கவிதையாதெனில்….

This entry is part [part not set] of 46 in the series 20040701_Issue

பாஷா


உன்னிடமிருந்து ப்ரதி
எடுக்கப்படுவதே என் கவிதை
எண்ணிக்கையிலடங்கும் கவிதைகளைமட்டும்
எனக்கு கொடுத்துவிட்டு
ஏராளமான எழுதப்படாத கவிதைகளை
உனது
சிரிப்பாய், சிணுங்களாய்
கோபமாய்,கொஞ்சலாய்
அக்கரையாய்,அழுகையாய்
‘வெண்ணெய்…. ‘என்றேயெனை
அழைக்கும் அழகாய்
உனக்குள் ஒளித்து வைத்துள்ளாய்!
—-
sikkandarbasha@hotmail.com

Series Navigation

பாஷா

பாஷா