நீ அறியும் பூவே

This entry is part [part not set] of 48 in the series 20110313_Issue

ரவி உதயன்


அத்தனை பெண்களின்
கண்களும் அதன்மீதுதான் !

சடைப் பாம்புகள்
தரை தீண்டத் துடிக்கும்

இத்தனை முடிஆகாது வீட்டிற்கு என்பாள்
தலைவாரி விடும் அம்மாதினமும்.

ரோஜா,
கனகாம்பரம்,
சிலபொழுது மனோரஞ்சிதம்,
எப்பொழுதும் சிறு மல்லிகை இணுக்கு.

இவற்றைத் தின்று வளர்கிறது
என் கருங்கூந்தல்.

– ரவி உதயன்
raviuthayan@gmail.com

Series Navigation

ரவிஉதயன்

ரவிஉதயன்