நம்பிக்கை
ப.வி.ஸ்ரீரங்கன்
மக்களின்
நம்பிக்கை வேர்கள்
அழற்சிக்குள்ளாகிபடி
நலிந்து விடுவதுதாம் வாழ்வென்றாகி
தினமும் விடியலை வெறுத்து
மெளனிக்கும் உயிரும் உளமுமாய் அவர்கள்
எப்போதோ மூட்டிய காளி கோவிற்கற்ப+ர தீபம்
அமிழ்ந்து அணைவதற்குள்
இன்னும் பல சூடப்பொதிகளைக் கேட்டபடி
அதன் நீண்ட ஜுவாலை சூரியனை மறைக்கும் கிரகணமாக
தேசமெங்கும் இருளைப் பரப்பி
வீதிகளில் கிடக்கும் முட்களை மறைத்து உயிர்களின் வலியைக் கேட்கும்!
இப்போ காளியின் இருப்போ
மெளனமான சமாதியாகி
மலினப்பட்ட வதந்திகளோடு
வலிந்துருவாக்கம் ப+ஜைகளின் பின்னே
கோரத்தாண்டவத்தின் குரலிழந்து ஜடமான ரூபநிலையாய்…
பனித்துளியின் இருப்பைவிட
பலவீனமான ஒரு நிலையில் அவள் ஒருபோதுமிருந்ததில்லை
யாரும் அறியா ஒரு பொழுதில்
அவள் கோவிலை விட்டுப் போனதாகவும்
அதன் பின் அவள் வரவேமாட்டாளமெனும் ஒலியும்
ஊர் கூடிக்கதைக்கும்போது வலுவுறும்
ப+சாரிகளால் ஏற்றப்படும் மந்திரங்களோ
அரேபிய ஒட்டகத்தைப்போல்
மக்களின் செவிகளை மரத்துப்போக வைக்கும்
இதன் நீண்டவொலி
ஐரோப்பியப் பக்தர்களின் பிடரியிலுரசி மெல்லிய நம்பிக்கைளையும் விழுங்கிய நிலைவேறு
காளிக்குப் பதிலாக வைரவரை வணங்குவதும்
நம் மக்களின் ஐதீககால வழமைதாம்
எனினும்
அவிழ்த்து விடப்பட்ட பேய்களை ஆட்டிப் படைக்கும் சக்தி
வைரவருக்கு இருப்பதில்லை!
காளியினது கைகளோ
ஆயுதங்களின் இருப்பிடம்
சூலாயுதத்தின் சொந்தக்காரருக்கு
அத்தனை பேய்களும் கட்டுபடாது மக்களின் பக்கம்
குருதிசொட்டும் கோரப் பல்லுடன்
அவசரமாக அடிக்கப்படவேண்டிய உடுக்கோ
பிய்த்தெறியப்பட்டு எங்கோவொரு மூலையில்
உருத்தெரியா வடிவில் தியானித்தபடி
உடுக்கையின் அவசியத்தை அறிந்த பக்தர்கள்
வெளியுலகில் தேடுவதில் வலு தீவிரமாக
அங்கும் ஓரளவு உருத்தெரியாது கிடக்கும் சிலதை
வாக்களித்தபடி தருவதற்கு சம்மதம் கோரி
க(ஜெ)னிவாக் கோவிலுக்கு பிரதட்டை எடுக்கப்படலாம்
இந்நிலையில்
காளியின் பெயரைச்சொல்லி
சேர்த்த காணிக்கைகளில் கட்டப்பட்ட
குடிசைகளில் காளியின் படங்கள் நாக்கைத் தொங்கப் போட்டபடி…
இனி
கையெடுத்துக் கும்பிடுவதுதாம் பாக்கி.
17.02.2005
வ+ப்பெற்றால்>
ஜேர்மனி -ப.வி.ஸ்ரீரங்கன்
srirangan@T-Online.de
- ஐூலியாவின் பார்வையில்….
- து ை ண :4 ( குறுநாவல்)
- பறவைகளும் துப்பாக்கிரவைகளும்
- கலைஞன்.
- தமிழ் சூழலுக்குள் ஆய்வு முறைமைகளும் கருத்துக்கட்டுமானமும்.
- பேஜர்
- தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்)
- தமிழகத்தில் வீங்கலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு குறித்த உடனடி மற்றும் நீண்டநாள் திட்டங்கள்
- தமிழ்ப் படங்களும் ஆங்கிலப் பெயர்களும்
- மேற்கத்திய முற்போக்காளரின் பார்வை குறித்து….:இலியா ட்ரொஜானொவ்
- தண்டனை.
- சன் டிவியின் பக்தி பரவசத் தொடர் – ‘ராஜ ராஜேஸ்வரி ‘!
- சுகிர்தங்கள் புலரும் கனவு
- சிந்திக்க ஒரு நொடி : மனித நேயத்தின் உண்மை பரிமாணம்
- சூடான்: தொடரும் இனப் படுகொலை
- கனவுகள் கொல்லும் காதல்
- அறிவியல் கதை – நாலாவது குழந்தை (மூலம் : நான்ஸி க்ரெஸ்)
- புறாக்களுடன்.
- தஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் (ஆங்கிலம் : கரோலின்ரைட்)
- பார்க்கிறார்கள்
- நம்பிக்கை
- நவீனத்தின் அளவு
- கீதாஞ்சலி (13) முடியவில்லை என் பயணம் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- பெரியபுராணம்- 30
- அச்சமும் அவலமும் அவரவர்க்கு வந்தால்…
- பூதளக் கடற்தட்டுகள் புரண்டெழும் பிறழ்ச்சி! பூகோளக் கடற்தளங்கள் நீட்சி! (Subduction Zones Drift & Sea-Floor Spreading) [2]
- யார் செய்யிறது, யார் பேர் வாங்குறது ? (ஷண்முகத்தின் ‘சுவடுகள் ‘ குறும்படம் பற்றி…)
- எர்னஸ்ட் மெயர் : பூரண வாழ்விற்கோர் அஞ்சலி
- சரித்திரப் பதிவுகள் – 6 : பேய்க்கப்பல்
- வருத்தமுடன் ஓர் கடிதம்
- பெப்ருவரி 10. பேற்றோலட் பிரெக்ட் நினைவுகளில் – –
- கொரில்லாவை முன் வைத்துச் சில கோட்பாட்டுருவாக்கக் கோடுகளும், கீறல்களுமான முகங்களின் கேள்விகளும் -நியாய விசாரிப்புகளும். (கொரில்லா
- கடிதம் பிப்ரவரி 25,2005
- பி.ஏ கிறிஷ்ணனின் புலிநகக்கொன்றை
- ஓவியப் பக்கம் – பதினைந்து – பில் வயோலா – மனிதவாதையும் அதன் கலை வெளிப்பாடுகளும்
- கோட்டல் ருவண்டா
- கடிதம் பிப்ரவரி 25, 2005 – ஜோதிர் லதா கிரிஜா
- சக்தி
- கடிதம் பிப்ரவரி 25,2005
- கடிதம் பிப்ரவரி 25,2005
- ஞானவாணி விரூது 2004
- கோளங்களுக்குப் பெயர் எப்படி சூட்டுகிறார்கள் ?
- கடிதம் – Trouble With Islam புத்தகத்தின் உருது மொழிப் பதிப்பு
- ரெங்கராஜன் நூல் விமரிசனக் கூட்டம் – பிப்ரவரி 27,2005
- அற்றைப் பொழுதுக்கும் அப்பால்
- சிந்திக்க ஒரு நொடி – வாழ்தலும் சாதலும்
- சிந்திக்க ஒரு நொடி : யாதுமாகி நின்றாய் காளி, பூதமைந்தும் ஆனாய்
- குறும்படப்போட்டி
- நான்காவது சர்வதேச தமிழ் குறும்பட, விவரணத் திரைப்பட விழா