யானை பிழைத்த வேல்

This entry is part [part not set] of 61 in the series 20040318_Issue

க. மோகனரங்கன்


‘ஒரு காலத்தில் எழுத்தாளனாக இருப்பதற்காக எல்லாவற்றையும் துறந்துவிடத் தயாராக இருந்த மு. தளையசிங்கம் பிறகு இலக்கியத்திலிருந்து விாித்து கொண்ட தன் தேடலின் மூலம் ஒரு தத்துவவாதியாக பாிணமிக்கும் நிலையில் அவ்விலக்கியத்தையே துறக்குமளவிற்கு விலகி வந்துவிடுகிறார். இந்தப் பயணத்தில் ஒரு முன்னோடி என்ற அளவில் அவருடைய வெற்றிகளின் அளவிற்கே அவருடைய தோல்விகளும் முக்கியத்துவமுடையவை.

சடம், உயிர், மனம் என்றும் வளர்ந்துள்ள பாிணாமம் இன்று மனதையும் தாண்டிச் செல்வதும் நிலை வரவுள்ளது. அந்நிலையே நிர்வாணம் (அ) பேர் மனம் எனக் கூறும் தளையசிங்கம் அதனடிப்படையிலேயே சர்வோதயம் எனும் தனது தத்துவத்தை இந்திய சமய மரபு சார்ந்த உருவகங்களின் துணையோடு வளர்த்தெடுத்திருக்கிறார். அந்நிலையில் உருவாகும் இலக்கியமே பூரண இலக்கியம். அவ்விழிப்புற்ற நிலையில் வர்க்கமும், சாதியும் மறைந்துவிடும் என நம்பிக்கை தொிவிக்கிறார் தளையசிங்கம்.

ஐரோப்பிய அறிவுவாதத்தின் இறுதி உருவங்களில் ஒன்றான மார்க்சிய சித்தாந்தம் மட்டுமே சமூகத்தின் அன்றாடப் பிரச்சனைகளை இன்று விளக்கவும், அவ்விளக்கத்தின் மூலம் சமூகத்தின் பிற துறைகளுக்குாிய செயல்களை நிர்ணயிக்கவும் கூடிய தத்துவமாக மக்களால் பயன்படுத்தப்படுகிறது என்று சாதகமாக அதை மதிப்பிடும் தளையசிங்கம் மனிதனின் தேவைகள் பொருளாதார சமத்துவ அடிப்படையிலான பொதுவுடமை சமூகத்தைத் தாண்டியும் போவதையும் அந்த அப்பாலான நிலையில் (சத்தியநிலை) நின்றே பொருளாதார சமத்துவத்தைப் பூரணமாக அடையலாம் என்றும் கூறுகிறார்.

பொருளாதாரச் சமூகத் சூழலுக்கும், அந்தச் சூழல் பிரதிபலித்த உற்பத்தி உறவுகளுக்கும் முதலிடம் கொடுத்த மார்க்ஸ் அவற்றை அடிப்படையாகக் கொண்ட செயலுக்கும் மாற்றத்திற்குமே முதலிடம் கொடுத்தார். சிந்தனை அவற்றோடு சேர்ந்து வளரும் ஒன்றேதான் என்றும் அவற்றின் எல்லைகளைத்தாண்டி வளர அதனால் முடியாது என்றும் ஆதலால் தன்னிலிருந்து பிாிந்து நிற்கும் அந்நியமாதல் என்ற நிலையை நீக்க பொருளாதார பொதுவுடமை வந்தால் போதும் என்று மார்க்ஸ் நினைத்தது ஒரு அடிப்படைத்தவறு என்று விமர்சிக்கும் தளையசிங்கம் மார்க்சியமும் நவீன விஞ்ஞானமும் அதன் காரண-காாியவாதத்தின் உச்சத்தில் நின்றுகொண்டு தருகின்ற எந்தத் தீர்வும் தற்போது நிலவும் அதிருப்தியைக் கலைந்து நிரந்தர திருப்தியை அளித்துவிடாது என்கிறார் .

ஏனெனில் நவீன காலத்தின் அறிவும், விஞ்ஞானமும் அவற்றின் கோட்பாடுகளும் அறிவுக்கும், மேல் மனதுக்கும் மட்டுமே உாிய விவகாரங்கள் தான் எனக்குறிப்பிடும் தளையசிங்கம் நிரந்தர மாற்றத்திற்கான தீர்வாக மனதை கடந்த நிலையான விஞ்ஞானமயகோசம் மற்றும் ஆனந்தமய கோசம் ஆகிய நிலைகளில் ஏற்படும் சத்திய நிர்வாண நிலையை முன் வைக்கிறார். அது மனிதனுக்கு இதுவரைத் தொிந்த அறிவின் எல்லைகளை அல்லது நனவு நிலையைத் தாண்டிய பேரறிவைத் தாண்டிய புதுயுகமாகயிருக்கும் என்கிறார். அது தத்துவங்களை கடந்த ஒரு தத்துவம், அது திட்டவட்டமான நிரந்தர சிந்தனை அமைப்பையும் தேக்கத்தையும் தாிக்காது. சர்வோதயம் தாிக்கும் சமயம் விஞ்ஞானத்தையும் வெல்லும் விஞ்ஞானம் என்கிறார்.

தனது இந்தக் கோட்பாட்டை கண்டடையும் போக்கில் மார்க்சியம் வரையிலான தத்துவங்களின் போதாமைகளையும் நவீன விஞ்ஞானத்தின் செயல் எல்லைகளையும் வியப்பூட்டுமளவிற்கு துல்லியமான முன்னுணர்வினால் சாியாகவே மதிப்பிடும் தளையசிங்கம் அதன்பிறகு மாற்றாக முன்வைக்கும் பேர் மன நிலையென்பது நமது புறவயத்தர்க்கங்களுக்கும், நிரூபண வாத அறிவிலங்கியலுக்கும் பிடிபடாத ஒன்று. இந்திய ஆன்மிக மரபினையொட்டி பேசுகையில் புத்தர், அரவிந்தர், பரமஹம்சர், ரமணர், இன்றும் பெயர் தொியவராத பல ஞானிகளும் இத்தகைய பாிபூரண விழிப்பு நிலையை அடையப் பெற்றவர்களாகக் கூறப்படுகின்றனர். அத்தகைய நிலையினை அடைந்தவர்கள் அதற்கு முந்தைய சகஜநிலையிலுள்ளவர்களுக்கு அதைச் சொற்களால் விளக்குதல் சாத்தியமல்ல என்றும் கூறப்படுகிறது. உள்ளுணர்வின் பாற்பட்ட ஆழ்ந்த நம்பிக்கையினாலும், இடைவிடாத சாதகத்தினாலும், குருவின் அனுக்கிரகத்தினாலும் ஒருவர் தானே கண்டடைய வேண்டிய தாிசன நிலையாகவே அது நமது மரபின் முன்வைக்கப்படுகிறது.

1966 இல் தளையசிங்கத்திற்குமே அத்தகைய ஒரு அனுபவம் சித்தித்ததாக அவரது வாழ்க்கை குறிப்புகளின்றும் நமக்கு தொியவருகிறது. எனினும் சிந்தனையிலும், நம்பிக்கைகளிலும், பழக்கவழக்கங்களிலும் பல்வேறுபடிநிலைகளிலும் கலாச்சாரங்களிலும் வாழ்ந்து வரும் மனிதகுலம், இதுவரையிலுமில்லாத வகையில் எதிர்வரும் ஒரு காலத்தில் சமமான அது விடுதலையை அதன் சகஜ நிலையாக அடைவது சாத்தியம்தானா என்பது நமது உடனடி ஜயமாக எழுகிறது. அதற்குப் பதிலாக தளையசிங்கம் முன்வைப்பது. ஜடம், உயிர் என்ற நிலையைக் கடந்து பிரபஞ்சம் இன்று வந்துசேர்ந்திருப்பது மனமயநிலையின் இறுதிக்கு. எனவே நாளை அதைத் தாண்டிய நிலைக்கு நகரும் என்ற வரலாற்று பாிணாமவாத நம்பிக்கையை. அந்நிலையை நோக்கி இவ்வுலகை விரைவுபடுத்தும் பணியில் முன்நிற்க வேண்டியவர்களாக ஞானிகள், எழுத்தாளர்கள் மற்றும் பிற கலைஞர்களைக் காண்கிறார் தளையசிங்கம்.

மேலும் உலக முழுமைக்குமான ஒரு தத்துவதாிசனமாக தனது பிரபஞ்ச யதார்த்தத்தை முன்வைத்துப் பேசும் தளையசிங்கம் அதனை விளக்கவும் விவாிக்கவும் ஒரு குறிப்பிட்ட சமய மரபிற்கேயுாிய கருத்தியல் உருவகங்களையும், படிமங்களையும் தனது சொந்த நம்பிக்கையை முன்னிட்டு பேசுகையில் அம்மரபிற்குள் வராத பிறருக்கு அது எவ்விதமான அர்த்தத்தைத் தரும் என்ற கேள்வியும் எழுகிறது. மட்டுமில்லாமல் மார்க்சியம், நுண் பெளதீகம் வரையிலான இன்றைய சிந்தனைகளைப் புாிந்து கொள்வதற்கும் விவாிப்பதற்குமான தர்க்கங்களிலிருந்து மிகவும் மாறுபட்டது தளையசிங்கம் முன் வைக்கும் ஆன்மிக கருத்துருவங்களின் அடிப்படைகள். ஆன்மிகமும், சமயமும், மதஅடிப்படைவாதமும் பிாித்து புாிந்து கொள்ளப்படவேண்டிய ஒன்று என்ற எளிய புாிதலுக்குகூட பெரும்பான்மையோர் வரஇயலாத அரசியல், கலாச்சார சூழலில் உள்ள தமிழ் வாசகர்கள் தளையசிங்கத்தின் கோட்பாட்டை எதிாிடையாக அணுகும் வாய்ப்புகளே அதிகம். இந்த இடைவெளியை உணர்ந்தவராகவோ, அதை இட்டு நிரப்புமளவிற்கு பொறுமையுடையவராகவோ அவரது வெளிப்பாடுகள் அவரைக் காண்பிக்கவில்லை.

பாரதி, ‘பராசக்தி கடைக்கண் பார்வை வைத்தாள், ஆகாவென்று எழுத்தது பார் யுகப்புரட்சி ‘ என்கையில் அது ஒரு கவித்துவ நம்பிக்கை என்ற அளவில் அதில் எவ்வித முரண்பாடுமில்லை. ஆனால் செயல்படும் தத்துவமாக, தான் தர்மம் என்று உருவகிக்கும் ஒன்றின் வளர்ச்சிக்கான உலகின் மாற்றத்திற்கான ஒரு கோட்பாடாக தன்னளவில் ஒரு தாிசனத்தை முன்வைக்கையில், அது வெறும் நன்னம்பிக்கை மற்றும் கனவுாீதியான எதிர்பார்ப்பின் அடிப்படையிலானதாக மட்டுமே இருக்கவியலாது. உலகில் இதுவரை கட்டியெழுப்பப்பட்ட எல்லாப் பெரும் தத்துவங்களும், தாிசனங்களும் இலட்சியம் என்ற அளவில் பூரணத்தை முன்வைத்துபேசினாலும் நடைமுறை செயல்பாடு என்று வருகையில் நிறுவனமாதலின் உள் முரண்களில் சிக்குண்டு, பல தருணங்களில் தான் வாித்துக் கொண்ட இலட்சியத்திற்கு எதிராகவே செயல்பட நேர்ந்து தேய்ந்திறுதலை அடைந்ததைச் சாித்திரமாகவே அறிந்திருக்கிறோம்.

ஒருமையை, எக்காலத்திற்குமான இறுதித்தீர்வை, நிரந்தரத்துவத்தை முன்மொழிவதாக கட்டமைக்கப்படும் எந்தவொரு பெருங்கனவும், சமயதாிசனமும், லோகாதாய தத்துவமும், ஒழுங்கற்றதும் குழப்பமாகவும் தொியும். இவ்வுலகின் தோற்றத்தையும், அதன் புதிரான இயங்கு விதிகளையும் விளக்குவது அதற்கு அர்த்தத்தைக் கற்பிப்பது எனத் துவங்கி மெல்ல மெல்ல தனது இருப்பை உறுதிசெய்து கொள்வது என்ற நிலையில் அவ்வமைப்பிற்குள் வர இயலாத பிறவற்றை அவற்றின் முரண்பாடுகளை அழிக்கும் வன்முறைக்களமாக அது மாறிவிடுகிறது. கிறித்துவம் துவங்கி மார்க்சியம் ஈறாக இதுவரை மனிதகுலம் கண்ட எந்தச் சித்தாந்தமும் இதற்கு விளக்கல்ல.

இருபதாம் நுாற்றாண்டின் இறுதியில், இரு உலகப்போர்களுக்குப் பிறகு ,இத்தகைய லட்சிய கனவுகளின் புதை மேட்டிலிருந்து கொண்டு புலம்பும் மனித குலத்தின் வெறுமையை, நம்பிக்கை இழப்பை, அபத்தத்தை நவீனத்துவம் விாிவாக பதிவு செய்தது என்றால், அதற்கு பிறகாண சிந்தனைகளோ அத்தகைய பெரும் கனவுகளுக்கும் இலட்சியங்களுக்கும் பதிலாக கால, இட, வர்த்தமானங்களுக்கு கட்டுப்பட்ட, வேறுபட்ட கலாச்சரங்களுக்கும் அதன் பல்வேறு நம்பிக்கைகளுக்கும் அறிவு மரபுகளுக்கும் அவற்றின் இயல்பான இடத்தை வழங்க வலியுறுத்துகின்றன. எந்த ஒரு கட்டமைப்புமே அதன் வித்தியாசங்களை ஒடுக்குவதிலல்ல மாறாக அவற்றின் ஒத்திசைவிலேயே குறைந்த வன்முறை கொண்டதாக இயங்கமுடியுமென அச்சிந்தனைகள் வாதிடுகின்றன.

இப்பின்புலத்தில் நோக்குகையில் இன்றைய தமிழ்வாசகனுக்கு தளையசிங்கத்தின் சிந்தனைகளோடு ஒத்திசைவோ முரண்பாடோ எதுவாக இருந்தாலும் அவற்றைத் தாண்டியும் அவரைப் பொருட்படுத்தி வாசிக்கவும், விவாதிக்கவும் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதலாவதும் முக்கியமானதுவுமான ஒன்று, நவீனத்துவத்தால் வேர்கள் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டிருக்கும் நமது ஞான மரபுடன் ஆக்கப்பூர்வமான உரையாடலை வலியுறுத்தி அவர் பேசுவது.

நமது அறிவிற்கும், நம்பிக்கைக்கும் அப்பாற்பட்ட நிலையில் தொன்மம், சடங்கு, பலி, திருவிழா, களியாட்டம் என சமயமானது சமூக மனதின் கூட்டு செயல்களமாக ஓர் ஆழமான பங்கை பாரம்பாியமாக வகித்துவருகிறது. அவ்வகையில் எந்தவொரு லெளகீகமான நடைமுறை தத்துவத்தை விடவும் ஆன்மிக ாீதியிலானதொரு தாிசனம் மனித நாகாிகத்திற்கு அதிகமும் நேர்மறையான பலனளிக்கமுடியும். ஐன்ஸ்டான் உட்பட பல அறிவியலாளர்களும், உளவியல், உயிாியல் நிபுணர்களும் கலைஞர்களும் தங்கள் துறைசார்ந்த பிரத்தேயக அறிவின் எல்லையில் நின்றபடி இத்தகைய சமயம் கடந்த அருளுணர்வைப் பற்றிப் பேசியிருப்பதைக் காணலாம்.

இரண்டாவது ஓர் எழுத்தாளனுக்கு தத்துவத்தோடு இருக்க வேண்டிய உறவு பற்றி அவர் குறிப்பிடுவது. குறைந்த பட்ச வாழ்க்கைப்பார்வையும், அதை விவாதத்திற்குட்படுத்துமளவிற்கு தத்துவார்ந்த பாிச்சயமும் இருக்கும் பட்சத்திலேயே ஒருவருடைய படைப்பு வாழ்வின் யதார்த்த பிரதிபலிப்பு என்ற அளவோடு நில்லாமல் வீச்சும், ழமும் கொண்ட பெரும் படைப்பாக அமையமுடியும் என்கிறார் தளையசிங்கம். இதையொட்டியே தனது ‘போர்ப்பறை ‘ கட்டுரையொன்றில் திட்டவட்டமான தத்துவ மதிப்பெதுவுமின்றி அடிமனதின் உந்துதலாகவே வெளிப்படும் மெளனி, புதுமைப்பித்தனின் சிறுகதைகளை விடவும், ஜெயகாந்தனின் குறிப்பிட்ட சில கதைகள் அதிக தெளிவுடையவை எனக் கூறுகிறார். இலக்கியத்தைச் சுயேச்சையானதொரு அறிதல்களாமாக காணாமல் மரபு வழிபட்ட மார்க்சியர்களைப் போலவே இவரும் உலக மாற்றத்திற்கான ஒரு பெரும் செயல் திட்டத்திற்குட்பட்ட சிறு பிாிவாகவே இலக்கியத்தைக் கருதுவதால் ஏற்படும் முரண் இது. இது விாிவான விவாதத்திற்குாிய ஒன்று.

ஏனெனில் தமிழின் மிக முக்கியமான படைப்பாளிகள் எனக்கருதப்படும் அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் நவீனத்துவத்தின் பாதிப்பு பெற்றவர்களே எனவே தவிர்க்க இயலாமல் தத்துவ நம்பிக்கையைத் துாய இலக்கியத்திற்குப் பாதகமான ஒன்றாகவே அவர்கள் கருதிவருபவர்கள். எனினும் புதுமைப்பித்தன், மெளனி போன்றவர்கள் ஒரு விாிவான தத்துவப் பார்வையோடு இயங்கியிருப்பின் அவர்கள் இதைவிடவும் சிறப்பாக எழுதியிருக்க முடியும் என்ற தனையசிங்கத்தின் நம்பிக்கை டால்ஸ்டாய், தாமஸ்மன், தாஸ்தவெஸ்கி போன்றோரை ஒப்பிட்டால் ஆமோதிக்கப்பட வேண்டிய ஒன்றே எனப்படுகிறது.

தவிர நமது மரபுடனும் அதன் தத்துவ விவாதங்களுடனும் எவ்விதமான பாிச்சயமுமில்லாத இலக்கிய வாசகனுக்கும் கூட தளையசிங்கத்தின் துவக்ககால படைப்புகளாக ‘புதுயுகம் பிறக்கிறது ‘ சிறுகதைத் தொகுப்பு ‘ஏழாண்டு கால இலக்கிய வளர்ச்சி ‘ மற்றும் ‘போர்ப்பறை ‘ கட்டுரைகள் போன்றவை அதிக அக்கறைக்குாியதாக இருக்கமுடியும். குறிப்பாக புதுயுகம் பிறக்கிறது தொகுதியிலுள்ள பல சிறுகதைகள் அவற்றின் உருவ அமைதி, கச்சிதமும் சுருக்கமும் துல்லியமும் கொண்ட மொழியால் இன்றளவும் அதன் புத்துணர்வை இழக்காமலிருப்பவை. இரத்தம், கோட்டை, தொழுகை ஆகிய கதைகள் தமிழின் மிகச் சிறந்த கதைகள் பட்டியலில் எளிதாக இடம் பெறும் தகுதியுடையவைகளாகும்.

நவீன அறிவியல், உளவியல், சமயம், ன்மிகம், இலக்கியம், தத்துவம் என தனது காலத்தின் பல்வேறு துறைகள் குறித்த துல்லியமான அறிவும், அவற்றை மதிப்பிடவும் ஒன்றுடன் மற்றதைப் பிணைக்கவும் செய்ய தனதேயான பார்வையும் கொண்டு விளங்கிய ஓர் அபூர்வ ஆளுமை தளையசிங்கம். அப்பன்முக ஈடுபாடும் தேடலுமே அவருடைய சிந்தனைகளை இலக்கியத்திலிருந்து மெய்யிலை நோக்கி நகர்த்தியிருக்கவேண்டும். அவரது சிந்தனைகளின் முழுமையை நாம் அடையமுடியாமல் அவருடைய அகாலமரணம் குறுக்கிட்டுவிடுகிறது. இன்றைய பிரதட்சய நிலையினின்றும் பார்க்கும்போது அவரது மெய்யுள் கனவுத்தன்மைமிக்க ஒரு உட்டோபியாவாக தோன்றலாம் எனினும் அதில் உள்ளுரைந்தபடியிருக்கும் தீவிர கருணையும், நம்பிக்கையும், செயலாக்கமும் நமது அக்கறைக்கும், பாிசீலனைக்குமுாியவை. நாம் அடுத்து அடி வைக்கவேண்டிய திசையைத் தோராயமாக சுட்டக்கூடியவை என்பதை மறுக்கவியலாது.

[இக்கட்டுரை சொல்புதிது சார்பில் ஊட்டியில் நடத்தப்பட்ட குரு நித்யா ஆய்வரங்கத்தில் படிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. அங்கே வாசிக்கப்பட்ட பிற கட்டுரைகளும் பதிவுகளும் திண்ணை இணையைதழ் இலக்கியக்கட்டுரைகள் பகுதியில் கீழ்க்கண்ட சுட்டிகளில் கிடைக்கும்

]

http://www.thinnai.com/ar0525024.html மு தளைய சிங்கம் கூட்ட பதிவுகள் 1 ஜெயமோகன்

http://www.thinnai.com/ar0602023.html முதளையசிங்கம் கூட்ட பதிவுகள் 2 ஜெயமோகன்

http://www.thinnai.com/ar0623022.html முதளையசிங்கம் கூட்ட பதிவுகள் 3 ஜெயமோகன்

http://www.thinnai.com/ar0610025.html மு தளையசிங்கத்தை புரிந்துகொள்ளும் அடிப்படைகள் ஜெயமோகன்

http://www.thinnai.com/ar0617024.html மு தளையசிங்கம் என்ன சொல்கிறார் ? ஜெயமோகன்

http://www.thinnai.com/ar0623024.html மு தளைய சிங்கத்தின் முக்கியத்துவம் என்ன ? ஜெயமோகன்

http://www.thinnai.com/ar0610023.html மு தளையசிங்கத்தின் இலக்கியப் பார்வை எம் வேத சகாயகுமார்

http://www.thinnai.com/ar0610025.html மு தளையசிங்கத்தை புரிந்துகொள்ளும் அடிப்படைகள் ஜெயமோகன்

http://www.thinnai.com/ar0617024.html மு தளையசிங்கம் என்ன சொல்கிறார் ? ஜெயமோகன்

http://www.thinnai.com/ar0623024.html மு தளைய சிங்கத்தின் முக்கியத்துவம் என்ன ? ஜெயமோகன்

http://www.thinnai.com/ar0610023.html மு தளையசிங்கத்தின் இலக்கியப் பார்வை எம் வேத சகாயகுமார்

****

Series Navigation

க. மோகனரங்கன்

க. மோகனரங்கன்

யானை பிழைத்த வேல்

This entry is part [part not set] of 55 in the series 20031211_Issue

அ.முத்துலிங்கம்


சூரியனைச் சுற்றி ஒன்பது கிரகங்கள் பயணிக்கின்றன. அவற்றுள் கடைசியாக சுழல்வதும், ஆகக் கூடிய தூரம் கொண்டதுமான கிரகம் புளூட்டோ. இந்த புளூட்டோ கிரகத்தை கண்டு பிடிப்பதற்கு முன்பாகவே பிறந்த ஒருவர் என் வீட்டிற்கு பக்கத்தில் வசிக்கிறார். அவருடைய வயது எண்பது. இரண்டாவது உலகமகா யுத்தத்திற்கு பிறகு போலந்தில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தவர். இந்த வயதிலும் எப்பொழுது பார்த்தாலும் தன்னுடைய இரண்டு கார் கராஜில் அதிகாலையில் இருந்து ஏதாவது வேலை செய்துகொண்டே இருப்பார். இவர் ஒரு தச்சுக் கலைஞர். அருமையான மர வேலைப்பாடுகள் கொண்ட உருளைகளை செய்துகொண்டே இருப்பார். இதை எதற்காகச் செய்கிறீர்கள் என்று கேட்டால் இதிலே நான் மிகவும் திறமை உள்ளவனாக இருக்கிறேன். இந்த கலைப் பொருள்களை செய்யும்போது என் மனம் சமாதானம் அடைகிறது. இதிலே கிடைக்கும் ஆத்மதிருப்தி எனக்கு வேறு எதிலுமே கிடைப்பதில்லை என்கிறார்.

சமீபத்தில் ஒரு மேலான இலக்கியக்காரர் சொன்னார், தீராத நோய் கண்டவன் இறக்கும் மட்டும் மாத்திரை எடுத்துக்கொண்டே இருக்கிறான். எடுக்காவிட்டால் அவன் இறந்துவிடுவான் என்று. அது போலத்தான் படைப்பாளியும். அவர் படைத்துக்கொண்டே இருக்கவேண்டும். தன்னுடைய இருப்பை வெளிப்படுத்தியபடியே இருப்பது அவர் கடமை. அந்தப் படைப்பு எப்படியும் ரசிகரைக் தேடிப்பிடித்து போய் சேர்ந்துவிடும். ஒரு கவிதையை நூறுபேர் படித்தால் அதில் இரண்டுபேரை அது தொடுகிறது. ஒரு நாடகத்தை 1000 பேர் பார்த்தால் அதில் இருபது பேருக்கு அந்தக் கலை போய்ச்சேருகிறது. கலைஞன் என்பவன் தன் கடமையை செய்துகொண்டே இருக்கவேண்டும். அதுவே தர்மம்.

பதினைந்து வருடங்களாக தொடர்ந்து வானவில் நிகழ்ச்சிகள் ரொறொன்ரோவில் நடந்து வருகின்றன என்று அறிகிறேன். அவற்றை நான் பார்க்கவில்லை. இந்த வருடம் முதன்முதலாக அந்த நிகழ்ச்சியை பார்த்தபோது அதைப் பற்றி எழுதும் எண்ணம் எனக்கு இருக்கவில்லை. ஆனால் அதற்கு பிறகு நடந்த ஒரு சம்பவமே என்னை இதை எழுதும்படி தூண்டியது.

இதே மண்டபத்திலே சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு விழாவுக்கு போயிருந்தேன். அப்போது அந்த நிகழ்ச்சி சரியாக ஒரு மணிநேரம் பிந்தியே தொடங்கியது. இதுவும் அப்படித்தான் இருக்கும் என்று ஆறஅமரப் போனால் நிகழ்ச்சி சரியாக ஆறுமணிக்கே ஆரம்பித்துவிட்டது. இதை நம்பமுடியாமல் இருந்தது. கனடாவின் காலநிலைபோல எதை நம்பலாம் எதை நம்பக்கூடாது என்ற தெளிவு எனக்கு இன்னும் ஏற்படவில்லை. என்றாலும் ஒரு கலை நிகழ்ச்சி சரியான நேரத்துக்கு தொடங்குவது எவ்வளவு மகிழ்ச்சியான விடயம்.

ஒரு வானவில்லில் சூரியனுடைய வெளிச்சத்தில் உள்ள ஏழு வர்ணங்களும் தெரியும். அதுதான் காரணமோ என்னவோ இந்த விழாவில் ஏழு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. எல்லாமே போதிய பயிற்சி பெற்ற கலைஞர்கள் வழங்கிய நிகழ்ச்சிகள் என்று தெரிந்தது. தொகுப்பாளினி நல்ல தமிழ் உச்சரிப்புடன், நகைச்சுவை மிளிர தொகுத்து வழங்கினார். அந்த அந்தக் காட்சிகள் வருமுன்னர், அதைப்பற்றிய ஒரு சாராம்சத்தை சுவைபடக் கூறி, சபையோரின் எதிர்பார்ப்பை அதிகரித்ததுடன் கலைஞர்களையும் ஊக்குவித்தார். ( ஆனால் ஏனோ ‘தொலைபேசியை அணைத்துக்கொள்ளுங்கள் ‘, ‘தொலைபேசியை அணைத்துக்கொள்ளுங்கள் ‘ என்று அடிக்கடி கூறினார். சபையினரும் அவர் வாக்கை மதித்து தொலைபேசியை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டு இருந்ததை காணக்கூடியதாக இருந்தது.)

‘உதயத்திலிருந்து உறங்கும்வரை ‘ என்று ஒரு நிகழ்ச்சி. இதை தயாரித்த தனதேவி மித்ரதேவா ஒரு புதுமை செய்திருந்தார். எங்கள் இசையில் இருக்கும் ராகங்கள் ஒவ்வொரு காலத்துக்கு உரியவை. வைகறையில் எழும்போது பூபாளமும், துயிலும் போது நீலாம்பரியும் என்று ஓர் ஒழுங்குமுறை உண்டு. இந்த நிகழ்ச்சியில் அதிகாலையிலிருந்து தூங்கும் வரையிலான காலப்பகுதிகளை அந்தந்த ராகங்களாக பிரித்து ஒரு ராக மாலையாகவே வழங்கினார்கள். இதிலே விசேஷம் என்னவென்றால் அந்த ராகங்களுக்கு கவனமாக தேர்வு செய்யப்பட்ட பாடல்களோ மகாகவி பாரதியாருடையவை. ஆகவே கவிதையும், இசையும் ஒரே மேடையில் கிடைத்தது. வாய்ப்பாட்டுக்கு பக்கவாத்தியம் என்று இல்லாமல் சிற்சில இடங்களில் இசை வாத்தியங்களே அருமையாக இசையை முன்னெடுத்துச் சென்றது செவிக்கு விருந்தாக அமைந்தது.

‘ஊஞ்சலாடும் இளமை ‘ என்று ஓர் இசை நாடகம். இசை நாடகம் என்று அழைத்தது ஒரு வசதி கருதியே. ஆனால் இதிலே வசனம் சுத்தமாக இல்லை. இசைகூட பின்னணிதான். இங்கே நடிப்பும் நடனமும்தான் முக்கியம். முதல் காட்சி ஒரு மணவீட்டில் ஆரம்பமாகி இறுதிக் காட்சி கோயிலில் முடிகிறது. மணமக்கள் பார்க்கும் விருந்தாக ஒரு தில்லானா நடனம். அதைத் தொடர்ந்து வந்த துள்ளிசை நடனத்தில் காதலர்கள் சேர்ந்து ஆடுகிறார்கள் பெற்றோருக்கு அந்தக் காதல் பிடிக்கவில்லை. அடுத்ததாக கோயில் விழாவிலே ஒரு கரகாட்டம். அதைப் பார்க்கும் சாட்டில் காதலர்கள் சந்தித்துக்கொள்கிறார்கள். முடிவாக பெற்றோரின் சம்மதத்துடன் அவர்கள் காதல் நிறைவேறுகிறது. இதை நெறிப்படுத்தியவர்கள் ரஜினி பாலேந்திராவும் சுதனும். புதுமையான உத்தியாலும், தொகுப்பு முறையாலும் இது சபையோரிடம் பெரிய வரவேற்பை பெற்றது.

விருந்திலே பாயாசத்தை கடைசியாக வைப்பதுபோல சிறப்பு அம்சமாக ‘இது எழுதாத விதி ‘ நாடகம் முடிவிலே அரங்கேறியது. நாடகத்தின் கரு எளிமையானது. பலதரம், பலராலும் கையாளப்பெற்ற ஒரு பொருளை எடுத்து மிகத் திறம்படவும், நுட்பமாகவும் செய்திருக்கிறார்கள். பிரதியாக்கம் செய்தவர் கலைவாணி ராஜகுமாரன்; நெறிப்படுத்தியவர் வைரமுத்து சொர்ணலிங்கம்.

கணவனுக்கு தொழிற்சாலையில் வேலை. அவன் படிப்பித்து வேலைக்கு சேர்த்துவிட்ட மனைவி நல்ல உத்தியோகத்தில், ஓர் அலுவலகத்தில் பணியாற்றுகிறாள். அவளுடைய சம்பளம் அவனைவிட அதிகம். மனைவி அலுவலகத்தில் இருந்து களைத்து, விழுந்து வீட்டுக்கு வந்தால் வீட்டில் கணவனிடம் இருந்து ஒருவிதமான ஒத்துழைப்பும் இல்லை. மாறாக அதிகாரத் தோரணையோடு ஓர் அடிமைபோல மனைவி வீட்டு வேலை, சமையல் வேலை, துப்புரவு வேலை என்று எல்லாம் செய்யவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான். அடிக்கடி தன் தாய் எப்படி தகப்பனுக்கு பணிவிடை செய்தாள் என்று வேறு ஞாபகப் படுத்துகிறான். ஆனால் அந்தத் தாய் வேலைக்குபோய் புருசனைவிட அதிக வருவாய் சம்பாதிக்கவில்லை என்பதை சொல்ல மறந்துவிடுகிறான்.

மனைவி ‘நான் வேலையை விடத் தயார். அப்ப யார் வீட்டுக் கடன் கட்டுவது, மாதா மாதம் வரும் பில்கள் கட்டுவது ? வாழ்க்கையில் வசதிகள் தேவையென்றால் சில தியாகங்களை செய்யத் தான் வேண்டும் ‘ என்று கேட்கிறாள். அமைதியான குடும்பத்தில் இப்படி ஒரு சிக்கல் பிறக்கிறது. மனைவி எவ்வளவு உயர்ந்த வேலையில் இருந்தாலும், எவ்வளவு பணம் உழைத்துப் போட்டாலும், குடும்பம் என்று வரும்போது அவள் புருசனுக்கு கட்டுப்பட்ட சாதாரண பிறவி. இது எழுதப்படாத விதி என்பது துல்லியமாக உணர்த்தப்படுகிறது.

நாடகத்தில் வசனம் எழுதுபவர்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. பேப்பர் அல்லது மை முடியும்வரைக்கும் எழுதிக்கொண்டே போவார்கள். அதை நடிகர்கள், அடிக்கடி prompter ஐ திரும்பி திரும்பி பார்த்தபடி ஒப்புவிப்பார்கள். இங்கே அப்படியில்லை. வசனங்கள் வாள் வீச்சுபோல எவ்வளவு அர்த்தம் பொதிந்தவையாக இருந்தனவோ அதே அளவுக்கு அபூர்வமான சொற்சிக்கனத்தோடு அமைந்திருந்தன. நடிகர்கள் இடுப்பிலே கைவைத்து நின்று ஒருவித செயற்கைத் தன்மையுடன் பேசவில்லை. இயல்பான நடிப்பு. நாடகத்தின் கட்டுமானத்தில் இறுக்கமும், காட்சியமைப்புகளில் ஒரு திட்டமும் இருந்தது.

நாடகம் தொடங்கும்போதே இது எப்படி முடியப் போகிறது, எப்படி முடியப் போகிறது என்று மனதுக்குள் பலவித முடிவுகளை உண்டாக்கியபடியே பார்வையாளர்கள் காத்திருப்பது வழக்கம். இங்கே அப்படியான எதிர்பார்ப்புகளை எல்லாம் உடைக்கும் விதமாக ஒரு தீர்மானமான positive முடிவு கிடைக்கிறது.

இந்த சிறு நாடகத்தில் ஒரு கனவுக்காட்சிகூட வந்தது. கனவுக்காட்சி என்றால் சுவிட்ஸர்லாந்தில் ஒரு நடனம் என்றில்லை. மனைவி, கணவனுக்கு உணவு பரிமாறுகிறாள். ‘இந்த றால் பொரியலைப் போட்டு சாப்பிடுங்கோ ‘ என்று உபசரிக்கிறாள் மனைவி. உங்கள் வீட்டில், எங்கள் வீட்டில் அன்றாடம் நடக்கும் சம்பவம். இரண்டு நிமிடம் மட்டுமே வரும் இந்தக் காட்சியில் மனைவியிடம் கணவன் எதிர்பார்க்கும் அந்த அந்நியோன்யம் இலகுவாக, மிகை இல்லாத சித்திரமாக வெளிப்படுகிறது.

ஒரு தரமான நாடகத்தில் ஒரு தொடக்கம், ஒரு சிக்கல், ஒரு முடிவு என்று இருக்கும். ஒரு சிக்கலை உண்டாக்கி அதை விடுவிப்பதில்தான் நாடகத்தினுடைய சிறப்பு அமைகிறது. சிலப்பதிகார நாடகத்தைப் பார்த்தால் அதன் சிக்கல் பொற்கொல்லன் மேடையில் தோன்றும் போதுதான் ஆரம்பமாகிறது. கோவலன் கொலைக்கு பிறகு கண்ணகி சபைக்கு வரும் இடத்தில் சிக்கல் உச்சக் கட்டத்தை அடைந்து ஒரு தீர்வு வரும். அதுபோலவே ஒரு மோதல் உண்டாகி அதை நோகாமல் விடுவித்துக்கொண்டு நாடகம் முடிவை நோக்கி நகர்கிறது.

குறிதவறாமல் முயலை வீழ்த்திய அம்பிலும் பார்க்க யானையை இலக்கு வைத்து தவறிய வேல் பெரியது என்பார்கள். வானவில் பெரிய முயற்சி, பயனும் பெரியது. இப்படியான பெரிய முயற்சிகளில் சிறு சறுக்கல்கள் இருக்கத்தான் செய்யும். அதற்காக சோர்ந்துவிடுவது கலைஞர்களின் லட்சணம் அல்ல. தொடர்ந்து பதினைந்து வருடங்கள் எத்தனை கலைஞர்களை அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி இனிமேல் நின்றுபோகும் என்று அறிவிக்கிறார்கள். இது நின்றுபோனால் அதுவும் ஒருவிதமான கலைப் பின்னடைவே.

இது நான் முதன்முதலில் பார்த்த வானவில் நிகழ்ச்சி. இதுவே கடைசி நிகழ்ச்சியாகவும் அமைந்துவிடக்கூடாது என்பதே என் விருப்பம்.

***

amuttu@rogers.com

திண்ணை பக்கங்களில் அ முத்துலிங்கம்

  • எந்த நிமிடத்திலும் பறிபோகும் வேலை

  • நடிகை பத்மினியுடன் ஒரு சந்திப்பு

  • வீணாகப் போகாத மாலை

  • அ முத்துலிங்கம் நேர்காணல்

    Series Navigation

  • அ.முத்துலிங்கம்

    அ.முத்துலிங்கம்