மூன்று கவிதைகள்
என். விநாயக முருகன்
யாரும் எழுதிவிடலாம்
————————————–
யாரும் எழுதிவிடலாம்.
கொஞ்சம் சிகரெட்.
கொஞ்சம் தேனீர்.
கொஞ்சம் மகிழ்ச்சி
கொஞ்சம் பணம்
கொஞ்சம் தனிமை
கொஞ்சம் வறுமை
கொஞ்சம் சிரிப்பு
கொஞ்சம் நெருப்பு
கொஞ்சம் காமம்
கொஞ்சம் ஞானம்
கொஞ்சம் வாழ்க்கை
கொஞ்சம் மரணம்
அப்படியே
கொஞ்சம் கவிதையும்
கிடைத்துவிட்டால்
யாரும் எழுதிவிடலாம்.
நல்ல கவிதையை
சந்திப்புகள்
——————
எப்போதும்
சந்திக்க விரும்புகின்ற
நபர்களை பொறுத்தே
நீளுகின்றன
எல்லாச் சாலைகளும்
சந்திப்புகளுக்கான
காரணங்களை பொறுத்தே
சுவாரஸ்யமாகின்றன
எல்லா சந்திப்புகளும்
திரும்பி வரும்
சாலைகள் எங்கும்
சிதறியோடுகின்றன
எல்லா சந்திப்புகளும்
எப்போதும்
எதிர்பாராதது
———————
என் கவிதையை
ரசித்தவர்.
அதன் படிமத்தை
விமர்சித்தார்.
சொற்களின் ஆழத்தில்
உறங்கும் மௌனத்தில்
மூழ்கினார்.
இந்த இடத்தில்
இந்த வார்த்தை தேவையில்லை
அன்பாக சுட்டிக்காட்டினார்.
இறுதியில் கேட்டது
நானே எதிர்பாராதது
ஆமா.. ஒரு கவிதைக்கு
எவ்வளவு கிடைக்கும்?
—
navina14@hotmail.com
- கோ.கண்ணனின் கவிதைகள்
- பெரியார் பதிப்புரிமை வழக்கு – ஒரு குறிப்பு
- சாங்கியத் தாயும், சாங்கிய மதமும்.
- கண்டனத்துக்குரிய சில…
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஆறு
- வலியறிதல்
- பூமி என்னும் வண்ணக்கலவை
- சாகசம்
- காணாமல் போனவர்களின் மணல்வெளி
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதிநான்கு
- இது பின்நவீனத்துமல்ல
- ஆலவாய் – சரித்திரத்தின் ஊடே ஒரு நெடும் பயணம்
- ஊகங்களும் ஊடகங்களும்
- மூன்று கவிதைகள்
- மறு நிர்மாணப் பணிகளுக்காக மூடப்பட்டிருந்த தேக்கா ஈரச்சந்தை
- ஆகவே சொல்கிறேன்
- மரணத்தைத் தவிர வேறில்லை
- ஆசை
- வெட்கமற்றது
- மிதித்துச் செல்ல ஓர் இலவச ஆல்பம்
- உயிர் தேடும் வண்ணங்கள்
- இயக்கம்..
- ” புறத்தில் பெருந்திணை “
- தேவிபாரதியின் “பிறகொரு இரவு” நூல் வெளியீட்டு விழா
- BAR1 invites you to attend its first Salon/open studio Bar 1/4 as part of its INDIA- INDIA residency.
- கடித விமர்சனம் – 8 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து) நிறைவு
- நல்லி- திசை எட்டும் – மொழியாக்க விருது விழா
- வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்
- காட்டுமிராண்டி அரபிகளின் இறை வழிபாட்டினைச் செப்பனிட மட்டுமே….
- screening of the documentary film Out of Thin Air
- நன்றி, மலர் மன்னன்
- ஏலாதி சிந்தனைப்பள்ளி தேசிய பல்துறை ஆய்வரங்கம்
- வரவேற்போம், முகம்மது அமீனை.
- இரண்டு கவிதைகள்
- வேத வனம் – விருட்சம் 44
- ஜெயபாரதன் தொடர்கள்
- மூன்று கவிதைகள்
- நிழலின் ஒளி
- மொட்டை மாடி
- தோற்கப் பழகு!
- இறகுப்பந்துவிடு தூது!
- பறவையின் இறப்பு
- இயலாமை
- ஒலி மிகைத்த மழை
- மெளன கோபுரம்