நானும்…. நீயும்

This entry is part [part not set] of 28 in the series 20030504_Issue

மீ.வசந்தகுமார்,சாத்தூர்


உன்னை விசாரிக்கும்
முகவரி தொலைத்தும்
முகம் மறக்காத…..
என் மூளையின்
மூலையோர நியூரான்கள்.

எனக்கும் தெரியும்
என்னை நினைக்கும்
உன் உணர்வுகளை.
எனக்குள்ள வலி
உனக்கும் இருக்கலாம்
புரிதல் கடினம்.

இது ஈர்ப்பா!! ?
இல்லை நட்பா!! ?
இரண்டுக்கும் பிறந்த காதலா ?
பெயர் தெரியா உறவா ?
………………
எதுவாய் இருந்தாலும்
சொல்ல முடிவது…
உன்னை பிடிக்கும்,
அவ்வளவு தான்.

எத்தனையோ விசயங்கள்
அழுத்தமாய் மனதுக்குள்.
வெடிக்காமல் இருத்தல் நலம்,
அகம் மறைக்கும்
என் முகத்துக்கும்..,
சுகம் விசாரிக்கும்
உன் தொடர்புக்கும்.

எனக்கு மட்டுமே தெரியும்
இந்த நீ ? ? ?
நீதானென்பது…
உனக்கும் தெரியலாம்! ?
பின்னொரு நாள்
என் பேத்திக்கு
பெயரிடும் பொழுது.

meenatchivasanth@rediffmail.com

Series Navigation

மீ.வசந்தகுமார்,சாத்தூர்

மீ.வசந்தகுமார்,சாத்தூர்

நானும் நீயும்.

This entry is part [part not set] of 23 in the series 20020505_Issue

எஸ். வைதேஹி.


உனக்கும் எனக்குமிடையில்
ஓவியங்கள் கூடிய
நிலைக்கண்ணாடி.

அழகற்ற விலங்குகளின்
உருவமேற்று கலகக் காரர்கள் ஆனோம்
சமய சந்தர்ப்பங்களில்.

உன் கோரைப்பற்களின் சிரிப்புக்கிடையிலும்
என் கூரிய நகங்களின் கீறலுக்கு பின்புறமும்
உதிர்ந்துபோன நம் றக்கைகள்.

கனவுகளில் சுய உருவம் பெற்று
காற்றின் சப்தத்தை கிழித்துக் கொண்டிருந்தது
நாம் ரகசியமாய் பேசிய பேச்சுக்கள்.

நகரத் தெரியாத கடிகார முட்களாய்
நாம் நின்று கொண்டு பொழுதுகளை
தள்ளும் போது
யிமை மூடி நாம் தொடங்கிய
கணங்களை நான் எண்ணுகிறேன்.

********

Series Navigation

எஸ். வைதேஹி.

எஸ். வைதேஹி.