எஸ்ஸார்சி
அசுவினிகளே உங்கள் தேரிலே
மூன்று பீடம்
பொன்வடம் கொண்டு
இயங்கும் தேர் உமது
விண்ணுக்கும் மண்ணுக்கும்
அழகு தருவது
உமது தேர்
நீரே வானத்திலிருந்து
மழை நீர்க் கொணர்ந்திட
மநு நிலம் உழுதான்
அறுவடை ஆனது மண்ணில் ( ரிக் 8/22)
இந்திரா வருணர்களே
செடி கொடிகளும்
தண்ணீ£ரும்
அவுஷதங்கள்
ஆற்றலின் உறைவிடம்
ஆக பகையற்றோர் நீவிர்
யாம் சொல்வது மெய்
ஏழு குரல்கள் இணைந்து
இனிமை பிரவாகிக்கின்றது
நீரின் அதிபதி நீவிர்
துதிக்கும் எம்மைக்
காப்பது நும் கடன்
நீவிரே ஆதியில்
முனிகட்கு மனனம்
மொழி யொடு அறிதிறன்
சுருதி யின் சூக்குமம்
வேள்வி செய் இடங்கள்
அளித்தவை அறிந்தனம்
ஈகை நடத்துவோர்
மமதை தொலைத்து
மகிழ் மனம் பெறுக
செல்வமே கூட்டுக
எமக்கு வலிமை வளமை
மக்கட்பேறுடன்
நீண்ட ஆயுள் தாரும் ( ரிக் / 59-11)
அக்கினியே வருக
கவிஞன் நீ
சுத்திகரிப்போன் நீ
முனிபுங்கவன் நீ
முன்னோடி நீ
இன்பம் தருவோன் நீ
ஈந்து காப்போன் நீ
ஒளி வழங்கி நீ
வேள்வியில் திதிக்கப்படுவோன் நீ
திறமையோர் என்றும் போற்றும் நீ ( ரிக் 8/60 )
இந்திரனே நின் வீரச்செயல்கள்
பேசப்படுகின்றன
பகைவனின் பிறப்புருப்பை
வச்சிராயுதத்தால் துணித்தவன் நீ
தேவர்கள் வாக்தேவியைத்தந்தார்கள்
பசுக்கள் அவ் வாக்தேவியை
அம்மா வென்று அழைக்கின்றன
பசுக்கள் எம் பசி தீர்ப்பவை
விஷ்ணுவே என் பிரியனே
பரந்த நடை பயின்று வாரும்
விண்ணகமே மின்னலுக்கிங்குத்
தகு இடம் தாரும்
நீர் சிறைபிடிக்கும் விருத்திரனை ஒடுக்கி
நதிகளை விடுதலை செய்வோம்
செம்மையாய்ப்பாய்க அவை ப்பெருகியே ( ரிக் 8/100)
பசு ருத்திரர்களின் தாய்
வசுக்களின் செல்வி
ஆதித்யனின் சோதரி
அமிருதத்தின் நாபி
பாவமற்றதே பசு
அறிவுள்ளோர் பசுவை இம்சிக்காதீர் ( ரிக் 8/101 )
ஆரிய வளமைக்கு
ஆதாரம் அக்கினி
கடமை முடிப்போரைக்கண்டு
சனங்கள் அஞ்சுகிறார்கள்
ஆய்ந்திடில் ஆயிரம் அள்ளித்தரும்
அக்கினியை வழுத்துவோம். ( ரிக் 8/103)
————————————————————————————–
- வார்த்தை அக்டோபர் 2009 இதழில்…
- முள்பாதை (அத்யாயம் 1 – தொடர்ச்சி)
- ‘இலக்கியப்பூக்கள்’ நூல் அறிமுக விழா
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! சனிக்கோளின் மிகப் பெரிய வளையம் கண்டுபிடிப்பு ! (கட்டுரை: 65)
- சாகித்திய அகாதமி: தமிழ், கன்னட எழுத்தாளர்கள் சந்திப்பு
- சுய விமர்சனம்: என் படைப்புகளும், நானும்! – 1
- சுய விமர்சனம்: என் படைப்புகளும், நானும்! – 2
- கடவுள் கொல்ல பார்த்தார் – மஹாத்மன் சிறுகதை விமர்சனம்- பாகம் 2
- அறிவியலும் அரையவியலும் – 3
- ‘அலைவும் உலைவும்’ நூல் வெளியீடு
- ஹெண்டர்சன் சமூக மன்றத்தின் இந்திய நற்பணிக் குழு வழங்கும் 43 வது பட்டிமன்றம்
- காதல் சாத்தானின் முகவரி
- குயிலோசை
- நண்பனின் காதலி
- கையசைப்பு
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << நேற்றைய கூக்குரல் >> கவிதை -17
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 56 << கடற் கன்னி >>
- யதார்த்தங்கள்
- மழைக்காலங்களில்…
- …கதைசொல்லும் தீபாவளி
- பாரதிதாசனின் கல்விச் சிந்தனைகள்
- அறிவியல் புனை கதை 10: இனியொரு ‘விதி’ செய்வோம்
- முள்பாதை – அத்தியாயம் 1 (தெலுங்கில் புகழ்பெற்ற நாவல்)
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -3
- அன்பு மகள்
- அன்பு மகள் (தொடர்ச்சி)
- விருதுகளும் அதன் அரசியலும்
- புகழ் எனும் போதை
- வஹி பற்றிய வாசிப்பின் அரசியல்
- நிலாச்சோறு!
- பனித்துளிகள்
- படுக்கை குறிப்புகள் – 1
- பதட்டம்
- தீபாவளி 2009
- காவல் நாகம்
- வேத வனம் விருட்சம் -55
- கனவுகள் சுமக்கும் கருவறை
- தினம் தினம் தீபாவளி