சின்னச் சின்ன..

This entry is part [part not set] of 46 in the series 20040701_Issue

பவளமணி பிரகாசம்


சிற்றெறும்பு ஊர்வதினால்
கல்லும் தேய்வதுண்டு
சிறு துளியும் சேர்வதினால்
வெள்ளம் ஆவதுமுண்டு
சிற்றுளியும் செதுக்குவதால்
பாறையும் சிலையாகுமே
சிற்றடியை பதித்துத்தான்
நீள் பயணம் நிகழுமே
சிறு பொறியும் பற்றித்தான்
பெருந்தீயும் மூளுமே
சிறு விதையும் வெடித்துத்தான்
பெருமரமும் வளருமே
சிறு சாவி ஒன்றுதான்
பெரிய கதவை திறக்குமே
சிறிய துவக்கம் ஒன்றிலே
பெரும்புரட்சி வெடிக்குமே
சின்னச் சின்ன யத்தனங்கள்
உறுதியான அடித்தளங்கள்
உன்னதமான மாளிகைகள்
கட்டிடலாம் வாருங்கள்
—-
Pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்