….அனந்த்
தாலேலோ செல்லையா
தூக்கம் இன்னும் வல்லியா
தாயி வந்து பாடுறேம்பார் தாலாட்டு – நீயி
தயவுசெஞ்சு நிறுத்திப்போடு வாலாட்டு!
நாயிவரும் குருவிவரும்
நாலுயானை நடந்துவரும்
கதைகதையாச் சொல்லப் போறேன் கேப்பியா ? – இல்லை
கண்ணை மூட மறந்துஎன்னெப் பாப்பியா ?
முன்னெமுன்னே நடந்ததயும்
முடிஞ்சுபோயிக் கடந்ததயும்
சொல்லப்போறேன் சும்மா இருக்கப் போறியா ? – இல்லை
தூக்கச் சொல்லி அடம்பிடிக்கப் போறியா ?
பத்துமாசம் சொமந்தபின்னே
பட்டுப்போல பொறந்தஉன்னெ
அப்பன்காரன் தூங்கப் பண்ணத் தேவலே- எனக்கு
அந்தநாளு உடம்புவலி போவலே!
தூளியிலே முத்தெக் கட்டி
தொட்டிலிலே வைரங் கட்டி
ஊருக்கெல்லாம் ராசா நீன்னு சொல்லுவேன் – அதை
ஒருபயலும் எதுத்துச் சொன்னாக் கொல்லுவேன்!
வாசமொழுகிக் கோலம்போட்டு
வக்கணையா வெளக்கு வைக்க
நாளை எனக்கு வந்திடுவா மருமவ – அவ
நடை அளகைப் பாத்து நீயும் திரியுவே!
வயசு காலம் வருகயிலே
வைத்தியத்துக்கு அலகயிலே
அம்மா பாடின பாட்டைக் கொஞ்சம் நெனச்சுக்கோ! – அவ
அம்பைப் பாத்துக் கையை நல்லாப் புடிச்சுக்கோ!
பாடிக்கிட்டே நானும் போக
பத்துமணியும் ஆயிப் போக
குஞ்சுக்கண்ணெ நீயும் கொஞ்சம் மூடணும் – உன்
குறும்பையெல்லாம் கட்டி வச்சுப் போடணும்!
ஒண்ணேஒண்ணு கண்ணேகண்ணு
ஒனக்கும் எனக்கும் ஒரே மண்ணு!
ஏனுஎன்னெ அப்படிநீ பாக்குறே ? – என்னெ
எடுத்து எங்கோ மானத்திலே தூக்குறே!
தாலேலோ செல்லையா
தூக்கம் இன்னும் வல்லையா ?
தாயி வந்து பாடுறேம்பார் தாலாட்டு – நீயி
தயவுசெஞ்சு நிறுத்திப்போடு வாலாட்டு!
****
குறிப்பு: ‘கானா ‘ பாட்டுகள் பொதுவாகச் சென்னைநகரில் புழங்கும் சொற்களைப் பயன்படுத்தி நல்ல சந்தத்தோடு அமைக்கப்படும். மேலுள்ள பாடல் அதே வகைச் சந்ததத்தில் நாட்டுப்புறச் சொற்களைப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட ‘கிராமத்துக் கானா ‘.
ananth@mcmaster.ca
- கடிதம் 4, மார்ச் 2004
- எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி!
- இலக்கியத்தில் வாழ்வின் தரிசனங்கள் :எனக்குப் பிடித்த கதைகள் -வாசிப்பனுவபம்
- முயன்று வரலாற்றைப் படித்தல் வேண்டும்
- யுகபாரதியின் ‘தெப்பக்கட்டை ‘
- Frontend – Backend
- கடிதம் – மார்ச் 3,2004
- கடிதம் – மார்ச் 4,2004 – இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும் – இன்னும் சில சந்தேகங்கள்
- கடிதம் – மார்ச் 4,2004
- கடிதம் – மார்ச் 4,2004
- கடிதம் மார்ச் 4,2004
- திசைகள் மின்னிதழ் அரும்பு சொல் வெளிஇணைந்து வழங்கும்
- மறு வாசிப்பில் திருப்புகழ்
- நிராகரிப்பு
- அருகிருக்கும் மெளனம்
- பாசமே நீ எங்கே ?
- பூ வண்ணம்
- என்னால் முடியும்
- எல்லாம் சுகமே..
- சூட்சும சொப்னம்
- முடிவுக்காலமே வைட்டமின்
- வேண்டாம்.. வேண்டாம்..ஆனால்..
- ‘கானா ‘ தாலாட்டு
- சிறகுகள்
- கண்ணகி கதை இலக்கியமா ?
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தெட்டு
- பாதை எங்கே ?
- வாப்பாக்காக…
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -15)
- விடியும்!- நாவல் – (38)
- நீலக்கடல் (தொடர்) – அத்தியாயம் 9
- முதன் முதலாய்
- கோஷா முறை
- பாஜக ஒளிர்கிறதா ?
- வாரபலன் – மார்ச் 4,2004 – காலங்கள் தோறும் – வல்லம்பர் சங்கம் – வந்ததா வரவில்லையா ? – கணையாழித் தொகுதி – ரங்கா டியர்
- பிளாஸ்டிக்
- நாடாளுமன்றத் தேர்தல் 2004 – ஒரு கண்ணோட்டம் – 2
- புத்த களமா ? யுத்த களமா ?
- திரிசங்கு சொர்க்கம்
- நெருடல்களற்ற சுகம்
- ஐம்பூதங்களின் அழுகுரல்
- கரும்பும் கசந்த கதை
- அன்னை
- தனிமை விரும்பிகள் ரேடியோ அலைவரிசை (RFID) தொழில்நுட்பத்ததை ஏன் எதிர்க்கிறார்கள் ?
- பூகோளச் சுழற்சியால் அசுர ஹரிக்கேன்களை உருவாக்கும் கொரியோலிஸ் விளைவு (Coriolis Effect)
- சுற்றுச்சூழல் அழிவால் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பவளப்பாறைகள் அழிவை எதிர்நோக்குகின்றன.