அனந்த்
ஓடும் நதிமகளும் – அவள்
…. உள்ளக் களிப்பினில் துள்ளிக் குதித்தங்கு
ஆடும் புனல்பெருக்கும் – அதன்
…. ஆடலில் சாய்ந்திடும் வாடா மலர்களைத்
தேடி மதுவருந்தும் – வண்டுச்
…. சேர்க்கையும் பக்கலில் ஆர்த்துத்தன் பேடையை
நாடும் பறவைகளும் – நம்முள்
…. நாளும் எழுதிடும் பாடல் குவியலை
ஏட்டினில் வார்த்திடத்தான் – இங்கு
…. எத்தனை ஆயிரம் எத்தர் கவிஞர்கள்
போட்டிதாம் போட்டிருப்பார்! – ஒரு
… போதா கிலும்அவர் போராடி ஓலையில்
தீட்டிய பாடல்களைத் – தாங்கள்
…. தேர்ந்த தலைப்பினைச் சார்ந்த எழில்முன்னே
காட்டத் துணிந்திருந்தால் – அவை
….கைகொட்டி எள்ளிட மெய்பொத்தி நாணுவர்!
மெல்லிளம் மங்கையரின் – மல்லி
….மேனி அழகினில் மானின் விழியினில்
சொல்லெது மேமொழியாக் – கவிச்
…. சித்திரக் காப்பகம் ஒத்திடும் பாலரில்
நல்லம னம்படைத்த – அன்பு
…. நண்பரில் கண்படும் நற்கவி ஓர்ந்திட
வல்லமை உள்ளவர்கள் – ஒரு
…. வார்த்தையைத் தேடி மயங்குதல் வேண்டுமோ ?
எழுதாக் கவிதையென – இன்னும்
…. எத்தனை யோபல முத்துக்கள் யாவையும்
முழுதும் தருவதற்கு – வெறும்
…. மூளைக்கே ஆகுமோ ? மூலைமு டுக்கெலாம்
வழியும் உணர்வுகளை – உள்ளம்
… வனைக்கும் விதத்தை நினைத்துப்பின் யாவுமே
அழிந்த நிலையினிலே – மோன
…. ஆன்மக் கவிதையின் மேன்மை தெரிந்திடும்!
——————————————————————————————————————
ananth@mcmaster.ca
- கலைஞருக்குக் கடிதம் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
- எனக்குப் பிடித்த கதைகள் – 92 -மனிதர்களை மதிப்பிடும் கலை -கல்கியின் ‘கேதாரியின் தாயார் ‘
- பூரணி,க்ருஷாங்கினி,நீரஜா நாகராஜன் :மூன்று தலைமுறைப் பெண்கள் படைப்பு வெளியீட்டு நிகழ்ச்சி
- கதைமொழியும் மொழிபெயர்ப்பும்- (மெளனப்பனி ரகசியப்பனி-மொழிபெயர்ப்புக் கதைத்தொகுதி அறிமுகம்)
- மனத்தின் மறுபக்கம்-த்வீபா -கன்னடப்படத்தை முன்வைத்துச் சில குறிப்புகள்
- கனவும் குரூர யதார்த்தமும் – ஜெயமோகனின் புதிய நாவல் ‘காடு ‘
- மாலதி மைத்ரியின் ‘சங்கராபரணி ‘ கவிதைகள் – ஒரு வாசக ரசனைப் பதிவு
- பூரணி அம்மாளும் இண்டெர்நெட்டும்
- நாற்பது வருட தாபம்
- சிறந்த குறும்படங்களுக்குப் பரிசு-சக்தி 2003 இலக்கிய விருது
- ஸ்தலபுரம்
- டாக்டர் மொஹம்மது மொஸாடெக்- ஈரானிய தேசிய இயக்கத்தின் தலைவர்
- கடவுள் போருக்குப் போகும்போது
- கலைச்சொற்கள்,இன்றைய தமிழ்- சில கேள்விகளும்,குறிப்புகளும்
- இறைவா..எனக்கொன்றும் புரியவில்லை..!
- நிழல்கள்.
- நதி
- எனக்கு வேண்டும் வரம்
- இரயில் நிறுத்தமும், கடைசி இருக்கையும்.
- பல சமயம் நம் வீடு
- வரம் கொடு தாயே!..
- ‘எனக்குள் இப்படியொரு கிராமத்தானா ? ‘ – ‘ஸண்டியர் ‘ கமல்
- விளக்கு விருது – சி மணிக்கு வழங்கும் நிகழ்ச்சி
- சி. மணி பற்றிய சில கனிந்த நினைவுகள்
- மானிடக் கவியான பாரதி ஒரு மகாகவியே [1882-1921]
- வாரபலன் – ஆலப்புழைக்கருகில் – பணிமுடக்கு – தமிழை இசைக்க மறந்த தமிழ்நாடு
- விடியும்!(நாவல் – 29))
- பிச்சிப்பூ
- ஆசாரப் பூசைப் பெட்டி
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -5)
- எமன் – அக்காள்- கழுதை
- நீலக்கடல் – புதினம் ( தொடர் ) – முன்னுரை
- ‘காய்கறிக்காரி ‘(என்னுடைய அம்மா அவர்களின் நினைவாக)
- உத்தரவிடு பணிகிறேன்
- பாரம்பரிய இந்தியக் கல்வி: 19-ம் நூற்றாண்டில்
- கடிதங்கள் – 01 ஜனவரி,2004
- வலுக்கும் எதிர்ப்பு
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தொன்பது
- முன்னேற்றமா! சீரழிவா!!
- ‘ஆர்.எஸ்.எஸ் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது ‘
- புத்தாண்டே வருகவே
- மரக்கொலைகள்
- அன்பே மருந்தானால்…
- அன்புடன் இதயம் – 1
- எழுதாக் கவிதை
- குப்பைத்தொட்டி கவிதைகள்
- காவு , மெளனத்தின் குரல் , நிலைப்பாடு
- அடங்கோ… அடங்கு!
- கலைச்சொற்கள்,இன்றைய தமிழ்- சில கேள்விகளும்,குறிப்புகளும்