மஞ்சுளா நவநீதன்
இந்துத்துவ அணுகுண்டு என்ற தொடர் இந்துத்துவ சக்திகளால் கூடப் பரவலாக பாவிக்கப் படாத ஒரு சொற்றொடர். ஆனால் மார்க்ஸ் இந்தப் பெயரில் ஒரு அத்தியாயமே எழுதியிருக்கிறார். இதில் இரண்டு பிரசினைகள் உள்ளன. முதன்முதலில் மதத்தின் பெயரால் அணுகுண்டை அடையாளப் படுத்தியவர் ஜ்உல்ஃபிகர் அலி புட்டோ தான். ‘புல் பூண்டைத் தின்றாலும் சரி, இஸ்லாமிய அணுகுண்டைத் தயாரிப்போம் ‘ என்று முழங்கியவர் இவர்.
வங்கதேசம் விடுதலை பெற்றபின்பு, முறையான conventional யுத்தத்தில் இந்தியாவை வெல்வது கடினம் என்ற உணர்வினால் இந்த அணுகுண்டு தயாரிப்பு முயற்சியில் இறங்கினார் புட்டோ. இந்த முயற்சிக்கு சீனா பெரும் உதவி புரிந்துள்ளது. அமெரிக்கா இதைக்கண்டும் காணாமல் இருந்தது.
இந்திய அணுகுண்டுத் திட்டம் தொடங்கப்பட்டதும் பா ஜ கவின் கீழ் அல்ல. இந்திரா காந்தியின் ஆட்சியில் தான் இது முதன்முதல் தொடங்கப்பட்டது. மார்க்சுக்கு இது தெரியாதா என்ன ? தெரிந்தாலும் எந்தப் பொய்யைச் சொல்லியாவதுஇந்து மதத்தையும் அணுகுண்டையும் இணைத்தால் போயிற்று என்ற நோக்கம் தான் காரணம்.
‘அறிவியல் ரீதியில் தோல்வி, வெளியுறவு அடிப்படையில் முட்டாள்தனம், மக்களைப் பொருத்தமட்டில் பலமுனைத் தாக்குதல்! ‘ என்பது இந்த அத்தியாயத்தில் மார்க்ஸின் முதல் வரி.
அணுகுண்டு வெடிப்பு என்பது இந்தியா, இந்த நேரத்தில் எதையும் நிரூபிக்கத் தேவையில்லாத ஒன்று என்பதால் அவசியமற்ற ஒன்றே தவிர , அதன் காரணங்கள் சாதாரணமானவையல்ல. மக்கள் சீனம் (மார்க்ஸின் பார்வையில் சீனா இன்னமும் மக்கள் சீனம் தான். பாவம், ஐம்பதாண்டுகள் பின்னால் சீனத்திற்கு மாசேதுங் சூட்டிய பெயர் வெறும் பெயரளவில் தான் சீனா கொண்டிருக்கிறது என்ற உணர்வே அவருக்கு இல்லை.) இந்தியாவின் எதிரி என்று சொல்லக் கூடாது. பாகிஸ்தானை மிரட்டக் கூடாது. சீனா பாகிஸ்தானிற்கு அணுஆயுதங்களை அமைக்க உதவி செய்தால் பார்த்துக் கொண்டு வாய் மூடி இந்தியா இருக்கவேண்டும். அது தான் சரியான வெளியுறவுக் கொள்கை என்பது தான் மார்க்ஸ் போன்றோரின் நிலைபாடு.
‘இந்நிலையில் பாரதீய சனதா அரசு சீனாவை வம்புக்கிழுப்பது மிகப் பெரிய நம்பிக்கைத் துரோகம். இதன் விளைவாக பாகிஸ்தானும் சீனாவும் மீண்டும் நெருங்கத் தொடங்கியிருப்பதென்பது இந்திய வெளியுறவுக்கொள்கைக்கு ஏற்பட்ட மிகப் பெரிய வீழ்ச்சி. ‘ என்பது மார்க்ஸின் பார்வை.
இந்த நம்பிக்கைத் துரோகம் என்ற பெரியவார்த்தை இங்கு புழங்க வேண்டிய அவசியம் என்ன ? அப்படி சீனா இந்தியாவின் நம்பிக்கையைப் பெறும் வண்ணம் என்ன செய்திருக்கிறது ? பாகிஸ்தான்-இந்தியா போரில் முழுக்க முழுக்க பாகிஸ்தானுடன் கூட நின்றது சீனா. பாகிஸ்தான் உதவியுடன், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் நிலப்பகுதியைப் பெற்று அதில் காரகோரம் நெடுவழிப்பாதை அமைத்து தாக்குதலுக்குத் தயாராய் நிற்கிறது சீனா. சீனாவை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என்று சீனா தோன்றிய நாள் முதல் குரல் கொடுத்த நாடு சீனா. உலக வர்த்தக அமைப்பில் சீனா உறுப்பினர் ஆவதற்கு இந்தியா பெரும் ஆதரவு அளித்து வந்துள்ளது. ஆனால் இதுவரையில் உலக நிறுவனங்களில் சீனா இந்தியாவிற்கு ஆதரவாய்க் குரல் கொடுத்ததில்லை. நம்பிக்கைத் துரோகம் சீனாவினுடையதா ? இந்தியாவினுடையதா ? சீனா 1996 வரையில் 44 அணுகுண்டு சோதனைகள் நடத்தியுள்ளது. முதல் அணுகுண்டு பரிசோதனை 1964-ல் – இந்தியா அணுகுண்டு சோதனை நடத்துவதற்கு 10 வருடங்கள் முன்பு – சீனா நிகழ்த்தியது.
அணுகுண்டு வெடிப்பிற்கு இந்தியாவின் எதிர்பார்ப்பு இரண்டு முனைப் பட்டதாய் இருந்தது. ஒன்று பாகிஸ்தான் சுமுகமான பேச்சு வார்த்தைக்கு உட்பட்டு காஷ்மீர்ப் பிரசினையில் பரப்பும் பயங்கரவாதத்தைக் குறைக்கலாம். அல்லது தானும் அணுகுண்டு சோதனை செய்யலாம். இரண்டாவது தான் நடந்தது. இதனால் உலக நாடுகள் பொருளாதாரத்தடை விதித்தன. பொருளாதாரத்தடை இந்தியாவைக் காட்டிலும் பாகிஸ்தானை மிகவும் பாதிக்கும் என்பது இந்தியாவுன் கணிப்பு. இதுதான் நடந்தது. செப்டம்பர் 11-ஐத் தொடர்ந்து அமெரிக்காவின் கடைக்கண் பார்வை பாகிஸ்தான் மீது விழாதிருந்தால், பாகிஸ்தானின் பொருளாதாரம் படு வீழ்ச்சி அடைந்திருக்கும் என்பது பொருளியலாளர்களின் கணிப்பு.
அணுகுண்டு வெடிப்பு இந்த ஒரு விஷயத்தைத் தான் சாதித்தது. ஆனால் அரசியல் யதார்த்த நிலையில் , மற்ற நாடுகளின் அச்சுறுத்தலுக்கும், மேலாண்மைக்கும் ஆளாகிக்கொண்டு , பிரிவினைவாதசக்திகள் இந்தியாவிற்கு வெளியே இருந்து ஆதரவு பெற்று வரும் வேளையில் இது இந்தியாவின் ஒரு கூக்குரல் அவ்வளவு தான். இதை இந்துத்துவ அணுகுண்டு என்றெல்லாம் சொல்லி , இந்து மதத்தினை அணுகுண்டுடன் இணைக்க மார்க்ஸ் ஒருவரால் தான் முடியும்.
அணுகுண்டை முதலில் உபயோகிக்க மாட்டோம் என்று கொள்கை இந்தியா கொண்டிருக்கிறது. பாகிஸ்தானோ, சீனாவோ இப்படியொரு கொள்கையை அறிவிக்கவில்லை என்பது மட்டுமல்ல, பாகிஸ்தான் ராணுவம் அணுகுண்டை முதலில் உபயோகிக்கத் தயங்க மாட்டோம் என்றும் கூறிவருகிறது. ஒருதலைப் பட்சமாய் எழுதுவது என்பது மார்க்சுக்கு வாடிக்கை. எல்லாத்தப்பும் இந்தியா மீது தான். எல்லாத்தப்பும் பாரதிய ஜனதா கட்சி மீது தான். சீனாவின் சர்வாதிகாரியும், பாகிஸ்தான் ராணுவமும் புனிதர்கள் என்பது தான் மார்க்ஸின் நிலை.
*****
manjulanavaneedhan@yahoo.com
- நிழல் பூசிய முகங்கள்
- திண்ணை அட்டவணை
- திண்ணை என்ன சொல்கிறது ?
- புதிரின் திசையில் – எனக்குப் பிடித்த கதைகள் – 21 (வண்ணநிலவனின் ‘அழைக்கிறவர்கள் ‘ )
- திலீப் குமாருக்கு விருது
- அவனியைப் பல்லாண்டு சுற்றிவரும் அண்டவெளி நிலையங்கள்
- அறிவியல் மேதைகள் கலிலியோ (Galileo)
- பெண்தெய்வம்
- எல்லாவற்றுக்குமாய்…
- அரசியல்வாதி ஆவி
- வெற்றிட பயணம்
- உலக நண்பர்கள் தினம் (ஆகஸ்ட் 4ம் திகதி)
- நான்காவது கொலை !!! (அத்தியாயம் : ஒன்று)
- அச்சம்
- மாதுரி, பிரகாஷை உடனே விடுதலை செய்யவேண்டும்
- இந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 4 2002
- உலக நாடுகளின் கடன் – ஆரம்பமும், தொடர்ச்சியும் – ஒரு எளிய முன்னுரை – 2
- சகிப்புத்தன்மையில்லாத திராவிடர் கழகம்
- இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி – 7 (அத்தியாயம் 7 – இந்துத்துவ அணுகுண்டு)
- இதயத்தின் எளிமை (Simplicity of the heart)
- நெஞ்சு பொறுக்குதில்லையே..
- வீசும் வரை……
- போதி நிலா
- கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்