உருள்படும் பகடைக்காய்கள்

This entry is part [part not set] of 35 in the series 20110213_Issue

தேனு


:

சன்னல் தென்படுகிறதா?
இருள்படிந்த அகம்
எண்ண அலைகளால்
ஊடுருவப்பட்டு
ஏதோ ஓர் புள்ளிக்கு அப்பால்
ஒதுக்கப்பட்டிருந்தது..

சிதறுண்ட கண்ணாடி
துண்டங்களின் சேர்க்கை
குறுக்கு மறுக்குமான பிரதிபிம்பம்
எது அசல் நான்?
எது நகல் நான்?
புரிபடா தெளிவுகள் வழி
ஓடிக் கொண்டிருந்த கலக்கங்கள்..

இலட்சிய பாதைகள்,
அவைகள் எட்டுத்திக்கிலும்
அதில் எது எனது(கள்) என்ற
தேடலின் தொடர்ச்சி…

வார்க்கப்பட்டு வளர்க்கப்படும் எனது(கள்)
மெய்யாகவே எனது(கள்)தானா?
அவசியங்கள் அனாவசியமாய்
தவிர்க்கப்பட்ட
ஆசன ஏற்றம் உசிதமன்று…
கூரியம் மழுங்க
புரட்டப் படுகின்றன
வாழ்க்கைச் சக்கரங்கள்!!!

– தேனு

Series Navigation

தேனு

தேனு