புகழ்ப் பறவை பிடித்த கதை
பா. சத்தியமோகன்
எல்லோரது தலைக்கு மேலும்
உயர உயரப் பறக்கும்
புகழ் எனும் பறவையைப்
பிடிக்க முயல்வோர் பலரை கண்டேன்.
அப் பறவை முழுசும் எப்படியிருக்கும் எவரும் அறிகிலர்
ஆயினும் பிடிக்க முயல்வோர் கூட்டம்
நாளுக்கு நாள் அதிகமாச்சு
தனது கண்ணை அப்பறவையின் விழியில் பொருத்த
அலைகின்றார் ஒரு மனிதர்.
தனது களி மண்ணால் அப்பறவையின் உடலுக்கு
] மேனி செய்கின்றார் இன்னொருவர்.
தனது பெருமை பொறித்த தகரம் கொண்டு
அப்பறவைக்கு இறகு செய்கின்றார் இன்னொருவர்.
உமக்கெல்லாம் ஏது அறிவு ! மூடரே நகரும் ! நகரும் !
எனக் கூறும் இன்னொருவன் பறவை பறக்க
வானில் காற்றை நிரப்பும் பணியை செய்ய முற்ப்பட்டான்.
புகழ் இறகு வீழ்ந்தாலோ வெட்டப்பட்டாலோ
நடந்தாவது செல்லுமே என்று
தப்பு கணக்கிட்ட பிறிதொரு மனிதனோ
பறவையின் கால்கள் தயாரிக்க
மரத்திலிருந்து காய்ந்த குச்சி ஒடித்தான்.
‘எதனையும் கொடுத்தால்தான் பெறலாம் ‘
எனும் ஒருவனோ புகழ்ப்பறவைக்கு
தீனி வைக்க தானிய மணிகளை
காசு பணத்தால் செய்து வைத்தான்.
கண், உடல், இறகு, காற்று , கால்கள் செய்து
புகழ் பெறத் தவிக்கும் திருக்கூட்டத்தில் ஒருவன்
பிறிதொரு காரியம் செய்தான்:
பறவைக்குப் பிடித்த இன்னொரு பறவையைச்
சோடி சேர்த்தால் புகழ்ப் பறவை பிடிக்கலாமெனத் திட்டமிட்டான் !
இறந்துபட்டு
மண் தின்னப் போகும் உடலைச் சுமக்கும்
மாந்தர்கள் போட்டியினை
உச்சியிலிருந்து காணும் பறவை
வாய் திறந்து தனது ரகசியம் கூறிற்று.
காசு மொழி மட்டுமே தெரிந்தவர்களுக்கு
பறவை மொழி எப்படித் தெரியும் என்பதால்
புகழ்ப் பறவை தனது குரலை
மனித குலத்துக்குத் தகுந்தபடி மாற்றி
புரியும் குரலில் பேசிற்று.
மனிதர்களே மனிதர்களே புகழ்ப் பறவை எனைப் பெறவே
கண் செய்தீர் கால்கள் செய்தீர் காற்று செய்தீர் சோடியும் செய்தீர் !
புகழ்ப் பறவை எனைச் செய்ய
உமது உயிர் தரும் ஒருவர்க்கே
காலத்தால் அழியாப் புகழ் உண்டு
சம்மதம்தானா ?! என்றே பறவை கேட்டதும்
அதிர்ந்து போன கூட்டம்
காக்கையாய் பறந்து போச்சு.
pa_sathiyamohan@yahoo.co.in
- புதிதாய் பிறந்து விட்டுப் போகிறேன்.
- நெடுமாறன்
- உலக வங்கி -அதிகாரம், அறிவு-மாற்றுப்பார்வைகள்
- அய்யனார் சாமி
- கண்ப்பதி பப்பா.. மோரியா!!
- தாழம்பூ
- விடியும்! நாவல் – (12)
- முல்லையூர் லிங்கம்
- அவன் அவள் காதல்
- கடிதங்கள்
- ‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ தொகுப்பு – 2
- நினைவினிலே நிறைந்தவள்
- சொர்க்கம்
- இயக்குநர் சங்கர் அவர்களுக்கு! தமிழ்ச்சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பாமரனின் சில கேள்விகள்!
- சூழலைக் கெடுக்கும் குளிர்பான ஆலைகள்
- குளிர்பானங்களும் பூச்சிக்கொல்லிகளும்
- குமரி உலா -1
- வாரபலன் – ஆகஸ்ட் 28, (கியூபா,டேவிட், தமிழ்த்திரையிசை, சென்னை மாநகராட்சி)
- 125 வருட வயதான ஹிண்டு-வுக்கு வாழ்த்துக்கள்
- அளபெடை
- கவிதைப் புனைப்பில் கையாளும் காவிய நயங்கள்
- குறிப்புகள் சில- 4 செப்டம்பர் 2003 மருந்துகளும்,உரிமங்களும்-கலாச்சார விதிவிலக்கும், உலக வர்த்தக அமைப்புப் பேச்சுவார்த்தைகளும்- வ
- பாய்ஸ் படம் பற்றி என் விமர்சனம்
- போலச் செய்தல் ?
- தெலுங்குப் புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
- தமிழக மாணவர்களுக்குக் கணினிக் கல்வி*
- புகழ்ப் பறவை பிடித்த கதை
- ஒலி.
- எல்லா சொகமும் இழக்கலாச்சு
- ஸ்தல புராணம்
- அழியா எழில்
- வைரமுத்துக்களின் வானம்-2
- அரசியல் இருக்கைகள்
- கண்ணே கலைமானே
- தேனீர்க் கோப்பையிலான புயல்
- வெறுக்கிறேன்
- உனக்கும் எனக்கும்:எட்டு கவிதைகள்
- நினைவுச்சின்னம்
- புதுக்கவிதைகள்!
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்திரெண்டு