பொன் நிறப் பருந்து

This entry is part [part not set] of 44 in the series 20100807_Issue

ப.மதியழகன்



பொன் நிறப் பருந்து
வேடன் அம்பிலிருந்து
தப்பிப் பிழைத்தது
நிறத்தின் காரணமாக
மற்ற குழாம்கள்
அப்பருந்தை ஏற்றுக்கொள்ள
மறுத்தன.
இவைகளின் உதாசீனப்படுத்தலால்
அப்பருந்து
வான்வெளியிலேயே சதா
வட்டமிட்டுக் கொண்டேயிருக்கும்
இரையைத் தேடி கீழே
வருவது கூட
அரிதாகவே நிகழும்
பொன்னை வைத்து
குடும்பத்தின் அந்தஸ்தை
எடை போடும்
மனிதர்கள் கையில்
அப்பருந்து சிக்கியிருந்தால்
என்றோ அணிகலன்களாக மாறி
மங்கையரின் கழுத்தை
அலங்கரித்துக் கொண்டிருக்கும்
அப்பறவையை பற்றி
காட்டுத்தீயாய் செய்தி பரவ
எல்லோரும்
கைகளில் கவண்களோடு
அண்ணாந்து பார்த்தபடி
ஊரில் அலைந்து திரிந்தார்கள்
தங்கப்பறவையை
தனதாக்கிக் கொள்ளும்
நோக்கத்தோடு.

ப.மதியழகன்,

Series Navigation

ப.மதியழகன்

ப.மதியழகன்