முடிவிலடங்கும் தொடக்கம்
மண்ணாந்தை
உள்ளிருந்து பீறிடும் ஆனந்தத்தின்
நடனம்
எதனுள்ளிருந்து
நடனத்தின் உச்சத்தில்
நடந்திடும் தாவல்
எவ்வெளிதனிலது
தாவலின் தருணத்தில்
நின்றிடும் காலம்
நின்றது
எங்கோடும் பாம்பின்
நெளிவு
ஆ
காலத்தின் இதயத்தில்
பாதம் பதித்திடும்
இப்பெரு நடனமதில்
விநாடி
முடிவிலியாகப்
பிளந்த
அசைவொன்றாக
பிரபஞ்சமனைத்தும்
எனினும்
பிரபஞ்சத்தின்
ஏதோ ஓர் மூலையில்
சிறு நீலக்கோளமொன்றில்
சில நூறு கோடி ஆண்டுகள்
பகடையாட்டங்களில்
எழுந்த பிரக்ஞையில்
பின் அது
எரிந்த சுடுகளத்தின்
பாழ்வெளியில்
உள்ளிருந்து பீறிடும் ஆனந்தத்தின்
நடனம்
அனைத்துமாக
அனைத்தின்
அனைத்தியக்கங்களுமாக
அனைத்தினுள்ளும்
அனைத்திற்கப்பாலும்
என்னுள்ளும்
பின்
என்னைப் பிழிந்தழித்து
உள்ளிருந்து பீறிடும் ஆனந்தத்தின்
நடனம்…
-மண்ணாந்தை
- மன்னித்து விடலாம்….
- கட்சிகள் குறையும் நிச்சயமாய்! (இந்திய அரசியல் கட்சிகள் பற்றியது)
- திசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 19
- ஒரு மழை இரவில்… (O ‘Henryயின் ‘After Twenty Years ‘ கதையின் தமிழாக்கம்)
- புழுத் துளைகள்(குறுநாவல்) – 3
- பிறழ்வுகள்
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 14
- மாய மான்
- அஃது
- அவன் அப்பிடித்தான்..
- கற்பு என்கின்ற காட்டுமிராண்டித்தனம்
- வாரபலன் ஏப்ரல் 8, 2004 (சின்னு கிருஷ்ணா மற்றும் இதர கர்நாடக சங்கீதங்கள், கிராமக்கதைகள், மலையாள மாந்திரீகம்)
- மைக்ரோ சாஃப்ட் நுழைந்த நாடு
- உலகிலே பிரமிக்கத் தக்க மிகப் பெரும் ஜப்பானின் ஊஞ்சல் பாலம் (1998) [Japan ‘s Akashi Kaikyo Suspension Bridge]
- கி. சீராளன் கவிதைகள்
- ஆதியும் அந்தமும் ஆன ஆனைமுகனே போற்றி
- முதிர்கன்னி.
- கர்ப்பனை உலா
- மழைகழுவிய இலையில்
- ஏழாவது சுவைக்கவிதைகள்
- யார் நிரந்தரம் ?
- Chennai – Revisited
- புது வருடக் கொண்டாட்டங்களும் அவற்றின் முக்கியத்துவமும்
- மறுபடியும் ஓர் இனத் தூய்மைப்படுத்தல்
- From Drunken Monkey to Lord Ganesha! ‘புடிச்ச குரங்கை புள்ளயாரா முடிக்க ‘
- பச்சை தீபங்கள்
- கடவுள்கள் விற்பனைக்கு
- அகிலன் லெட்சுமணன் கவிதைகள்
- நா.இரா.குழலினி அவர்களுக்கு என் சிறு பதில்
- பாசிச பூதமும் குட்டித்தேவதையும்
- வாழிய உலக நல நற்பணி மன்றம், ஞானவானி விருது,
- ஜெயமோகனும் தாக்குதல்களும்
- சில குறிப்புகள் ஏப்ரல் 8, 2004
- கடிதங்கள் ஏப்ரல் 8, 2004
- ஆட்டோGraph
- சுயசரிதைக் கட்டுரை –1 அறியப்படாத பக்கங்கள் அந்தத் தொழிலதிபர்க்குள் ஒரு கலைஞன்.
- கண்கொத்திச் சாமி.
- எழிற்கொள்ளை..
- கவிதை உருவான கதை -1
- நற்பேறு பெற்றவன் நான்..
- உயிர் தொலைத்தல்
- தெய்வ தசகம்
- முடிவிலடங்கும் தொடக்கம்
- மேலான படைப்பு
- பரிட்சயம்
- அந்த வீடு
- கட்சி
- சத்தியின் கவிக்கட்டு 2
- தெருவும் பாடசாலையாக
- ஞான குரு – கதை — 03