ப மதியழகன் கவிதைகள்
ப மதியழகன்
நிலாமுற்றம்
================
வானிலுள்ள வெள்ளித்தட்டு
சாதம் பரிமாறுபவர்
கைகளுக்கு அகப்படாமல்
கண்ணாமூச்சி காட்டும்
குழந்தைகள் எட்டிப் பிடிக்கப் பாயும்
தூக்கியெறியப்பட்ட கால்பந்து போல
அந்தரத்தில் நிலவு
நிலாச்சோறு சாப்பிடும்
கூட்டத்தோடு கலந்துவிடும்
பெளர்ணமி அன்று நிலா
கடலலைகளை
உயரெழும்ப வைத்து
வேடிக்கை காட்டும்
வெண்மதி
அமாவாசை அன்று
யார் வீட்டிற்கு
விருந்துக்குச் செல்வான்
சந்திரன்
குழந்தைகளுக்கு சோறூட்டும்
தாயிடம் கை நீட்டும் நிலா
கடைவாயில் வழியும் எச்சிலோடு
தனக்கும் ஒரு கவளம்
வேண்டி
எல்லோரையும் அண்ணாந்து
பார்க்கச் செய்யும்
அம்புலியை யாருக்குத்தான்
பிடிக்காது.
===============================
பித்து
================
சூசகமாய்ச் சொன்னார்கள்
அவளுக்கு கோட்டி பிடித்து விட்டதென
பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருந்தாள்
ஆனால் அவிழ்ந்த கூந்தலும்
கலைந்த சேலையும்
அவளை அவ்வாறாக
எண்ண வைத்தது
காரணத்தை விசாரித்தால்
கதையொன்று சொன்னார்கள்
எல்லை அம்மனை அவமதிச்சா
இப்படித்தான் ஆகுமென்றார்கள்
எனக்குத் தெரிந்த மருத்துவரிடம்
அவளை அழைத்துச் செல்ல
அனுமதி கேட்டால்
மருந்தால சரியாகாது
ஆத்தா மனசு வைச்சாத்தான்
தெளியுமென்றார்கள்
எங்கும் செல்லமுடியாமல்
சங்கிலியால் பிணைக்கப்பட்ட
அவளை பார்த்துவிட்டு
வந்த பிறகு
இரவில் கண்ணுறக்கம் வரவில்லை.
- C-5 – லிப்ட்
- ஞானத்தைப் பெறுவது எப்படி? (திபெத்திய சிறுகதை)
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -18
- வளரும் இந்தியா பற்றி ஒரு சாதாரண மேற்கத்திய பார்வை
- இந்தியன் வேல்யூஸ்
- பார்வையும் களவுமாக
- ஜிட்டு “கிருஷ்ணமூர்த்தி” -அறிவே ஜீவிதமாய்
- ஹிந்து சமய-சமூக தளங்களில் பெண்
- தமிழ்த் தாத்தாவின் 157ஆவது பிறந்த நாள்
- கபில் சிபல், காங்கிரஸ், கழகம் !!!
- எது நிஜம், எது நிழல்?
- தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 1
- நினைவுகளின் சுவட்டில் – 63
- தொட்டிச் செடிகள்
- தன் முலைக்காம்பை கிள்ளி எறிந்த மூதாயி
- கனவில் வந்த கடவுள்
- வலி..!
- அர்த்தமற்ற கேளிக்கைகள்…
- என்ன உரு நீ கொள்வாய்?
- ப மதியழகன் கவிதைகள்
- என் அன்பிற்குரிய!
- ஐந்திணை ஐம்பதும், எழுபதும்
- Cloud Computing – Part 4
- பிரபஞ்சப் பிறப்பை விளக்கிய ஜார்ஜ் காமாவ் (George Gamow) 1904-1968
- பாலைவனத்து பட்டாம்பூச்சி:
- புலம் பெயர்ந்த உலகில்- ஓரியண்டலிசம் பற்றிய குறிப்புகள்
- இவர்களது எழுத்துமுறை – 27 அசோகமித்திரன்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு (கவிதை -41 பாகம் -3)
- ஒரு கவிதானுபவம்
- எழுத்தாளர் அம்பையின் மறுவினை
- “மனிதம் வளர்ப்போம்!“
- ஐந்திணை
- மீளல்
- எதிரும் நானும்…
- என்று தணியும்
- கூழாங்கல்…
- பிடித்த தருணங்கள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -5)
- தனித்துப் போன மழை நாள்
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 28