நளாயினி தாமரைச்செல்வன்.
சமூகத்தின்
வெறித்தனத்திற்கெல்லாம்
சாவு மணி அடிக்க
ஏன் தயங்கினோம். ?
உணர்வில்
உயிாில்
கலந்த பின்
பிாிந்தோம்
என்பது
வேதனை தான்.
மரணித்து
காதலை வளர்ப்போம்
என்றோம்.
எனக்குள்
இருக்கும் நீயும்
உனக்குள்
இருக்கும் நானும்
வாழ்ந்து கொண்டே
நினைவுகளில்
வாழ்வோம்
என்கின்றனர்.
நீ தந்த
சின்ன| சின்ன
பாிசுப் பொருளெல்லாம்
இன்றும் என்
தலை அணையின் கீழ்
ஒளித்து வைத்திருக்கிறேன்.
உன்னை எல்லாம்
இப்போ என்
தொலை பேசி
விசாாிக்க
தவறுவதில்லை.
நமக்கு
வயதாவது போல்
சமூக வெறிக்கும்
வயதாகாதா என்ன ?
புதிதாய் அல்லவா
பிறப்பெடுக்கிறது.
சமூகம் திருந்தாது.
நாம் தான்
மாற வேண்டும்.
காலம் போகிறது
வயதும் போகிறது
வாயேன்
ஓடிப்போய்
மாலை மாற்றுவோம்.
என் நாடி
அடங்கு முன்
உனை ஒரு முறை
பார்த்திட வேண்டும்.
எங்கே இருக்கிறாய். ?
நட்பாய்
எனக்கொரு
நகல்
எழுதேன்.
_______
ஆக்கம் நளாயினி தாமரைச்செல்வன்
நீ தந்த காயம்.
____________________
குறுக்கும் நெடுக்குமாய்.
ஆமை வேகத்தில்
என் பாதங்கள்.
உன் நினைவுகளும்
நீ தந்த காயமும்
மின்னல் வேகமாய்
மனத்திரையில்
வந்து போவதாய்.
அழுவதும்
என்னை நானே
ஆசுவாசப்படுத்துவதுமாய்.
இப்படித்தான்
நேற்றய
இரவு முழுவதும்
தூக்கத்தை
தொலைத்திருந்தேன்:
காரண காாியங்கள்
எதுவுமே கூறாமல்
நீ தந்த இந்த வலி
இதை சுகமென்பதா ?
சோகமென்பதா ?
இரண்டினதும்
கூட்டுக்கலவை என்பதா ?
வெட்ட வெளிச்சமாய்
வானத்தில் முழ நிலா
எந்தன் உணர்வைப்போல்.
எனக்கும்
உனக்குமான
இந்த இடைவெளியை
தற்காலிகமாகவே
எடுத்துக்கொள்கிறேன்.
நானாக
விலக்கிக்கொண்டதல்ல
நீயாக விலகிச்செல்கிறாய்.
முகமூடியணிந்த
இந்த கலியுக ர் கூட்டத்துள்
உண்மையாக
வாழத்தலைப்பட்டது
என் தவறா ?
விழி வழியும் கண்ணீரை
துடைத்தபடி
படுக்கை வீழ்ந்தேன்.
பாவம் நீயும்
தூக்கமின்றி
உழல்கிறாயோ
எந்தன் நினைவுகளோடு.
ஐயோ வலிக்கிறதே.
நளாயினி தாமரைச்செல்வன்.
15-08-2003
nalayiny@hotmail.com
- பைத்தியம்
- வாரபலன் – புதுக்கவிதை, எம்.எஸ் திருப்புணித்துற, ஓவிய மரபு இன்னபிற ஆகஸ்ட் 16, 2003
- காபூல் திராட்சை
- கூத்துப் பட்டறையின் படுகளம்
- தேடியதும் கிடைத்ததும் கரிச்சான் குஞ்சுவின் ‘நுாறுகள் ‘ (எனக்குப் பிடித்தக் கதைகள் – 73)
- உடலின் மொழியும் மொழியின் உடலும் – குட்டி ரேவதியின் கவிதைகள் குறித்து
- ஓவியம் புரிதல்(பார்க்க,ரசிக்க)
- கூத்துப் பட்டறையின் படுகளம்
- பயாஸ்கோப்பும் ஃபிலிமும்
- பாரத அறிவியலாளர் கண்டுபிடித்த நர்மதையின் டைனோசார்
- வேர்களைத் தேடி… – பயணக் குறிப்புகள் 4
- தமிழ்ச் சினிமா- சில குறிப்புகள்
- மரம்
- சிகரட்டில் புகை
- உலக சுகாதார தினம்
- நட்பாய் எனக்கொரு நகல் எழுதேன்.
- ஆயிரம் தீவுகள்
- அகதி
- அறியும்
- பி.கே. சிவகுமார் கவிதைகள்
- கடத்தப்பட்ட நகரங்கள்
- என் இனிய சிநேகிதனே !
- மின்சக்திக்காக மூச்சுத்திணறும் ஆசியா
- வானியல் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி [Astronomer, Giovanni Cassini (1625-1712)]
- வினிதா வாழ்க! போலிஸ் அராஜகம் ஒழிக!!
- ராமர் காட்டும் ராமராஜ்யம்
- கடிதங்கள்
- இந்திவாலா மட்டும்தான் இந்தியனா ?
- குறிப்புகள் சில ஆகஸ்ட் 21 2003 – ஈரான்:மதவாதிகளும் தாரளவாதிகளும்-ஜான் ஸ்டின்பெய்க்: ஒரு வித்தியாசமான கோணத்தில்- உயர்கல்வியும் உச
- விடியும்! நாவல் – (10)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபது
- குப்பைகள்
- ஏன் ?
- பாகிஸ்தான் அணுகுண்டு தயாரிக்கும்போது ஏன் அமெரிக்கா அதனைக் கண்டுகொள்ளவில்லை ?
- காமராசர் கலந்து கொண்ட போராட்டங்கள்
- மின்சக்திக்காக மூச்சுத்திணறும் ஆசியா
- பெயர் தெரியாத கவிதை! ?
- ஒரு விரல்
- இபின்னிப் பின்னே எறிந்தாள்!
- இயற்கையே இன்பம்
- தேடுகிறேன்…
- நீ வருவாயென…
- துவாக்குடிக்கு போகும் பஸ்ஸில்
- ‘நானும் ‘ மற்றும் ‘தானும் ‘
- வைரமுத்துக்களின் வானம்
- சாமி- பெரிய சாமி