ருத்ரா.
(epsi_van@hotmail.com)
ஒரு கோடு.
அதன் தலையில் இன்னொரு கோடு.
நீண்ட கூட்டல் குறி.
செங்குத்தாய்
நிமிர்ந்து விறைத்து..
கோட்டை
ஒட்டிக்கோண்டு
இரு வட்டக்கோளங்கள்.
அப்புறம்
அதைச்சுற்றி
குறுக்கும் நெடுக்குமாய்
சின்ன வட்டங்கள்
பெரிய வட்டங்கள்.
மறைவாய் புதைந்தும்
புதையாமலும்
தாந்திரீகமாய்
ஒரு முக்கோணம்
மொத்தத்தில்
ஒரு சிலந்திப்பூச்சி
புருசு மயிர்கள்
வழியாய்
இரத்தச்சிவப்பிலும்
வெறிபிடித்து
அப்பிய
மஞ்சள் குங்கும பச்சை நீல
குழம்பிலும்
மலங்கழித்திருந்தது.
புடைத்தும்
குழிந்தும்
முப்பரிமாண முயக்கம்
அந்த
படுதாவில்
படுத்துக்கிடந்தது.
முதுகுத்தண்டு நியூரான்களில்
முலைப்பால்
குடித்துகிடந்த
டி.என்.ஏக்களும்
ஆர்.என்.ஏக்களும்
நம் சதையை
பிசைந்து பிசைந்து
நம் உயிரின் ஆசையை
அல்லது
நம் ஆசைகளின் உயிரை
அங்கே
பிதுங்கி வழியச்செய்தது.
தலைப்பு
‘உயிர்த்தெழுதல் ‘
….
….
எல்லோரும் கைதட்டி ரசித்தார்கள்.
ஏலம் துவங்கியது.
‘ஆயிரம் டாலர் ‘
யாரோ துவக்கினார்கள்.
தேவகுமாரனின் மார்பில்
முதல் ஆணி
இறங்கியது.
====ருத்ரா.
6th march 2004
- டாலர்க் கனவுகள்
- குதிரைவால் மரம்
- நந்திக் கலம்பகம்.
- சரியும் மணல் மடிப்புகள் நடுவே
- கவிதை உருவான கதை-2
- ஜெய மோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரல் ‘ : ஓர் அலசல்
- மரபும் புதிதும் : இரு கவிதைகள்
- வெற்றி
- அனுபவம்
- டான் கில்மோர்
- காசு
- காயம்
- உணவுச் சங்கிலிகள்
- சத்தியின் கவிக்கட்டு 3
- புத்தாண்டுப் பொன்மகளே புது அழகாய் நீவருவாய்!
- பரம்பொருள்
- அன்புடன் இதயம் – 14 – காற்று
- ஓவியம்
- கடிதம் – ஏப்ரல் 15, 2004
- மலர் வசந்தம் – நிழற்படத் தொகுப்பு
- தேவலோகத்தில் ஒரு கடிதப் போக்குவரத்து
- ஆருயிர்கெல்லாம் ‘வம்பு ‘ செய்யல் வேண்டும்!
- எந்த செய்தி – யார் பிரசுரித்தது ? தினகரன் – தினத்தந்தி தினமலர்
- உயிர்மைக்கு ஒரு கடிதம்
- கடிதம் – ஏப்ரல் 15,2004
- தமிழ்ப் படைப்பிலக்கியத் தடத்தில் மா அரங்கநாதன் படைப்புகள்
- ஏசுநாதர் வாழ்க்கை : நடன நாடகம் – ஏப்ரல் 18 , 2004
- துரோகர்(துரோணர்)
- காலம் சஞ்சிகையின் இலக்கியப் பொழுது
- 2004-ஆம் ஆண்டிற்கான இலக்கியச் சிற்பி விருது
- கடிதங்கள் ஏப்ரல் 15,2004
- கடிதம் – ஏப்ரல் 25 – சுமதி ரூபனின் ‘வடு ‘
- குளிர்பானங்கள்
- சொற்புணர்ச்சி விளக்கச்சொற்கள்
- என்னோடு என் கவிதை
- மலைப்படுகடாம். ஒரு சித்திரம்
- என்னைப் பெத்த அம்மாாாாஆ…
- முரண்பாடுகளின் முழுமை
- இந்துத்துவம் = சர்வ மத சமத்துவ சம்மதத்துவம்
- இது எப்படி இருக்கு…. ?
- நிழல் யுத்தமும், நிஜ யுத்தமும்
- தயானந்த சரஸ்வதி சொல்லும் கடமை என்ன ?
- கல்யாண ரத்து தீர்மானம்
- காடன்விளி
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 1
- விளிம்பு
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் -15
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -20)
- புழுத் துளைகள் (குறுநாவல் – 4)
- யூசுஃபும் கண்ணாடியும் -கதை — 04
- திரேசா
- உலக விந்தைகளில் ஒப்பற்ற பொறியியல் உன்னதமான பனாமா கால்வாய் [Panama Canal (1870-1914) The Greatest Engineering Marvel]
- மைக்ரோசாஃப்ட் – வின்டோஸ் சமாச்சாரங்கள்
- மன்னித்து விடலாம்….
- வேர்கள்
- என் பிரிய தோழி
- தமிழவன் கவிதைகள்-ஒன்று
- கவிதைகள்
- உயிர் தொலைத்தல்
- வசந்தத்தின் திரட்சி
- தீர்மானிக்காதவரை.. .. ..
- பகல் மிருகம்
- தொழில்நுட்பச் செய்திகள் ஏப்ரல் 15, 2004
- அவதாரம்
- அம்மணம்
- என்னைப் பொறுத்தவரை
- வாழும் வகை
- ஓட்டப்பந்தயம்
- அளவுகோல்
- வா
- ஜங் அவுர் அமான்!