மீ.வசந்த்,தாய்லாந்து
பென்சில் தொலைந்ததை
பிள்ளையாரிடம் சொன்னதும்,
வானொலி பெட்டிக்கு
சோறூட்டி விட்டதும்,
வண்ணத்துப் பூச்சிக்கு
ஐS வாங்கிக் கொடுத்ததும்,
தியேட்டரில் சினிமா
கண் பொத்திப் பார்த்ததும்,
நொங்கு சீவிய காயில்
காரோட்டி சுற்றியதும்,
பனை ஓலை கிழித்து
காற்றாடி செய்ததும்,
கிழிசல் தைக்கும் பாட்டி
நிலவுக்குள் இருந்ததும்,
அண்ணாந்து பார்த்து
விமானத்தை அளந்ததும்,
தட்டான் பிடித்து
காதோரம் பேசியதும்,
காகிதக் கப்பல்செய்து
மழைநீரில் விட்டதும்,
ஆற்றோர கற்களில்
‘அலிபாபா ‘குகை தேடியதும்,
அடிக்கடி சத்தமாய்
‘அண்டாக்கா..கசம் ‘ சொன்னதும்,
கொக்குகள் பார்த்தவுடன்
வேகமாய் விரல் உதறி…,
வெள்ளை போடக் கேட்டதும்!! ?,
கோழிக்குஞ்சு திருடிய
கருடப் பருந்துவிடம்…
காப்பாற்ற வேண்டியதும்,
வளர்ந்து பெரியவனாகி…
சமூகத்தை திருத்துவதாய்
சத்தியம் செய்ததும்,
…………………
………………..
இன்னொரு முறை வேண்டும்!! ?,
பிரியமுள்ள பூமியே..,
என்றைக்கு நீ
பின்னோக்கி சுற்றுவாய் ? ?!
மீ.வசந்த்,தாய்லாந்து
MSV001@MAERSKCREW.COM
- குறிப்புகள் சில- 31 ஜூலை 2003- காட்கில்,வோல்வோ பரிசு-மறைமலையடிகள் நூலகம்-மேரி கல்டோர் -உலக சிவில் சமூகம்
- வாழ்க்கையும் கனவுகளும்
- அறிவியல் மேதைகள் – சர் ஹம்ப்ரி டேவி (Sir Humphry Davy)
- அகில உலகில் அணு உலை, அணு ஆயுதக் கழிவுகள் எப்படி அடக்கம் ஆகின்றன ?
- தவிக்கிறாள் தமிழ் அன்னை !
- தமிழாக்கம் 1
- தாவியலையும் மனம் (எனக்குப் பிடித்த கதைகள் – 71 ) இந்திரா பார்த்தசாரதியின் ‘நாசகாரக்கும்பல் ‘
- விமரிசன விபரீதங்கள்
- கலையும் படைப்பு மனமும்
- கஷ்டமான பத்து கட்டளைகள்.
- உணர்வும் உப்பும்
- விசுவரூப தரிசனம்.
- குப்பைத் தொட்டியில் ஓர் அனார்க்கலி!
- நெஞ்சினிலே….
- ஒரு தலைப்பு இரு கவிதை
- உழவன்
- மொய்
- அந்த(காந்தி) -நாளும் வந்திடாதோ.. ?
- ஹைக்கூ
- கம்பனும் கட்டுத்தறியும்
- கூடு விட்டு கூடு…
- பிரம்மமாகும் ஏசு கிறிஸ்து – நூல் பகிர்தல்: ஆலன் வாட்ஸின் ‘ Beyond Theology – The Art of Godmanship ‘
- 39.1டிகிரி செல்ஸியஸ்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினேழு
- விடியும்! நாவல் – (7)
- கோயில் விளையாட்டு
- கேட்டுக்கிட்டே இருங்க!
- கடிதங்கள்
- புலிச்சவத்தில் கால்பதிக்கும் வேட்டைக்காரர்கள்
- வாரபலன் – ஜூலை 26, 2003, (ஸ்ட்ரீக்கர், தமிழுருது, மகாத்மா விவரணப்படம்)
- வேர்களைத் தேடி… – பயணக் குறிப்புகள்
- இறையியல் பன்மையும் உயிரிப்பன்மையும்-3
- நேற்று இல்லாத மாற்றம்….
- கேள்வி -2 தமிழன் அறிவைத் தடுத்தாரா பெரியார் ?
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 11
- அன்னை
- ஊனம்
- வாழ்க்கை
- மனமா ? மத்தளமா ?
- முற்றுமென்றொரு ஆசை
- சந்தோஷமான முட்டாளாய்…
- ஒற்றுப்பிழை