மோகமுள்!

This entry is part [part not set] of 35 in the series 20080821_Issue

தாஜ்



மோகமுள் பக்கங்களில்
லயித்திருந்தப் போது
வழி தவறி
என் அறைக்குள்ளே
அழையா விருந்தாளியாக
வந்திருந்து மின்னலாய்
ஆட்டம் போட்டதோர்
வண்ணத்துப் பூச்சி.

என் அறை
மரண ஸ்தலமாய் ஆகாதிருக்க
சுழலும் விசிறியை நிறுத்தி
சுடும் விளக்கையும்
அணைத்து அடக்கினேன்.

பொது சுதந்திரத்திற்கு
பங்கம் வராதிருக்க
வாயில்
ஜன்னல் கதவுகளை
திறந்து வைத்தேன்.

பட படவென
சிறகசைத்து
மோகமுள்ளில்
பட்டுப் படர்ந்து
கொடியென என்
புஜங்களில் தொற்றி
தலை உச்சத்தில்
வட்டமிட்டு
எழில் உணர்த்தி
பறந்துப் போனது.

அதன் வெற்றிடம்
தவிர்க்க முடியவில்லை
சலனத்தை வென்றும்
மீச்ச மீதியில்
நானிருந்தேன்!
கூடவே அன்று
என்னுடன்
அறை முழுக்க
தி.ஜா.வும் இருந்தார்!


satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation

தாஜ்

தாஜ்

மோகமுள்

This entry is part [part not set] of 46 in the series 20050311_Issue

சீனிவாசன் ராமச்சந்திரன்


தேன் வற்றிய தேன்கூடாய்
பிசுபிசுக்கிறது
உனக்கும் எனக்குமான
உறவு.
விரலுக்கேற்ற மோதிரங்கள்
தொலைந்து போய்
மோதிரத்திற்காய்
விரல் வீக்கங்கள் !
தொட்டால் பூ மலருமோ என்னவோ
தொடாமல்
மரமாய் வளர்ந்து நிற்கிறது
என் மோகம்.
புறங்கை எச்சிலாய் நேற்றைய மிச்சங்கள்.
பசிக்காய் கேட்கிறேன்
ருசிக்கான சிந்தனைகளை சற்று
ஒத்திவை.
—-
Srinivasan.Ramachandran@in.efunds.com

Series Navigation

சீனிவாசன் ராமச்சந்திரன்

சீனிவாசன் ராமச்சந்திரன்