ஒரு தந்தையின் கடன்

This entry is part [part not set] of 44 in the series 20030209_Issue

புஷ்பா கிறிஸ்ரி


என் மகனுக்கு வந்தது கடன்

என் பிறப்புக்கு வந்தது கடன்

பணி செய்து கிடப்ப தென்கடன்

மகன் கடன் தீர்ப்ப தென்கடன்

உழைத்தேன் உழைத்தேன் நானும் அவனுக்காக

நடந்தேன் நடந்தேன் தினமும் கால்நடையாக

தேடினேன் தேடினேன் எங்கும் வேலையையே

நாடினேன் நாடினேன் கடன் வங்கியையே

கடன் தொல்லைகள் கூடியே வந்தன

கடனுடன் மனதில் கவலையும் வந்தது

கடன் கட்ட தினம் தடுமாறி

கடன் தந்த கவலையும் நோயுமாகி

கடன் கட்டி நான்முடிக்க வென்மகனோ

கடன் மேலும் கடன்பட்டு குடுடனாகிி

கடன்கார மனிதனாக வென்னைத் தள்ளி

கடனில் போட்டுவிட்டு கடனுடன் மரணமானான்

கடனோடு நான் கிடந்து தவித்தாலும்

கடனே எனக் கென்றும் நோயானாலும்

கடனே எனக் கென்றும் பாயானாலும்

கடன் முடிய என்உயிருடன் நான்முடிவேன்

புஷ்பா கிறிஸ்ரி
pushpa_christy@yahoo.com

Series Navigation

புஷ்பா கிறிஸ்ரி

புஷ்பா கிறிஸ்ரி