அகிலன் லெட்சுமணன் கவிதைகள்
அகிலன் லெட்சுமணன், மலேசியா
எனக்கான முகம்
—-
எல்லோரும்
நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள்
சிதைந்த என் முகத்தை
அவரவர் பாத்திரங்களில்
எனக்கான முகத்தை
தற்காலிகமாக தருகிறார்கள்
அவரவர் தாகம் தணியும் வரை
உதட்டில் கொஞ்சம்
மேஜையில் கொஞ்சம்
பாத்திரத்தின் விளிம்புகளில் கொஞ்சம்
தெரித்து விழும் எச்சிலில் கொஞ்சம்
தரையில் கொஞ்சமென
சிந்திய பகுதிகளிலிருந்து
சேர்த்துக் கொண்டிருக்கிறேன்
எனக்கான முகத்தை
அகிலன் லெட்சுமணன், மலேசியா
ஊழித் தீ
—-
தூணை பிளந்து வெளிப்பட்ட
நரசிம்மனைப் போல
என்னை பிளந்து
நானே பிறக்கின்றேன்
பிரபஞ்சம் விழுங்கும்
பேரொளியுடன்
கட்டுக்களை அறுத்து
மனித உடல் கடந்து
‘அவனை ‘யும் மிஞ்சும்
பலத்துடன் இங்கே
என்னில் விழும் அத்தனையும்
எரித்திடும் பசியோடு
ஊழித் தீயென எரிகின்றேன்
காலங்கள் கடந்து சிரிக்கின்றேன்
அகிலன் லெட்சுமணன், மலேசியா
நம்பிக்கை
—-
எங்காவது
நட்டு வைப்பார்கள் என்று
காத்துக் கொண்டிருக்கிறோம்
வேர்களை தொலைத்துவிட்டு
அகிலன் லெட்சுமணன், மலேசியா
***
agi_lan@hotmail.com
- மன்னித்து விடலாம்….
- கட்சிகள் குறையும் நிச்சயமாய்! (இந்திய அரசியல் கட்சிகள் பற்றியது)
- திசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 19
- ஒரு மழை இரவில்… (O ‘Henryயின் ‘After Twenty Years ‘ கதையின் தமிழாக்கம்)
- புழுத் துளைகள்(குறுநாவல்) – 3
- பிறழ்வுகள்
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 14
- மாய மான்
- அஃது
- அவன் அப்பிடித்தான்..
- கற்பு என்கின்ற காட்டுமிராண்டித்தனம்
- வாரபலன் ஏப்ரல் 8, 2004 (சின்னு கிருஷ்ணா மற்றும் இதர கர்நாடக சங்கீதங்கள், கிராமக்கதைகள், மலையாள மாந்திரீகம்)
- மைக்ரோ சாஃப்ட் நுழைந்த நாடு
- உலகிலே பிரமிக்கத் தக்க மிகப் பெரும் ஜப்பானின் ஊஞ்சல் பாலம் (1998) [Japan ‘s Akashi Kaikyo Suspension Bridge]
- கி. சீராளன் கவிதைகள்
- ஆதியும் அந்தமும் ஆன ஆனைமுகனே போற்றி
- முதிர்கன்னி.
- கர்ப்பனை உலா
- மழைகழுவிய இலையில்
- ஏழாவது சுவைக்கவிதைகள்
- யார் நிரந்தரம் ?
- Chennai – Revisited
- புது வருடக் கொண்டாட்டங்களும் அவற்றின் முக்கியத்துவமும்
- மறுபடியும் ஓர் இனத் தூய்மைப்படுத்தல்
- From Drunken Monkey to Lord Ganesha! ‘புடிச்ச குரங்கை புள்ளயாரா முடிக்க ‘
- பச்சை தீபங்கள்
- கடவுள்கள் விற்பனைக்கு
- அகிலன் லெட்சுமணன் கவிதைகள்
- நா.இரா.குழலினி அவர்களுக்கு என் சிறு பதில்
- பாசிச பூதமும் குட்டித்தேவதையும்
- வாழிய உலக நல நற்பணி மன்றம், ஞானவானி விருது,
- ஜெயமோகனும் தாக்குதல்களும்
- சில குறிப்புகள் ஏப்ரல் 8, 2004
- கடிதங்கள் ஏப்ரல் 8, 2004
- ஆட்டோGraph
- சுயசரிதைக் கட்டுரை –1 அறியப்படாத பக்கங்கள் அந்தத் தொழிலதிபர்க்குள் ஒரு கலைஞன்.
- கண்கொத்திச் சாமி.
- எழிற்கொள்ளை..
- கவிதை உருவான கதை -1
- நற்பேறு பெற்றவன் நான்..
- உயிர் தொலைத்தல்
- தெய்வ தசகம்
- முடிவிலடங்கும் தொடக்கம்
- மேலான படைப்பு
- பரிட்சயம்
- அந்த வீடு
- கட்சி
- சத்தியின் கவிக்கட்டு 2
- தெருவும் பாடசாலையாக
- ஞான குரு – கதை — 03