வாழ்க்கை
ஸ்ரீராம்
பகலுடன் இரவு சேர்ந்தால் நாள்.
மண்ணோடு வேர் சேர்ந்தால் செடி.
நாருடன் பூ சேர்ந்தால் பூச்சரம்.
நீருடன் அரிசி சேர்ந்தால் சாதம்.
விண்ணோடு நீர் சேர்ந்தால் மழை.
மணியோடு நொடி சேர்ந்தால் நேரம்.
மனதோடு உதவி சேர்ந்தால் தானம்.
மனம் ஒரு நிலையாய் சேர்ந்தால் தியானம்.
காலத்தோடு உழைப்பு சேர்ந்தால் பலன்.
தன்னோடு தான் சேர்ந்தால் அகங்காரம்.
உதவியோடு நினைவு சேர்ந்தால் நன்றி.
தன்னை தெய்வத்திடம் சரணைடைந்தால் பக்தி.
மனதோடு மனம் சேர்ந்தால் காதல்.
ஆணோடு பெண் சேர்ந்தால் திருமணம்.
உடலோடு உடல் சேர்ந்தால் மழலை.
மழலையோடு சொல் சேர்ந்தால் ஆனந்தம்.
சொல்லோடு சொல் சேர்ந்தால் வாக்கியம்.
வாக்கியத்தோடு பொருள் சேர்ந்தால் கவிதை.
ஆசை பேராசையாய் சேர்ந்தால் சோகம்.
ஆனந்தத்தோடு சோகம் சேர்ந்தால் தான் வாழ்க்கை.
அன்புடன், ஸ்ரீராம்
slib@rediffmail.com
- புழுக்கம்.
- இரண்டு கன்னடர்களும் நானும்:::
- உங்களுடனும் சில கணங்கள்
- ஜனனம்
- பறவைப்பாதம் – அத்தியாயம் இரண்டு
- சுகம்
- நிஜமற்ற நிழல்
- வாரபலன் – 2 மே மாதம் நடுவாரம் – சுவடி வாசிப்பு
- உனக்காக
- தியானத்தைத் தேடி…
- 98413-11286
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 4
- கடிதங்கள்
- இயற்கை-மானுடம்-கிழக்கு-மேற்கு
- நீயும் மகனும்
- ‘இதையே ஓர் பெண்சொன்னால்… ‘
- எவ்வாறு குப்பையை பெட்ரோலியமாக மாற்றுவது ?
- ஆப்கானியர்களின் உடலில் அளவுக்கு மீறிய யுரேனியம்
- எண்ணங்களின் வண்ணங்கள்
- மறக்கப்பட்டவை!
- வாழ்க்கை
- நினைவுகள்.
- வடக்கு வளர்கிறது! தெற்கு தேய்கிறது! அணுமின் உலை எதிர்ப்பாளிகள்! அணு உலை அபாய எதிர்பார்ப்புகள்! (Anti-Nuclear Power Activists & A
- அறிவியல் துளிகள்-25
- பால்யம்
- விடியல் எங்கே ?
- மண்ணாந்தையின் ஞானதிருஷ்டியில்: வருங்கால திண்ணையிலிருந்து ஒரு இணைய பக்கம்.
- தனிமை பற்றிய குறிப்புகள் – யுவனின் புகைச்சுவருக்கு அப்பால் கவிதைக் தொகுப்பை முன்வைத்து
- ஒரு கல்லும் இரண்டு மாங்காய்களும் (அ.மாதவையரின் ‘ஏணியேற்ற நிலையம் ‘ – எனக்குப் பிடித்தக் கதைகள் -62)
- இலக்கிய சந்திப்பு: கனடா – பகுதி இரண்டு
- அரசூர் வம்சம் – அத்தியாயம் ஏழு