அனுபவம்
ஜெயந்தி சங்கர்
நேற்றையும் நாளையும் மறந்து
இன்றை மட்டும் முழுதாய் நம்பி
மலையையும் மடுவையும்
காற்றையும் கடலையும்
கவனிக்காது விட்ட
புல்லையும் புள்ளையும்
பூண்டையும் பூவையும்
மொட்டையும் மரத்தையும்
புதரையும் உயிரினங்கள்
அனைத்தையும் உணர்ந்து கலந்திட
அடிக்காமல் அழுது,
வலிக்காமல் தவழ
தள்ளாடாமல் நடந்து ,
திக்காமல் பேசிட
கிறுக்காமல் எழுதி,
இமைக்காமல் வியந்திட
களவையும் கற்று பின்
மறக்காமல் மறந்திட
மழையில் நனைந்து,
பின் ஒழுகும் மூக்கைச் சிந்தி
அம்மா கொடுக்கும்
கஷாயத்தை முகர்ந்து
பின் மூக்கைப்பிடித்து
மடக்கென விழுங்கிட
உடன் பிறந்தவனுடன் போட்டியிட்டு,
உறவையும் மறந்து ஜெயித்திட
உற்ற தோழனுடன் பிணங்கி,
பின் முற்றிலும் மறந்து சேர்ந்திட
தமிழிலக்கணமும் முழுமையாய் அறிந்து,
அறிவில் சிறந்திட
தேர்வில் மற்றவர் வியக்க,
முதல் மாணவனாய் தேர்ந்திட
தேசிய சேவை ஆற்ற,
அச்சத்தை உதறிச்சென்று
சோம்பலை சட்டையாய் அகற்றி,
உடலுரமும் பெற்று
பல்கலைக்கழகம் சென்று,
பாங்காய் பட்டமும் பெற்று
வேலையொன்றில் அமர,
அதிலும் நற்பெயர் ஈட்டி
கல்யாணம் முடித்து,
குழப்பமில்லாமல் குடும்பம் நடத்தி
பெற்ற குழந்தைகள் வளர்ப்பில் சிறந்து
முதுமையை முதிர்ச்சியுடன் வரவேற்று
பயமின்றி மகிழ்வுடன்
மரணத்தைத் தழுவிட
வேண்டும் இன்னுமொரு பிறவி
மானிடனாய் எனக்கும்
முன் அனுபவம் உண்டே எனக்குத் தான்!
sankari01sg@hotmail.com
sankari01sg@yahoo.com
sankari01sg@sify.com
****
- உணவுச் சங்கிலிகள்
- புழுத் துளைகள் (குறுநாவல் – 4)
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -20)
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் -15
- விளிம்பு
- என்னைப் பெத்த அம்மாாாாஆ…
- காடன்விளி
- கல்யாண ரத்து தீர்மானம்
- காயம்
- தயானந்த சரஸ்வதி சொல்லும் கடமை என்ன ?
- நிழல் யுத்தமும், நிஜ யுத்தமும்
- இது எப்படி இருக்கு…. ?
- இந்துத்துவம் = சர்வ மத சமத்துவ சம்மதத்துவம்
- முரண்பாடுகளின் முழுமை
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 1
- அன்புடன் இதயம் – 14 – காற்று
- மலைப்படுகடாம். ஒரு சித்திரம்
- வா
- மைக்ரோசாஃப்ட் – வின்டோஸ் சமாச்சாரங்கள்
- காசு
- டாலர்க் கனவுகள்
- அனுபவம்
- வெற்றி
- மரபும் புதிதும் : இரு கவிதைகள்
- தொழில்நுட்பச் செய்திகள் ஏப்ரல் 15, 2004
- உலக விந்தைகளில் ஒப்பற்ற பொறியியல் உன்னதமான பனாமா கால்வாய் [Panama Canal (1870-1914) The Greatest Engineering Marvel]
- டான் கில்மோர்
- குளிர்பானங்கள்
- ஜெய மோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரல் ‘ : ஓர் அலசல்
- கவிதை உருவான கதை-2
- சரியும் மணல் மடிப்புகள் நடுவே
- நந்திக் கலம்பகம்.
- குதிரைவால் மரம்
- ஜங் அவுர் அமான்!
- என்னோடு என் கவிதை
- ஓட்டப்பந்தயம்
- காலம் சஞ்சிகையின் இலக்கியப் பொழுது
- ஆருயிர்கெல்லாம் ‘வம்பு ‘ செய்யல் வேண்டும்!
- தேவலோகத்தில் ஒரு கடிதப் போக்குவரத்து
- மலர் வசந்தம் – நிழற்படத் தொகுப்பு
- கடிதம் – ஏப்ரல் 25 – சுமதி ரூபனின் ‘வடு ‘
- கடிதங்கள் ஏப்ரல் 15,2004
- 2004-ஆம் ஆண்டிற்கான இலக்கியச் சிற்பி விருது
- கடிதம் – ஏப்ரல் 15, 2004
- வாழும் வகை
- ஏசுநாதர் வாழ்க்கை : நடன நாடகம் – ஏப்ரல் 18 , 2004
- தமிழ்ப் படைப்பிலக்கியத் தடத்தில் மா அரங்கநாதன் படைப்புகள்
- கடிதம் – ஏப்ரல் 15,2004
- உயிர்மைக்கு ஒரு கடிதம்
- யூசுஃபும் கண்ணாடியும் -கதை — 04
- அளவுகோல்
- எந்த செய்தி – யார் பிரசுரித்தது ? தினகரன் – தினத்தந்தி தினமலர்
- என்னைப் பொறுத்தவரை
- சொற்புணர்ச்சி விளக்கச்சொற்கள்
- உயிர் தொலைத்தல்
- அம்மணம்
- அவதாரம்
- மன்னித்து விடலாம்….
- பகல் மிருகம்
- தீர்மானிக்காதவரை.. .. ..
- வசந்தத்தின் திரட்சி
- கவிதைகள்
- சத்தியின் கவிக்கட்டு 3
- தமிழவன் கவிதைகள்-ஒன்று
- என் பிரிய தோழி
- வேர்கள்
- துரோகர்(துரோணர்)
- ஓவியம்
- பரம்பொருள்
- புத்தாண்டுப் பொன்மகளே புது அழகாய் நீவருவாய்!
- திரேசா