நா.முத்து நிலவன்.
வறண்டது காவிரி மட்டுமா ? – மக்கள்
வாழ்க்கை நெறியும்,பண் பாடும்கிழிந்ததே ஒட்டுமா ?
இருண்டது போலவும் தோணுதே! -அட
ஈராயிரத் தாண்டு, பாரம்பரியமும் நாணுதே! -1
எங்கெங்கு காணினும் சூழ்ச்சியா! – அதில்
ஏழை நிலைமையை மூடி மறைத்திடும் வீழ்ச்சியா!
அங்கங்கும் ‘ஒளிர்கிற ‘ காட்சியா! -அவை
அப்பாவி மக்களின் அம்மணத்தை விற்ற சாட்சியா! -2
அறிவியல் வளர்ந்ததே போதுமா ? – அவை
அடிமட்ட ஏழையை அப்படியே விடல் நீதமா ?
பொறியியல் வளர்ந்தென்ன லாபம் ? – ஒரு
போக்கிலா மாந்தர்க்குப் புகலிடமில்லையே பாவம்! -3
‘பாவேந்தன் பாரதி தாச! – உன்
பாட்டு வழிஎங்கள் நாட்டுவழி’ எனப் பேச -பல
நாவேந்தர் எம்மிடம் உண்டு!- எனில்
நாவேறு! செயல்வேறு என்பதே எம்மனோர் தொண்டு! -4
‘மலைவாழைக் கல்வி’யை உண்டோம்! – அறிவு
மட்டும் வளர்ந்தது, நாட்டையே காடாகக் கொண்டோம்!
விலைபேசி வாங்கினோம் வம்பை – உள்ள
வேற்றுமை யைஊதிப் பெரிதாக்கி விடுகிறோம் அம்பை! -5
கல்வியில் லாததோர் பெண்ணை – நீ
களர்நில மேயெனக் கவிபுனைந் தாய்,தஞ்சை மண்ணை
புல்விளை யாததோர் புதராய் – நாங்கள்
போட்டுவைத் தோம்,பெண்ணைப் போற்றிவைத் தோம்ஒருபுதிராய்! -6
‘உலகமே உண்ண உண்’ என்றாய்! – ‘இந்த
உலகையே நானெடுத்(து) உண்பேன் தனியாக ‘ என்றார்,
கலகமே நடத்திய போதும் -அதைக்
‘காவல் பணி ‘யெனக் காட்டுவதே எங்கள் வேதம்! -7
வறண்டது காவிரி மட்டுமா ? – இல்லை
வளத்தமிழ் நாட்டினில் பண்பாடும் கிட்டுமா ?
இருண்டது போலவும் தோணுதே! – இதை
எப்படியும்,இனி மாற்றிடவே வழிகாணுவோம்! -8
====
muthunilavan@yahoo.com
- கடிதம் – ஆகஸ்ட் 5 , 2004
- தமிழ் நாட்டில் தாய்த் தமிழ்ப் பள்ளிகள்
- குடந்தை குழந்தைகள் கொலைக்கு யார் பொறுப்பு ?
- டயரி
- யோகத்தின் தத்துவம் (தமிழாக்கம் )
- இந்தியப் படையே வெளியேறு! -பற்றி எரிகிறது மணிப்பூர்
- பேரீத்த பழங்கள் உதிர்ந்து விழுகின்றன
- கல்வி ‘புகட்டுவது ‘ சரியா ?
- தந்தை பெரியார் பிறந்த மண்ணில்
- மதுரை உயர் நீதிமன்றம்
- முழு சுகாதார திட்டம்
- மெய்மையின் மயக்கம்-11
- Bonjour le Canada
- தலை நகர்த் தமிழ்ச் சங்கத்தில் நூல் திறனாய்வு
- திருக்குறள் பற்றிக் கவிக்கோ அப்துல் ரகுமான் சொல்வது சரிதானா ? -திருக்குறள் ஒரு சமண நூலா ?
- பேல் பூரி , கொத்துமல்லி சட்டினி , பேரீச்சம்பழ சட்டினி
- பாலூட்டும் பூச்சிகள்
- ஆகஸ்ட் 1 முதல் தீம்தரிகிட மாதம் இருமுறை இதழாகிறது.
- நியூ ஜெர்சி தமிழ்ச்சங்கம் : பிரபஞ்சன் பங்கு பெறும் இலக்கிய நிகழ்ச்சி – ஆகஸ்ட் 8,2004
- கடிதம் ஆகஸ்ட் 5,2004
- சிங்கப்பூரில் 7வது தமிழ் இணைய மாநாடு – டிசம்பர் 11,12
- குறிஞ்சிவேலனுக்குச் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது
- கடிதம் ஆகஸ்ட் 5,2004 – பரமார்த்த குருவும் சீடர்களும்
- கடிதம் ஆகஸ்ட் 5, 2004
- தீர்வு ஞானம்
- பிரசுரமாகும் தமிழ் கவிதைகள் அடிப்படையில் ஒரு ஆராய்ச்சி
- ஸ்பைடர்மேன் தெலுங்கு டப்பிங் படத்தில் சேர்க்கப்பட்ட காட்சி
- மிஷன் இம்பாஸிபிள்
- கிரிஸ்துவ அடிப்படைவாதியின் பத்து அடையாளங்கள்
- ஆட்டோகிராஃப் 12:கங்கையிலே குளிக்கையிலே காவிரியில் மனது வைத்தால் அந்த சுகம் இதில் வருமோ ?
- இந்து அடிப்படைவாதியை அடையாளம் காண பத்து வழிகள்
- தீயே உன்னை வழிபடுகிறேன்…!!!
- அவன் ஒரு அகதி
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 31
- சிதைந்த கனவுகள்
- ஆண்டாளும் ஆத்தங்கரைச் சாமியும்
- மழை
- இப்படிக்கு தங்கபாண்டி…
- றெக்கையில்லா கா(க்கா)கிதங்கள் (நாடகம்)
- பார்வைகள்
- காத்திருப்பு
- பெரியபுராணம் – 3
- வறண்டது காவிரி மட்டுமா ?
- எங்கள் தேசம் இந்திய தேசம்!
- வேடம்
- கவிக்கட்டு 18 – எங்கே அவர்கள் ?
- மஸ்னவி கதை — 13 : இப்லீஸும் முஆவியாவும் (தமிழில் )
- கவிதைகள்
- திரைகடலோடியும் …
- நேசித்தவன்
- அன்புடன் இதயம் – 26 – தமிழ் இணையம் 2002
- அப்பா – ஆலமரம்
- வேடத்தைக் கிழிப்போம்-5 (தொடர் கவிதை)
- மாலை
- சலனங்கள்
- பாஞ்சாலியின் துயரம்
- நளாயனி
- புணரி
- துப்பாக்கி முனையில்….
- இயற்கைக் காட்சி
- என் ஊர்–அத்தாழநல்லூர்!