வரிசையின் முகம்
குமரி எஸ். நீலகண்டன்
அந்த நெடிய வரிசை
எங்கேப் போகிறதென்று
தெரியாத அளவிற்கு
நெடியதாய் இருந்தது.
வளைந்து வளைந்து அது
நாடு எல்லைகளைக் கடந்து
எங்கோப் போய்
கொண்டிருந்தது.
அது இலவசங்களுக்கான
வரிசையாகவும் தெரியவில்லை.
காரணம் அதில்
பல நாட்டினர்,
பல மதத்தவர், சாதியினர்,
ஆண்கள், பெண்கள்,
சிறியவர், பெரியவர்,
வயதானவர்கள், அதிகாரிகள்,
மருத்துவர்கள்,
பணக்காரர்கள், ஏழைகள்,
அரசியலவாதிகள், சாமியார்கள்,
பிச்சைக்காரர்கள், ரவுடிகள்,
பித்து பிடித்தவர்களென
பேதமின்றி எல்லோருமே
நின்று கொண்டிருந்தனர்.
பின்னால் நின்ற
எல்லோருமே அது
எதற்கான வரிசையென்று
தெரியாமலேயே
நின்று கொண்டிருந்தனர்.
முந்த முயலாத
முட்டல் மோதலில்லாத
முழு வரிசையாக
இருந்தது அது.
யாரும் யாரிடமும் அது
எதற்கான வரிசையென்று
கேட்டுக் கொள்ளாத அளவில்
இயல்பாக இருந்தது
அந்த வரிசை.
வரிசையின் ஆரம்பத்தை
நெருங்கும் வேளையில்
பலருக்கும் பதட்டம்
இருந்தது. பலரும்
பிந்திவர முந்தினர்.
பலரும் தயக்கத்துடன்
பின் வாங்கினர்.
நோயுற்றப் பலரையே
முன்னால் காண
இயன்றது.
முன்னால் நெருங்க
நெருங்க கடவுளின்
கோஷங்கள் நிறையக்
கேட்டன.
சிலர் வலி தாங்காமல்
வாயிலுக்குள் வேகமாய்
ஓடினர்.
வெகு சிலரே
மகிழ்ச்சியுடன்
அந்த வாயிலைக்
கடந்து போனார்கள்.
அது மரண வாயிலுக்குள்
நுழைகிற மக்களின்
வரிசையாக இருந்தது.
குமரி எஸ். நீலகண்டன்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -2
- முன்னேற்பாடுகள்
- தோட்டத்துப்பச்சிலை
- வலை (2000) – 2
- நின்று கொண்டே கிரிக்கெட் பார்த்தல் :
- பெண் – குழந்தை … குமரி … அம்மா
- விஸ்வரூபம் அத்தியாயம் எழுபது
- ஊழிற் பெருவலி யாதுள ?
- கூடா நட்பினால் விளைவது கேடே
- தாமிரபரணித் தண்ணீர்
- இரவின்மடியில்
- கபீரின் கனவும் நாம் கட்டமைத்த இந்தியாவும்
- ஒரு கணக்கெடுப்பு
- தியான மோனம்
- (3) – தலித்துகளும் தமிழ் இலக்கியமும்
- சரஸ்வதி சகாப்தத்தின் நாயகர்.
- வலை (2000) – 1
- ஆரம்பம்
- இயல்பில் இருத்தல்
- நீ, நான் மற்றும் அவன்
- தண்ணீர்க் காட்டில் - 1
- நரம்பறுந்த நிலம்..
- ப.மதியழகன் கவிதைகள்
- முடிவற்ற பயணம் …
- பூர்வீகக் கண்டங்களின் புலப்பெயர்ச்சி (Supercontinent Split & Drift)
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – (1)
- பேட்டி : சுப்ரபாரதிமணியனுடன் பாலு சத்யா
- இவர்களது எழுத்துமுறை – 30 பிரபஞ்சன்
- ஒரு பறவையின் பயணம் பாவண்ணனின் ”ஒட்டகம் கேட்ட இசை”
- இளங்குருத்தினைக் காக்க உதவுங்கள்…
- திரு மலர்மன்னன் அவர்களுக்கு
- வரிசையின் முகம்
- அப்பாபோல
- பூஜ்ஜியத்தின் கால்வாசி!
- கம்பன் கழகத்தின் இந்த ஆண்டின் விழா 2011
- இதய ஒலி.
- வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -1)
- இனி உங்களைத் தூங்க வைக்க முடியாது
- மனசாட்சி விற்பனைக்கு
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -8)
- கடன்
- ஒரு ஊரையே
- ‘இவை… நமக்கான வார்த்தைகள்…!’
- பிரியம் சுமக்கும் சொற்களால்…..
- நீ அறியும் பூவே
- போர்ப் பட்டாளங்கள்
- ஐந்து குறுங்கவிதைகள்