அலறியின் மூன்று கவிதைகள்

This entry is part [part not set] of 43 in the series 20051028_Issue

அலறி


01. பூத்து பின் உதிர்ந்து

சக்கடிஸ. புக்கடிஸ..
சக்கடிஸ. புக்கடிஸ..
கடைசித் தறியின் குரலையும்
நெருப்புத் தின்றது
கடைசிசேணியனை கடன் கவ்வியது

ஊரெல்லாம் ஒரு காலம்
காய்த்து பூத்து குலுங்கிய மரங்கள்
தறிகள்
திடிரென பட்டுப் போனது

சமுத்திரம் வற்றி
கப்பல்கள் கவிழ்ந்தது போல
தறிமாலை இழுத்து மூட
சிலந்தி வலை பின்னியது
பஞ்சம் படை கொண்டது
சறுக்கால் நிலையடி அடுப்புக்கு இரையானது

கொள்ளிக்காரனை சில காலம் தேடவில்லை
படஅலகும் இருப்பிடப்பலகையும்
மாதக்கணக்கில் எாித்தும்
மலையாய் குவிந்தது

அண்டைநாட்டுச் சரக்கு
சந்தையில் மீனாகி மலிந்ததும் உண்மைதான்
முற்றத்து மல்லிகையை நாமும் முகரவில்லை

கச்சை துண்டாக கட்டியதும்
பிள்ளையின் கக்கா துடைக்கவும்
இறக்குமதி சாறன்தான்
பெருநாள்
சித்திரை பொங்கல் பண்டிகை நாளிலும்
இடுப்பில் வெளிநாட்டழகி

நெசவுத்தொழில் ஆறாய்த் தூர்ந்தது
மேட்டு வட்டை காணியை உப்பு தின்றது
கடலை மட்டும் ஆண்டவன் மூடவில்லை
பள்ளிக்கூடங்கள் திறந்து கிடப்பதால்
ஊாின் உசிர் இன்னும் உசும்புது

ஏன்றாலும்
காற்றோடும் மழையோடும் மூச்சோடும்
கலந்து
சக்கடிஸ. புக்கடிஸ..
சக்கடிஸ. புக்கடிஸ.
தறிகள் பாடும் சப்தம்
கேட்க வேண்டும்
உயிர்த்து
கேட்க வேண்டும்

02) சாணம் புதைந்த நிலத்தில்

மாடுகள் மேற்கில்
அசைபோட்டு நடந்தன
எங்கள் மாடுகள்

அந்திக்கு சற்று அப்பால்
சாிந்து கிடக்குது சூாியன்

மென்பச்சை கம்பளி போர்த்தி
நீண்டு படுக்குது
கதிர் பறிந்த வயல்வெளி
மூத்த வாப்பா முங்கி குளி;க்கும்
வாய்க்கால்
இடந்து நகா;கிறது
அருகு இரண்டும் அறுகம் புற்கள்

மேய்ந்த மாடுகள்
விறைத்துப் பால்தேங்கி நின்றன
அப்பக்கமாக

புல்லும் புதரும் மூடுண்டு
காடு பத்தி அடர்ந்து
ஏக்கா; கணக்கில்
எங்கள் வயற்காணிகள்;

பூங்குயிலின் பாடல்
காட்டிடை மறைந்து கேட்குது
மூத்தவாப்பா சிந்திய வியர்வை
சேற்றில் மண்டி மணக்குது.

பற்றைகள் செருக்கி
வரம்பு கட்டி உழுத களனிகள்
அவணக்கணக்கில்
நெல் விளைந்து சொாிந்த பூமி

மூடை மூடையாய் ஏற்றி
அாிக்கன் லாம்பு ஒளிப்புகாாில்
வண்டில்கள் அணிவகுத்ததை
மாடுகள் மறக்கவில்லை

வேட்டுகள் பறிந்து
சுற்றி வளைக்கும் இரவுகளில்
அடைக்கலம் கொடுத்து
அவித்துக் கொட்டிய சோத்து மணிகள்
அயத்துத்தான் போனது

எங்கள் மாட்டுச் சாணம்
ஆழப் புதைந்து
ஏங்கள் மண்வெட்டிகள்
கொத்திய நிலத்தில்
பாம்புகள் குடி கொண்டுஸ

ஒற்றைப் போகமேனும்
விதைத்துப் பார்க்க முனைகிறோம்
ஒத்து கொண்டு கை குலுக்குது
கைகளில் ஈரம் காய முன்படமெடுத்து சீறுது

எங்கள் மாடுகள்
எங்கள் நிலத்தில்
மேய்வதை உழுவதை
எதுவரை தடுக்கும்
புடையன் பாம்புகள்

03) தொடரும் ஆவேசத்துயரம்

பட்டிப்பூ பூக்காதுதிரும்
கபுறுஸ்தானில்
நடப்பட்டுள்ள மீசான்கட்டையில்
குந்தியழும் பறவையின் பாடல்
ஒரு கடல் துயரம் சுமந்து மழையாகி;றது
மழையாகி

இருள் விக்கித்து கவிய
காத்தான்குடி பள்ளிவாசலில்
சாிக்கப்பட்டவர்களின்
காயாத குருதியில் கலந்து
நிறமாறுகிறது
அழிஞ்சிப் பொத்தானை
ஏறாவூாில்
சதை கிழிக்கப்பட்ட குழந்தைகள்
கா;பிணித்தாய்மார்கள்
கதறியழும் குரலை
வெறித்து நின்ற மரங்களை
முறித்து சாய்க்கிறது
மூதூில் வழைச்சேனையில்
எாிக்கப்பட்டவர்களின்
சாம்பலில் படிந்து
கல்லாய் உறைகிறது.

கைகளை பிடுங்கி விட்டு
கால்கள் மட்டும் கொடுத்து துரத்திய
வடபுல முஸ்லி;ம்கள்
ஒலைக் குடிசைக்குள் கொட்டும் கண்ணீரை
உப்பளக் கரையில் நிறைத்து
கரையுடைக்கிறது

பாட்டன் சுவடுகள் ஆழப்புதைந்து
கலப்பையும் ட்ரக்டரும் பறிக்கப்பட்டு
வேர்களைப்பிடுங்கி வேலி அமைத்திருக்கும்
வயல் நிலங்களில் விழுந்து
ஆறாய் பெருக்கெடுக்கிறது

மீண்டும் அது முகிலாய் திரண்டு
மழையாகிறது
இப்படியே—
இப்படியே—

அலறி, இலங்கை

Series Navigation

அலறி

அலறி

அலறியின் மூன்று கவிதைகள்

This entry is part [part not set] of 22 in the series 20051014_Issue

அலறி


நரகில் தள்ளும் பாலைவனப் பாதை

அாிசி ஆலை தோற்கும்
பஸ்ஸின்
நடு ஆசனத்தின் வலதுபக்கம்
பட்டியில் கட்டிய ஆடுபோல
அடைக்கப்பட்டிருக்கின்றேன்.

ஆரை மணி இடை வெளியில்
புறப்படுவதான பஸ்
இரைந்து மூச்சிழுத்துக் கொண்டிருக்கிறது
இன்னும் நூறு மனிதக்கட்டிகளை
விழுங்கி ஏப்பமிடும் முனைப்பில்

தலை நகா; நோக்கிப் பயணம்
காற்றில் மிதக்கும் சுகம்
மலையடிவாரம் அடையும் மகிழ்வை
தந்ததில்லை ஒரு நாளும்

நகரும் ஒவ்வொரு அங்குலமும்
மிக நீளமானது
அடிக்கொரு படை முகாம்
அதையொட்டிய சோதனை சாவடி
பூியாத மொழி

பயணத்தில் கைகோர்க்கும்
ஆறுகள் இடையில் ஒடிவிடும்
சூாியன் பாதியில் இடறி விழும்
காட்டு மரங்களை கடைந்து வீசும்
வாசம்
மனித வெக்கையில் கரைந்து விடும்

விரண்டோடும் பாதையை
துரத்திக்கொண்டிருக்கும் வாகனம்
அதன் கால்களுக்குள் சிக்கி
காற்று நசுங்கிக்கொண்டிருக்கும்
இரவின் கண்கள் உடைந்து கொண்டிருக்கும்
என்னைப்போல.

பாதையும் பயணமும்
ஒடிக்களைத்து
ஒரு புள்ளியில் சந்தித்து
நகாின் நொிசலுக்குள் தள்ளி விடும்

நீண்ட நெடும் பயணம்
நிறம்மாறிய நகரம்
இரண்டையும் நினைக்கையில்
எனக்குள்
ஏழு பாலை வனப்பாதை விரிகிறது
ஏழு நகரம் ஒன்றாய் கதவு திறக்கிறது

நிழல் தேடும் சூாியன்

முன்னொரு காலத்தில்
எனதூாில்
கட்டிடங்கள் கா;ப்பமாவதில்லை
பட்டியாய் பல்கிப் பெருகவில்லை
ஈன்று தள்ளியதெல்லாம்
மருதை
வாகை வம்மி

மூன்று தசாப்;தம் முடிவதற்குள்
கல் மண் கலவி உச்சத்தில்
பிறந்ததெல்லாம்
சுவர்கள்
கூரை உயர்ந்த வீடுகள்
கட்டிடக்காடுகள்

வீடுகளில் முற்றமில்லை
முன்வாசலில்லை
கோடிப்பக்கம் கறிமுருங்;கை
பூப்பதில்லை
காற்றள்ளிக் கொட்டும்
மாவில்லை வேம்பில்லை
காகம் கரைய கொப்பில்லை

வீடுகள் காய்த்து
கிளைபரப்பி நெடிதுயர்கிறது
தென்னை தோற்று
தலை சவட்டிக் குனிகிறது

இரட்டை மாடிகள்
வளர்ந்து
வளர்ந்து
வான்முகடு கிழியும் விரைவில்

முந்திாி விரும்பிய கிளிகள்
கொட்டைப்பாக்கான் குருவிகள்
வனாந்தரங்களுக்கு
திசை பிாிந்து விட்டது

பட்டமரம் தேடிய மரங்கொத்தி
கருங்கல் தூண்களில்
அலகுடைக்கிறது

வூகை நான்கும்
வம்மி ஐந்தும்
கடைசி பூவையும் பிஞ்சையும் உதிர்த்து
ஒற்றையாய் நிற்கிறது
வோில் துளி நீரும் காய்ந்து கொண்டிருக்கிறது
மரங்கள் வற்றிய ஊாி;ல்
நிழல் தேடி அலைகிறது சூாியன்;.

போயின போயின காலங்கள்

பெரும் மழை ஒய்ந்து
பேய்க் காற்று வீசுகிறது
ஆத்து வாழை இலைகளை
அள்ளிச் செல்கிறது காற்று
நீாில் படரும் தாமரை
ஆழத்தில் புதைகிறது

இரவு
சிறு மழைதானும் பெய்யவில்லை
மழையின் குறியீடாய்
ஒரு கோட்டு மின்னல்
ஒரு முழ இடி இல்லை வானில்
அதிகாலை
ஊசித் தூறல் விழுந்து
அடை மழையில் அமிழ்கிறது குளம்

குளத்தை கொத்தி செல்கிறது மீன் கொத்தி
சுழிக்கும் நீரலையில்
போருக்கு முன் கழிந்த காலங்கள்
நெஞ்சில் துயர் பிடித்து கவிக்கிறது

அன்றைய நாட்களில்
ஆத்து வாழை குடும்பமாய் பூத்து
ஊதாப்பூக்;கள் சிாிக்கும்

மாாிவானம் இருண்டு
ஒரு பாட்டம் சாிந்தால் போதும்
குட்டி மாவலி குதிக்கும்
கொத்து மல்லி பூ உதிரும்
கொட்டைப்பாக்கான் கொடுகும்

பக்கத்து ஊர்களில் இருந்தும்
குடைக்குள் நனைந்து
ஆட்கள் வருவார்கள்
தூண்டிலும் வலையுமாய்
கரையில் குந்திக் கொள்வோம்
படுவான் கரைப்பற்றைக்குள்
சூாியன் கரையும் கடைசி கணமும்
மீன்கள் கொத்தும்

துப்பாக்கிகள் அதிரத் தொடங்கிய காலம்
குளத்தின் மட்டம் இறங்கிற்று
சூிக்குள் மனித எலும்புகள் தூித்தி நின்று
பாசியின் நிறம் சிவப்பாகி வெளிறியது

குளத்தின் முகத்தில் படைமுகாம் முளைத்ததும்
ஆட்கள் வருவது புள்ளியாய் சிறுத்தது
காடையும் கீச்சானும் காடேகிப் பறந்தது

இப்போதும்
மழையில் குளம் மிதந்து
மீன்களும் குதிக்கிறது
காவலரணில் துப்பாக்கி நீண்டுள்ளது

கரையில் கொக்கும் காத்திருக்கிறது
யாரும் வருவதாயில்லை
பேய்க் காற்று வீச பெரும் மழை பொழிகிறது

அலறி, இலங்கை

Series Navigation

அலறி

அலறி