நினைக்க இனிக்கும் நெடுநல்வாடை – அறிமுகமும் ஆய்வுமாயமைந்த செய்யுள் வடிவிலான கட்டுரை…தொடர்ச்சி
தமிழநம்பி
நெடுஞ்செழியன் பாடியுளான் நிகழ்போரில் வெற்றிகொள
நினைத்தி ருப்பான்!
நெடும்பிரிவில் மன்னவனை நினைத்தரசி கலங்கிடுவாள்
நெஞ்சம் நொய்வாள்!
படுக்கையுறு விழுப்புண்ணர் பார்க்கஅர சன்செல்வான்
படர்த ணிக்க!
கடுந்துன்பில் தலைவியவள் கனிவுரைக்கும் ஆற்றாதாள்
கலக்கம் மாறாள்!
செந்தமிழின் இலக்கியங்கள் செழியன்பு செருமறத்தின்
சீர்மை சொல்லும்!
சிந்தையுறு நுண்ணுட்பச் செய்திகளைத் தெரிவிக்கும்
தெருட்சி மாட்சி!
இந்தநெடு நல்வாடை இன்னன்பும் மறச்சிறப்பும்
எடுப்பாய்க் கூறி
தந்தவகை அன்புமறம் தமிழினகப் புறச்சிறப்பை
தகவி ளக்கும்!
பாட்டு நலம்
பாட்டுநலம் அனைத்தையுமே பாராட்டல் எளிதன்று
பலநி கழ்வை
ஏட்டினிலே இயல்பின்பம் எள்ளளவும் மாறாதே
எழுதி யுள்ளார்!
காட்டும்வா னியற்சிறப்பும் கணியறிவும் ஓவியமும்
கனியத் தந்தே
தீட்டியுள அழகியற்கை தேன்சுவையாய் உயிரியக்கம்
திகட்டா இன்பம்!
சிறப்புரைக்கும் ‘மருவினிய கோலநெடு நல்வாடை’
செப்பக் கூற்று!
திறஞ்சான்ற பொருள்வளமும் தேர்ந்தெடுத்த உவமைகளும்
செஞ்சொற் சீரும்
மறஞ்சான்ற மன்னவனின் மதித்தொழுகும் பொதுவுணர்வும்
வழங்கும் பாட்டு
விறலார்ந்த நாகரிகம் விளங்கவுரை நக்கீரர்
வெற்றிப் பாட்டாம்!
——————————————————————-
- மாற்றம் தானம்
- மதிப்புரை: ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்
- தட்டான்
- கேள்விகள்
- விதுரநீதி விளக்கங்கள் முதல் பகுதி:
- பேனா
- உப்புமா – செய்யாதது
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -12
- ஐந்தாவது சுவர்
- அறன்வலி உரைத்தல்
- தேனீச்சை
- முஹம்மது யூனூஸின் எனது பர்மா குறிப்புகள்-புத்தக மதிப்புரை
- சாக்பீஸ் சாம்பலில்.. கவிதைத் தொகுதி எனது பார்வையில்..
- கோவில் மிருகம்-விநாயகமுருகன் கவிதைத் தொகுப்பு-என் பார்வையில்..
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம்
- பரிதி மண்டலத்துக்கு அப்பால் பயணம் செய்யும் எதிர்கால அசுர விண்கப்பல்கள் (The Superfast Interstellar Spaceships) (கட்டுரை -2)
- குறும்பாக்கள் ஐந்து
- கோநா கவிதைகள்
- ராஜா கவிதைகள்
- ரயில் பெட்டியும், சில சில்லறைகளும்..
- ‘முன்ஷி’ ப்ரேம்ச்ந்த்- இலக்கிய விடிவெள்ளி
- நினைக்க இனிக்கும் நெடுநல்வாடை – அறிமுகமும் ஆய்வுமாயமைந்த செய்யுள் வடிவிலான கட்டுரை…தொடர்ச்சி
- அந்த மீன்கள்
- சாரல் இலக்கிய விருது
- மீனாள் பதிப்பகம் வெளியிட்ட நூல் வெளியீட்டு விழா
- உறைந்த கணங்கள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதன் விதிக்குப் பலியானவர் ! (கவிதை -39 பாகம் -2)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) எனது தீய பழக்கம் (கவிதை -29 பாகம் -1)
- என் அன்னை கமலாவுக்கு
- அடிமை நாச்சியார்
- கணினி மேகம் 2
- வெ.சா.வுக்கு என் ‘தன்னிலை விளக்கம்‘ “டென்னிஸ் இரட்டையர் ஆட்டம்“
- பேரரசன் பார்த்திருக்கிறான்
- கரையில்லா ஓடங்கள்
- இனிமையானவளே!
- நெருப்பு மலர்
- விடுமுறைப் பகற்பொழுதுகள்
- பொய்யின் நிறம்..
- பொங்கட்டும் புதுவாழ்வு
- 4 கவிதைகள்.
- பறக்க எத்தனிக்காத பறவை
- கலையும் கனவு
- பொங்கலோ பொங்கல்
- கூடு