பால் கடன்
நளாயினி தாமரைச்செல்வன்.
என் மார்பின்
பால் வாசனையில்
கண்வளர்ந்தவளே!
இன்று நீ அகதியாய்
அன்னிய தேசத்தில்.
தொப்பிள் கொடி
இன்னமும் பச்சையாய்.
உன்னை நினைக்கும்
போதெல்லாம் -என்
கருப்பைச் சுவர் கூட
விம்மி எழுகிறது.
வயசு தான் போட்டுது
ஆனால் இன்னமும்
கருப்பைச்சுவர் உன்
?பாிசத்தை மறக்கவில்லை.
உன் உணர்வைச்
சுமந்து வரும் கடிதம் பாக்க
கண் கூட இசைவதில்லை.
உன் புகைப்படத்தைக் கூட
பள்ளிக்கப்போகும் போது
உன்னை அழைத்துச்சென்ற
விரல்கள் தான் தடவிப்பார்த்து
மகிழ்ந்து கொள்கிறது.
படலைக்குள் அரவம் கேட்டால்
நீ வந்து நிப்பதாய்
ஓர் பிரமை.
பிறகென்ன கேக்கவே வேணும்.
கண்ணின் வில்லை கூட
உன் வருவுக்காய்
ஒருமுறை சுருங்கி விாியும்.
அன்று முழுவதும்
சொட்டுத் தண்ணி கூட
நாவிறங்கா.
ஊாில் எல்லாரும்
மகளின் வெளிநாட்டுக்காசில்
கிழடுக்கு உல்லாச வாழ்வு எண்டு
போற்றுவதாய் உமிழ்ந்து மெல்வர்.
முகம்மலர கேட்டுவிட்டு
உன் நினைவால் மனம்
பித்த்துப்பிடித்ததை யார் அறிவர். ?
சாவோ
என் வாசலில்
தலைவிாித்த நிக்கிறது.
உன் ?பாிசம் பட்டால் தான்
இந்த அம்மா உயிர்போகுமம்மா.
ஓடோடி வந்து என்
பால்கடனைத்தீர்த்துவிடு.
__
நளாயினி தாமரைச்செல்வன்.
சுவிற்சலாந்து.
2001
thamarachselvan@hotmail.com
- முடிவுக்காலமே வைட்டமின்
- நாடாளுமன்றத் தேர்தல் 2004 – ஒரு கண்ணோட்டம் – 3
- இருபது/இருபது (தொடர்ச்சி…)
- களிமேடு காளியம்மாள்
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 13
- புழுத் துளைகள் – 2
- அரசூர் வம்சம் – அத்தியாயம் ஐம்பத்திரெண்டு (நிறைவடைந்தது)
- ‘பச்சை ‘ மணிக்கிளியே!
- நோயுற்ற ஆசிரியர் (கதை — 02)
- பனியில் விழுந்த மனிதர்கள்
- ‘டென்ஸ் நே ப்யார் கியா! ‘
- கர்ப்பத்தடையும் கத்தோலிக்கரும்
- சென்ற வாரங்களில் – ஏப்ரல் 1, 2004, பெண்கள் பெண்கள் பெண்கள்
- சூடானில் கறுப்பினத்தவருக்கு எதிரான தொடரும் இனப்படுகொலை
- பால் கடன்
- சொல்லால் செத்த புறாக்கள்
- அன்புடன் இதயம் – 13 – நிலம்
- இப்போது உனக்காக…
- கி. சீராளன் கவிதைகள்
- வருகல் ஆறு
- நொடிகள் கழிவுப் பொருள்களாய்
- ஆதிமுதல்….
- திரை விலகியது
- ஈஸ்ரர் தினம்: அதன் வரலாறும் முக்கியத்துவமும்
- மெல்லத் தமிழினிச் சாகுமோ ? ( ‘யாருக்குமேயான ‘ பதிலல்லாத ஒரு மீள்பார்வை மட்டுமே)
- வாரபலன் ஏப்ரல் 1, 2004, கேரளக்கூட்டு, கன்னடக்களி, கானமேளா, மம்முட்டி, அனந்தமூர்த்தி
- பொறியியல் அற்புதச் சாதனையான அமெரிக்காவின் பொன்வாயில் ஊஞ்சல் பாலம்
(San Francisco Golden Gate Suspension Bridge)
- திசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 18
- எதிரேறும் மீன்கள்
- Three exhillarting dance programs
- நவீனப்பெண்ணியமும் சின்னக்கருப்பனின் டைனோசார் (இந்துமதமும்) இந்துத்துவமும் (மீண்டும் திரும்பும் குதிரை அரசியல்)
- A Bharata Natyam Dance Drama on Bharathi ‘s Works
- எழுத்தாளர்களின் பண்பாடு என்ன ?
- கடிதங்கள் ஏப்ரல் 1, 2004
- லென்னி புரூஸ் பொன்மொழிகள்
- ஹிண்டுவிற்கு தினந்தோறும் முட்டாள்கள் தினம்
- சாமியேய். ..
- இன்று புதிதாய்ப் பிறந்த நாவல்: இரா. முருகனின் “மூன்று விரல்” -விமர்சனம்:
- மீன் கட்லெட்டுகள்
- விலக்கப்பட்ட கனி
- காலப்பிழை
- ப்ரான் கறி
- ஓவியம்
- கே.கோவிந்தன் கவிதைகள்
- வேடதாரிகள்
- கோமதி கிருஷ்ணன் கவிதைகள்
- நழுவும் …
- மெளனம்
- எனக்குள் எரியும் நெருப்பு.
- காவிரி மண் வாக்காளர்களே….!
- நல்லாமல் நன்றியெது ?
- சோற்றுப் புத்தகம்
- சத்தி சக்திதாசனின் கவிக்கட்டு 1
- தீக்குள் விரலை வைத்தால்.