யூசுப் ராவுத்தர் ரஜித்
பிறைக்குள் நிலா
உன் நெற்றிப் பொட்டு
உன் குறுஞ்செய்திதான்
எனக்குக் குறுந்தொகை
எல்லாரும் கேட்கிறார்கள்
நீ யார் மாதிரி என்று
மோனலிசாவுக்கு ஏது முன் மாதிரி
நீ கடந்து போகிறாய்
புறாக்களும் மைனாக்களும்
திரும்பிப் பார்க்கின்றன
சடை சாரை
சொருகினால் பூ வாழை
விரித்தால் புகை உன் சிகை
சூரியனைச் சுற்றுவது
அலுக்கவே யில்லை பூமிக்கு
உயிர் தருகிறான் சூரியன்
உருவம் தருகிறாள் பூமி
காதலுக்கு தூரங்கள் பொய்
பூ கனி பூ
கோழி முட்டை கோழி
குழந்தை மனிதன் குழந்தை
ஒன்று முடிகிறது இன்னொன்று பிறக்கிறது
முடிவே இல்லாதது காதல்
குறுத்து விரியும்போது
அங்கே ஒரு காதலும் விரிகிறது
அதன்பிறகுதான் இளநீர்
பதின்மூன்று பிள்ளைகள்
மும்தாஜ் பெற்றாள்
தாஜ்மகாலைப் பெற்றான் சாஜஹான்
காதல் கசக்காது
தொட்டுவிட்டேன்
சிணுங்கியது தொட்டாச்சிணுங்கி
விரியும்வரை நான் விலகவே யில்லை
உன்னையா சிணுங்க விடுவேன்?
தோண்டத் தோண்ட
நீரும்வருகிறது நெருப்பும் வருகிறது
எப்படி?
காதலிடமும் பூமியிடமும்
காரணம் கேட்காதீர்கள்
ஆறுக்கும் வேருக்கும்
காற்றுக்கும் காதலுக்கும்
பாதை சொல்லாதீர்கள்
ஒரு காதலைச் சொல்லத்தான்
பனித்துளி புல்லுக்கு வருகிறது
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மழை பாடும் கீதம் >> கவிதை -21 பாகம் -2
- “கரப்பான் பூச்சி பிரபஞ்சம்” (cosma…a cocoon of cockroch)
- மிருதங்க வித்வான் T.K.மூர்த்தி நேர்காணல்
- மிருதங்க வித்வான் T.K.மூர்த்தி நேர்காணல் (முடிவுப்பகுதி)
- குலாபி தியேட்டர் சினிமாவை முன்வைத்து
- 67 வயதில் சிறுவனான மாயம்
- திலகபாமாவின் மறைவாள் வீச்சு
- சினிமா கட்டுரை யஸ்மின் அமாட் சினிமா : “sepet” ஒரு சீன வாலிபன் – ஒரு மலாய்க்காரப் பெண் – மறக்க முடியாத காதல் கதை
- யுவனின் குண்டூசி தேடாத யானைகள் – நாவல் விமர்சனம் (1)
- யுவனின் குண்டூசி தேடாத யானைகள்= நாவல் விமர்சனம் (2)
- இ.பா வின் ‘வேதபுரத்து வியாபாரிகள்’- ஒரு அரசியல் அங்கத நாவல்.
- பைக்காரா
- ஈரம் – ஆன்ட்டி கிளைமாக்ஸ்
- தீபச்செல்வனின் ‘ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம்’ கவிதை நூல் வெளிவருகின்றது.
- அணு ஆயுதப் போரில் விளையும் பேரழிவுகள். (கட்டுரை: 2)
- வேத வனம் –விருட்சம் 64
- டிராகன்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) நாலங்க நாடகம் அங்கம் -4 காட்சி -2
- மூன்று கதைகள்
- வாடகை
- வார்த்தை டிசம்பர் 2009 இதழில்…
- கலைஞர் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்..
- அதிகாரத்துவத்தின் நீட்சியும் ஆளுமையின் வலிமையும்
- இரவினில் பேசுகிறேன்
- காதல்
- நிச்சயமாக உனதென்றே சொல்
- நூலகத்தில் பூனை
- பனி சூழ்ந்த பாலை!
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம்-3 மதுக்குடி அங்காடி (The Tavern)
- அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டி.