கனவுகள் சுமக்கும் கருவறை

This entry is part [part not set] of 38 in the series 20091015_Issue

காயத்ரி மகாதேவன்…


உயிர் ஜனித்த போதே
கருவறை காணாது
கனவுகள் கண்டவன் நான்.
கனவுத் தொட்டிலாகவே இருந்தது
என் தாயின் கருவறை.
துடிக்கும் எனக்கான இதயத்தை
முதலில் கண்டது விழி.
பிடித்திட எத்தனிக்கையில்
தடுத்துக்கொண்டே இருந்தன
பிணைக்கப்பட்ட என் தொப்புள்கொடி.
அறுத்திட முனைகையில்
கை சுருங்கி ரேகைகள் பதிந்து போயின.
அவள் விரல் தடவிய போது
முத்தத்திற்காய் முந்தியது உதடுகள்.
அனேக கனவுகள் கலைந்தே போயிருந்தது
கருவறை என்னை புறந்தள்ளியதும்.
என்னுள் முளைத்த காதலில்
மீண்டும் கனவுகள் சுமக்கும் கருவறை கிடைத்தது
காதலின் மார்புக்குள் என்னை புதைத்தபோது.

Series Navigation

காயத்ரி மகாதேவன்

காயத்ரி மகாதேவன்