யாதும் நலம்
வருணன்
பண்டிகை காலங்களின்
இரவல் கூதூகலங்களுக்குப்
பிறகு திருப்பிச் செலுத்திட வேண்டிய
கடன்களின் கணக்கீடுகளால்
சாய்வு நாற்காலியில் அயர்ந்தமரும்
நடுத்தர குடும்பத் தலைவர்களுள்
ஒருவனாய் நானும்;
இவ்வமயம் எனதிந்த அமர்வும்.
காமப் பாற்கடலில்
கடைந்தெடுத்த அமிழ்தங்களாய்
மழலைகள் இல்லாதிருந்திருந்தால் நலம்.
கடைவதற்கு அசுரர் போல நானிருக்கையில்
துணைக்கு தேவர் போல இல்லாள்
இல்லாதிருந்திருந்தால் இன்னும் நலம்.
இதற்கும் மேலே
இருப்பின் பிரக்ஞையும்
வாழ்வு குறித்த அவதானங்களும் அவசியப்படும்
நரனாய் ஜனிக்காதிருந்திருந்தால்
இன்னும் இன்னும் நலம்.
’கப்பல்கள் கரைகளில் பாதுக்காப்பாய் இருக்கும்
ஆனால் அதற்காய் அவை கட்டப்படுவதில்லை’
எனும் ஜான் ஷீடின்
மேற்கோளை மடிக்கணிணியின்
முகப்புப் படமாய் வைத்து
“அப்பா எப்படி?” என்கிறாள்
மலர்ச்சியாய் மகள்.
“ம்…
மிக நன்று”, நான்.
ஓய்தல் மீண்டு
எழுப்பப் பட்டேன் மீண்டும்.
jolaphysis@gmail.com
– வருணன்
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 16
- ஞான வாழ்வு நல்கும் சச்சிதானந்த சற்குவருவின் பெருவழிப்பாதை
- புனிதங்களின் பேரில் கற்பிதங்கள் – ரமீஸ்பிலாலியின் பதிவை முன்வைத்து
- தவிப்பு
- குழிவு
- பராசக்தி ஏற்பாடு
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -4
- பரிமளவல்லி 20. கிருமியின் தாக்குதல்
- ஓபாம நமஹ!
- கல்லா(ய்) நீ
- ஓம் ஒபாமா “ திரைப்பட அனுபவம்
- பள்ளங்களில் தேங்கும் உரையாடல்..
- மழையே நீ பெண்தான் !!
- எங்கே எடுத்து செல்வேன்?
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) சிறுவரோடு விளையாடும் ஞானி கவிதை -24 பாகம் -3
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)என்னை மயக்கியவள் கவிதை -37 பாகம் -1
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 6 Moral Fallout ஒழுக்கவிதிகளின் விளைவுகள்
- மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்
- அறிவியல் என்னும் வழிபாடு
- காதலனின் எதிர்பார்ப்புகள்
- முள்பாதை 55
- நரகத்தின் வாசல்
- உடைந்த சூரியனும் நானும்…
- படவிமர்சனம் – உறவு
- யாப்பு உறுப்பு : கூன்
- இவர்களது எழுத்துமுறை – 15 ஆர்.கே.நாராயணன்
- மதுரைக்காஞ்சியில் காஞ்சித்திணை (தொடர்ச்சி-2)
- செர்ன் விரைவாக்கி யந்திரத்தில் முதன்முதல் நிகழ்த்திய சிறிய பெரு வெடிப்புகள் (கட்டுரை -8)
- பூங்கொடியாய்
- முள் பயணத்தினிடையே
- தொலையும் சூட்சுமங்கள்
- பதிலைத்தேடும் கேள்விகள்..
- துரோகம்…!
- செல்லங்கள்
- சொல்லத் தயங்கிய ஒன்று…!
- யாதும் நலம்
- ஏவலர்கள் எஜமானர்களாய்
- மரமாக மனித வாழ்க்கை
- மாய வலை
- காதலுக்கினிய!