அது

This entry is part [part not set] of 42 in the series 20040819_Issue

சிக்கந்தர் பாஷா


அது ஒரு பின்னிரவு நேரம்
வளைந்து,நெளிந்து ,அலையலையாய்
காற்றில் கலந்துகொண்டிருந்தது
அது!
மழைபொழிந்து சிறைமீட்ட
மண் வாசனையாய்
எங்கும் பரவி
முப்பதுகோடி குரலிலும்
‘என் தாய் ஜனித்தாள் ‘
என்றே ஒளித்தது
அது!
குயிலின் குரலாய்
கடலின் அலையாய்
கவிதையின் சுகமாய்
கிரிக்கெட்டில்
இறுதிபந்துகளில் எகிறும்
இதயமாய்
நியுயார்க்கில் நான்குவருடம் கழித்தவன்
நெல்லையில் நிலம்தொட்டு
இழுத்துவிடும் சுவாசமாய்
பிறவிகொள்கிறது
அது!
பரந்த வான்வெளியினடியில்
பரந்திருக்கும் புல்வெளியில்
தலைசாய மடிதருகிறது
அது!
sikkandarbasha@hotmail.com

Series Navigation

சிக்கந்தர் பாஷா

சிக்கந்தர் பாஷா

அது

This entry is part [part not set] of 44 in the series 20031113_Issue

இளந்திரையன்


சிறு ஒளி
சிறு துகள் விளக்கம்
கால காலமான
காத்திருப்பு
வழி அளந்த
விசுபரூபம்
வரட்சி செழுமை
வாழ்க்கையாய்

பிரபஞ்சத்தின்
கொடியிடைத்
தொடர்பு
பொருள்
அறிந்த
அறியத் துடிக்கும்
எத்தனம்
அறிய முடியாத
அயர்வு

மனித வாழ்வு
மண்டியிட்ட
கணங்கள்
வியாபிதமாய்
அறிந்தும்
அறியாமலும்…

——————–
Ssathya06@aol.com

Series Navigation

இளந்திரையன்

இளந்திரையன்