யுத்தம்

This entry is part [part not set] of 50 in the series 20040226_Issue

சேவியர்


0

யுத்தங்களே வாழ்க்கை.

விதை,
மண்ணோடு செய்யும்
யுத்தம்
தன்
முளைக்கு இடம் கேட்கும்
முதல் யுத்தம்.

முட்டையோட்டுக்
கவசங்களோடு
குஞ்சு
செய்யும் முதல் யுத்தம்
தடையுடைக்கும்
முதல் யுத்தம்.

தொப்புள் கொடி
சிசுவும்
யுத்தம் செய்து தான்
சுதந்திரக் காற்றைச்
சொந்தமாக்குகிறது.

இத்தனை
யுத்தங்களையும்
அனுமதிக்கிறீர்கள்.

சொந்த மண்ணுக்கான
யுத்தத்தை
மட்டும்
தடுமாறாமல்
தடை செய்கிறீர்கள் !

ஏன் ?
யுத்தம் என்பது
மழலைகளுக்கு மட்டுமானதென
முடிவு செய்து விட்டார்களோ

0
Xavier.Dasaian@in.eFunds.com

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

யுத்தம்

This entry is part [part not set] of 45 in the series 20040122_Issue

லூகி பிராண்டெலோ (தமிழில் : நாகூர் ரூமி)


ரோம் நகரிலிருந்து இரவு எக்ஸ்பிரஸில் வந்த பிரயாணிகள் சுல்மானாவுடன் மெயின்லைனில் இணையும் ‘ந்தக் காலத்து பாணி சின்ன லோக்கல் ரயிலில் தங்கள் பிரயாணத்தைத் தொடர்வதற்கு சின்ன ஸ்டே ‘னான பாப்ரியானோவில் விடியும் வரை தங்க வேண்டியிருந்தது.

விடியலில், ‘டைசலும் புகையுமாக இருந்த, ஏற்கனவே ஐந்து பேர் தங்கள் இரவைக் கழித்திருந்த ஒரு இரண்டாம் வகுப்புப் பெட்டிக்குள் ஏற்றப்பட்டாள் ழ்ந்த தூக்கத்தில் இருந்த ஒரு தடித்த பெண்மணி. ஏறக்குறைய வடிவமற்ற கட்டு ஒன்றைப்போல. ‘வளுக்குப் பின்னால் மூச்சிறைத்துக் கொண்டும், முனகிக் கொண்டும், சிறிய, மெல்லிய, பலவீனமான, மரண வெளுப்புக் கொண்ட முகத்துடன், சிறிய ஒளி பொருந்திய கண்களுடன் சங்கடப்பட்ட்டுக் கொண்டும் கூச்சமுள்ளவன் போன்ற தோற்றத்துடன் ‘வள் கணவன் பின் தொடர்ந்தான். கடைசியாக ஒரு மாதிரி இடம் பிடித்துக்கொண்டு, உதவியதற்காக சக பிரயாணிகளுக்கு நன்றி கூறினான் பணிவாக. தன் கோட்டுக் காலரை கீழே இழுத்துவிட முயற்சித்துக்கொண்டிருந்தாள் ‘வன் மனைவி. ‘வள் பக்கம் திரும்பி பணிவாக விசாரித்தான்.

‘ இப்பொழுது உனக்கு எப்படி இருக்கிறது ? ‘

‘வனுக்கு பதில் சொல்வதற்கு பதிலாக தனது முகத்தை மறைக்கும் விதமாய் காலரை மேலிழுத்து விட்டுக்கொண்டாள். ‘ ‘சிங்கமான உலகம் ‘ என்று சோகமான புன்னகையோடு லேசான குரலில் சொல்லிக் கொண்டான் ‘வன். மேலும் தனது பாவப்பட்ட மனைவி ஏன் இரக்கப்பட வேண்டியவள் என்று தன் சக பிரயாணிகளுக்கு விளக்க வேண்டியது தனது கடமை என்று நினைத்தான்.

‘வளது ஒரே மகனை யுத்தம் ‘வளிடமிருந்து எடுத்துக் கொண்டிருந்தது. ‘வள் மகனுக்கு இருபது வயது. ‘வனுக்காக தங்கள் முழு வாழ்வையும் ‘வர்களிருவரும் ‘ர்ப்பணித்திருந்தனர்.

‘வனுக்காக சுல்மானாவில் இருந்த தங்கள் வீட்டைவிட்டு ‘வனைத் தொடர்ந்து ரோம் நகருக்கு வந்திருந்தனர். ‘ங்குதான் ‘வன் மாணவனாகவும் குறைந்த பட்சம் று மாதத்திற்காவது போர்க்களத்திற்கு ‘னுப்பப்பட மாட்டான் என்ற உத்தரவாதத்தோடு ‘வனுக்கே விருப்ப மிருந்தால் மட்டும் போருக்குச் செல்லக்கூடியவனாகவும் இருந்தான். திடாரென்று இப்போது மூன்று நாட்களுக்குள் போருக்குச் செல்ல வேண்டும் என்றும் ‘வர்கள் சென்று ‘வனை வழியனுப்பும் படியாகவும் தந்தி வருகிறது.

தனது பெரிய கோட்டுக்குள் ‘ந்த ‘ம்மாள் உடலை திருகிக் கொண்டும் வேதனையில் முணுமுணுத்துக் கொண்டும், சமயங்களில் ஒரு மிருகத்தைப்போல் கோபமாக முனகிக்கொண்டும் இருந்தாள். தனது கணவனின் விளக்கங்கள் எல்லாம் இரக்கத்தின் நிழலை இவர்களிடமிருந்து எடுக்க முடியாது ஏனென்றால் ‘வர்களும் தன்னைப் போன்ற ஒரு நினைவிலேதான் இருப்பார்கள் என்று நிச்சயமாக உணர்ந்தாள்.

‘வள் கணவன் தந்த விளக்கங்களை எல்லாம் கவனமாக கேட்டுக் கொண்டிருந்த ஒருவர் சொன்னார் :

‘உங்கள் மகன் இப்போதுதானே போர்க்களத்துக்குப் போகிறான். நீங்கள் இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். என் மகன் முதல் நாள் போருக்கே ‘னுப்பப்பட்டு விட்டான். இரண்டு தடவை காயத்தோடு திரும்பி வந்தான். மறுபடியும் போயிருக்கிறான். ‘

‘எனக்கு மட்டும் என்ன ? இரண்டு மகன்களும் மூன்று சகோதர மக்களும் களத்தில் இருக்கின்றார்கள். ‘ என்றார் இன்னொரு பிரயாணி.

‘இருக்கலாம். னால் என்னுடைய வி ‘யத்தில் எனக்கு ஒரே ஒரு மகன்தான் ‘ என்றார் கணவர்.

‘ ‘தனால் என்ன வித்தியாசம் ஏற்பட முடியும் ? ஒரே மகன் என்றால் செல்லம் கொடுத்துக் கெடுத்துவிடுவீர்கள். நிறைய குழந்தைகள் இருந்தால் ஒரே மாதிரி நேசிக்க முடியும். பெற்றோரின் ‘ன்பு என்ன ரொட்டித் துண்டா, எல்லோருக்கும் சரிசமமாக பங்கிட்டுக் கொடுக்க ? ஒரு தகப்பன் என்பவன் வித்தியாசமில்லாமல் தன் எல்லா குழந்தைகளுக்கும் ‘ன்பை முழுமை யாகத்தான் தருகிறான். ஒரு பிள்ளையானால் என்ன, பத்து பிள்ளையானால் என்ன ? இப்போது என் இரண்டு மகன்களுக்காக வேதனைப் படுகிறேன் என்றால் ஒவ்வொருத்தனுக்கும் பாதிபாதியாகப் படவில்லை.. ‘

‘உண்மைதான்..உண்மைதான் ‘ பெருமூச்சு விட்டார் சங்கடப்பட்ட கணவர். ‘ னால் ஒரு வேளை – நிச்சயமாக உங்கள் வி ‘யத்தில் நடக்காது என்றே வைத்துக்கொள்வோம் – ஒரு தந்தை தன் இரண்டு மகன்களை களத்தில் விட்டு, ஒருவன் இறந்து போனால், ‘ந்த தந்தையைத் தேற்ற ஒரு மகனாவது மிஞ்சுவானல்லவா.. னால்.. ‘

‘ மாம்.. ‘ இடையில் புகுந்தார் ஒருவர். ‘ தேற்றுவதற்கு ஒரு மகனிருப்பான்தான். னால் ‘ந்த ஒரு மகனுக்காக ‘ந்த தந்தை உயிர் வாழ வேண்டுமல்லவா..ஒரே மகன் என்றால் மகன் போனதும் தந்தையும் இறந்து தனது துக்கத்துக்கு முடிவு கட்டலாம் ‘ல்லவா ? இந்த இரு நிலைகளில் மிகவும் மோசமானது எது ? என் நிலை உங்களதை விட மோசமானது என்று உங்களுக்கு இன்னும் படவில்லையா ? ‘

‘ நான்சென்ஸ் ‘. இடையில் புகுந்தார் வெளுத்த பழுப்பு நிறமும் ரத்தச் சிவப்புக் கண்களும் சிவந்த முகமும் கொண்ட தடித்த இன்னொரு பிரயாணி.

‘வருக்கு மூச்சு வாங்கியது. பலவீனப்பட்ட ‘வரின் உடம்பு தாங்கிக்கொள்ள முடியாத கட்டுக்கடங்காத வலிமை கொண்ட ‘கவன்மை ‘வரின் உப்பிக்கொண்டிருந்த கண்கள் வழியாக உடைந்து படர்வதுபோல் தோன்றியது.

‘ நான்சென்ஸ் ‘ என்றார் மறுபடியும். இரண்டு இல்லாத பற்களை மறைப்பதுபோல் வாயைப் பொத்திக்கொண்டு. ‘ நான்சென்ஸ், நம்முடைய நலனுக்காகவா பிள்ளை பெறுகிறோம் ? ‘

சங்கடத்துடன் மற்ற பிரயாணிகள் ‘வரைப் பார்த்தார்கள். போரின் முதல் நாளில் இருந்தே மகனை ‘னுப்பியிருந்த தந்தை பெருமூச்செறிந்தார். ‘ நீங்கள் சொல்வது சரிதான். பிள்ளைகள் நமக்குச் சொந்தமானவர்கள் ‘ல்ல. நாட்டுக்குச் சொந்தமானவர்கள்தான். ‘

தடித்த பிரயாணி ‘ப்படியா என்பது போலப் பதில் கொடுத்தார்.

‘பிள்ளை பெறும்போது நாம் நாட்டைப் பற்றி நினைக்கிறோமா ? நம் மகன்கள் பிறக்கிறார்கள் ஏனெனில்..சரி..ஏனெனில் ‘வர்கள் பிறக்க வேண்டும்.. ‘வர்கள் பிறக்கும்போது நமது உயிரையும் ‘வர்களோடு எடுத்துக் கொண்டல்லவா பிறக்கிறார்கள்.. இதுதான் உண்மை. ‘வர்களுக்கு இருவது வயது வரும்போது நாம் ‘ந்த வயதில் எப்படி இருந்தோமோ ‘ப்படித்தான் ‘வர்களும் இருக்கிறார்கள். நமக்கும் தாய் தந்தை இருந்தார்கள். னால் ‘து மட்டும் ‘ல்லவே.. மற்ற வி ‘யங்களும் இருக்கத்தானே செய்தன ? பெண்கள்.. சிகரெட்..மாயை..புதிய உறவுகள்.. ‘ப்புறம் நாடு..மாம் ‘தன் ‘ழைப்புக்கும் நாம் பதில் சொல்லித்தானே இருப்போம் – நம் இருபதுகளில் – நம் தாய் தந்தை வேண்டாம் என்று சொல்லி இருந்தாலும் ? இப்போ இந்த வயதில் நாட்டுப்பற்று இன்னும் ‘திகமாக உள்ளது. நம் பிள்ளைகள் மீது வைத்துள்ள ‘ன்பைவிட ‘திகமாக உள்ளது. இப்போ நம் மகன்களுக்காக நாம் போகலாம் என்றால் மகிழ்ச்சியாக ‘தை ஏற்றுக்கொள்ள யாராவது இருக்கிறீர்களா ? ‘

சுற்றிலும் ‘மைதியாய் இருந்தது. எல்லோரும் மோதிப்பதுபோல் தலையாட்டிக் கொண்டிருந்தார்கள்.

‘ ஏன், நம் இருபது வயது மகன்களின் உணர்வுகளை நாம் ஏன் மதிக்கக் கூடாது ? தங்களுடைய இந்த வயதில் பெற்றோர் பற்றைவிட நாட்டுப்பற்று பெரிது என்று ‘வர்கள் நினைப்பது இயற்கைதானே ? ( நான் நாகரீகமான பையன்களைப் பற்றித்தான் பேசுகிறேன்.) வீட்டைவிட்டு நகர முடியாத கிழப்பையன்களாக நம்மை ‘வர்கள் நினைப்பதும் இயற்கைதானே ? நாடு என்று ஒன்றிருந்தால், பசியால் சாகாதிருக்க எல்லோரும் ரொட்டித்துண்டு சாப்பிடுவது போல, நாடு என்பது ஒரு இயற்கையான ‘வசியம் என்றிருக்குமானால், யராவது ஒருவர் ‘தைக் காக்கப் போய்த்த்தான் கவேண்டும். நம் மகன்கள் போகிறார்கள் இருபதுகளில், ‘வர்களுக்குத் தேவை கண்ணீரல்ல ஏனெனில் ‘வர்கள் இறந்தால் உணர்ச்ச்சிப் பெருக்கிலும் மகிழ்ச்சியாகவும் இறக்கிறார்கள். நாகரீகமான இளை ‘ர்களைப் பற்றித்தான் மறுபடியும் குறிப்பிடுகின்றேன் வாழ்வின் ‘சிங்கமான பகுதிகளைப் பார்க்காமல், ‘தன் களைப்பூட்டும் தன் மையை, சின்னத்தனத்தை, மாயையின் கசப்பை உணராமல் ஒருவன் இளமையாகவும் சந்தோ ‘மாகவும் இறக்கின்றானென்றால், ‘தைவிட நாம் ‘வனுக்காக வேறென்ன கேட்க முடியும் ?

‘எல்லாரும் ‘ழுவதை நிறுத்த வேண்டும். சிரிக்க வேண்டும் என்னைப்போல. ‘ல்லது குறைந்த பட்சம் என்னைப்போல இறைவனுக்கு நன்றியாவது செலுத்த வேண்டும். ஏனென்றால் என் மகன் இறப்பதற்கு முன் எப்படி தான் விரும்பியிருக்க முடியுமோ ‘ப்படித் தன் வாழ்வை முடித்துக்கொண்டதாக, திருப்திகரமாக இறந்தபோது எனக்குச் செய்தி ‘னுப்பினார்கள். ‘தனால்தான் நான் துக்க உடைகூட ‘ணியவில்லை தெரிகிறதா ? ‘

தன் லேசான மஞ்சள் கலந்த பழுப்புக்கோட்டை ட்டிக்காட்டினார். ‘வர் சிவந்த இதழ் இருந்த இடத்திற்கு மேல் நடுங்கியது. கண்கள் ‘சைவற்றும் வெளுத்தும் இருந்தன. தேம்பலைப் போன்றதொரு மெல்லிய சிரிப்பில் ‘வர் தன் பேச்சை முடித்துக் கொண்டார்.

‘நிச்சயமா, நிச்சயமா ‘ என்று மோதித்தனர் மற்றவர்கள். ஒரு மூலையில் தன் கோட்டுக்குக் கீழே ஒரு கட்டாகத் கிடந்த ‘ந்த ‘ம்மாள் ‘மர்ந்து ‘வர் சொன்னதயெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தாள். தன் ழ்ந்த துயரத்தை மாற்றும் ஏதாவதொன்றை தன் நண்பர்களின், கணவனின் வார்த்தைகளில் காண, கடந்த மூன்று மாதங்களாக முயன்று வந்தாள். ஒரு தாய் தன் மகனை மரணத்துக்கோ ‘ல்லது ஒரு ‘பாயகரமான வாழ்வுக்கோ எப்படி ‘னுப்பிவிட்டு ‘மர்வது என்று கற்றுத்தருகின்ற ஏதாவதொன்றுக்காக. னால் இது வரை சொல்லப்பட்ட வார்த்தைகளில் ஒன்றுகூட ‘ப்படிப்பட்டதாக ‘வள் காணவில்லை. ‘வள் நினைத்தவாறு யாரும் தன் உணர்வுகளைப் பங்கிடமுடியாது என்பதைக்காண ‘வளின் துக்கம் ‘திகமாகத்தான் கியது.

னால் இப்போது ‘ந்த பிரயாணியின் வார்த்தைகள் ‘வளை ச்சரியப்படுத்தின. ஏன், ஸ்தம்பிக்க வைத்தன. தன் மகன்களின் புறப்பாட்டுக்கு மட்டுமல்ல, ‘வர்களின் மரணத்துக்குக்கூட ‘ழாமல், எந்தக் குற்றமும் சொல்லாமல், வரும் வேதனையை ‘ப்படியே ஏற்றுக்கொள்ளும் தந்தைகளின், தாய்களின் உயரத்துக்குத் தன்னால் எழ முடியவில்லையே என்பதையும், ‘வர்களல்ல, தான்தான் தவறு செய்துவிட்டோம் என்பதையும் திடாரென்று உணர்ந்தாள்.

தலையை உயர்த்தினாள் தனது மூலையிலிருந்து. சற்று முன்னால் வந்து தன் மகன் எப்படி மகிழ்ச்சியாகவும் வருத்தங்களின்றியும் ‘வனது ‘ரசனுக்கும் நாட்டுக்கும் ஒரு ஹீரோவாக இருந்து வீழ்ந்தான் என்ற விபரங்களைத் தன் நண்பர்களுக்கு ‘வர் விளக்கிக் கொண்டிருந்ததை உன்னிப்பாகக் கேட்டாள். இதுவரை கனவுகண்டிராத உலகினுள் தடுக்கி விழுந்துவிட்டதைப் போலிருந்தது ‘வளுக்கு. இதுவரை ‘வள் ‘றியாத உலகம். தன்மகனின் மரணம் பற்றி எதையும் தாங்கும் இதயத்தோடு பேசிய துணிச்சலான ‘ந்த தந்தையை எல்லோரும் பாராட்டியதைக் கேட்க ‘வளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

பின் திடாரென்று இதுவரை சொல்லப்பட்டது எதையும் கேட்காதது போல, கனவிலிருந்து விழிப்பது போல ‘ந்த கிழவன் பக்கம் திரும்பிக் கேட்டாள்:

‘ ‘ப்படான்னா, உங்க மகன் உண்மையிலேயே இறந்துவிட்டானா ? ‘

எல்லோரும் ‘வளையே பார்த்தனர். தனது பெரிய, உப்பிக்கொண்டிருந்த, பயங்கர வெளுப்பாயிருந்த, பழுப்புள்ள கண்களை ‘வள் முகத்தில் ழமாகப் பொருத்தி ‘ந்தக் கிழவரும் ‘வளைப் பார்க்கத் திரும்பினார். கொஞ்ச நேரம் ‘வர் பதில் சொல்ல முயன்று கொண்டிருந்தார். திரும்ப ‘வளையே பார்த்தார். ஏதோ ‘ப்போதுதான் ‘ந்த ‘பத்தமான, சம்பந்தமற்ற கேள்வியில்தான் தன் மகன் உண்மையிலே இறந்துவிட்டதையும் ‘வன் இனி எப்போதும் திரும்பி வரமாட்டான் என்பதையும் திடாரென்று உணர்ந்து கொண்டமாதிரி ‘வர் முகம் சுருங்கியது. பயங்கரமாகச் சிதைந்தது வடிவம். பின்பு ‘வசரமாக தன் பாக்கெட்டிலிருந்து ஒரு கைக்குட்டையை எடுத்தார். எல்லோரும் ச்சரியமாகப் பார்க்க, கட்டுக்கடங்காமல், நெஞ்சுடைக்கும் வகையில் தேம்பித் தேம்பி ‘ழ ரம்பித்தார்.

——-

‘ரும்பு, ‘க்டோபர், ’88.

லூகி பிராண்டெலோ பற்றிய குறிப்பு :

லூகி பிராண்டெலோ ஒரு இத்தாலிய எழுத்தாளர். இத்தாலியின் சிஸிலியின் ‘க்ரிகெண்டோ என்ற ஊரில் ஜுன் 28, 1867 ல் பிறந்து, டிசம்பர் 10, 1936 ரோம் நகரில் இறந்தார். 1934 ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றவர். ரோம் மற்றும் ஜெர்மனியின் பான் பல்கலைக் கழகங்களில் படித்தவர். தான் பிறந்த ஊரின் வட்டார வழக்கு பற்றி ய்வு செய்து டாக்டர் பட்டமும் பெற்றவர்.

முதலில் கவிதைகளும் பின் சிறுகதைகளும் எழுதிய இவர் பின்னர் நாடகம்தான் தனக்கான களம் என்று ‘றிந்து கொண்டார். இவர் எழுத்தில் உண்மைக்கும் உண்மை என நாம் நம்பிக்கொண்டிருப்பவைகளுக்கும் இடையேயான போராட்டத்தைக் காண முடியும். ‘வர் மனைவி பிற்காலத்தில் மன நோய்க்கு ளானது, வறுமை, உளவியலில் இவருக்கு இருந்த ழமான ர்வம் கியவை காரணமா என்று தெரியவில்லை. ‘வரே கூறுகிறார் :

‘ நம் வாழ்க்கை ஒரு சோகமான விதூ ‘கமாக உள்ளது. நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கின்ற தேவைகொண்டவர்களாக நாம் இருக்கிறோம். ஒவ்வொருவரும் தமக்கான நிஜங்களை உருவாக்கிக் கொள்கின்றனர். னால் காலம் ‘வற்றை மாயை என நிரூபித்து விடுகிறது. ‘ப்படிப்பட்ட ஏமாளிகளை நோக்கிய ஒரு பரிவே எனது கலை ‘. 1920 ல் ‘வர் கூறிய இந்த கருத்துக்கள் இந்த சிறுகதையையும் புரிந்து கொள்ள உதவும்.

——-

நாகூர் ரூமி மொழிபெயர்ப்பில்

  • நீங்கள் கேட்க இருக்கும் அடுத்த குரல்
  • இதயங்களின் தேவாலயம்
  • ஆல்பர்டோ மொரேவியா

    Series Navigation

  • நாகூர் ரூமி

    நாகூர் ரூமி

    யுத்தம்

    This entry is part [part not set] of 28 in the series 20030323_Issue

    இரவி ஸ்ரீகுமார்.


    ரகு, தன்னுடையக் கம்பெனியின் பிரதிநிதியாக பாக்தாத்திற்கு வந்திருக்கிறான். ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் புரொஜக்ட் மேனேஜர்.

    பாக்தாத்தில் ஒரு பெட்ரோலியக் கம்பெனிக்கு மென்பொருள் தயார் செய்வதைப்பற்றி பேச வந்திருக்கிறான்.

    ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில், அவனுடையக் கம்பெனி புண்ணியத்தால் ஜாகை.

    ‘பக்தாத் திருடன் ‘ படம் பார்த்திருக்கிறான்- தொலைக் காட்சியில் ஒரு முறை.டூரிங் டாக்கீஸில் ஒரு முறை. இந்த வாரம் பாக்தாத்திற்கு கம்பெனி அவனைப் போகச் சொல்லும் வரை- அந்த அளவிலேயே அவனுக்கு பாக்தாத்தைப்பற்றித் தெரியும்.

    ஆரம்பத்தில் அவனுக்கு ‘திக் ‘ என்று இருந்தது. ‘பாக்தாத்தா ‘- என்று ஒரு சின்ன பீதி. பிறகு கொஞ்சம் தெளிந்தான்.

    கம்பெனியில், குறிப்பிட்ட மென்பொருளில் அவன் தான் சிறந்த நிபுணன். அதோடு அவனுக்கு அரேபிய மொழியில் கொஞ்சம் பழக்கம் உண்டு. அதுவும் இன்னொருக் காரணமாக- அவனை பாக்தாத்திற்குப் பிளேன் ஏற்றிவிட்டார்கள்.

    அவன் கூட வேறு ஒருவரும் பாக்தாத்திற்குக் கிடையாது. அதற்கு, ‘கம்பெனியில் ஃபைனான்ஷியல் கிரஞ்ச் ‘- என்று காரணம் கூறப்பட்டது.

    பாக்தாத் வியாபாரம் நல்லப் படியாக முடிந்தால், அவனை, ஒரு இயக்குனர் ஆக்குவதாக, மேனேஜிங் டைரக்டர் ஆசை வார்த்தைச் சொல்லியிருந்தார். அதான், ‘பார்த்துவிடாலாம் ‘ என்று, ரகு கிளம்பிவிட்டான்.

    அவனுடைய அலுவலக நண்பன், ‘மோஸே ‘ச் சொன்னான், ‘ஈராக்குல யுத்தம் வரமாதிரி இருக்கு ரகு. நல்ல யோஜனைப் பண்ணு. ‘ அப்பாவும் தயங்கினார். அம்மாவுக்கும் அச்சம். எல்லாருமே ‘மோஸே ‘ச் சொன்னதையேச் சொன்னார்கள்- ‘நல்லா யோஜனைப் பண்ணு ‘.

    ரகு நன்கு யோசித்தான். முடிவு செய்தான்.

    ‘அவன் கம்பெனியில் டைரக்கடராகப் போகிறான் ‘. பாக்தாத் கிளம்பிவிட்டான்.

    இதோ இன்றோடு ஒரு வாரம் ஆகிவிட்டது. இன்னும் இரண்டு நாட்கள் இல்லை மிஞ்சினால் மேலும் இரண்டு நாட்கள். அவன் சென்னைத் திரும்பிவிடலாம். கம்பெனியில், அடுத்தப் ‘போர்ட் ‘ மீட்டிங்கில் அவன் இயக்குனராக்கப்படுவான்.

    நினைக்கவே, ரகுவிற்குச் சந்தோஷமாக இருந்ததது.

    ரகு, தன்னுடைய ‘சூட்’டில் இருந்த டிவியினைத் ‘ஆன் ‘ செய்தான்.

    ***

    தீவிரமாக மூன்று நான்குப் பேர் அரேபிய மொழியில் பேசிக் கொண்டிருந்தார்கள்.

    அவனுக்குக் கொஞ்சம் புரிந்தது.

    ‘அமெரிக்காவின் போக்குத் தவறு. யூ.என் பல்லில்லாத ஒரு அமைப்பு. அமெரிக்காவை யாரும் எதிர்க்காமல் இப்படியே விட்டால், உலகமே அவர்களுக்கு அடிமையாக வேண்டியது தான் ‘- இப்படியாகப் பேசிக்கொண்டார்கள்.

    திடாரென்று டாவித் திரையில் ஒரு அறிவிப்பு. ரகுவிற்கு அந்த அறிவிப்புப் புரியவில்லை. புரியும் மொழி.தெரியாத லிபி.

    சில வினாடிகளில் திரையில் அதிசயமாக – சதாம் ஹீசைன்.பேசத் தொடங்கினார்.

    ரகுவிற்கு அவர் பேசியதன் சாரம் புரிந்தது. ‘சதாமும் அவருடையப் புதல்வர்களும் தங்கள் நாட்டை விட்டுப் போக வேண்டியதில்லை. போகப் போவதில்லை. ஈராக் போருக்குத் தயார் ‘.

    தொடர்ந்து உதய் சதாம் – சதாமின் மகன் பேசினார். ‘புஷ்தான் தன்னுடைய நாட்டை விட்டு வெளியேற வேண்டும். ஈராக் யுத்தத்திற்குத் தயார் ‘- குரலில் வெறி இருந்தது.

    ‘யுத்தம் ? ‘ ரகுவிற்குச் சிறிதுக் கவலையாக இருந்தது.

    ‘மோசே சொன்னது சரியோ. அந்த யோஜனையை ஏத்துண்டிருக்கலாமோ ? ‘- வயிற்றில் கொஞ்சமாகப் பட்டாம் பூச்சிப் பறப்பதுப் போல இருந்தது.

    இண்டர்காம் ஒலித்தது.

    ‘சார்.நான் ஹோட்டல் மேனேஜர் பேசுகிறேன். நீங்கள் இந்தியர் அல்லவா ? போருக்கு முன்பாக வெளியேற வேண்டுமென்றால், நாங்கள் உதவுகிறோம். ‘

    தொடர்புத் துண்டிக்கப்பட்டது.

    மீண்டும் தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்த்தான். ஆங்கிலத்தில் செய்தி தகவல் சொன்னது.

    இன்னும் சில மணி நேரங்களில் போர். வெளி நாட்டவர்கள் வெளியேறுகின்றனர். ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளும் வெளியேறினர். மிஞ்சி இருக்கும் வெளி நாட்டவர்களும் தங்களுடையச் சொந்தப் பாதுகாப்புக் கருதி வெளியேறலாம்.

    ரகுவிற்கு இப்போது நிதர்சனம் புரிந்தது. ‘ஆட்டம் குளோஸ் ‘- தன்னுடையப் பொருட்களை எடுத்து, ராட்சச சைஸ் பெட்டியில் அடிக்கினான். இண்டர்காமில் ஹோட்டல் ரிஸப்ஷனைக் கூப்பிட்டான்.

    ‘என் நாட்டிற்குத் திரும்ப வேண்டும். எந்த ஏர்லைன்ஸிலாவது டிக்கட் வாங்கிக் கொடுங்கள். உடனே ‘.

    ‘உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சார். உங்கள் அரசாங்கமே, தனி விமானத்தை பிரத்தியேமாக உங்களை மாதிரி நபர்களை இங்கிருந்து வெளியேற்ற அனுப்புகிறது. நாளை அதிகாலை ஐந்தரை மணி அளவில் அந்த விமானம் கிளம்புகிறது.’

    ஹா… God is great. ‘ஆபத்து அதிகமாவதற்குள் ஊருக்கு போய்விடலாம்.’- நிம்மதியாகக் கட்டிலில் படுத்தான்.நல்ல ஃபோம் மெத்தை.

    இன்னும் எத்தனை நாட்கள் கழித்து அவனுக்கு ஒரு கம்பெனியின் இயக்குனராக வாய்ப்பு வருமோ ? நாட்கள் என்ன, வருஷங்கள் கூட ஆகலாம்.

    ***

    அவனுக்கு புஷ்ஷின் மீதும் சதாமின் மீதும் கோபம் வந்தது. ‘சண்டைப் போடறாங்களாம்.அவங்களுக்கு என்ன போச்சு ? நாட்டிற்கே தலைவர்கள். ‘எங்களை மாதிரி ஆட்களுக்கு, இந்த இளம் வயசுல ஒரு கம்பெனியில டைரக்டர் ஆறது. எவரெஸ்ட் சிகரத்தை ஒரே மூச்சில ஏரற மாதிரி இல்லையா ? வேதனைப்பட்டுக் கொண்டே, தூங்கிப்போனான்.

    ஆயிரம் இடிகள் ஒரே சமயத்தில் தன் தலையில் விழுந்ததுப் போன்ற சப்தத்தைக் கேட்டு திடுக்கிட்டு முழித்துக்கொண்டான்.

    ‘என்ன சப்தம் ? ‘ அதிர்ச்சியில் எழுந்து உட்கார்ந்தவனை, இண்டர்காம் அழைத்தது. விபரம் சொல்லவார்கள்.

    ‘பயப்பட வேண்டாம்.இந்த சத்தம் நில நடுக்கத்த்ினால் அல்ல.யுத்தம் ஆரம்பித்துவிட்டது. இப்போது தான் சற்று நேரத்திற்கு முன்பு அமெரிக்காவின் போர் விமானங்கள் குண்டுகளைப் பொழிந்தன. -என்று ஹோட்டல் உரிமையாளரே சொன்னார்.

    வாட்ச்சைப் பார்த்தான்.அதிகாலை மூன்று.

    ‘சரி கிளம்பிவிடலாம். ‘-ரகு முடிவுசெய்தான்.

    அடுத்த கால் மணி நேரத்தில் அவன் பாக்தாத்தின் பிரதான சாலையில் ஒரு ‘கேப்ஸ் ‘ காரில் உட்கார்ந்திருந்தான். டிரைவரிடம், ஏர்போர்ட் போகச் சொன்னான்.

    அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருந்து, ஏர்போர்ட் சுமார், 10 கிலோமீட்டர்கள்.

    ரகுவிற்கு, தன்னுடைய கேரியரும், அதில் தான் அடைய இருந்த உன்னத நிலையும் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தது.

    ‘என்னுடைய வாழ்க்கையே இந்த யுத்தத்தினால திசை திரும்பிடுத்தே. எப்பேர்பட்ட சந்தர்ப்பம்.ஜஸ்ட் இரண்டு நாட்கள். வேலையை முடித்து விட்டு. ஊர் திரும்பின உடனே…என் வாழ்க்கையின் போக்கே மாறி இருக்குமே.. ‘ வேதனையாக இருந்தது.

    முன்பின் அறிமுகம் இல்லாத, அந்த ஈராகிய கார் டிரைவர்மேல், புஷ்ஷின் மேல், சாதாமின் மேல், எல்லார் மேலும், எல்லாவற்றின் மேலும் கோபம் வந்தது.

    தீடாரென்று கார் நின்றது. காரின் முன்னால் நிறைய வாகனங்கள் நின்றிருந்தன. ‘டிரஃபிக் ஜாம் ‘- எல்லாப் பாதையும் ரோமை நோக்கி என்பது போல, இங்கே எல்லா வாகனங்களும் ஏர்போர்ட்டை நோக்கி.

    எஸ்கேப்.. நம்மை மாதிரி அண்டை நாட்டவர் தப்பி விடலாம்.இந்த நாட்டை சேர்ந்தவர்கள்..

    ரகு காருக்கு பின்னால் திரும்பிப் பார்த்தான்.இன்னும் எந்த வாகனமும் வந்து நிற்கவில்லை.

    முன்னால் பார்த்தான். அவனுக்கு முந்திய காரில் இருப்பவர்கள் தெரிந்தார்கள். ஒரு பர்தா உருவம். ஒரு ஆண் உருவம். டிரைவர். அவ்வளவுதான்.

    தீடாரென்று பின்னால் வரும் வாகனத்தின் முன் விளக்குகளின் ஒளி. முன் காரின் மனிதர்கள் நன்றாகத் தெரிந்தார்கள். அந்த ஆணின் முகத்தில் உச்சப்பட்ச பதற்றம் தெரிந்தது. பர்தா உருவமும் பதற்றத்தில் நெளிவதுப்போல் இருந்தது.

    தீடாரென்று தெரு விளக்குகள் மெதுவாக மங்கலாகி, பின் அணைந்தன.பவர்கட். இந்தியாவைப் போல தான். பாக்தாத்தில் இது சகஜம். ரகு வந்ததிலிருந்து கவனித்திருக்கிறான்.

    ***

    ‘டமார். ‘ பயங்கர சப்தம்.

    ரகுராமனுக்கு ஒரு சில வினாடிகள் ஒன்றும் புரியவில்லை. என்ன ஆயிற்று ? மீண்டும் குண்டுப் பொழிகிறார்களா ?

    இவனுடைய கேப்ஸ் டிரைவர் கீழே இறங்கி பின்னால் நின்ற வாகனத்திலிருந்தவர்களை பார்த்து, அரேபிக்கில் ஏதோ கத்திக்கொண்டிருந்தார்.

    தெரு விளக்குகள் மீண்டும் எரிந்தன. ரகுவும் கீழே இறங்கினான். ‘சில் ‘ என ஏதோ குளுமையாக காலில் இருந்து ஓடியது. வலித்தது. பார்த்தான். கணுக்காலில் ஏதோ வெட்டியதுப் போல காயம். அதிலிருந்து ரத்தம்.

    காரின் பின்புறத்தை, அப்போதுதான் கவனித்தான். பின்னால் வந்தா கார் மோதி, சப்பை ஆகியிருந்தது. கடவுளே.இவனுடைய லக்கேஜ் என்னா ஆயிற்றோ ? ரகு ஆக்ஸிடெண்டை கவனிப்பதைப் பார்த்த டிரைவர் இவனிடம் வந்தான்.

    பின்னால் வந்த கார் ஆக்ஸிடெண்ட் செய்தததையும், அதன் காரணமாக, தன்னால் அவனை ஏர்போர்ட்டிற்கு கொண்டு செல்ல விடமுடியாத இயலாமையையும் தெரிவித்தான்.

    ‘ஹலோ இப்போ ஏர்போர்ட் போறதுக்கு முன்னால ஒரு டாக்டர்கிட்டே போகணும்.என் கணுக்காலில் காயம் ‘- சைகை,ஹிந்தி,உருது,அரேபிக் மற்றும் ஆங்கிலம் என பலவற்றையும் கலந்து டிரைவரிடம் சொன்னான்.

    டிரைவர் பதறியப்படி, ரகுவின் கணுக்கால் காயத்தைப் பார்த்தான். பிறகு டிராஃபிக் ஜாமில் நின்றிருந்த சில கார் மனிதர்களிடம் விஷயத்தைச் சொல்லி உதவச் சொன்னான்.

    இவர்களின் காருக்கு முன்பாக நின்றுக் கொண்டிருந்தக் கார்க்காரர் உதவ முன் வந்தார். அவர்களும் டாக்டரிடம் தான் போகிறார்களாம்.

    ‘அடப் பதற்ற மனிதர்களுடன் பயணம்.’- ரகு வியந்தான்.

    மெதுவாக டிராஃபிக் சரியானது.

    இவனுக்கு உதவுவதாக சொன்னவரின் பெயரைக் கேட்டான்- ஹஷேன் அகமது. மனைவியின் பெயரை சொல்ல மறுத்துவிட்டார். அந்நியரிடம், அவர்கள் குடும்ப மரபுப்படி, பெண்களின் பெயர்களை சொல்ல மாட்டார்களாம்.

    ரகுவிற்கு, இந்தியாவில் பெண் உரிமைப் பேசுபவர்களின் நினைவு வந்தது. ‘வேண்டாத நேரத்தில் வேண்டாத எண்ணம்’- தன்னையேத் திட்டிக்கொண்டான்.

    ஆனால் ஒன்று ரகுவிற்குப் புரிந்தது. அந்தப் பெண் கர்ப்பிணி. இன்னும் ஓரிரு மாதங்களில், பிரசவம் ஆகிவிடக்கூடும்.

    ரகுத் தன்னுடைய கைப் பையில் வைத்திருந்த, முதல் உதவி மருந்துகளை கொண்டு தன்னுடையக் காயத்தை அதற்குள் அமைதிப்படுத்தியிருந்தான்.

    அவன் மனதில், பிரமோஷனைப் பற்றிய நினைவு அவ்வப்போது வந்து தொந்திரவுப் படுத்திக்கொண்டிருந்தது. ஹஷேனே அவனிடம் சொன்னார்- இன்னும் சில மணி நேரங்களில் போர் தீவிரமாகிவிடும்.’பம்பார்ட்மெண்ட்’ அதிகமாக இருக்கும். அவ்வப்பொழுதுப் பேசிக்கொண்டார்கள்.மொத்தத்தில் மெளனமாகவே பயணம் இருந்தது.

    பாக்தாத்தில், மருத்துவர்களும்,மருந்துகளும்- வாராது வந்த மாமணிகள். காணாதுக் கண்டக் கண்மணிகள். இதையும் ரகு வந்த அன்றே புரிந்துக் கொண்டான். வந்த அன்று வயிறுத் தகராறு செய்தது. அன்றைய அனுபவம்.

    மருத்துவமனை வந்துவிட்டது. எக்கச்சக்கக் கூட்டம்- யுத்தக் காலங்களில் இது சகஜமானதுதான். ஆனால், ஒரு வித்தியாசம். இன்று நிறைய இளம், கர்ப்பிணிப் பெண்கள்.

    ரகுராமிற்குக் காரணம் புரியவில்லை. டாக்டரின் அனுமதிக்காக அமர்ந்திருந்தான். கால்வலி உயிர் போயிற்று. இந்தியன் என்ற ஐடெண்டிடா, டாக்டரை சீக்கிரத்தில் பார்க்க முடிந்தது.

    ‘எஸ்..கம் இன் ‘-டாக்டர் அரேபிக் ஆங்கிலத்தில் அழைத்தார். அப்பாடா, ஆங்கிலத்தில் பேசலாம். ‘குட் ஈவினிங் டாக்டர்.. ‘ ‘நோ. பேட் ஈவினிங்.போர்காலச் சாயங்காலம் ‘-வேதனையான குரலில் சொன்னார். ரகு, மன்னிப்புக் கேட்டு, வேதனையைப் பகிர்ந்துக்கொண்டான்.

    தனக்கு மருத்துவம் செய்துக் கொள்ளும் முன்பாக அந்த இளம் பெண்களின் கூட்டத்தைப் பற்றிக் கேட்க விரும்பினான்.

    ‘ஒண்ணு கேட்டால், தப்பா நினைக்க மாட்டார்களே. ‘ அவருடைய பதிலை எதிர்பார்க்காமல் கேட்டான், ‘ ‘இத்தனைப் பெண்கள் அதுவும் கர்ப்பிணி பெண்கள்..ஏன் ? ‘

    அவன் முடிக்கும் முன்பாக டாக்டர் சொன்னார், ‘எல்லாருமே- பிரசவ நேரம் இப்போது இருப்பவர்கள், இரண்டு மூன்று மாதங்கள் தள்ளி இருப்பவர்கள்- எல்லாருமே பிரசவத்தை போர் ஆரம்பிப்பதற்கு முன்பாக அல்லது யுத்தம் உச்சத்தை அடைவதற்கு முன்னால பிரசவிக்க ஆசைப் படறங்க.. ஏன்னா…யுத்தமும் , அதைத் தொடர்ந்து வர சோகம்… ‘ யாராவது கேட்கமாட்டார்களா என ஏங்கியவரைப் போல டாக்டர் கொட்டித்தீர்த்தார்.

    ரகு புரியாமல் கேட்டான், ‘பிரசவ டைம் இப்போ இல்லாதவங்க எப்படி இப்பவே பிரசவிக்க முடியும் ? ‘

    ‘முடியும்..முடியணும்.பிரசவமும் ஒரு யுத்தம் தான்.நார்மல், சிசேரியன், ஃபோர்சிப்ஸ்.. இப்படி வெவ்வேறப் போர் முறைகள்.வலிதான்.வேதனைதான்…. ‘

    டாக்டர் சற்று இடைவெளி விட்டுக் கேட்டார். ‘உங்கள் உடம்புக்கு என்ன மிஸ்டர் ? ‘ ரகு ஒரு வினாடித் தயங்கினான்.பிறகு, ‘எனக்கு வெளிக் காயம் தான் டாக்டர். அது சாதாரண டிரிட்மெண்ட்க்கு சரியாயிடும்.

    ஸாரி.உங்க நேரத்தை வீணாக்கியதுக்கு மன்னிச்சுடுங்க .. ‘ டாக்டர் புரியாமல், அவன் வெளியேறுவதைப் பார்த்தார்.

    முற்றும்.

    ravi_srikumar@hotmail.com

    Series Navigation

    இரவி ஸ்ரீகுமார்

    இரவி ஸ்ரீகுமார்