காலம்
பவளமணி பிரகாசம்
வளரும் வயதினிலே,
வட்ட நிலவு முகத்திலே
கூனல் பாட்டி பார்த்தேன்;
கண்மூடி படுத்தவுடன்
கனவின்றி உறங்கினேன்.
பிள்ளைப் பருவத்திலே,
புத்தக நடுவினிலே
பீலியின் இறகு வைத்து
பொறுமையாக பார்த்திருந்தேன்,
குட்டி போட காத்திருந்தேன்.
விடுமுறை நாட்களிலே,
பாட்டி வீட்டு மாடியிலே,
பாப்பா நொண்டி ஆடினேன்,
பல கதைகள் கேட்டறிந்தேன்,
கூட்டாஞ்சோறு உண்டிருந்தேன்.
வாலறுந்த பட்டமாய்
வெகு தூரம் பறந்த பின்னே,
கண் மூடி முழிப்பதற்குள்
காலம் ஓடி விட்டது,
கனவு போல நேற்றிருக்கு.
சிதறிய நெல்லிக்காயாய்
சேக்காளி கூட்டமும்
சேர்ந்த இடம் தெரியலை,
கபடில்லா கடந்த நாளை
எண்ணி மனமும் ஏங்குது.
நிலவில் கிழவி இருப்பதை
நம்பவில்லை பேரனும்,
மயிலிறகில் மயங்கிட
நேரமில்லை பேத்திக்கு-
என்னடா கிரகமிது!
அத்தனையும் புரியுதிப்போ,
அப்பட்டமாய் தெரிகிறது,
விளங்காத விபரமும்
வெட்டவெளிச்சமாகுது,
கற்பனைக்கு வேலையில்லை.
சின்ன மின்னணு திரையிலே
விரல் நுனியின் ஆணையில்
அனைத்துலகும் விரியுது,
ஆளை அசத்திப் போடுது-
விந்தையான காலமிது.
எட்டி விலகி போகாமல்,
ஏக்கத்தோடு பாராமல்,
விரும்பி இந்த வித்தையை
கற்றுத் தெளியும் காலம்,
வென்று களிக்கும் காலம்.
ஏறுகின்ற வயது,
மாறுகின்ற கலைகள்,
வேறுபட்ட சுவைகள்,
கூறுகின்ற பாடம்
உறுத்தாத காலம்.
***
pavalamani_pragasam@yahoo.com
- எங்கே அவள்
- பசுமையாகும் மார்க்சியமும்,புதிய பார்வைகளும்
- இரண்டு தலைகள் கொண்ட மனிதனுடன் ஒரு நேர்முகம்
- இந்த வாரம் இப்படி (விவாதம் இல்லாமல் சட்டங்கள், பெண்கள் இட ஒதுக்கீடு, ஈராக் போர், பாகிஸ்தான் உறவு)
- 5140
- அரசூர் வம்சம் – அத்தியாயம் ஐந்து
- அம்மாச்சி
- ஓ போடு……………
- எதிர்காலத்தில் ஒரு நாள்………….
- குழியும் பறித்ததாம்!
- முதல் காஷ்மீர்ப் போரில் ஆங்கிலேயர் செய்த மோசடி
- கடிதங்கள்
- மாப்பிள்ளைத் தோழன்
- பிரியும் பாதையும் பிரியா மனமும்
- அன்னையர் தின வாழ்த்து
- சாப்பாடு
- மறுபிறவி எடுத்தால்
- இரண்டு கவிதைகள்
- கவித்துளிகள்(ஹைக்கூ)
- ஏன் அமெரிக்க விவசாயிகளுக்கு கொடுக்கும் மானியம் ஏழை நாட்டு விவசாயிகளுக்குப் பேரிடியாக இருக்கிறது ?
- கழுதைப் புலிகளும், நத்தைகளும், சில மனிதர்களும்
- தாயின் தனிச்சிறப்பு
- ஹாங்காங்கில் ஸார்ஸ்- எண்ணிக்கைகளுக்கு அப்பால்
- தூண்டில்காரர்கள்
- எதிர்கொள்ள மறுத்தலின் எதிரொலி (கிருத்திகாவின் ‘தீராத பிரச்சனை ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 60)
- சென்னைத்தமிழில் கணினி
- கவிதை பற்றி
- மதமும் தம்மமும் – மதம் குறித்த பெளத்த கோட்பாடு
- பொருந்தாமையின் துக்கம் (பிராந்து – நாஞ்சில் நாடனுடைய சிறுகதைத்தொகுதி நூல் அறிமுகம்)
- ஒரு புளிய மரத்தின் கதை – ஒரு காலங்கடந்த பார்வை
- சாக்கியார் முதல் சக்கரியா வரை
- பிற வழிப்பாதைகள் (சு சமுத்திரம்,பாலு மகேந்திராவின் ஜூலி கணபதி)
- மூலக்கூறு உயிரியலில் நவீன இயற்பியலின் பங்களிப்பு: 3 லின்னஸ் பவுலிங்
- அறிவியல் மேதைகள் டாரிசெல்லி (Torricelli)
- காலச்சுவடு மலர் – ஒரு சுயமதிப்பீடு
- தின கப்ஸா – விட்டுக் கொடுத்தல் சிறப்பிதழ்
- பேராசை
- அமெரிக்க கவிஞர் பில்லி கொலின்ஸ் (Billy Collins)
- உயிரின் சொற்கள்
- காலம்
- இனியொரு வசந்தம்!!
- அன்னை
- இயந்திரப் பயணங்கள்
- பசுமைப் பார்வைகள் :சுற்றுச்சூழல் அரசியல் – 2
- ப சிதம்பரம் நியூஜெர்ஸியில் பேசுகிறார்
- தினகப்ஸா – குடிமகள் சிறப்பிதழ்
- வரங்கள் வீணாவதில்லை…