‘ தீக்கழுகு ‘ அல்லது ‘எமனுக்கே அதிர்ச்சியிது ‘
பிச்சினிக்காடு இளங்கோ
உதிரத்தை உணவாக்கி உயிரூட்டிக் காத்தவுயிர்
சதிரத்தில் குழைத்துச் சந்தனமாய் வார்த்தவுடல்
சதிகாரத் தீவாயில் சத்துணவு ஆனதுவே
அதிகாரப் பேயெல்லாம் அலட்சியமாய் இருந்தெனவே
காக்கும் கடவுளுக்குக் கண்குருடு ஆனதுவோ!
ஆக்கும் அதனாற்றல் அழிவைத் தடுக்காதோ!
கொத்திப் பிஞ்சுகளைக் கொன்றனவே தீக்கழுகு
கத்தியும் கதறியும் காதடைத்துப் போனதுவோ!
கருகும் உயிர்க்கொழுந்தைக் கண்மணியாம் குலக்கொழுந்தை
உருகும் மெழுகாக்கி உயிர்குடிக்கும் கோரத்தை
வரலாறு படைப்பதற்கு வளர்ந்துவரும் பிஞ்சுகளை
விறகாக்கும் தீப்பசியை விரைந்து தடுக்காமல்
உறக்கத்தில் இருந்தாரோ! உள்ளமும் கல்லாமோ!
இரக்கத்தின் வடிவமென்று இனியாரை அழைப்போமோ ?
குருதி நெய்யாகி குழவியுடல் விறகாகி
எரியும் தீயழகில் இதயம் இழந்தாரோ ?
எத்தனையோ மதமிருந்தும் எல்லோர்க்கும் இறையிருந்தும்
அத்தனையும் இருந்து ஆனதென்ன இந்நேரம் ?
நீர்ப்பசி தீப்பசி நிலப்பசி நேரும்போது
பார்த்துக் கொண்டிருப்பதா பரம்பொருளின் வேலை ?
சித்தம் கலங்கிச் சின்னாப் பின்னமாகிப்
பித்தாகித் தவிக்கும் பெற்றெடுத்தத் தெய்வங்கள்
கண்இரில் கரைகின்றார் கையெடுத்துத் தவிக்கின்றார்
அன்னாரின் துயர்களைய ஆர்வந்தும் ஆவதென்ன ?
பேறுகால வலிதாங்கி பேர்நிலைக்க ஈன்றோர்க்கு
ஆறுதலாய் யார்குரலும் ஆகாது! உண்மையிது!
நானழுது என்னசெய்ய ? நாடழுதும் ஏதுசெய்ய ?
போனவுயிர் போனதுதான் போக்கில்லை மீட்பதற்கு
கண்இர் அளவுக்கும் காவிரியில் நீரில்லை–(எங்கள்)
கண்இரின் காவிரியோ கடல்தாண்ட வழியில்லை
தண்இர் இருந்திருந்தால் தீத்தாகம் தீர்ந்திருக்கும்
என்னே கொடுமையிது! எமனுக்கே அதிர்ச்சியிது!
அழுது எழுதியதில் ஆதாயம் கவிதைதான்
அழவைக்கும் வரலாறாய் ஆனது கொடுமைதான்
அரசியல் வாதிகளும் அரிதாரம் பூசிகளும்
அரசியல் பேசாத அதிசயம் செய்திதான்
நெஞ்சம் கனத்தோரின் நெகிழ்ச்சி உலகெங்கும்
அஞ்சலியாய்த் தொடர்கிறது அவனி அழுகிறது
இழப்பு! இழப்பு! ஈடற்றப் பேரிழப்பு!
பிழைப்பே அவர்களுக்குப் பிடிப்பற்றுப் போகும்தான்
விழுதுகளை இழந்தோரின் வீடு வெற்றிடம்தான்
எழுந்து நடப்பதற்கு இன்னும்நாள் ஆகும்தான்
முடங்கிப் போகாமல் முன்னேற்றம் காணுதற்குத்
திடமான நெஞ்சம் தீர்வாகக் கிட்டட்டும்
மீண்டு(ம்) புதுவாழ்வு மிகவிரைவில் எட்டட்டும்
மீண்டும் தீநாகம் தீண்டுவது நிற்கட்டும்
கற்பனைகள் கனவுகள் கரியாகிப் போனதினால்
அற்ப ஆசைக்கெல்லாம் அர்த்தமில்லை மானுடமே!
வாழுகிற காலம்வரை வாழுங்கள் இரக்கமுடன்
சூழும் சூதகற்றி சுற்றம் நலம்பேணி
ஆல விழுதுகளாய் ஆழ வேரூன்றி
ஆழத்துயர் அகற்றும் அறப்பணிகள் தொடங்குங்கள்
அர்ப்பணிப்பு நிறைந்ததென அரவணைப்புக் கொண்டதென
அர்த்தப் படுத்துங்கள் அதுதான் வாழ்க்கை
சடங்கன்று வாழ்க்கை சத்தியத்தை நாட்டுங்கள்
தடமாகிப் போங்கள் தழைக்கட்டும் நல்லறங்கள்
—-
ilango@stamford.com.sg
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 30
- இதுவும் கடந்து போகும்
- வினை விதைத்தவர்கள்!
- எனவேதான்,
- சங்கிலித் துண்டங்கள்
- ‘ஏய் ‘, ‘கில்லி ‘, ‘சுள்ளான் ‘-எதிர்காலத் தமிழகம் ?
- உன்னிடம்
- கிரிஸ்துவமும் பிரிட்டிஷாரும் சாதியமும்
- ஹோமோ செக்சுவாலிடடி( Homosexuality)
- வேடத்தைக் கிழிப்போம் – 4(தொடர் கவிதை)
- ஞாயிற்றைக் கைம்மறைப்போர்
- சிறகுகளை விரிக்கும்போது!
- என்னைச் சுட்ட பிஞ்சுகளே! தீயே உன் மேல் கோபம் !
- ஒருவீடும் விவாகரத்தும்
- பெரியபுராணம் -2
- நாக்குகள்
- செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம்-5
- மீள்பிறக்கும் ஹைடிரஜன் எருச்சுனை முடுக்கும் எதிர்கால மோட்டார் வாகனங்கள் [Renewable Hydrogen-Powered Fuelcell Future Motor Vehicl
- இயல்பாய் ஒரு தடவை…
- உருளை சலாட்(டூசல்டார்பர்) – சுவிட்சர்லாந்து
- மெய்மையின் மயக்கம்-10
- டுபாக்கூர் கவியரங்கம்
- ஆட்டோகிராஃப் ‘காவேரி ஓரம் கவி சொன்ன காதல் கதை சொல்லி நான் பாடவா ‘
- மனவெளி கலையாற்று குழுவினரின் 11வது அரங்காடலின் தோல்விக்குக் காரணம் என்ன ?
- எனை கைது செய்து போகிறாய்.
- அமைச்சுப் பதவி
- கடிதம் ஜூலை 29,2004
- கடிதம் ஜூலை 29,2004 – வஹ்ஹாபிசம், வெட்டுக்கிளி கட்டுரைப்பற்றி ..
- கடிதம் ஜூலை 29,2004 – நாக இளங்கோவனுக்கு சில கேள்விகள்
- கடிதம் – ஜூலை 29,2004
- .. இருள் செய் நெருப்பு…
- ‘தைச்சீ ‘
- எது நாகரிகம்…. ?
- கவிதை
- அறியப்படாத பக்கங்கள் -கட்டுரை(சுயசரிதம்)
- கவிக்கட்டு 17 – உன்னத உறவு
- காலத் தடாகம்….
- அநாதை
- ‘ தீக்கழுகு ‘ அல்லது ‘எமனுக்கே அதிர்ச்சியிது ‘
- நலம்…நலமறிய ஆவல்!!
- அன்புடன் இதயம் – 25 – கவியரசனே கண்ணதாசனே