செங்காளி
யானைகட்டிப் போரடித்த அந்தநாள் மறைந்துபோய்
பானையில் சோறின்றி பரிதவிக்கும் மக்களெல்லாம்
கரும்புத்தோட் டம்பற்றி கண்கலங்கி சொல்லிவிடும்
கரும்பும் கசக்குமெனும் கதையைத்தான் கேட்பீரே!
கரும்பு பயிரிடுவோர், கவனமாய்த் தோட்டத்தில்
அரும்பாடு பட்டு அயராது உழைத்திடுவோர்,
ஆலைகளை நடத்திடுவோர், அவைகளிலே வேலைசெய்வோர்,
ஆளுகின்ற அரசாங்கம் கியோரின் கதையிதுவே.
விளைந்திட்ட பயிரைத்தான் வெட்டிவரவா என்றுகேட்டால்
ஆலையை நடத்திடுவோர் அடுத்தமாதம் வரச்சொல்வார்
வெட்டாமல் விட்டதினால் வளர்ந்த பயிரங்கே
தட்டாக மாறித்தான் தரமிழந்து போகவைப்பார்.
தக்கபடி வெட்டியே தரமாகக் கொடுத்திடினும்
அக்கணமே நசுக்கி யதன்சாற்றைப் பிழியாமல்
தணியார் ஆலையிலே தாழ்த்திடுவார் காலந்தானே
மணிக்கணக்கில் நாட்கணக்கில் மறுத்திடுவார் கசக்கிடவே.
கொண்டுவந்த கரும்புக்குக் கொடுத்திடுவீர் விலையென்றால்
ஆண்டு முடியும்வரை அலைக்கழிப்பார் இழுத்தடிப்பார்
கொடுக்கும் பணத்தையும் குறைத்திடுவார், இதையெல்லாம்
தடுத்திடுவார் யாருமில்லை தண்டனையும் அளிப்பதில்லை.
கூட்டுறவு ஆலைகளில் குறைபாடு மிகுந்திடவே
பூட்டிவிட்டு அவைகளைத்தான் புழுதியண்டச் செய்திடுவார்
லைகளைநம் பியிருந்த அத்தனைத் தொழிலாளரும்
வேலையின்று கூலியின்று வேதனையால் வாடவைப்பார்.
சாராயக் கடைகளையே சந்து பொந்தெல்லாம்
தாராளமாய்த் திறந்திருக்கும் தமிழ்நாட்டு அரசாங்கம்
மூடியிருக்கும் ஆலைகளை முயன்று திறக்கவில்லை
வாடியிருக்கும் தொழிலாளர் வாழ்விலும் மாற்றமில்லை.
கரும்புக்கு இட்டவரியைக் கவனமாய்க் கட்டிடுவீர்
திரும்பக் கொடுத்திடுவோம் தவறாமல் ‘உதவி’யாக
என்றுசொன்ன அரசாங்கம் எதுவும் கொடுக்கவில்லை
இன்றளவும் வரியை எள்ளளவும் குறைக்கவில்லை.
வெளிநாட்டுச் சர்க்கரையை வெகுவாக வரவிட்டு
உள்நாட்டுச் சர்க்கரையின் உற்பத்தியை மடக்கிவிட
சர்க்கரைத் தொழில்தானே சகதியில் வீழ்ந்துவிட
அக்கறை கொள்ளவில்லை அரசாங்கம் இதைப்பற்றி.
ஆலைகளைத் திறக்கவில்லை, இறக்குமதி நிற்கவில்லை,
விலையும் மாறவில்லை, வரியும் குறையவில்லை,
வேறுதொழிலும் தெரியவில்லை, வாழ்க்கையிலும் மகிழ்ச்சியில்லை
கரும்பும் கசக்குமென்ற கதையும் பொய்யில்லை!
—-
natesasabapathy@yahoo.com
- கடிதம் 4, மார்ச் 2004
- எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி!
- இலக்கியத்தில் வாழ்வின் தரிசனங்கள் :எனக்குப் பிடித்த கதைகள் -வாசிப்பனுவபம்
- முயன்று வரலாற்றைப் படித்தல் வேண்டும்
- யுகபாரதியின் ‘தெப்பக்கட்டை ‘
- Frontend – Backend
- கடிதம் – மார்ச் 3,2004
- கடிதம் – மார்ச் 4,2004 – இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும் – இன்னும் சில சந்தேகங்கள்
- கடிதம் – மார்ச் 4,2004
- கடிதம் – மார்ச் 4,2004
- கடிதம் மார்ச் 4,2004
- திசைகள் மின்னிதழ் அரும்பு சொல் வெளிஇணைந்து வழங்கும்
- மறு வாசிப்பில் திருப்புகழ்
- நிராகரிப்பு
- அருகிருக்கும் மெளனம்
- பாசமே நீ எங்கே ?
- பூ வண்ணம்
- என்னால் முடியும்
- எல்லாம் சுகமே..
- சூட்சும சொப்னம்
- முடிவுக்காலமே வைட்டமின்
- வேண்டாம்.. வேண்டாம்..ஆனால்..
- ‘கானா ‘ தாலாட்டு
- சிறகுகள்
- கண்ணகி கதை இலக்கியமா ?
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தெட்டு
- பாதை எங்கே ?
- வாப்பாக்காக…
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -15)
- விடியும்!- நாவல் – (38)
- நீலக்கடல் (தொடர்) – அத்தியாயம் 9
- முதன் முதலாய்
- கோஷா முறை
- பாஜக ஒளிர்கிறதா ?
- வாரபலன் – மார்ச் 4,2004 – காலங்கள் தோறும் – வல்லம்பர் சங்கம் – வந்ததா வரவில்லையா ? – கணையாழித் தொகுதி – ரங்கா டியர்
- பிளாஸ்டிக்
- நாடாளுமன்றத் தேர்தல் 2004 – ஒரு கண்ணோட்டம் – 2
- புத்த களமா ? யுத்த களமா ?
- திரிசங்கு சொர்க்கம்
- நெருடல்களற்ற சுகம்
- ஐம்பூதங்களின் அழுகுரல்
- கரும்பும் கசந்த கதை
- அன்னை
- தனிமை விரும்பிகள் ரேடியோ அலைவரிசை (RFID) தொழில்நுட்பத்ததை ஏன் எதிர்க்கிறார்கள் ?
- பூகோளச் சுழற்சியால் அசுர ஹரிக்கேன்களை உருவாக்கும் கொரியோலிஸ் விளைவு (Coriolis Effect)
- சுற்றுச்சூழல் அழிவால் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பவளப்பாறைகள் அழிவை எதிர்நோக்குகின்றன.