடிப்பதுதான். அவர்களது தனிகுணாம்சத்தை திருடி, அவர்களை கொன்றால், ஒழுக்க ரீதியில் ஒரு பிரச்னையுமில்லை என்று தெளிவாக்குவதுதான்” என்று கூறுகிறார்.

(தொடரும்)

Series Navigation

ஜான் ஹார்ட்டுங்

ஜான் ஹார்ட்டுங்

அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். (பகுதி 2) யாரை கொல்லக்கூடாது?

This entry is part [part not set] of 36 in the series 20101017_Issue

ஜான் ஹார்ட்டுங்


யாரை கொல்லக்கூடாது?Thou Shalt Not Kill Who?

மேற்கண்ட அன்பு சட்டத்திற்கு பின்னால் வரும் குறிப்பான சட்டங்களை சரியாக புரிந்துகொள்ளவேண்டுமென்றால், அண்டைவீட்டுக்காரன் என்று விவிலியம் யாரை குறிப்பிடுகிறது என்று புரிந்துகொள்ள வேண்டும். பத்துகட்டளைகளின் சட்டதிட்டங்களை பார்ப்போம் (Deuteronomy 5:17-21; JPS ’17 & KJV):

Thou shalt not kill.
Neither shalt thou commit adultery.
Neither shalt thou steal.
Neither shalt thou bear false witness against thy neighbour
Neither shall you covet your neighbor’s wife and you shall not desire your neighbor’s
house, his field, or his manservant, or his maidservant, his ox, or his ass, or anything that
is your neighbor’s.

இந்த வார்த்தைகள் எழுதப்பட்ட ஓலைகளில் முற்றுப்புள்ளியோ, கமாவோ அல்லது வார்த்தையின் முதல் எழுத்தை பெரிசாக எழுதுவதோ இல்லாமல் எழுதப்பட்டது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். எங்கே வாக்கியம் ஆரம்பிக்கிறது, எங்கே வாக்கியம் முடிகிறது எல்லாமே மொழிபெயர்ப்பாளரின் தயவில்தான். ஆகவே, ஐந்து தனித்தனி வாக்கியங்களாகவோ பத்தியாகவோ எழுதாமல் தொடர்ச்சியாக, ஒரு வார்த்தையையும் விடாமல் எழுதினால், Deuteronomy 5:17-21 ஐ இப்படித்தான் மொழிபெயர்க்கவேண்டும்.

Thou shalt not kill, neither shalt thou commit adultery, neither shalt thou steal, neither shalt thou bear false witness against thy neighbour. Neither shall you covet your neighbor’s wife, and you shall not desire your neighbor’s house, his field, or his manservant, or his maidservant, his ox, or his ass, or anything that is your neighbor’s.

இப்போது யாரை கொல்லக்கூடாது என்பதற்கான விடை கிடைத்துவிட்டது. “Thou shalt not kill thy neighbor – the children of thy people, your countrymen” அதாவது உள்குழு உறுப்பினரை கொல்லக்கூடாது.

இப்படி புரிந்துகொள்வது புரட்சிகரமானதா? இல்லவே இல்லை. தால்முத் எழுதிய ரப்பைகள் (தோராவுக்கு விளக்க உரையின் பெயர் தால்முத். ரப்பைகள் என்பவர்கள் யூத குருமார்கள்) ஒரு யூதனை அறியாமல் கொன்றுவிட்ட யூதன் மீது கொலைப்பழி கிடையாது என்று வரையறுத்திருக்கிறார்கள். அதாவது ஒரு யூதன் யூதனல்லாத ஒருவனை கொல்ல நினைத்து தவறாக ஒரு யூதனை கொன்றுவிட்டால் அவன் மீது கொலைப்பழி கிடையாது. மிஷ்னா என்னும் யூத சட்டம் இதில் மிகத்தெளிவாக இருக்கிறது (Sanhedrin 79a):

ஒரு யூதன் ஒரு மிருகத்தை கொல்ல நினைத்து ஒரு மனிதனையோ அல்லது யூதனல்லாதவனையோ அல்லது ஒரு யூதனையோ கொன்றுவிட்டால், அவன் மீது கொலைப்பழி கிடையாது.

இந்த சட்டத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள விளக்க உரை (Gemara என்றால் விளக்க உரை) ஒரு தெளிவான உதாரணம் கொடுக்கிறது

”ஒரு யூதன் இஸ்ரவேலர்களும் யூதரல்லாதவர்களும் இருக்கும் கூட்டத்தில் கல்லெறிந்தால் அவன் மீது கொலைப்பழி கிடையாது. இது எவ்வாறு? அந்த கூட்டத்தில் ஒன்பது யூதரல்லாதவர்களும், ஒரு இஸ்ரவேலரும் இருக்கிறார் என்று வைத்துகொள்வோம். கல்லெறிந்த யூதர் மீது கொலைப்பழி இல்லை என்பதற்கு அந்த கூட்டத்தில் பெரும்பான்மை யூதரல்லாதவர்களே இருந்தார்கள் என்பதே நிரூபணம்.”

ஆகவே உள்குழுவைச் சேர்ந்த ஆளை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டவர் ஒப்புக்கொண்டாலும், அவர் வெளிக்குழுவை சார்ந்த ஒருவரைத்தான் குறிவைத்தார் என்று நம்ப காரணம் இருந்தால் அவரது குற்றமற்ற தன்மையை ஏற்றுகொள்ளவேண்டும். இதன் படி, ஞானவான்கள் என்று பொதுவாக அழைக்கப்படும் தால்முத் எழுதிய ரப்பைகள், எது கொலை நோக்கத்துக்கான தடயமாக மிகவும் தாராளமான பார்வையை கொண்டவர்களாக இருந்தார்கள். அதாவது ஒன்பது உள்குழு ஆள்கள் இருக்குமிடத்தில் ஒரே ஒரு வெளிக்குழு ஆள் இருந்தாலும், அவர் அப்பாவிதான் குற்றமற்றவர்தான் என்று அறிவிக்கலாம் என்று சொல்கிறார்கள். (Sanhedrin 79a, Baba Kamma 44b):

”பாதிக்குப் பாதி இருந்தாலும், கொலை குற்றம் சாட்டப்படும்போது, சற்று தாராளமான பார்வைதான் எடுக்கப்படவேண்டும். .. ஒரு இடத்தில் ஒன்பது யூதர்களும் ஒரே ஒரு யூதனல்லாதவனும் இருந்தாலும், .. இருப்பினும், அங்கே ஒரே ஒரு யூதனல்லாதவன் இருந்தாலும், அவன் அந்த கும்பலுக்கு இன்றியமையாதவனாக இருக்கும் பட்சத்தில், அந்த இன்றியமையாமை காரணமாக கூட்டத்தில் பாதிக்கு சமானமாக கருதப்படவேண்டும். சந்தேகம் இருக்கும் பட்சத்தில், கொலை குற்றம் சாட்டப்பட்டவர் மீது இரங்கல்தான் காட்டப்படவேண்டும். ”

எதிர்பார்ப்பது போலவே, அறியாமல் கொலை செய்துவிட்டால் சட்டம் பாரபட்சமற்றது அல்ல. வெளிகுழு ஆள் எதிர்பாராத விபத்தின் காரணமாக உள்குழு ஆளை கொன்றுவிட்டாலும், அவர் மீது கொலைக்குற்றம் நிச்சயம் உண்டு. மைமோனிடஸ் (Maimonides) என்பவரது தோரா விளக்கங்களும் தால்முத் விளக்கங்களும் பொதுவாக மிகுந்த அதிகாரப்பூர்வமாக கருதப்படுகின்றன. அவர் இங்கே இதனை தெளிவாக விளக்குகிறார்(Book of Torts 5:5:4):

நம் நாட்டில் இருக்கும் ஒரு அந்நியன் ஒரு யூதரை தெரியாமல் (விபத்தின் காரணமாக) கொன்றுவிட்டாலும், அந்த அந்நியனுக்கு அவன் அப்பாவியாக இருந்தாலும், உடனே மரணதண்டனை விதிக்கப்படவேண்டும்

The Book of Judges (Maimonides, 5:9:4) இதனை உறுதிப்படுத்துகிறது:

ஒரு நோவாஹைட் (யூதனல்லாதவர்) ஒரு மனிதரை கொன்றுவிட்டால், அவர் ஒரு தாயின் வயிற்றில் இருக்கும் கருவை கொன்றுவிட்டாலும், அவருக்கு மரணதண்டனை விதிக்கப்படவேண்டும். சாகக்கிடக்கும் ஒருவரை கொன்றுவிட்டாலும் அவருக்கும் மரணதண்டனை வழங்கப்படவேண்டும். மேற்கண்ட எந்த வழக்கிலும் ஒரு யூதருக்கு மரணதண்டனை வழங்கப்படக்கூடாது.

Series Navigation

ஜான் ஹார்ட்டுங்

ஜான் ஹார்ட்டுங்

அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். (பகுதி 1)

This entry is part [part not set] of 41 in the series 20101010_Issue

ஜான் ஹார்ட்டுங்


Men never do evil so completely and cheerfully as when they do it from religious conviction.
– Blaise Pascal, Pensees, 1670

-மத நம்பிக்கை காரணமாக தீய விஷயங்களை செய்யும்போது மனிதர்கள் முழுமையாக சந்தோஷமடைவது போல வேறெப்போதும் செய்யமாட்டார்கள்.
ப்ளேய்ஸ் பாஸ்கல் 1670

சுருக்கம்:
உலகத்தின் பெரிய மதங்கள் கொலை, திருடு, பொய் சொல்லுவது ஆகியவை தவறு என்று ஒழுக்கத்தை உரைக்கின்றன. அப்படித்தான் 19 ஆம் நூற்றாண்டு 20ஆம் நூற்றாண்டு மேற்கத்திய ஞானம் வைத்துகொள்கிறது. இங்கே காட்டியுள்ள ஆதாரங்கள் மேற்கின் மதங்களுக்கே இந்த ஒழுங்குமுறை பொருந்தாது என்று காட்டுகிறது. முக்கியமாக, கொலைக்கு எதிரான சட்டங்கள், திருடு, பொய் சொல்லுவதற்கு எதிரான சட்டங்களாக சொல்லப்படும் பத்து கட்டளைகள் அந்த ஒரு குழுவுக்கு மட்டுமே போதிக்கப்பட்டவை, அந்த குழு எதிர்குழுக்களை வெற்றிகொள்ளவும், உள்குழுவுக்குள் ஒற்றுமை ஏற்படுத்தவுமே சொல்லப்பட்டவை என்பதை நிரூபிக்கின்றன. கூடவே, இந்த உள்குழு ஒழுக்கங்கள் வரலாற்று ரீதியாகவும், வெளிப்படையாக இப்போதும், குழுக்களுக்கு இடையே பிரச்னைகளை உண்டுபண்ணவும், கொலை, திருடு பொய் சொல்லுவது ஆகியவற்றை ஊக்குவிக்கவுமே உபயோகப்படுத்தப்படுகின்றன. யூத கிரிஸ்துவ ஒழுக்கவியலை உலகளாவிய ஒழுக்கவியலாக முன்னிருத்தும் தற்போதைய முயற்சிகள் யூத மதமும், கிறிஸ்துவ மதமும் அடிப்படையாக கொண்ட அவர்களது மதப்புத்தகங்களுக்கு எதிரானவை. எனவே இப்படிப்பட்ட முயற்சிகள் இறுதியில் தோல்வியில்தான் முடியும்.

ஆசிரியர் குறிப்பு: நோம் சோம்ஸ்கியுடன் ஒன்பது வருடங்களாக இந்த கட்டுரையில் தொடர்பான விஷயங்கள் குறித்து தெளிவுபடுத்தும் கடித போக்குவரத்து வைத்துகொண்டதற்கு நன்றி செலுத்துகிறேன். ரிச்சர்ட் அலெக்ஸாந்தர், நெப்போலியன் சான்யான், லல்லா டாக்கின்ஸ், ரிச்சர்ட் டாக்கின்ஸ், வில்லியம் ஐர்ன்ஸ், கெவின் மெக்டொனால்ட், ப்ராங் மைய்ல், ராபர்ட் ட்ரிவர்ஸ், வில்லியம் சிம்மர்மன், மாட் ரிட்லி ஆகியோரின் ஊக்குவிப்புக்கும் ஞானம் நிறைந்த அறிவுரைகளுக்கும் நன்றி. இதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அவை என்னுடையவை. விமர்சனங்களை என்னிடமே கூறும்படி கேட்டுக்கொள்கிறேன். இது தொடர்ந்து மாற்றப்பட்டு வருகிறது. இது தொடர்பான விமர்சனங்களையும் உபரி செய்திகளையும் hartung@post.harvard.edu முகவரிக்கு அனுப்பும்படி கேட்டுகொள்கிறேன்.
(மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: இந்த கட்டுரை ஜான் ஹார்டுங் அனுமதியின் பேரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது)

© 1995/2010 John Hartung, Ph.D. First published in SKEPTIC 3:4 pp 86-99, 1995 and 4:1 pp 24-31, 1996. Ever a work in progress, corrections and updates to the text and references are always welcome – please forward to hartung@post.harvard.edu

கண்ணாடியில் தெரியும் கோலம்

சதர்ன் பாப்டிஸ்டுகள் என்ற கிறிஸ்துவ பிரிவினர், அமெரிக்காவின் அலபாமா மாநிலத்திலிருந்து எத்தனைபேர் நரகத்துக்கு போவார்கள் என்று கணக்கிட்டார்கள். அது மாநிலத்தில் 46.1 சதவீதம் அல்லது 1.86 மில்லியன் மக்கள். இது எப்படி என்று நியூயார்க் டைம்ஸ்(1993) விளக்கியது. “ஒவ்வொரு மாவட்டத்தின் மக்கள்தொகையையும் எடுத்து அதிலிருந்து தங்களது சர்ச்சின் உறுப்பினர் தொகையை கழித்தது. பிறகு ஒரு ரகசிய பார்முலாவின் துணையுடன் மற்ற சர்ச் அமைப்புகளின் ஒவ்வொரு சர்ச்சிலிருந்தும் எவ்வளவு பேர் சொர்க்கத்துக்கு போவார்கள் என்று கணக்கிட்டது.” நியூஸ்டே (1993) பத்திரிக்கை இந்த கணக்கின்படி, “மெத்தோடிஸ்ட் சர்ச்சின் உறுப்பினர்கள் ரோமன் கத்தோலிக்கர்களை விட அதிகமாக சொர்க்கத்துக்கு போவார்கள்” என்று அறிவித்தது. அதே நேரத்தில், “எந்த சர்ச்சிலும் உறுப்பினராக இல்லாதவர்கள் நிச்சயமாக நரகத்துக்குத்தான் போவார்கள்” என்றும் அறிவித்தது.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வந்த செய்தியின்படி, 1893இல் உலக மதங்களின் பாராளுமன்றம் சிக்காகோவில் நடந்து நூறு வருடங்களுக்குப் பின்னால், ஆயிரக்கணக்கானவர்கள் மீண்டும் பங்கு பெறும்போது, “பல கோடி அமெர்க்கர்கள் இணைந்துள்ள எவாஞ்சலிக்கல் கிறிஸ்துவ சபைகளும், அடிப்படைவாத கிறிஸ்துவ அமைப்புகளும் இந்த கூட்டத்தை மத கொள்கை ரீதியில் புறக்கணித்தன. மற்ற மதங்களுடன் நல்லுறவு பற்றி பேசக்கூடிய தாராளவாத அமைப்புகளான எபிஸ்கோபலிய சபைகள், மெத்தோடிஸ்ட் சபைகள் இங்கே காணப்படவே இல்லை”

ஈஸ்டர்ன் ஆர்த்தோடாக்ஸ் கிறிஸ்துவர்கள் வந்திருந்தார்கள். ஆனால், கிறிஸ்துவை நம்பாதவர்கள் இருப்பதை பார்த்து கூட்டமாக வெளியேறினார்கள். நேஷன் ஆப் இஸ்லாம் என்ற (யூத வெறுப்பு குழு) இருப்பதை பார்த்த யூத மத சபையினர் வெளிநடப்பு செய்தார்கள். சீக்கியர்களும் இந்துக்களும் ஒருவரை ஒருவர் பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்ற முனைந்தனர். தலாய்லாமா தானே கேட்ட கேள்விக்கு “நான்ஸென்ஸ்” என்று பதிலளித்தார், “மத ரீதியில் நமக்குள்ளேயே சண்டை போட்டுகொண்டிருந்தால், நம்மால் மற்றவர்களுடைய பிரச்னைகளுக்கு தீர்வளிக்க முடியுமா?”(Steinfels, 1993, p. 93).

நான்ஸென்ஸ் தான். குற்றம் சாட்ட விரலை நீட்டுவது அவர் கண்ணாடிக்கு முன்னால் நின்று செய்தால் பயனுள்ளதாக இருக்கும். அண்டைவீட்டுக்காரர்களை பரிசோதிப்பதன் முன்னால், அவரவர் அவரவர் குடும்பங்களை பரிசோதனை செய்தால் நாம் எல்லோருமே இணைந்து வாழலாம். ஆகவே மேற்கத்திய உலகம், மற்றமதங்களை விமர்சனம் செய்வதற்கு முன்னால், யூத மதத்தையும் அதன் உப மதமான கிறிஸ்துவ மதத்தையும் பரிசோதனை செய்து பார்ப்பது நல்லது.

யார் “உனது அண்டைவீட்டுக்காரன்”?

இரட்டை பிறவிகளில் ஒரேமாதிரி இருக்கும் இரட்டை பிறவிகளை identical twins ஒரேமாதிரி இரட்டை பிறவிகள் என்று சொல்வார்கள். ஒரே மாதிரி இல்லாத ஆனால் இரட்டை பிறவிகளாக இருப்பவர்களை fraternal twins பிறப்பு இரட்டைபிறவிகள் என்று சொல்வார்கள்.
பள்ளிக்கூடங்களில் பிறப்பு இரட்டைபிறவிகளாக இருக்கும் சகோதரர்களை (அல்லது சகோதரிகளை) புதிர் விளையாட்டுகளை சேர்ந்து தீர்க்க சொன்னால், இவர்கள் ”நான்” என்ற வார்த்தையை அதிகம் பிரயோகிப்பதையும், புதிரை பிடுங்குவதற்காக ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டுகொள்வதையும், புதிர் எப்படி பொருந்தும் என்பதற்காக சண்டை போட்டுகொள்வதையும், புதிரை விடுவிக்க நீண்ட நேரம் எடுத்துகொள்வதையும், இறுதியில் விடையைப் பற்றி திருப்தி இல்லாதவர்களாக இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் அறிந்திருக்கிறார்கள். ஆனால், ஒரேமாதிரி இரட்டை பிறவிகள் அடிக்கடி “நாம்” என்ற வார்த்தையை உபயோகிப்பதையும், புதிரை ஒன்றாக சேர்ந்து விடுவிப்பதையும், ஒருவருகொருவர் உதவி செய்து புதிரை முடிப்பதையும் வெகுவிரைவிலேயே புதிரை விடுவித்துவிடுவதையும், விடுவித்தபின்னால், விடுவித்ததை பற்றி திருப்தியோடும் இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் அறிந்திருக்கிறார்கள்(Segal, 1984).

ஒரேமாதிரி உள்ள இரட்டை பிறவிகள் “உன் அண்டை வீட்டுக்காரனை உன்னைப்போல நேசி” என்னு பொன்மொழியை பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள் என்று பரிணாமவியல் அறிஞர்கள் வாதிடுகிறார்கள். உறவுத்தேர்வு வார்த்தைகளில் சொன்னால் (kin selection) இப்படிப்பட்ட ஒரேமாதிரி உள்ள இரட்டை பிறவிகளது உறவு எண்ணை 100 சதவீதம் (“degree of relatedness,” or “r” is 100% (r = l) (Hamilton, 1964). உள்ளதாக சொல்வார்கள். அவர்களது சுய விருப்பங்கள் தனது ஒரே மாதிரி உள்ள இரட்டை பிறவியின் சுய விருப்பங்களோடு முழுமையாக ஒத்துப்போகிறது. ஏனெனில் அவர்களது ஜீன்கள் ஒரே மாதிரியானவை. ஒருவரது குழந்தை மற்றவரது குழந்தையுடன் சமமானது. ஒருவரது குழந்தை, அவரது இரட்டை பிறவியின் குழந்தை இரண்டும் தனக்கு ஒரே மாதிரியான உறவு கொண்டது. ஒரே மாதிரி உள்ளவர்களை பொறுத்தமட்டில், அடுத்தவருக்கு உதவுவது என்பது தனக்குத்தானே உதவிக்கொள்வது.

”உன்னை நேசிப்பது போல உன் அண்டைவீட்டுக்காரனையும் நேசி” என்பது தோராவிலிருந்து வருகிறது. (1) தோரா என்றால் சட்டம். தோராதான் சட்டம். தற்காலத்திய உயிரியலாளர்களுக்கு தனது தெய்வத்தின் கட்டளையை சொல்லவேண்டியதிருந்தால், “உங்களுடைய ஜீன்கள் எல்லாம் ஒரே மாதிரியானவை அதாவது r=1 என்பது போல உங்களது அண்டை வீட்டுக்காரரை நேசியுங்க” என்று சொல்லியிருக்கலாம். புராதன இஸ்ரவேலர்களது சுயசரிதையாக இருக்கும் அவர்களது பழங்குடி கதைகளை பொறுத்தமட்டில், கொலை, திருடு, பொய் சொல்லுவது ஆகியவற்றுக்கு எதிரான இந்த சட்டங்கள் சொல்லப்பட்டுள்ளன. ஆனால், இந்த ஒழுக்கத்தின் உச்சியாக சொல்லப்படுவது யார்? யார் உன் அண்டைவீட்டுக்காரன்?

தோராவின் தெய்வத்தின் மேல் பெருமதிப்பு வைத்திருக்கும் பெரும்பாலான தற்காலத்திய யூதர்களும் கிறிஸ்துவர்களும், இந்த சட்டம் எல்லோருக்கும் பொருந்தும் என்று பதில் கூறுவார்கள். யூதமத பிரச்சாரம், சமூக நீதிக்கான கமிட்டியின் பிரச்சார ஏட்டில் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டுள்ளது. இதே மாதிரியான ஆனால், மிகவும் விவரமான விளக்கத்துக்கு (Walz, 1992; for a more elaborate but ideologically identical interpretation, see Hefner, 1991): படிக்கலாம்.
இஸ்ரவேலர்கள் தங்களது அன்புக்கட்டளையை பெற்றபோது பாலைவனத்தில் தன்னந்தனியர்களாக இருந்தார்கள். (2) விவிலியத்தின் படி, அவர்கள் கூட்டுக்குடும்பம் சுற்றி உள்ள கூடாரங்களில் இருந்தார்கள். அவர்கள் அருகே இஸ்ரவேலர்கள் அல்லாத யாரும் இல்லை. அவர்களிடையே சண்டை சச்சரவுகள் ஏராளம் இருந்தன. உள்குழு சண்டைகள் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தது. ஒரே ஒரு சண்டையிலேயே 3000 பேர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். (Exodus 32:26-28).(3) பெரும்பாலானவர்கள் ஒரு புதிய கேப்டனை தேர்ந்தெடுத்துகொண்டு மீண்டும் எகிப்து செல்ல விரும்பினார்கள் (Numbers 14:4). ஆனால், அவர்களது பழைய கேப்டனான மோஸஸ், குழு ஒன்றாக இணைந்து இருக்கவேண்டும் என்று விரும்பினார்.

அண்டைவீட்டுக்காரன் என்று தன்னுடைய தெய்வம் யாரை குறிப்பிடுகிறது என்று மோசஸ் நினைத்தார் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டுமென்றால் அந்த சட்டத்தை நாம் அது எந்த சூழ்நிலையில் வந்தது என்பதை கணக்கிலெடுத்துகொள்ளவேண்டும். எந்த இடத்திலிருந்து இந்த சட்டம் விவிலியத்திலிருந்து எடுக்கப்பட்டதோ அந்த இடத்தை நாம் பார்க்கவேண்டும். லெவிட்டிகஸ் (லெவியாகமம் 19:18)இன் நான்கு ஆங்கில மொழிபெயர்ப்புகள்.

– Thou shalt not avenge, nor bear any grudge against the children of thy people, but thou shalt love thy neighbor as thyself. – First Jewish Publication Society translation (JPS ’17) and the King James Version (KJV).

– You shall not take vengeance or bear any grudge against the sons of your own people, but you shall love your neighbor as yourself. – Revised Standard Version (RSV).

– You shall not take vengeance or bear a grudge against your countrymen. Love your fellow as yourself. – TANAKH (JPS ’85).

இந்த சட்டம் வந்திருக்கும் இடத்தை வைத்து பார்த்தோமானால், அண்டைவீட்டுக்காரன் என்பது “the children of thy people,” “the sons of your own people,” “your countrymen” உன்னுடைய மக்களின் பிள்ளைகள், உங்களுடைய சொந்த மக்களின் மகன்கள், உங்கள் நாட்டுமக்கள். வேறொரு வார்த்தையில் சொல்லவேண்டுமென்றால் உள்குழு உறுப்பினர்கள்.

(தொடரும்)

Series Navigation

ஜான் ஹார்ட்டுங்

ஜான் ஹார்ட்டுங்